உத்ராபதி- மகாபாரதத்தில் பெண்ணியம் பற்றி


மகாபாரதத்தில் பெண்ணியம் (இரு நாடகங்கள்)

இந்தி மூலம் : நந்தகிஷோர் ஆச்சார்யா தமிழில் : சரஸ்வதி ராம்நாத்
உத்ராபதியின் பார்வையில்


மகாபாரதம் உண்மையில் நடந்ததா? என்ற கேள்வி எழுவதோடு ஒர் சமூகத்தின் கலாசாரத்தை பாதுகாக்க எழுதப் பட்ட புராணங்களில் ஒன்று என்பதையும் கேள்விக்குள்ளாக்கிய ஒரு சராசரி வாசகனின் ஓர் புரிதல் தொகுப்பே இது


முதல் நாடகம்:

'அஸ்தினாபுரம்' இது மறு வாசிப்பு முறையில் படைக்கப்பட்ட நாடகம். இதன் பாத்திரங்களில் முதன்மையானது `சுபா' என்ற பாத்திரமே. இதன் மூலம் நம் காலத்தில் நமக்கு எழும் கேள்விகளை மகாபாரதத்தின் வரலாற்று தழும்புகளுக்கு காரணமான ஒருவரோடு போரிட வைத்திருப்பது சிறப்பாக உள்ளது.


வாரிசு இன்றி தவிக்கும் அரசின் வம்சக் கொடிக்கு நீர்வாற்று வளர்க்க துடிப்பதன் மூலம் பெண்களின் உணர்வுகளை சிக்கலுக்குள்ளாக்கும் ராஜ மாதா சத்தியவதி ஆணாதிக்க உணர்வுள்ள பெண்ணாகவே காணப்படுகிறாள்
`நியோக்' முறைக்கு சம்மதிக்க வைக்க முயற்சிக்கும் போதும் இவர் பீஷ்மரோடு வாதிடும் போதும்`சத்தியம்' (பிரதிக்ஞை) தர்மத்தை புரிந்து கொள்ள முடிகிறது.


மகாபாரதத்தின் `நியோக்' என்ற வழக்கத்தின் நீட்சியாகவே இன்றும் சொத்துடமை பாது காக்கும் சமூகத்தில் தமது பரம்பரை சொத்துக்களை தொடர்ந்து பாதுகாக்க உறவுகளுக்குள்ளேயே கட்டாய திருமணங்கள் நடந்துவருவதை புறிந்து கொள்ள முடிகிறது.


அன்றய அரசியல் தர்மமாக கருதப்பட்ட `நியோக்' மூலம் கேள்விக்குள்ளான பெண்களின் உணர்வுகளுக்குஆதரவாக போரடிய போராளியாக நாடகத்தின் நாயகி `சுபா' நமக்கு தெரிகிறாள்.பெண்கள் கற்பனை மகத்துவத்துடன் கூடிய விளைச்சல் நிலமாக கற்பிக்கப் பட்டிருந்ததால் அவர்களது உணர்வுகள் அடக்கிவைக்கப் படுவதற்கே உதவியது.அரசியல் தருமமாக கருதப் பட்டது பெண்களின் மன உணர்வுகளின் தருமத்தோடு போரிட்டுக் கொண்டிருந்தது
பெண்களின் உணர்வுகள் அவர்களுக்கு எதிரான சாஸ்த்திர சம்பிரதாயங்களிடையே சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததது (இன்றும் அதன் தொடர்ச்சிகள் வாழ்ந்து கொண்டுதான் உள்ளன.)


இந்த நாடகத்தில் சுபாவின் கதாப் பாத்திரம் பெண் சமூகத்தின் பிரதிதி என்று சொன்னால் மிகையாகாது. பீஷ்மரின் சித்தாந்ததை விமர்சிக்கும் சுபா, நடைமுறையில் அவரது சித்தாந்துடன் அவரே முறண்படுவதைச் சுட்டிக்காட்டுவதும் சித்தாந்தத்துக்கும் நடைமுறைகளுக்கும் உள்ள இடைவெளியை நீக்குபவர்கள் யாரோ அவர்தான் 'லட்சிய புருஷர்' என்பதும் அத்தகைய நபர்கள் யாரும் குருவம்சத்தில் இல்லை என்பதோடு யாவரையும் முட்டாள்கள் என்பதும், இறுதியில் அத்தகய முட்டாள்கள் இல்லாத அஸ்தினாபுரத்தில் வாழும் அவளது ஆசையை பூர்த்தி செய்து கொள்வதும்
இத்தகய விடுதலை உணர்வுகளை பெறும் வாய்ப்புகள் இன்றையப் பெண் சமூகத்தில் யாருக்கும் கிடைக்காது. வாரிசு உரிமைப்பற்றி பேசும் போது சுபாவின் வாதத்திலிருந்து ஓர் முக்கிய கருத்தை இன்றும் நாம் மனதில்கொள்ள வேண்டும். "அரசாட்சியை ரத்தத்தின் தூய்மை மற்றும் வம்சப் பரம்பரையுடன் இணைக்காதீர்கள், அது ஒருவனது சிறப்பியல்புகள் மற்றும் குணங்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டும்" இந்த நாடகத்தின் முறண்பாடுகளாக சில சம்பவங்களைப் பார்ப்போம்:


1. `நியோக்' என்ற வழக்க முறையில் அரசாழும் வரிசுக்குக்காக முயற்சிக்கும் கட்டங்களில் ஒரு காட்சியில் பீஷ்மரிடம் பேசும் ராஜ மாதா சத்தியவதி (பக்கம் 15) "கிடைக்கும் வீரிய விதை சரியானதாக இல்லாவிடில் ராஜ்யத்திற்கே ஆபத்தாகமுடியலாம்" என விதைத்தான் முக்கியம் என்று சொல்லும் போது, பீஷ்மர் ஏற்றுக் கொள்வதைத் தொடர்ந்து வரும் மற்றொரு காட்சியில், மாதா சத்தியவதியின் கட்டளையை நிறைவேற்ற வரும் வியாசர், அம்பிகாவிடம் பேசும்போது (பக்கம் 25) "விதைக்கு எந்தவித மகத்துவமும் இல்லை மகத்துவம் எல்லாம் நிலத்திற்கே" என்பது...

2. வாரிசு உரிமை பற்றி விவாதிக்கும்போது, விதுரரை சூத்திரன் என்று கூறும் பீஷ்மர், துரியோதனன் கர்ணனுக்கு பட்டம் சூட்டும் போது (அவன் அரசாளும் உரிமையுடைய குந்தியின் மகன் என யாரும் அறியாமல் இருக்கும் போது) பேசாமல் இருந்துவிட்டு தாதியின் மகன் என்பதால் விதுரரை ஏற்றுக் கொள்ளாதது.

3. தொடர்ந்து பேசும் பீஷ்மர் "பெண்களுக்கென்று சாதி ஏதுமில்லை அவள் தன் கணவனின் சாதியால் அறியப்படுகிறாள்" என்று கூறும் (பக்கம் 43) ராஜா விசித்திர வீரியனை, எஜமானராகவும் எல்லாமுமாக கொண்ட சுபாவின் மகன் விதுரரை சூத்திரன் என்று கூறுவது...

4. "கர்ணனை துரியோதனன் அரசனாக்கியபோது பீஷ்மர் ஏன் தடுக்கவில்லை?" என்று கேட்ட குந்தியிடம் சுபா, `அவன் அம்பிகாவின் பேரன்.' கூறுகிறாள், அப்படியானால் கர்ணனைப் பற்றி முன்கூட்டியே தெரிந்ததால் தடுக்கவில்லை என்றாகிறது, ஆனால் இதற்கும் முந்திய காட்சியில் `கர்ணன் முடிசூட்டிக் கொள்ளும்போது பீஷ்மர் ஏன் சும்மா இருந்தார்?' என்றகேள்வி எழுப்பப் படுகிறது


இறுதியில் இந்த நாடகத்தை படித்து முடிக்கும் போது நம் மனதில் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட கருத்துக்கள் இரண்டு. முதலாவதாக அன்றைய காலம் தொட்டு பெண்களது உணர்வுகள் ஆண்களுக்கு நிகராய் மதிக்கபடாததோடு பல சமயங்களில் கேவலப்படுத்தப் பட்டு வருவது இன்றளவும் தொடர்வதை சுட்டிக் காட்டுகிறது; இரண்டாவதாக
வாரிசு உரிமைப்பற்றி பேசும் போது சுபாவின் வாதத்திலிருந்து ஓர் முக்கிய கருத்தை இன்றும் நாம் மனதில் சுழல விட்ட ஒன்று "அரசாட்சியை ரத்தத்தின் தூய்மை மற்றும் வம்சப் பரம்பரையுடன் இணைக்காமல், அது ஒருவனது சிறப்பியல்புகள் மற்றும் குணங்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டும்" என்பதாகும்.

******

இரண்டாவது நாடகம் "உடலுக்காப்பால்"


இதில் சாபத்திற்குள்ளான ஒரு சக்ரவர்த்தி தனது முதுமையிலும் காம உணர்வால் பாதிக்கப் படுகிறார்தனது மகன்களில் ஒருவரான இளவரசன்`புரு'வின் இளமையை இரவலாகப் பெற்று தன் காம உணர்சிகளோடு போராடுகிறார்


தான் பெற்ற பிள்ளையின் இளமையைத் தாங்கி வந்திருக்கும் சக்ரவர்த்தியுடன் சேர மறுக்கும் ராணியின் உணர்வுகள், அதே சமயம் இளவரசன்`புரு'வின் இளமையை விரும்பும் தேவலோகப் பெண் சக்ரவர்த்தியுடன் சேர்ந்து அணுபவித்துவிட்டு போகும் போது சக்ரவர்த்தியிடம் எழுப்பிவிட்டு போகும் விவாதங்கள்இறுதியில் சக்ரவர்த்தி தான் இரவலாகப் பெற்ற இளமையை தனது மகன் `புரு'விடமே திருப்பி தரும் போது தனது தந்தை தாங்கிய இளமையை திரும்பப் பெற மறுக்கும் அவனது உணர்வுகள்,


இவையாவும் மனித சமூகத்தில் காம உணர்ச்சிகளுக்கு அடிமையாகிப் போகும் மனிதர்களயும் (சக்ரவர்த்தி மற்றும் தேவலோகப் பெண் போன்றவர்கள்)அதே சமயம் மனித உறவுகளை மதிக்க விரும்பும் மனிதர்களின் (ராணி மற்றும் இளவரசன் புரு போன்றவர்கள்)மனப் போரட்டத்தையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது.


இந்த நாடகத்தைப் படித்து முடித்த போது நமது சிங்கை நாளிதழ் தமிழ் முரசில் ஒரு செய்தி என்னை பாதித்தது`தான் பெற்ற மகளை தொடர்ந்து சில மாதமாக கற்பழித்து வந்த தந்தையைப் பற்றியது'
கூடவே நமது சமூகத்துக்கு சரியான பால் கல்வி தேவை என்ற உணர்வையும் ஏற்படுத்தியது


இப்போது உள்ள அறிவியல் பாடங்களில் உள்ள இரு பாலரின் உடல் கூறுகள் பற்றிய கருத்துக்களோடு மனித வாழ்வில் வயதுகளுக்கு ஏற்ப உண்டாகும் உணர்வுகளின் மாற்றங்கள்,உறவுகளுக்கிடையே உள்ள அன்பு, உறவுகளுக்கு அப்பார்ப்பட்டவர்களிடம் காட்டப்படும் அன்பு,காம உணர்ச்சிகளின் வேறுபாடுகள், உண்மையான காதல், மோகம் மற்றும் infactution எனப்படும் முறையற்ற மோகம் போன்றவைகளை முறையாக கல்வியில் சேர்ப்பதன் மூலம் இனி வரும் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்பதை உறுதியாக நம்புகிறேன்



மானஸாஜென் -மகாபாரதத்தில் பெண்ணியம் நாடகம் குறித்து

Á¸¡À¡Ã¾ò¾¢ø ¦Àñ½¢Âõ குறித்து: மானஸாஜென்

1

¿¡¼¸õ ÌÈ¢ò¾ Å¢Á÷ºÉÁ¡¸ «øÄ¡Áø, Å¡º¢ôÀ¢ý §À¡Ð ±ÉìÌò §¾¡ýȢ ¸ÕòÐì¸Ç¡¸ §¾¡ýÈ¢ÂÅü¨È þì ¸ðΨâø À¸¢÷óÐ ¦¸¡û¸¢§Èý.
¦Àñ½¢Âõ, ¾Ä¢ò þÂì¸õ, ¸õäÉ¢ºõ, þóТºõ §À¡ýÈ þº…í¸¨Ç «ÛÌž¢ø ±ÉìÌ þÕ §ÅÚ Àð¼ «ÛÌӨȸû þÕ츢ýÈÉ...«¨Å ¦ÅÇ¢ôÀ¡÷¨Å¢ø ´ýÚìÌ ´ýÚ Óý¡É¾¡¸×õ §¾¡ýÚ¸¢ýÈÉ.
ӾġÅÐ, ¦ƒý, ¼¡§Å¡ ÁüÚõ þóÐ ¾òÐÅí¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ±ØÅÐ. þÐ ¦À¡Ð¨ÁôÀÎòОüÌ ±¾¢Ã¡ÉÐ. ±¾¢Öõ 'º¡ðº¢Â¡¸' º¡÷ÀüÚ ¸ÅÉ¢ôÀ¾ý ãÄÁ¡¸§Å ¦ÅÇ¢ôÀ¡÷¨ÅìÌ ÓüÈ¢Öõ Óý¡¸ò §¾¡ýÚõ ¦ÅÇ¢ôÀ¡Î¸Ç¢ý «Ê ¿¡¾Á¡¸ Å¢ÇíÌõ º¡Ãõ À¢ÊÀÎõ ±ýÚ «Ð þ¨¼Å¢¼¡Ð Áɾ¢ý «Ê¡Æò¾¢Ä¢ÕóÐ ¦ÁøĢ ÌÃÄ¡ö ´Ä¢òÐ즸¡ñ§¼ þÕ츢ÈÐ. ¢ýÛìÌõ(yin), ¡ÛìÌõ(yang), ¦ÅǢ¢ĢÕ츢ÈÐ ¾¡§Å¡! «ôÀÊ¡ɡø ¸ñ¦½¾¢§Ã ÁÉ¢¾ý ¦ºòÐì ¦¸¡ñÊÕó¾¡Öõ, '«ÅÃÅ÷ ¸÷Á¡', 'Á¡Ã¡' «øÄÐ 'Á¡Â¡', '¯Ä¸§Á ´Õ ¸É×' ±É šǡ¢Õì¸Å¡ þó¾ô À¡Æ¡öô §À¡É ¾òÐÅí¸û? «øÄÐ Á¸¡À¡Ãò¾¢ø ¦º¡øĢ¢ÕôÀÐ §À¡Ä, ¯Ä¸§Á ´Õ ¸É×¾¡ý ±ýÀ¨¾ Áɾ¢ø ¦¸¡ñÎ, ¯ÉìÌî ºÃ¢¦ÂÉôÀ𼨾 þ¨¼Å¢¼¡Ð ºÁ¡É ÁÉмý ¦ºö...±ýÚ ¦¸¡ûž¡? ¬É¡ø ±ÉìÌî ºÃ¢¦ÂÉô ÀÎÅÐ ¸¡Äò¾¢üÌ ¸¡Äõ Á¡È¢ì ¦¸¡ñ§¼ þÕ츢ȧ¾? ¢ý - ¡ÛìÌ ¦ÅÇ¢ôÀð¼ Á¡È¡¾ ºÃ¢¨Â ¸ñΦ¸¡ûÇ Å¢Æ¢ôÒ½÷× «Å…¢ÂÁ¡¸¢ÈÐ.
þÃñ¼¡ÅÐ, áõ §Á¡¸ý áö, ¦Àâ¡÷, அம்பேத்கார், «§Â¡¾¢¾¡º÷, லுதர் கிங், ¿¡Ã¡Â½ÌÕ, Á¡÷ìŠ, ±í¦¸øŠ, Ä¢í¸ý, தெரஸா, ¸¡ó¾¢ þÅ÷,Ç¢ý ¦ºÂøÀθÙõ, Å¡ú×õ ºã¸ ¾Çò¾¢ø ¿¢¨È Á¡üÈí¸¨Ç ¯Õš츢¢Õ츢ÈÐ. þ¨Å ÒÈÁ¡üÈí¸û ±É ¦¸¡ñ¼¡Öõ ܼ ´Îì¸ô Àð¼ Àøġ¢Ãì¸½ì¸¡É ÁÉ¢¾÷¸¨Ç ¿Ã¸ò¾¢Ä¢ÕóÐ Á£ðÀ¾¡¸ «¨ÁóÐ þÕ츢ÈÐ. þò¾¨¸Â ¦ºÂøÀ¡Î¸Ç¢ý «Åº¢Âõ ¯ûÇí¨¸ ¦¿øÄ¢ì¸É¢... «É¡ø «Ð þ¨ºÅ¡É ºã¸ò¨¾ §¿¡ì¸¢Â¾¡¸ þÕì¸ §ÅñΧÁ ¾Å¢÷òÐ ¸¡úôÒ½÷¨Å ÅÇ÷òÐ À¢Ç× Àð¼ ºã¸ò¨¾ ¯ÕÅ¡ìÌž¡¸ þÕì¸ì ܼ¡Ð.
¦Àñ½¢Âõ ±ýÀÐ «ÊôÀ¨¼Â¢ø ;ó¾¢Ãòмý ¦¾¡¼÷Ò¨¼ÂÐ. ¦Àñ ;ó¾¢Ãõ ±ýÀР¡â¼Á¢ÕóÐ, «øÄÐ ±¨Å¸Ç¢¼Á¢ÕóÐ ¦Àñ Ţξ¨Ä ¦ÀÚÅÐ? ±¨Å¸Ç¢ý ãÄÁ¡¸ «ò¾¨¼Â ;ó¾¢Ãò¨¾ ¦Åý¦ÈÎì¸ ÓÊÔõ? ¦Àñ¸Ç¢ý ;ó¾¢Ãò¾¢üÌ ¬ñ ±¾¢Ã¡ÉÅÉ¡? «øÄÐ ¦Àñ½¡? ¦Àñ Ţξ¨ÄìÌ, ¸øÅ¢, ¦À¡ÕÇ¡¾¡Ã ;ó¾¢Ãõ, Á¾õ, ¸Ä¡îº¡Ãõ, ÌÎõÀõ §À¡ýÈ «¨ÁôҸǢý Àí¸Ç¢ô¦ÀýÉ? ¯¼ø 㾢¡¸, ÁÉ Ã£¾¢Â¡¸ ¬ñ¸Ç¢ý þÂì¸í¸¨Ç ¿¸¦ÄÎò¾ø º¡ò¾¢ÂÁ¡? «Ð¾¡ý ¯ñ¨ÁÂ¡É ¦Àñ Ţξ¨Äì¸¡É ÅƢ¡?

******

þÕÀò¾¢§Â¡Ã¡õ áüÈ¡ñÊý ÁÉ¢¾ý ¾ý¨É ;ó¾¢Ã À¢Ã¨ƒÂ¡¸×õ, ;ó¾¢Ãò¾¢ý À¡Ð¸¡ÅÄÉ¡¸×õ, ;ó¾¢Ãò¨¾ ¿¢¨Ä ¿¢Úò¾ ¾ý ¯Â¢¨ÃÔõ ÐîºÁ¡¸ Á¾¢ôÀÅÉ¡¸×õ ¾ý¨Éô À¢Ã¸Éô ÀÎð¾¢ì ¦¸¡ñÎûÇ¡ý. «ÅÉР;ó¾¢Ãõ ¿Î ¿¢¨Ä¨Á¡ɾ¡!¯ñ¨Á¢§Ä§Â «Åý ;ó¾¢ÃÁ¡ÉÅÉ¡? ¯Ä¸¢ý ¸¡Î¸û ¸ÀÇ£¸Ãõ ¦ºöÂô ÀΞüÌõ, âÁ¢Â¢ý ÅÇí¸û µÂ¡Ð ÍÃñ¼ôÀΞüÌõ, º¸ ¯Â¢Ã¢¸Ç¡É ÀȨŸû, Å¢Äí̸û, Á£ý¸û ±É ¬Â¢Ãì¸½ì¸¡É ¯Â¢Ã¢Éí¸û Åõºò§¾¡Î âñ§¼¡Î ¿¢÷ãÄÁ¡Å¾üÌõ, ÅÇ¢Áñ¼ò¾¢ý µð¨¼¸ÙìÌõ, ÒŢ¢ý ¦ÅôÀõ «¾¢¸Ã¢òÐ ÐÕÅí¸û ¯ÕÌžüÌõ, ÀÕÅí¸û ÁÚÌžüÌõ, ¸¡üÚ, ¿£÷, Áñ, ¦ÅÇ¢ «¨ÉòÐõ Á¡Í ÀðÎ þÕôÀ¾üÌõ, ÁÉ¢¾É¢ý ;ó¾¢Ãò¾¢üÌõ ¦¾¡¼÷Ò ¯ñ¼¡?
¯Ä¸¢ý ´Õ ã¨Ä¢ø Àº¢Â¢É¡ø þÈìÌõ ÁÉ¢¾É¢ý Áýò¾¢üÌ ¿õÓ¨¼Â ;ó¾¢Ãõ ¦À¡Úô§Àü¸ §ÅñÎÁ¡? Àøġ¢Ãì¸½ì¸¡É ¬ñθÙìÌ ÓýÉ÷ «Ê¨Á¸¨Ç ºã¸ «¨ÁôÀ¢üÌû ¨Åò¾¢Õó¾ ±¸¢ô¾¢Â ;ó¾¢Ã ÁÉ¢¾ÛìÌõ, ãýÈ¡õ ¯Ä¸ ¿¡Î¸Ç¢Ä¢ÕóÐ ¦¾¡Æ¢Ä¡Ç÷¸¨Ç ¯À§Â¡¸¢òÐì ¦¸¡ûÙõ Ӿġõ ¯Ä¸ ¿¡ðÊý ;ó¾¢Ã ÁÉ¢¾ÛìÌõ Å¢ò¡ºõ ²§¾Ûõ ¯ñ¼¡?«ôÀÊ¡ɡø þ¨¼ôÀð¼ ¸¡Äò¾¢ø ;ó¾¢Ãõ ±ùÅ¡È¡¸ À⽡Á ÅÇ÷ ¸ñÎûÇÐ? «Ï ¬Ô¾í¸Ç¢ý ÅøĨÁ¨Â þ¨¼Å¢¼¡Ð ¦ÀÚì¸¢ì ¦¸¡ñÎ §À¡÷ ¦ºö ŢÕõÒõ ¿¡Î¸Ç¢ý ;ó¾¢Ãõ ±ò¾ý¨ÁÂÐ?
¯ñ¨Á¢ø ;ó¾¢Ãõ ±ýÀÐ, À£¾¢, þ, «¾¢¸¡Ãò¾¢É¡ø ¸ð¼¨Áì¸ô ÀΞøÄ. ÀÊÀà ¿õÀ¢ì¨¸Â¡Öõ, «ýÀ¢É¡Öõ ±Øõ ¦À¡ÚôÒ½÷Ţɡø ÁÄ÷ÅÐ! «¸ò¾¢ø ÓبÁ¡¸ Ţξ¨Ä «¨¼ó¾Å÷¸Ç¢É¡§Ä§Â ±¾¢÷À¡÷ôÀüÈ ¯ñ¨ÁÂ¡É «ýÀ¢¨Éò¾Ã ÓÊÔõ. ¿¡õ «¸ò¾¢ø ÓبÁ¡¸ Ţξ¨Ä «¨¼ó¾Å÷¸Ç¡? ¿¡Î, þÉõ, Á¾õ, ƒ¡¾¢, ¦Á¡Æ¢, Å÷ì¸õ, À¡ø, ¦À¡ÕÇ¡¾¡Ãõ, «Ãº¢Âø, «¾¢¸¡Ãõ, Ò¸ú, ¸¨Ä, þÄ츢Âõ, ¸Ä¡îº¡Ãõ, ºã¸õ, ¸øÅ¢, ¾òÐÅí¸û, ¬§Ã¡¸¢Âõ, ÅÂÐ, «ÛÀÅõ, ÁÃÀ¢Âø ÜÚ¸û, ÅÃÄ¡üÈ¢ø ¿ÁÐ Å¡ú쨸 «¨ÁÔõ ¸¡Äõ, ¿ÁÐ º¢ó¾¨É¸û, ¯½÷¸û þ¨Å¸Ç¢É¡ø ÌÚì¸ôÀ¼¡Áø Å¢ðΠŢξ¨Ä¡¸¢ ¿¢ü¸¢È¾¡ ¿õ ;ó¾¢Ãõ? ¯ñ¨Á¢ø ¿¡õ ;ó¾¢ÃÁüÈÅ÷¸û ±ýÀ¨¾ ¯½÷žüÌ ÓبÁÂ¡É À¢Ã쨻 §¾¨ÅôÀθ¢ÈÐ.
¿¡õ «È¢Â¡¾ À̾¢Â¢Ä¢ÕóÐ ¿õ¨Á ¬ðÎÅ¢ìÌõ ¸Â¢Ú¸¨Ç ¸ÅÉ¢ì¸ À¢ÇÅ¢øÄ¡¾ ÓبÁÂ¡É ¸ÅÉ¢ôÒ §¾¨ÅôÀθ¢ÈÐ. þò¾¨¸Â ŢƢôÒ½÷§Å ¿õ¨Á ¯ñ¨ÁÂ¡É Í¾ó¾¢Ãò¾¢üÌ þðÎî ¦ºø¸¢ÈÐ!

*****
2


ÁÉ¢¾ ÁÉõ ¦Á¡ñ¨Éò ¾ÉÁ¡É ¿õÀ¢ì¨¸¸Ç¡ø ÁØí¸Êì¸ôÀðΠŢƢôÀ¢ýÈ¢, §¸ûŢ¢ýÈ¢ ²üÚì ¦¸¡ûÙõ Å¢„Âí¸û, ¿õ º¢ó¾¨É¸¨Ç, ¿õÀ¢ì¨¸¸¨Ç, ¯½÷¸¨Ç ¬ðÎÅ¢ìÌõ ¸ðÎôÀ¡ðÎì §¸ó¾¢Ãí¸Ç¡¸ Á¡È¢ ´Õ §À¡Ä¢ À¡Ð¸¡ôÒî º¢¨ÈìÌû ¿õ¨Á «¨¼òÐ ¿õ º¢È̸¨Ç ¿ÂÅﺸÁ¡¸ ¦ÅðÊò ¾ûÙ¸¢ýÈÉ. Á¾õ, ¸Ä¡îº¡Ãõ, ƒ¡¾¢, þÉ, ¦Á¡Æ¢ ¿õÀ¢ì¨¸¸û «ÅüÚû º¢Ä. Á¾ ¿õÀ¢ì¨¸¸Ç¢ø ¦ÀÕõ À̾¢, Òá½, þ¾¢¸¡º, ¦ºÅ¢ÅÆ¢ì ¸¨¾¸Ç¢ý °¼¡¸ ¿õ þÂó¾¢Ãò¾ÉÁ¡É Áɨ¾Â¨¼¸¢ýÈÉ.
Òá½í¸û Á¨ÈòÐ ¨Åò¾¢ÕìÌõ §¿¡ì¸í¸¨Ç ¦¾Ç¢Å¡¸ô À¡÷ì¸×õ, «ÅüÈ¢ý §¿¡ì¸í¸Ç¢ý º¡÷Ò¸¨Çô ÒâóÐ ¦¸¡ûÇ×õ ¦ºöŦ¾ýÀÐ, «Åü¨È ¿õ À¢Ã쨻¢ý ´Ç¢ Åð¼ò¾¢üÌû ¿¢Úò¾¢, «¨Å ÒÌòÐõ Á¾¢ôÀ£Î¸¨Çô À⺣ĢôÀ¾¡Ìõ. þò¾¨¸Â «ÊôÀ¨¼Â¢ø À¢ý ¿Å£ÉòÐÅ ¸ðΨ¼ôÒ¸û «ÅŠÂÁ¡¸¢ÈÐ.
Á¾õ ÁÉ¢¾ý §Áø ¦ºÖòÐõ ¬¾¢ì¸õ ÅÖÅ¡ÉÐ. ¾÷¸ò¾¢ý ¿¢îºÂÁüÈ À̾¢¸Ä¢ø §ÅêýÈ¢ ¿õ ¦ºÂø¸¨Çô À¢¨½ìÌõ ¦¸¡Ê¸û «¨Å. «¾ý ¸¡Ã½Á¡¸§Å ºã¸ Å¡úÅ¢¨É ¿¢÷½Â¢ìÌõ, ¸ðÎô ÀÎòÐõ ¬¾¢ì¸ ºì¾¢Â¡¸ þÕ츢ÈÐ.( ±¾üÌ ºã¸ò¨¾ ¸ðÎô ÀÎòÐõ ÅÄ¢¨Á ¯ûǧ¾¡ «¨¾ Ţ¡À¡Ã¢¸Ùõ, «¾¢¸¡ÃÅ÷¸ò¾¢ÉÕõ ¨¸ì¦¸¡ûÇ ¿¢¨ÉôÀÐõ, «Ãº¢ÂÄ¡¸ò н¢ÅÐõ þÂøÒ¾¡§É.) 'Á¾õ ´Õ «À¢ý' ±É ÓüÈ¡¸ô ÒÈ츽¢ôÀÐ, ´Õ ¾£÷Å¡¸ «¨ÁÂÅ¢ø¨Ä ±ýÀ¨¾§Â ÅÃÄ¡Ú ¸¡ðθ¢ÈÐ. ²¦ÉÉ¢ø ÁÉ¢¾É¢ý «¨¼ôÀ¨¼ ¦ÅÇ¢ôÀ¡Î¸Ç¢ø ´ýÈ¡¸ ¬ýÁ£¸õ þÕôÀ¾¢É¡§Ä§Â, «ó¾ò §¾¼¨Ä ´Î츢 §Á¦ÄØõÒÅÐ þÂü¨¸ìÌ Óý¡É¾¡ø º¡ò¾¢Âõ «üȾ¡¸ þÕ츢ÈÐ. ƒ¢òÐ ¸¢Õ‰½ã÷ò¾¢ ÜÚÅÐ §À¡Ä, ¿ÁìÌò §¾¨Å Á¡üÈÁøÄ! ŢƢôÒ½÷×! ŢƢôÒ½÷Å¢øÄ¡ Á¡üÈõ À⽡Á ÅÇ÷¡¸ þÕ측Ð.

********
3


Òá½ þ¾¢¸¡ºí¸¨Ç À¢Ã쨻¢ý ¦ÅÇ¢ìÌ ¿¸÷ò¾¢ Á£û À¡÷¨Å À¡÷ôÀÐõ, «¨Å ¾¡í¸¢ô À¢ÊìÌõ ¿õÀ¢ì¨¸¸û ºã¸ ¿£¾¢ ÅÆí¸ ÁÚò¾¡ø «Åü¨È §¸ûÅ¢¸ÙìÌ ¯ðÀÎòОý ãÄõ ŢƢôÒ½÷¨Å ÕÅ¡ìÌÅÐõ ´Õ ¦À¡ÚôÒûÇ ¸¨Ä»É¢ý ¸¼¨Á¡Ìõ. ¾Á¢ú þÄ츢Âî ÝÆÄ¢ø §À¡É áüÈ¡ñÊý ¬ÃõÀ¸¡Äõ ¦¾¡ð§¼ þò¾¨¸Â ÓÂüº¢¸û §¾¡ýÈ¢ÔûÇÉ ÁÃÀ¡É ¬ò¾¢îÝÊ¢ø '¨¾Âø ¦º¡ø §¸Ç£÷' §À¡ýÈ ¦Àñ¸¨Çô ¦Àñ¸§Ç «ÅÁ¾¢ìÌõ Å¢„Âí¸û ¦¾ýÀ¼, Á¡üÈ¢ Ò¾¢Â ¬ò¾¢îÝÊ ±Ø¾¢ôÀ¡÷ì¸ À¡Ã¾¢ìÌò §¾¡ýȢ¢Õ츢ÈÐ. '«ôÀý ¸ðÊ ¸¢½¦ÈÉ' ¯ôÒò ¾ñ½£¨Ã ÌÊòÐì ¸¢¼ôÀ¾¢ø «ÅÛìÌ ¯¼ýÀ¡Êø¨Ä. À¡Ã¾¢Â¢ý 'À¡ïº¡Ä¢ ºÀ¾õ', ÒШÁôÀ¢ò¾É¢ý, '«¸ø¨Â', ±õ.Å¢. ¦Åí¸ðáÁ¢ý, '¿¢ò ¸ýÉ¢', ͧÃó¾¢Ã Å÷Á¡Å¢ý, 'ÝâÂÉ¢ý ¸¨¼º£ ¸¢Ã½ò¾¢Ä¢ÕóÐ ÝâÂÉ¢ý Ó¾ø ¸¢Ã½õ ŨÃ', À¡ÄÌÁ¡ÃÉ¢ý 'À ÅÂø ÁÉÐ' ±ýÈ ÌÚ¿¡ÅÄ¢ø ÅÕõ «õÀ¢¨¸, «õÀ¡Ä¢¨¸ ÌÈ¢ò¾ ¿£ñ¼ ¸Å¢¨¾ ±É ¿ó¾ ¸¢§„¡÷ ¬îº¡÷¡Ţý '«Š¾¢É¡ÒÃ'òмý ´ôÀ¢ðÎ Å¡º¢òÐô À¡÷ì¸Ä¡õ. ¸¡ñ§¼¸Ã¢ý '¡¾¢'Ô¼ý, ¯¼Öì¸ôÀ¡¨Ä §º÷òÐô ÀÊòÐô À¡÷ì¸Ä¡õ.
*******

Á¡É…¡¦ƒý
16-04-2006.

ரெ.பாண்டியன் -மகாபாரதத்தில் பெண்ணியம் நாடகம் குறித்து

நந்தகிஷோர் ஆச்சார்யாவின் "அஸ்தினாபுரம்" - இது பெண்ணிய நாடகமா?
ரெ.பாண்டியன்


1. பெண்களும்தானே ?

பெண்ணிய வாதங்களால் சங்கடப்படும் ஆண்களுக்கு மகாராணி சத்யவதி போன்ற பெண்மணிகள் மிகுந்த குதுகலத்துடனான ஆயுதத்தைத் தந்து விடுகிறார்கள் :

"பெண்களை ஏனைய பெண்களும்தானே கொடுமைப் படுத்துகிறார்கள் ? "
சத்யவதி கிழட்டு அரசன் சந்தனுவிற்கு மணமுடிக்க நிர்பந்திக்கப்பட்டு, வேறுவழியின்றி அதனை ஏற்றுக்கொண்டபின், தான் இழந்த அனைத்திற்கும் (இளமைக்கனவுகள், சுதந்திர முடிவுகள்) ஈடாக, ஆணாதிக்க சூத்திரக் கயிறுகளிலான அரசவம்ச உலகை 'வரித்துக்' கொண்டுவிடுகிறாள். இந்த வரித்துக் கொள்ளுதல் அவள் ஆண் உலகின் நெளிவு சுளிவுகளை உணர்ந்த பெண் என்கிற ஒரு 'ஆளுமையை' (அல்லது முக்கியத்துவத்தை) தருகிறது. இப்பொழுது அவள், ஆண் சார்பில் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தும் பெண். அவளுக்குள் இருக்கும் பெண் அநேகமாக காணமற்போகும் தருணம் இது. இங்கே ஆணின் இறுக்கமான உலகில் (அதுவும் அரசியல் உலகில்) பெண் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள கைக்கொள்ளும் அரசியலும் இருக்கிறது. அம்பிகாவும் அம்பபாலிகாவும் பீஷ்மரால் சத்யவதியின் குமாரர்களான சித்திராங்கதனுக்கும் விசித்திரவீரியனுக்குமாக கவர்ந்துவரப்பட்டவர்கள். சர்வாதிகார உலகிற்குள் நின்று கொண்டு, தங்களின் விருப்பங்களுக்காக( "என்ன தேஜஸ்..என்ன பௌருஷம்..என்ன வலிமை.. '' ) வீம்பு செய்பவர்கள்; சத்யவதியின் அரசியலால் நசுக்கப்படுபவர்கள்.

[சத்யவதி : ...குரு வம்சத்திற்கு ஒரு வாரிசு கிடைத்தாலன்றி இந்தப் பிரச்னையிலிருந்து விடுதலையில்லை. இதற்கு நீதான் உதவி செய்ய வேண்டும் மகளே.

அம்பிகா : அபாக்யவதியான நானென்ன செய்ய முடியும் அம்மா?

சத்யவதி : உன்னால்தான் முடியும் மகளே! என்னை நிராசை அடையச் செய்ய மாட்டேன் என்று வாக்குக் கொடு. ]

சத்யவதியின் மனமொழியை இவ்வாறு வாசிக்கலாம்:

{ அடியே, நீ அபாக்யவதி என்று எனக்குத் தெரியும், உன் மூலம் ஒரு குலவாரிசு தர ஒரு பரபுருஷன் வருவான், தயாராயிரு. }

இந்த வார்த்தைகள் வியாசரை அம்பிகாவிடம் இரண்டாவது தடவை அனுப்பும்போது சத்யவதியிடமிருந்து அன்புமுலாம் ஏதுமற்று வெளிப்பட்டுவிடுகிறது. சத்யவதி அவளது சூழலிலிருந்து விடுவிக்கப்படும்போது, அவள் தனது விதவை மருமகள்களுக்கு பொருத்தமான துணையைத் தேடும் வேலையை அவர்களிடமே விட்டுவிடக்கூடும். குலவாரிசு கோத்திரத்திற்குள்ளிருக்கும் ஆணிடமிருந்தே பிறப்பிக்கப்படவேண்டும் என்கிற 'தர்ம'த்தை காலடியில் போட்டு தீய்த்து விடவும் செய்யலாம். ஆகவே, "பெண்தானே பெண்ணைக் கொடுமைப் படுத்துகிறாள்" என்பது கொச்சையான வாதமாகிவிடுகிறது. “ஆண் ஆணையே அடித்துக்கொண்டு சாகிறானே” என்று யாரும் சொல்லக் . கேட்பதில்லை. பீஷ்மர் இரண்டு 'தர்மங்களை' முன் வைத்து, அதற்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கிறார் : அரச ஆண் வாரிசின் ரத்தத் தூய்மை

2) பெண்ணுக்கு ஜாதியில்லை -> அவள் கணவனின் ஜாதியைச் சேர்ந்தவள் -> அவள் ' அரச ஆண் வாரிசின் ரத்தத்தூய்மை' கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் மறுப்பதற்கு அருகதையில்லை.

இந்த வகையில் இந்த நாடகம் 'பெண்ணிய பார்வையைச் சொல்லும் நாடகம்' என்பது இந்த நாடகத்தின் பரிமாணத்தை குறுக்குவதாகும். ரத்தத்தூய்மை கோட்பாட்டை பாராட்டிய அரசகுலம், அதனாலேயே அழிந்து போவதை, ரத்தத்தூய்மை கோட்பாட்டிற்கு எதிர்த் திசையிலிருக்கும், குருவம்சம் இல்லாத ஒரு அஸ்தினாபுரத்தைக் கனவு காணும் ஒரு சேடிப் பெண்ணின் பார்வையில் சொல்வதாகும்.

3. சுபாவின் பார்வை

சுபாவின் பார்வையில் பீஷ்மரின் ஒரு அதட்டலில் முடிந்துபோயிருக்கவேண்டிய அரச உரிமைப் பிரச்னைகள் தேவையின்றி அநியாயமாக பல உயிர்கள் பலியாவதற்கும் பல பெண்களின் வாழ்வு சீர்குலைவதற்கும் காரணமாகிவிட்டது. அம்பையின் வாழ்வை சீர்குலைத்ததற்கு பலனாய் குருசேத்திரப்போரில் பீஷ்மர் சிகண்டியால் (அம்பையின் மறுபிறவி) கொல்லப்படுகிறார். இதுதான் இந்த நாடகத்தின் பெண்ணிய பார்வையாக முன்வைக்கப்படுகிறது. ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் மகாராணியாகி, குழந்தை பெற்றால் (புருஷனுக்கோ அல்லது நியோக் மூலமாக குருவம்சத்தைச் சேர்ந்த கொழுந்தனுக்கோ), அக்குழந்தை அஸ்தினாபுரத்திற்கு அரச வாரிசாகிவிடும் (சத்யவதியின் நிலை). ஆனால், அவள் தனது தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து ஒரு அரசனுக்கோ ஒரு அந்தணருக்கோ குழந்தை பெற்றாலோ (சுபாவின் நிலை) அல்லது குருவம்சத்தைச் சாராதவர்களுக்கு குழந்தை பெற்றாலோ (குந்தியின் நிலை), அக்குழந்தைகள் அரச வாரிசாக முடியாது. [குந்தி முறையே தர்மதேவதை, வாயு தேவதை, தேவேந்திரன், அசுவனி தேவதைகள் ஆகியோருக்கு தர்மன்(யுதிருஷ்டிரன்) , பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரை நியோக் மூலம் பாண்டுவின் சம்மதத்தோடு பெறுகிறாள்; சத்யவதி பிறப்பால் அரசபரம்பரையைச் சேர்ந்தவளாக இருந்தாலும், சூத்திர வளர்ப்பு தந்தையின் காரணமாக வெளி உலகுக்கு சூத்திரப் பெண்ணாகவே அறியப்படுகிறாள் ]

4. சுபாவின் பெண்ணியமும் அம்பிகாவின் பெண்ணியமும் ஒன்றா?

சேடிப்பெண்ணுக்கு வியாசரின் கோரமுகத்தைவிட ஞானம் முக்கியமானதாகிறது; ஆனால், அரசமகளிருக்கு வலிமையும் பௌருஷமும் பிரதான எதிர்பார்ப்பாயிருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தனிப்பிறப்பு. விருப்புக்கு மாறாக திணிக்கப்படும் எதுவும் ஆதிக்கத்தைத் தோற்றுவிக்கிறது. ஆக சுபாவின் பார்வையில் வியாசர் தன்னை ஆன்மீக நிலைக்கு கொண்டு சென்றவர். ஆனால், அதே சமயத்தில் அவர் அம்பிகாவை துன்புறுத்த துணை போனவர். சுபாவிற்கு தன் மகன் விதுரனுக்கு ரத்ததூய்மை கோட்பாடு காரணமாக அரசாளும் வாய்ப்பு கிடையாது என்பதை உணரும்போதுதான், சத்யவதி தொடங்கி தனது நிலை வரை பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி ஞானோதயம் பிறக்கிறது. அதுவரை, ஒரு சேடிப் பெண்ணாக அரசர்களுக்கும் அரச குருமார்களின் விருப்பதிற்கு இணங்குவதை பாக்கியமாக நினைத்துவந்தவள்.

5. ஆ ண் குலவம்சம் நலம் பேணும் காந்தாரி

ஆண்களின் உலகத்தை முன்னிருத்துவதில் பெண்கள் பல நேரங்களில் முன்நிற்கிறார்கள். காந்தாரி பார்வையற்ற திருதராஷ்டிரனை கல்யாணம் செய்து கொண்டபின், கண்களைக் கட்டிக்கொள்கிறாள். அது அன்பினால் ஆரம்பித்தததாக இருக்கலாம். ஆனால், குருவம்சமான கௌரவர்களுக்கே அரசாட்சி என்று நம்பிய புருசனின் கருத்துலகையே அவளும் வரித்துக்கொள்கிறாள். பிறகு மைந்தர்களின் மரணத்திற்குப்பிறகு காந்தாரியின்
சொல்படிதான் திருதராஷ்டிரன் வனவாசம் புறப்படுகிறான்.
சத்யவதிக்குப் பிறகு வலிமையான ஒரு பெண் பாத்திரம் காந்தாரி. சத்யவதி குலவாரிசுக்காக பீஷ்மர், மருமகள்கள் ஆகியோரோடு முரண்படுகிறாள்; காந்தாரி தன் குலநாசத்திற்குப்பின் கணவன், மற்றும் மொத்த குருவம்சத்தையும் வனவாசம் போகவைக்கிறாள்.

6. நந்தகிஷோரின் கலை

நவீனத்துவ பார்வையில் ஒரு மையப்பாத்திரத்துக்கு நிகழும் சம்பவங்கள் வழி வாழ்க்கை விசாரணைக்கு உள்ளாகும். பின்நவீனத்துவ பார்வையில் யாரும் மைய கதாபாத்திரமாக இல்லாது, நவீனத்துவ பார்வையில் விளிம்பில் தென்பட்டவர்களின் வாழ்க்கை கவனத்துக்குள்ளாகும். ஆங்கில இலக்கியத்தில் நவீனத்துவ உலகில் வெள்ளைக்கார ஆண் எப்பொழுதும் மைய கதாபாத்திரமாக இருப்பான். பின்நவீனத்துவ உலகில், வெள்ளைக்கார பெண்கள், கறுப்பின ஆண்கள், கறுப்பின பெண்கள் ஆகியோர் மீது வெளிச்சம் பாயும்.

இந்திய இலக்கியத்தில் நவீனத்துவ உலகில் வலம் வருபவர்கள் பெரும்பகுதி மேல், நடு சாதியின் / வர்க்கத்தின் ஆண்கள். பின்நவீனத்துவத்தின் விரிவுகளே தலித்தியமும் பெண்ணியமும்.

இந்த நாடகம் மைய கதாபாத்திரமாக யாரையும் கொள்ளவில்லை. மகாராணி சத்யவதி, சுபா, அம்பிகா, குந்தி ஆகியோரது பார்வையில் அவர்கள் சந்திக்க வேண்டிவந்த ஆதிக்கம் விவரிக்கப்படுகிறது; செய்தியாக, சத்யவதியின் துன்பமும், அம்பபாலிகாவின் பயப்பிராந்தி விளைவான நோயும், அம்பைவின் தற்கொலையும் — சால்லப்படுகின்றன. ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் இவர்கள் அனைவரது குரல்களும் நாடகத்தில ஒலிக்குமாயின், இந்த நாடகம் ஒரு முழுமையான பின்நவீனத்துவ வீச்சைப் பெற்றிருக்கும். ஆனால், இப்பொழுது நாடகம் தன்னளவில்முற்றுப்பெற்றுவிட்ட நிலையில் இருக்கிறது. நாடகத்தின் முடிவில்: [விதுரர் : ஆனால் குருவம்சமே இல்லாத இடத்தில் என்ற இந்த எண்ணம் உனக்கேன் அம்மா? சுபா: அதையெல்லாம் நீ காண நேர்ந்திருந்தால்! ...] பார்வையாளனும் அதையெல்லாம் காணப்போவதில்லை; ஆனால், அதுதானே நிகழ்த்தி காட்டப்படவேண்டும் ? இந்த நாடகத்தை ஒரு நவீனத்துவ துன்பியல் நாடகமாக மகாராணி சத்யவதியைக் கொண்டு செய்திருக்கமுடியும் :

சாந்தனுவை சத்யவதி மணம் கொள்ளநேர்வது (ஆதிக்கத்தை சந்திப்பது) அரசில் சர்வாதிகாரியாக சத்யவதி மாறுவது ( ஆணாதிக்க உலகை வரித்துக் கொள்வது) அம்பிகா, அம்பபாலிகா, அம்பை ஆகியோரது வாழ்க்கை žர்குலைவுக்கு சத்யவதி காரணமாவது ( ஆணாதிக்க உலகை சக பெண்கள் மீது நிறுவுவது) இறுதியில் பாண்டுவின் வலிமையற்ற உடல், திருதராஷ்டிரனின் பார்வை இழப்பு ஆகியோரது நிலைக்கு பொறுப்பேற்று வனம் செல்வது (பிராயசித்தம் ) . இந்த வகையில் பெண் வாழ்வு முழுக்க சந்திக்க நேரும் தோல்விகள் மிகுந்த வீச்சோடு சொல்லப்படமுடியும்.

நாடகம் என்பது நிகழ்த்து கலை; வந்திருக்கும் பார்வையாளர்களுக்கும் நடிகனுக்கும் நாடகமேடையின் சாத்தியங்களுக்கும் இடையில் நாடகப் பிரதி உயிர்ப்பெற வேண்டும். ஆகவே, வாசிப்பில், ஒரு சிறுகதை அல்லது நாவல் எழுப்பும் பாதிப்பை நாடகம் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கமுடியாது. சிறுகதையும் நாவலும் வார்த்தைகளினால் சாதிக்கப்படும் கலை. நாடகப்பிரதி நிகழ்த்து கலைவடிவத்தின் எழுத்தாக்க தோற்றம் மட்டுமே.
மேற்சொன்ன அனைத்தும் நாடகப்பிரதியின் வாசிப்பில் சொல்லப்பட்டவை; மேடை நாடகமாக இந்த பிரதி அனுபவமாகும் தருணத்தில், இங்கே சொல்லப்பட்டவை அனைத்தும் இயல்பாக காலாவதியாகக்கூடும்.

7. சில கேள்விகள் :

சத்யவதி தனது அரசியலின் ஒரு பகுதியாக தனது தந்தைக்கு பீஷ்மன் செய்துகொடுத்த சத்தியத்தை கைவிடச்சொல்கிறாள். ஒரு சத்தியத்தை வேண்டியவனே மனம் மாறி திரும்பபெற முன்வந்தாலும், சத்தியம் செய்தவனுக்கு அந்த சத்தியத்தின்மீதான கடப்பாடு என்ன என்பது ஒரு முக்கியமான கேள்வி.

***

8. இதுவரையிலான என் தாம்பத்யம் இப்பொழுது யார் வசம் ?

"உடலுக்கப்பால்"-ல் அசுரர் அரசன் மகள் சர்மிஷ்டைக்கும் அசுரர் குரு சுக்ரசாரியார் மகள் தேவயானிக்கும் குளத்தங்கரையில் ஏற்பட்ட மோதல் அவர்களது தலைவிதியை மாற்றிவிடுகிறது. சர்மிஷ்டை தேவயானிக்கு அடிமையாகிறாள். தேவயானியை மணந்த சக்ரவர்த்தி யயாதி சர்மிஷ்டையை ரகசியமாக மணந்துகொள்ள, மாமனார் சுகராச்சாரியாரின் சாபத்தையும் பிறகு விமோசனத்திற்கான வழியையும் பெறுகிறான். யயாதியின் ஐந்து மகன்களில் கடைசி செல்ல மகன் புரு மட்டும் மூப்பை ராஜ்யத்திற்கு மாற்றாக பெற முன்வருகிறான். இதிலிருந்து நந்தகிஷோரின் கற்பனை ஆரம்பமாகிறது.
அப்பனும் பிள்ளையும் இஷ்டத்திற்கு இளமையையும் மூப்பையும் மாற்றிக்கொண்டால், தாயின் இதுவரையிலான தாம்பத்யம் உண்மையில் இப்பொழுது யார் வசம் என்பதிலிருந்து பெண்ணின் நிலை விவரிக்கப்படுகிறது. புரு பிந்துமதியையும் தாயாக பார்க்கும் பட்சத்தில், அவன் மறுபடி இளமையை ஏற்கும்போது, பிந்துமதியின் களியாட்டம் இவன் வசமாகிவிடுகிறது.

வினை ஒரு வட்டமான விளையாட்டை நடத்துகிறது :
தேவயானி கசனை(அவள் முன்பு விரும்பிய காதலன்) நினைத்துக்கொண்டு தன்னில் சேர்ந்ததாக யயாதி சர்மிஷ்டையிடம் வருகிறான். சர்மிஷ்டை (புருவிடமிருந்து இளமையைப் பெற்ற) யயாதியிடம் மகனின் இளமையை கண்டு அவனை ஒதுக்குகிறாள். அவன் சேர்ந்த பிந்துமதியோ, புருவை நினைத்துக்கொண்டிருந்தாள் என்பதை உணர்ந்து, மூப்பை மறுபடி பெற்றுக்கொண்டுவிடுகிறான். வினை புருவின் தலையில் விடிகிறது.
இந்த நாடகத்தில் தாய் மகன் இருவரும் அவதிப்படுகிறார்கள் என்றாலும், இதற்கு காரணம் தந்தை சொல்லைத் தட்டாத பிள்ளை புரு. இவர்களின் ஒப்பந்தத்தில் தாயின் சம்மதம் கேட்கப்படுவதில்லை.
"அஸ்தினாபுரத்தி"ல் ரத்தத்தூய்மைக்கோட்பாட்டை நிறுவுவதற்காக பெண்களின் இருப்பு அலைகழிக்கப்படுகிறது. "உடலுக்கப்பாலி"ல் தந்தை-தாய்-மகன் முக்கோண உறவில் தந்தையும் மகனும் எடுக்கும் முக்கிய முடிவில் தாய் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல் அலட்சியப்படுத்தப்படுகிறது.

9. பெண்ணிய நாடகங்களில் புதிதாக என்ன?

பெண்ணிய நாடகங்களில் ஆண்கள் பெண்களை சீர்குலைத்த கதையைத் திரும்ப திரும்ப சொல்வதன்றி, புதிதாக என்ன சொல்லிவிடப்போகிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு அடிக்கடி எழுகிறது. மகாபாரதத்திற்கு உரை எழுதிய சுவாமி சித்பவானந்தர் ஓரிடத்தில் இவ்வாறு சொல்கிறார்:

"நிலவுலகில் வாழ்ந்திருக்கும் உயிர் அனைத்துக்கும் சத்ருக்கள் அமைந்திருக்கின்றன. சத்ருவைச் சமாளிப்பது வாழ்க்கைப் பயிற்சியில் ஒரு பகுதியாகும்" ஆனால், சத்ருவை சமாளிக்க வழியில்லாதவர்கள்தான் உலகில் அதிகம் என்று தோன்றுகிறது. அந்த வழியில்லாதவர்களின் மனமொழி ஒவ்வொரு தடவையும் ஒலிக்கத் தொடங்கும்போது , நாம் இதுவரை நன்கு அறிந்து வைத்திருக்கும் யதார்த்தம் ஒரு வண்ணமிகு திரைக்காட்சியின் வெளிறிய புகைப்படமாய் உறைந்துவிடுகிறது.

சித்தன்: மகாபாரதத்தில் பெண்ணியம் நாடகம் குறித்து


மகாபாரதத்தில் பெண்ணியம்.

சித்தன்

நீரின்றி அமையாது உலகு; பெண்களின்றியும்! யுகம் யுகமாக பெண்கள் துய்க்கும் வலிகளையும் கடந்துவரும் பாதையின் கூரிய முட்களையும் மெல்லிய வெளிச்சமிட்டும் மிகுதியான உணர்வுகளைச்சொல்ல ஒரு கதைசொல்லி விளக்கு கொண்டும் மலரகங்களையும் அதன் கருகிப்போன வாசனைகளையும் களமாக்கியிருக்கிறது இப்படைப்பு.

பெண்குழந்தைகளைக் கடத்தி பாலியல் மற்றும் கொத்தடிமை தொழிலுக்கென வேற்று மாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் குழுவிடமிருந்து அப்பெண்குழந்தைகளை மீட்டுக்கொண்டு வருகிறாள் ஒரு பெண். ரயில் பயணத்தின்போது எதேச்சையாக அக்கொடூரத்தைக்காண நேருகிறது அவளுக்கு. பிஞ்சுப்பெண்குழந்தைகளைக் கண்டு நெஞ்சம் கொதிக்கிறது. மீட்டு வந்த குழந்தைகளில் விவரம் தெரிந்த இரு பெண்களை ஒப்படைத்திருந்த இடத்தில் காணவில்லை. எங்கே அவர்கள் என்று படபடப்புடன் விசாரிக்கும்பொழுது தன்னையே காட்டிக்கொடுக்க முனைந்தவர்களை என்ன செய்வதாம், கடலுக்குள் போட்டுவிட்டேன் என்கிறான் வில்லன். மனதில் ஆங்காரமும் வலியும் இயலாமையும் அச்சமும் கோபமும் சேர்ந்து கலங்கடிக்க, என்ன சொல்வது? என்ன சொல்லமுடியும்? ஒரு பெண்ணால் என்ன பெரிதாய்ப் பேசமுடியும்; எப்படித்தான் போராடமுடியும்?

நீருக்குள் மூழ்கும் உடலைப்போல மனம் இயலாமைக்குள் நழுவ, என்ன சொல்கிறாள் தெரியுமா?
“சாமியார்கள்; பீடாதிபதிகள்; பொறுக்கிகள்; போலீஸ்காரர்கள்; அயோக்கியர்கள்; பெண்பித்தர்கள்; ரவுடிகள்; அரசியல்வாதிகள்; பொறுப்பற்ற கணவர்கள் என எத்தனை பேரிடமிருந்து தாண்டா பெண்கள் நாங்கள் பயந்து ஓடுவது?” (இத்திரைவரிகளே இப்படைப்பின் வாசிப்பு நிறைவில் எனக்குத் தோன்றியவை என்பதால் இந்த இடைச்செறுகல்.)

மகாபாரதம் என்பது ஏதோ ஒரு யுகத்தில் நடந்த வரலாறோ புராணமோ ஆசிரியமனத்தில் தோன்றிய புதினமோ புனைகதையோ எதுவாகிலும் இருக்கலாம். பன்னெடுங்காலத்திற்கு முன்பெழுதினாலும் சரி பன்னெடுங்காலத்திற்குப் பின் நாடகமாக்கினாலும் சரி, எங்கும் அது ஒரு களம் அவ்வளவுதான். இப்படைப்பிலும் அது ஒரு கலைப்பின்னணியாக மட்டுமே வந்துபோகிறது. முன்னணியில் நடக்கும் காட்சிகளில் உங்களுக்குத்தெரிந்த, எனக்குத்தெரிந்த சுபா, அம்பிகா, அம்பமாலிகா, சத்யவதி, குந்தி, சர்மிஷ்டை, பிந்துமதி மற்றும் இன்னபிற பெயர்களுடன் பெண்கள் உலவிக்கொண்டும் சில சமயங்களில் அப்பெயருக்காக வாழ்ந்து கொண்டுந்தான் இருக்கிறார்கள்.

வரலாற்றின் மூக்குநுனிவரை நமது விரலைக்கொண்டு செல்லலாம் என்கிற கூற்றின்படி சுபா என்கிற பாத்திரத்தை நாடகத்திற்காக பேசவைத்து கற்பனையாக்கியது ஆசிரியரின் அன்பான வரம்புமீறலெனினும் சிலசமயம் பார்வையாளர்களுக்கும் தத்தம் முதுகுகளைப் பார்க்க கண்ணாடி தேவைப்படுவதையும் அது விளக்க முயல்கிறது. கட்டுரைகளிலே மனச்சாட்சியை உருக்கொணரலாம்; பேசவைக்கலாம்; நாடகத்தில்?

மிகுந்த வலிமையையும் பௌருஷத்தையும் தேஜஸ்சையும் பராக்கிரமத்தையும் அழகையும் கொண்ட பிதாமகர் பீஷ்மனை முகத்தில் அறைந்து, காலில் மிதித்து மார்பில் குத்தி இழுக்கும் சுபாவின் கத்தி என்றோ ஒருநாள் அம்பிகா கொடுத்ததாக இருக்கவேண்டும். அவளது வலியின், நிராசையின், உயர்தர அடக்குமுறையின் ரண வீர்யம் தலைமுறை கடந்தும் மீள்தொடர்வதை சுபாவும் அவளது கத்தியும் காட்டுகின்றன.

தனது தாபத்தைத் தணிக்கமுடியாத நன்றிகலந்த கடமையுணர்வு தாண்டவும் தயாராகும் ஒருபெண்; ஆசையில்லாத நிலத்தில் உடல் தர்மத்திற்கெதிராக விதை போடத்தூண்டும் இன்னொரு பெண்; தவம், ஞானம், மகா தபஸ்வம் தரும் அச்சம் மற்றும் விகாரம் இவைகளைத்தான்டியும் மகா புருஷராக்கிக் கொண்டாடும் இன்னொடு பெண்; பெருமை கொண்ட குருவம்சத்தைவிட பெண்மையை முன்னிறுத்தும் மற்றொரு (கற்பனைப்)பெண் என சிதறிய சித்தாந்தங்களாய் பரவிக்கிடக்கிறார்கள் பெண்கள்.

கற்பனை சுபாக்களைவிட கத்தியையும் புத்தியையும் தீட்டிக்கொண்டுவரும் அம்பிகாக்களையும் சுபாக்களையும் நவீன அஸ்தினாபுரத்திற்கு நான் வரவேற்கிறேன். ஆயிரம் பக்கங்களைக்கொன்ட ஒரு நாவலாக எழுதினால் கூட உணர்த்தமுடியாத 'சாரத்தை' சுருக்கென்று மிளகுக்காரமாய் கொடுத்த ஆசிரியரைப் பாராட்டத்தான் வேண்டும்.

****

இந்துமதம் எப்படி ஒரு மகாசமுத்திரம் எனப்படுகிறதோ அதைப்போல மகாபாரதம் ஒரு இந்துமகாசமுத்திரம். இதற்குள் பரவிக்கிடக்கும் மாந்தர்களும் சம்பவங்களும் மதமூடிகளைத் தவிர்த்து நேரிடை பார்வைக்கு உலகெங்கும் கிடைப்பவை. அதிலிருந்து இன்னொன்றும் வருகிறது ஓங்கி உரைக்கும் ஒரு மனமுரசாக!

ஆன்மாக்களின் புணைவைப்பேசும் அதிகார தலைவனுக்கு முதுமை தவிர்க்க துப்பில்லை; ஆத்மார்த்த உறவு பேணும் இனிமையான நினைவு பேசும் தலைவிக்கு முகவரி கொண்ட இளமை மீறத் துணிவில்லை; அழிவற்ற ஆண்மை புணரும் நிலையான பௌருஷத்தை நோக்கிய வழி மாறிய பாவையின் பயணம் ஒருபக்கம்; மீந்துபோன நினைவுகளையும் தவறிப்போன கனவுகளையும் கொண்டு புதியதாய் உதிக்கும் இன்னொரு ஜீவன் மறுபக்கம்; இவைகளின் முடிவு என்ன? விடை சொல்கிறது ‘உடலுக்கப்பால்.’

ஒரு மனத்தின் முழு ஆக்கிரமிப்பை மெல்லிய கோடு போல நுழைத்து முழுதையும் பிறகு வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். சர்மிஷ்டை துடிப்பதும் புரூ துடிப்பதும் எதிரெதிராகத்தோன்றினாலும் ஒரே கோட்டில் பயணிப்பவையே எனினும் ஆணின் தவிப்பு சமரசமாக்கப்படுவதும் பெண்ணின் தவிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதும் இறுதியில் வியப்பையே தருகின்றன.

புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரும் மழுங்கடிக்கப்பட்ட பெண்ணுணர்வுகளின் எழுச்சிப்பேரணிக்கு புத்தம் புது இலக்கிய வாசல் அகலத்திறந்து கிடப்பதையும் அதில் ஏற்கனவே அகல்யாவாகவும் அகலிகையாகவும் புகுந்தவர்களையும் நினைவிற்கு உணர்த்துகிறது இந்நூல்.

‘ஒரு மனிதன் தனது சூழ்நிலைகளின் காரணமாய்த்தான் தன் காதலின் அழைப்பிற்கு பதிலளிக்க முடிவதில்லை.’

‘மனம் விரும்பாமல் தன்னை அளிக்கவேண்டிய நிலை எத்தனை வேதனையான வலி என்பதை யாரறிவார்?’‘

‘தனக்குச் சாதகமாக இல்லாவிடில் இந்த படைப்பு முழுவதுமே பைத்தியக்காரத்தனமாகத் தோன்றிவிடுகிறது.’

என்பவைபோன்ற சாதாரணத்தோற்றம் கொண்ட வரிகள் எவ்வளவு ஆழமானவை என்பதை முற்றிலுமாக உணர்ந்துகொள்ளமுடிகிறது.

யுகங்கள் கடந்து தொடரும் சக ஜனங்களின் கதையை வித்தியாச களத்தினுள் நுழைத்து எழுதிய ஆசிரியருக்கும் அழகாக மொழிபெயர்த்தவருக்கும் இங்கு பரிந்துரை செய்தவருக்கும் எனது வாழ்த்துகள்; நன்றிகள்.

அன்பன்
சித்தன். 91087672

இராம.கண்ணபிரான்- “மகாபாரதத்தில் பெண்ணியம்” குறித்து:

இராம.கண்ணபிரான்- “மகாபாரதத்தில் பெண்ணியம்” குறித்து:

01

பேராசிரியர் நந்தகிஷோர் ஆச்சார்யா, மகாபாரதம் கூறும் வழக்கமான கதையில் வருகின்ற பீஷ்மர் சபதம், குருஷேத்திரப் போருக்குப் பிந்திய பாண்டவர் இராஜ்ஜியம் முதலிய கூறுகளை ஆதாரமாக எடுத்துக் கொண்டு, மகாபாரதக் கதையின் ஊடே தென்படும்சாத்தியப்பாடுக் கதை அம்சங்களைத் தம் கற்பனையில் உருவாக்கி, பீஷ்மர் சபதம் வெவ்வேறு நிலைகளில் எதிர்நோக்கும் சவால்கள், குருவம்சத்து வாரிசுகள் கோரும் இராஜ்ஜிய அரசுரிமை போன்றவற்றை பின்னணிச் செய்திகளாக ஆக்கி, அரண்மனைப் பெண்டிர் அனுபவித்த உடல்-மன வேதனைகளை இன்றைய பார்வையில் தருகிறார், ‘ அஸ்தினாபுரம்’ என்ற தம் நாடகத்தின் மூலம்.

02
சந்துனு மஹாராஜா ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, இளம்பெண் சத்யவதியைக் கண்டு மையல் கொள்கிறார். திருமணம் புரிந்தால், தம் மகள் சத்தியவதியின் வாரிசுகளே சந்துனுவின் நாட்டை ஆளும் உரிமை பெற வேண்டும் என்று, சத்யவதியின் தந்தை அவரிடம் கேரிக்கை விடுகிறார்.

சந்துனு ராஜாவின் மூத்த மனைவி கங்காதேவி மூலம் பிறந்திருந்த பீஷ்மர், தம் தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தமக்குச் சூட்டப்பட்டிருந்த யுவராஜா பட்டத்தைத் துறந்து, எதிர்காலக் குருவம்ச அரச பதவிக்குத் தம்மால் எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காக, தம் ஆயுள் முழுவதும் பிரமச்சரிய விரதம் பூண்டு நிற்பதாகச் சபதம் செய்கிறார். அதன் பிறகு, சந்துனு மன்னருக்குச் சத்யவதி இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறாள்.
சத்யவதிக்குச் சித்திராங்கதன், விசித்திரவீர்யன் என்ற இரு மகன்கள் பிறக்கிறார்கள். மன வலிமை குறைந்த சித்திராங்கதன் முதலில் இறந்துபோக, சந்துனு மஹாராஜாவுக்குப் பிறகு, விசித்திரவீர்யன் அஸ்தினாபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இராஜ்ஜியத்தை ஆள்கிறான். கொஞ்ச காலத்திற்குப் பின்னர், காச நோயால் அவதியுற்ற விசித்திரவீர்யனும், சந்ததி இல்லாமல் மரணமடைகிறான். அவனுடைய அம்பிகா, அம்ப பாலிகா என்ற இரு மனைவியரும் தம் இளவயதில் விதவைகள் ஆகின்றனர். அஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசன் இல்லாமல் தவிக்கிறது. அன்றாட அரச காரியங்கள், சத்யவதி பீஷ்மர் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன.

03

இதுவரை நாம் கண்ட கதைக்கூறு, மகாபாரதம், சொல்லும் வழக்கமான கதையின் ஒரு பகுதி ஆகும். இனி, பீஷ்மரின் சபதம் கேள்விக்கும், குற்றச்சாட்டுக்கும் உள்ளாகும் நாடகக் காட்சிகளைப் பார்ப்போம்.

இரண்டாவது காட்சியில், பீஷ்மரும் அவரது சிற்றன்னை சத்யவதியும் உரையாடுகிறார்கள்.

“உன் சபதம் எனக்கு வியாகூலத்தைத் தருகிறது. என் வயிற்றுப் பிள்ளைகள் சித்திராங்கதன், விசித்திரவீர்யன் ஆகியோர் அரச உரிமையில் எந்தக் குறுக்கீடும் ஏற்படக்கூடாது என்றுதானே, என் தந்தை உன்னிடம் வாக்குறுதி பெற்றார். இப்போது சந்ததியே இல்லாத நிலையில், உன்னுடைய சபதம் அர்த்தம் இழந்து நிற்கிறது, பீஷ்மா! நான் உனக்கு உன் சபதத்திலிருந்து விலக்கு அளிக்கிறேன். என் மகன் விசித்திரவீர்யன் மனைவிகளாக இருந்த அம்பிகா, அம்ப பாலிகா ஆகிய இருவரையும் நீ மணந்து வம்ச விருத்தி செய்”, என்று சத்யவதி பீஷ்மரிடம் கூறுகிறாள்.

“என் ஆயுள் பூராவும் பிரம்மச்சாரியாக இருப்பேன் என்ற விரதத்தைப் பூண்டிருக்கிறேன். பெண்ணுடன் சரீரச் சேர்க்கை என்ற எண்ணமே, எனக்கு நடுக்கத்தைத் தருகிறது, தாயே!” என்கிறார் பீஷ்மர்.

“ பெண்ணைக் கண்டு நடுங்கும் நீ, ஒரு கோழை! குருவம்ச வாரிசுக்குப் பயன்படாமல், என்றோ செய்த ஒரு சபதத்துடன் ஒட்டிக் கொண்டு, மூவுலகிலும் புகழ் பெற்றுவிட்ட ஒரு சுய பிம்பத்துடன் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்,” என்று சத்யவதி பீஷ்மரின் சபதத்தைக் குறை கூறுகிறாள்.

ஆறாம் காட்சியில் பீஷ்மர், இறந்து போன தன் தம்பி விசித்திரவீர்யனின் மனைவி அம்பிகாவிடம் உரையாடுகிறார்.

“திருதராஷ்டிரன் பார்வை அற்றவன், பாண்டுவோ இரத்தச் சோகை பிடித்த நோயாளி. நீயும், அம்பபாலிகையும் என் மூத்த சகோதரர் வியாசரிடம் விருப்பம் இல்லாமல் உங்களை ஒப்படைத்ததாலேயே, இவர்கள் இருவரும் குறைகள் உடையவர்களாகப் பிறந்திருக்கிறார்கள். குருவம்சத்திற்கு ஒரு ஆரோகியமான ஓர் அரசகுமாரன் வேண்டும். அதனால், சிற்றன்னை சத்யவதி மீண்டும் வியாசரை நியோக் ஏற்பாட்டுக்கு அழைத்திருக்கிறார்,” என்று பீஷ்மர் அம்பிகாவிடம் சொல்கிறார்.

“காசியில் நடைபெற்ற எங்கள் சுயவரத்தில் கலந்து கொண்டு, அங்கு வந்திருந்த பல நாட்டு இராஜகுமாரர்களை வென்றீர்கள். உங்களின் வலிமையும், வீரமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அப்போதே உங்களை நான் என் மனதில் மணவாளராக வரித்துக் கொண்டேன். காசியிலிருந்து அஸ்தினாபுரம் வந்த பிறகுதான், உங்கள் பிரம்மச்சரிய விரதம் பற்றியும், உங்கள் தம்பி விசித்திரவீர்யனுக்கு, என்னையும், என் இரு சகோதரிகளையும் தாரங்களாகக் கொண்டுவந்திருப்பதைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். இன்றுவரை உங்கள் பால் உள்ள என் காதல் உணர்வு குறையவில்லை நியோக் உறவில், ஆண் பெண் இருபாலரிடமும் பரிபூரண சமர்ப்பணம் தேவை. அப்போதுதான் குழந்தை விக்கினம் இல்லாமல் பிறக்கும். வியாசரின் முதல் தீண்டுதலில் நான் ஜடமாகிப் போனேன். மீண்டும் அவர் எதற்கு? இப்போது தாங்கள் இல்லையா? என்னைக் கலந்து வம்ச விருத்தி செய்யுங்கள். உங்களுக்கு ஏற்ற வகையில், என்னிடம் நிறையவே இருக்கிறது”, என்று கூறி அம்பிகாதன் மனக் கதவைத் திறக்கிறாள்.

அப்போது தற்செயலாக அங்கு வந்த தன் மாமியார் சத்யவதியிடம், “பீஷ்மரின் சபதம், குருவம்சத்தின் வாரிசு விருத்திக்கு ஏற்பட்டுள்ள ஒரு சாபம் தன் தந்தையை சந்துனு மன்னரின் கிழ வயதுக் காம ஆசையை அன்றே இவர் தடுத்திருக்க வேண்டும் ஆனால், இவர் தன்னையே அவருக்குத் தியாகம் செய்தார். சந்துனு மகாராஜாவின் பலவீனத்திற்குப் பீஷ்மர் சபதம் வழி, குருவம்ச நாடு ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?” என்று அம்பிகா வெடிக்கிறாள்.

நாடகத்தின் இரண்டாம் காட்சியில், சத்யவதி வம்ச விழுதுக்காகப் பீஷ்மரிடம் அவருடைய சபதத்தை விடும்படி கேட்டதையும், ஆறாம் காட்சியில் அம்பிகா தன் ஒருதலைக் காதலை பீஷ்மரிடம் கூறி, அவருடைய சபதத்தைத் துறக்கும்படி வேண்டியதையும் நாம் கண்டோம்.

எட்டாம் காட்சி, தம் தந்தைக்கு செய்திருந்த தியாகத்தாலும், தம் பிரம்மச்சரிய விரதத்தாலும் மூவுலகிலும் பெருமையடைந்திருந்த பீஷ்மர், குருவம்சத்தில் தூய இரத்த வாரிசு பற்றி ஒரு மதர்ப்பு எண்ணம் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. இக்காட்சியில்தான் விதுரரின் அன்னை சுபா, பீஷ்மரிடம் நேரடியாக அவர் சபதத்தை இடித்துரைக்கிறாள்.

பாண்டுராஜா மரணமுற்றதும், பீஷ்மர் சத்யவதியின் ஆதரவோடு, திருதராஷ்டிரரை அஸ்தினாபுர அரியணையில் அமர்த்துகிறார்.

பார்வையற்ற திருதராஷ்டிரரை விட, ஆரோக்கியமான தன் மகன் விதுரன் அரசாள எல்லாத் தகுதிகளும் பெற்றவன் என சுபா பீஷ்மரிடம் வாதிடுகிறாள்.

அதற்குப் பீஷ்மர், “ நீ முன்பு அம்பிகாவுக்குத் தாதிப் பெண்ணாகப் பணி புரிந்தவள். நியோக் வழி, விதுரன் வியாசருக்கு உறாவானவன், என்றாலும், அவன் உன் வயிற்றில் பிறந்ததால் ஒரு சூத்திரன் ஆகிறான். க்ஷத்திரியன் பாண்டுவுக்கு, விதுரன் சகோதரன் என்றாலும், அவன் பாண்டுவுக்குப் பந்துவாகவே இருக்க முடியும்; அரசனாக முடியாது. குருசபையினரும், அமைச்சர் சபையினரும், பிரஜைகளும் விதுரனை குருவம்சத்தவனாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், “ என்கிறார்.


ஆவேசம் கொண்ட சுபா, “ வாரிசு விஷயத்தில் இரத்தத் தூய்மை பற்றி உங்களுக்கு ஓர் அழுத்தமான எண்ணம் இருப்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது, அரண்மனைக் குருசபையிலும், அமைச்சர் அவையிலும் இருப்பவர்கள் உங்கள் வம்சத்தவர்கள்தானே! குருவம்சம் சார்ந்த நன்மைகளே நாட்டுக்கும் நன்மைகள் என்று பிரஜைகளுக்கு நீங்கள் எல்லோரும் சேர்ந்து கற்பிதம் செய்து, அவர்கள் மனங்களில் ஒரு பொய்யான பிரமையை உருவாக்கி வைத்துள்ளீர்கள். பீஷ்மரே நீர் சபதம் மேற்கொண்ட தினத்தன்றே உம்முடைய உண்மையான, தூய இரத்தம் கொண்ட குருவம்சம் செத்துப் போய்விட்டது!” என்று கொட்டுகிறாள்.

04

பேராசிரியர் நந்தகிஷோர் ஆச்சார்யா, ‘அஸ்தினாபுரம்’ என்ற தம் நாடகத்தை ஒன்பது காட்சிகளாக எழுதியிருக்கிறார். காட்சிகள் இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, ஆகியவற்றை, அவர் பின்னோக்கும் காட்சிகளாக அமைத்து, அவற்றில் பீஷ்மரின் சபதம் வேறுவேறு நிலைகளில் எதிர்நோக்கும் சவால்களையும், அவர் தம் குருவம்சத்தின்பால் காட்டிய பாரபட்சப் பிடிப்பையும் காட்டுகிறார்.

ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய ஐந்து காட்சிகளில், வயோதிகப் பெண்களான சுபாவும் குந்தியும் விதுரர் இல்லத்தில் அமர்ந்து, ஓர் இரவு முழுவதும் அதிகம் உரையாடுவதாக நாடகாசிரியர் அமைத்துள்ளார்.

பதினெட்டு நாள் குருக்ஷேத்திரப் போரில், குரு வம்சக் கௌரவர்களை தங்கள் வீரத்தால் வென்ற குருவம்சம் இல்லாத பாண்டவர்கள், அஸ்தினாபுர இராஜ்ஜியத்தை ஆளத் தொடங்கிய நேரம் திருதராஷ்டிரரும், அவர் மனைவி காந்தாரியும் காட்டுக்குச் செல்லவிருக்கிறார்கள் அவர்களுடன் போரில் மடியாது எஞ்சிய குருவம்சத்தினரும், குந்தியும், விதுரரும் கானகம் செல்லவிருக்கிறார்கள்.

சுபா மட்டும் அஸ்தினாபுரத்தில் தங்கிவிடுகின்றாள். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பீஷ்மர் சபதம் மீதும், குருவம்சத்தின்பால் அவர்காட்டிய ஒருதலைப் பட்ச விசுவாசம் மீதும், சுபாவுக்குத் தாங்கவொண்ணா வெறுப்பு அரண்மனைப் பெண்டுகள் சத்யவதி, அம்பா, அம்பிகாம் அம்பபாலிகா ஆகியோரின் துயரங்களைத் தன் துயரங்களாகச் சுபா ஏற்றிருந்தாள், ஒருவேலைக்காரியின் மகன் என்ற அடைப்படையில், விதுரனுக்கு அரச உரிமை இல்லாமல் போனதை சுபா வர்க்க ரீதியாக அனுபவித்திருந்தாள். அவளுடைய பார்வை குருவம்சத்தினர் இல்லாத பாண்டவர்கள் ஆளும் புது அஸ்தினாபுரமே அவளுக்கு ஒரு விடுதலை பூமியாகப் படுகிறது.

நாடகத்தின் இறுதிக் காட்சியில், “குருவம்சமே இல்லாத ஓர் இடத்தில்தான், உன்னுடைய முக்தி என்ற எண்ணம் உனக்கு ஏன் அம்மா வந்தது?” என்று விதுரர் கேட்க, “ இள்ம் பெண்ணான சத்யவதி, வயதான சந்துனு மன்னரின் காம இச்சையைத் திருப்தி செய்வதற்கு, ஒரு கருவியாக இருக்கவேண்டிய நிர்பந்த நிலையில், அவளது மனநிலையை நீ உணரமுடிந்தால், அம்பாவை எவரும் ஏற்கத் தயாராக இல்லாத நிலையில்தான், அவளுடைய அகால உயிர்த் துறப்பு ஏற்பட்டது என்ற உண்மையை நீ அறிய நேர்ந்திருந்தால், தங்களுடைய விருப்பங்களுக்கு மாறாகத் தங்களின் உடல்களை ஒருவருக்கு ஒப்படைக்க வேண்டியிருந்த அம்பிகா, அம்பபாலிகா ஆகியோரின் மன வலிகளையும் உடல் வலிகளையும் நீ உணரமுடிந்திருந்தால், ஆணாதிக்கம் மிக்க குருவம்ச அரண்மனையில், பெண்டிரின் வேதனைகள் எத்தகையன என்பது உனக்குப் புரிந்திருக்கும். குருவம்சமே இல்லாத விடியல் அஸ்தினாபுரம் என்ற இந்த இடத்தில், என் விடுதலை எண்ணம் ஏன் பதிந்திருக்கிறது என்பதும் உனக்குத் தெளிவாகியிருக்கும்,” என்று விரிவாகப் பதிலுரைக்கிறாள்.


நாடக்த்தின் முதல் காட்சியில் காணப்படும் தொடக்க வரிகளும், இறுதிக் காட்சியில் இடம்பெறும் வரிகளும் நாடகப் பொருளை விளங்கிக் கொள்ள உதவுகின்றன.

ஆரம்பத்தில், “ எந்த மகாராஜாவுடன் நீ இரவு உணவு அருந்தினாய், விதுரா? திருதராஷ்டிரருடனா? அல்லது யுதிஷ்டிரருடனா?” என்று சுபா, விதுரரிடம் கேட்கும் வரிகள், நாடகக் கருப் பொருளைச் சூசகமாக உணர்த்துகின்றன.

‘குருவம்சத்து திருதராஷ்டிரன் ஒழிந்த அஸ்தினாபுரத்தில்தான் என் விடுதலை உள்ளது,” என்று சுபா விதுரரிடம் கூறும் இறுதிக் காட்சி வைர்கள், தன் துயரங்களுக்கும், சகப் பெண்களின் துயரங்களுக்கும் துணிவாய்க் குரல் கொடுத்து, தன்னிச்சையாய் முடிவெடுக்கும் ஒரு பெண்ணின் சுதந்திர செயல்பாடுதான்’ நாடகத்தின் பாடு பொருள் என்பதைத் துல்லியமாகக் காட்டுகின்றன.

@ @ @

ஏப்ரல் மாதத்திற்கான வாசிப்பு

நண்பர்களே முன்னரே அறிவித்தபடி வாசகர்வட்டத்தின் போன கூட்டம் ஏப்ரல்16,2006 ஞாயிற்றுக்கிழமையன்று, சிங்கப்பூரின் அங்-மோ-க்யோ நூலகத்தின், ‘தக்காளி ஹாலில்’ (Tomato hall) நடைபெற்றது. மெல்லமெல்ல பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கூடிவருவது மகிழ்ச்சிக்குறியது!

வாசிப்பு அனுபவத்திற்கான புத்தகமாக இரு நாடகங்களைக் கொண்ட, நந்தகிஷோர் ஆச்சாரியாவின், “மகாபாரதத்தில் பெண்ணியம்” தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஹிந்தியில் இயற்றப்பட்டிருந்த இந்த நாடகத்தை திருமதி, சரஸ்வதி ராம்நாத் அழகான தமிழில் மொழிபெயர்த்திருந்தார்.
அதில் வாசிக்கப் பட்ட விமர்சனக் கட்டுரைகளை வலையேற்றுகிறேன், உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.