இராமகண்ணபிரானின் 'நாடோடிகள்' - எம். கே. குமார்.

இராம கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" - ஒரு பார்வை.
எம்-கே. குமார்.


தமிழில் தோன்றிய முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து என்பது தமிழிலக்கிய ஆய்வளர்கள் சிலரின் கூற்று. பூமிப்பந்து முழுவதும் புலம்பெயர்ந்த தமிழினத்தில் தமிழின் கலாச்சாரத்தொன்மையை பாரம்பரியத்தை நீண்டகாலம் தரித்திருந்ததும் தேசிய அளவில் இன்றுவரை பெருமைப்படுத்துவதும் தமிழினத்திற்கு சிங்கப்பூரில் கிடைத்திருக்கும் இன்னுமொரு சிறப்பு. திரு.கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" கதை இத்தமிழ் சார்ந்ததும் அதன் தலைமுறைகள் சார்ந்ததுமாய் இருக்கிறது.
கதையின் நாயகர்கள்: 1) தனபால் மற்றும் 2) பார்த்திபன்
கதைக்களம்: புலம்பெயர்ந்தோர்களின் வாழ்வும் திசைமாறும் பயணங்களும்
திருப்பம்: ஏதுமில்லை! திருந்துதல் எதிர்பார்க்கப்படுகிறது.
பிற பாத்திரங்கள்: தனபாலின் மனைவி பத்மினி, மகள் ரூபா, முன்வழுக்கைத் தலைக்காரர், பார்த்திபனின் மனைவி சாந்தா
தனபாலின் குணங்கள்:
தற்பெருமை பேசுபவன்
கடின உழைப்பாளி எனினும் அடிக்கடி அனைத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பவன்
வசதியான பெண்ணை திருமணம் செய்கிறான்
எதையும் எளிதில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதவன்
மேலைநாட்டு பழக்கவழக்கங்களில் ஈடுபாடு உள்ளவன்
வசதியான வாழ்வு மீதும் சொகுசு மீதும் மிகுந்த வேட்கை உள்ளவன்
தமிழினம் சார்ந்த மனிதர்களிடமிருந்து விலகியே வாழ நினைப்பவன்
பார்த்திபனின் குணங்கள்:
மாமா - அக்கா மீது அன்புடையவன்
தமிழின் மீதும் பற்றுடையவன்
அக்கா பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்
போதும் என்ற மனத்துடன் வாழ்கிறான்
தொண்டூழியம் புரிபவன்
பிறந்தநாள் கொண்டாட்டங்களில் விருப்பமற்றவன்
வேறுபட்ட இரு குணாதிசயங்களைக் கொண்ட இரு நண்பர்களின் கதை!
கதையின் ஒரு நாயகன் தனபால், சிறுவயது முதலே அவமானப்படுத்தப்படும் தமிழ்க் குடும்பச் சூழலுக்குள், வறுமையில் வளர்கிறான். விளைவு, அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை வாழ்க்கையில் நாடுகிறான். படித்து முன்னேறி, வசதியான பெண்ணைத் திருமணம் செய்து, வசதியான வாழ்க்கை வேண்டி வெளிநாடு சென்று மகளைப்பிரிந்து, மனைவியைப் பிரிந்து தனிமையில் வாழும்போது அவனெதிரில் விரக்தியுடன் சிரிக்கிறது அவனது நாடோடி வாழ்க்கை!

கதையின் இன்னொரு நாயகன் பார்த்திபனுக்கோ இளவயது முதலே பொதுநோக்கமும் தமிழினம் சார்ந்த செயற்பாடுகளும் மேல்நோக்கியதாகவே (இளவயது முதலே எல்லாம் இனியனவாய் அமைந்ததும் இதற்கு ஒரு காரணமோ?) அமைகின்றன. படித்து முடித்து ஒரே கம்பெனியில் வேலைசெய்து தமிழ் மன்றம் அமைத்து தொண்டூழியம் புரிந்துவருகிறான். இரு புலம்பெயர்ந்தோர் வாழ்வில் எவருடையது சிறந்த வாழ்க்கை என்பதை கருத்துக்கள் மூலமும் சிந்தனை ஓட்டங்கள் மூலமும் பார்வைக்கு வைக்கிறார் ஆசிரியர்.

நேரெதிர் குணாதிசயங்களைக்கொண்ட இரு நபர்களது கதையென்பதால் கதையை அதன் போக்கிலே விட்டிருக்கிறார் ஆசிரியர். ஆங்காங்கு சிந்தனைகளும் கருத்துகளும் பரவிக்கிடக்கின்றன. தனபாலிடம் கிளைவிரித்த தமிழ்க் கலாச்சாரமென்பது எவ்வித பரவுதலும் இன்றி முறிபட்டுப்போனது பற்றுதலற்ற நாடோடி வாழ்க்கையின் சாரம் என்றால் அந்த பரவுதல் பயனற்றுப்போனதற்கும் ஒரு தமிழ்க்கூட்டமே காரணமாய் இருந்திருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

விலங்குகளை விட சிறப்பாய் குரைக்கும் பெண்கள், அருமையாய் ஆப்பிளைக் கவ்வும் ஆண்கள், கொன்னிக்கொன்னிப் பேசப்படும் தமிழ் என குறுநகை ஏற்படுத்தும் மொழி கிடக்கிறது. தனபாலுக்கும் பியூனுக்கும் நடந்ததென்ன என்பது வெளிப்படையாய் தெரியவில்லை, அது அவசியமுமில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த இக்கதையின் கரு, நிகழ்கால வாழ்க்கையின் வினாக்களை பிரதிபலிப்பதாகவும் அர்த்தமுள்ள சில தருணங்களுக்கு விடை சொல்வதாயும் அமைகிறது. இது இக்கதையின் இன்றுவரையான உயிர்ப்புத்தன்மையை நிலைநாட்டுகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுந்த இக்கதையின் நீட்சி குறித்தான சிந்தனைகளை சிங்கப்பூர தமிழர்களிடம் இன்று நாம் காண விழையும்போது ஏமாற்றமே மிஞ்சுவது அதிர்ச்சியை அளிக்கிறது. கடந்த முப்பதாண்டுகளில் சிங்கப்பூர் எவ்வாறு பொருளாதாரத்தில் சிறந்த நாடாக முன்னேறிவிட்டிருக்கிறது என்பதையும் மாறாக தமிழ் எவ்வாறு இருக்கிறது என்பதையும் பார்க்கையில் இக்கதையின் பேசுபொருள் இன்றும் சிங்கப்பூரை முன்னிறுத்தி விவாதத்திற்குரியதாகவே இருப்பதாக எனக்குப்படுகிறது.
புலம்பெயரும் தனிமனிதன் ஒவ்வொருவனுடைய வாழ்வும் பிடுங்கி நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்றது. தழைவதும் துளிர்ப்பதும் காய்ப்பதும் கனிதருவதும் எதனாலானது என்பது இக்கதை போலவே சிந்தனைக்குரியதாகும்.
@ @ @

மா. இளங்கண்ணன் அவர்களின் "பரிதியைக் கண்ட பனி" - ஒரு பார்வை.


கதையின் நாயகன்: அண்ணாமலை
கதைக்களம்: தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பு
பிற பாத்திரங்கள்: அண்ணாமலையின் மகன் திருமேனி, அவரது மனைவி, மகள் மற்றும் அம்பலவானர்.
முடிவு: சுபம்
திருப்பம்: முடிவுக்கு முன் வரும் பிணவண்டி
குப்பை அள்ளும் அண்ணாமலை தன் மகன் திருமேனியை நன்கு படிக்க வைக்க நினைக்கிறார். வசதியில்லாத அவருடைய ஆசையை, மாலை நேரத்தில் அவர் வேலைபார்க்கும் தோட்டத்தின் உரிமையாளர் அம்பலவாணர் ஆதரித்து உதவ முன்வருகிறார். அவ்வாறு முன்வரும் நேரத்தில் விதி அண்ணாமலையின் மகன் திருமேனியை விலை பேசுகிறது. திருமேனிக்கு என்ன ஆனது, அண்ணாமலையின் கனவு பலிக்குமா என்பதயெல்லாம் பரிதியைக் கண்ட பனிபோல மாறிய அண்ணாமலையின் மனம் வழியாகச் சொல்லி கதை முடிகிறது.

கதை நிகழ்காலத்தில் சொல்லப்படுவதால் சைக்கிளில் செல்லும் அண்ணாமலையை நாமும் பின் தொடர்ந்து ஓடுவது போல சுவாரஸ்யமாய் இருகிறது நடை. திருமேனிக்கு நடந்தது என்ன என்பதைச் சொல்ல இடைவேளையையும் பிறகு இன்னும் உயிரோடுதான் இருக்கிறானா என்பதைச் சொல்ல, முடிவையும் தேர்ந்தெடுத்திருப்பது கதையின் ஓட்டத்திற்கு பலம்.

அவசரம் புரியாது கீழிறங்கும் மின்தூக்கியை பொறுக்காத அப்பா! கதையில் ஒரு பாவப்பட்ட தந்தையின் மனம் பரிதவிப்பதைச் சொல்வது சிறப்பாயிருக்கிறது.

அம்பலவாணர் நல்ல எஜமானர். இவரைப்போன்றோர் கதைகளில் மட்டுமே கிடைக்கும் அபாக்கியம் அதிகம் உண்டு.

தலைப்பு கவிதை போன்றது எனினும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.
@ @ @

Labels:

மா. இளங்கண்ணன் அவர்களின் "பரிதியைக் கண்ட பனி" - ஒரு பார்வை. -எம்.கே.குமார்.

மா. இளங்கண்ணன் அவர்களின் "பரிதியைக் கண்ட பனி" - ஒரு பார்வை. -எம்.கே.குமார்.


கதையின் நாயகன்: அண்ணாமலைகதைக்களம்: தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்புபிற பாத்திரங்கள்: அண்ணாமலையின் மகன் திருமேனி, அவரது மனைவி, மகள் மற்றும் அம்பலவானர்.முடிவு: சுபம்திருப்பம்: முடிவுக்கு முன் வரும் பிணவண்டி குப்பை அள்ளும் அண்ணாமலை தன் மகன் திருமேனியை நன்கு படிக்க வைக்க நினைக்கிறார். வசதியில்லாத அவருடைய ஆசையை, மாலை நேரத்தில் அவர் வேலைபார்க்கும் தோட்டத்தின் உரிமையாளர் அம்பலவாணர் ஆதரித்து உதவ முன்வருகிறார். அவ்வாறு முன்வரும் நேரத்தில் விதி அண்ணாமலையின் மகன் திருமேனியை விலை பேசுகிறது. திருமேனிக்கு என்ன ஆனது, அண்ணாமலையின் கனவு பலிக்குமா என்பதயெல்லாம் பரிதியைக் கண்ட பனிபோல மாறிய அண்ணாமலையின் மனம் வழியாகச் சொல்லி கதை முடிகிறது.


கதை நிகழ்காலத்தில் சொல்லப்படுவதால் சைக்கிளில் செல்லும் அண்ணாமலையை நாமும் பின் தொடர்ந்து ஓடுவது போல சுவாரஸ்யமாய் இருகிறது நடை. திருமேனிக்கு நடந்தது என்ன என்பதைச் சொல்ல இடைவேளையையும் பிறகு இன்னும் உயிரோடுதான் இருக்கிறானா என்பதைச் சொல்ல, முடிவையும் தேர்ந்தெடுத்திருப்பது கதையின் ஓட்டத்திற்கு பலம்.
அவசரம் புரியாது கீழிறங்கும் மின்தூக்கியை பொறுக்காத அப்பா! கதையில் ஒரு பாவப்பட்ட தந்தையின் மனம் பரிதவிப்பதைச் சொல்வது சிறப்பாயிருக்கிறது.
அம்பலவாணர் நல்ல எஜமானர். இவரைப்போன்றோர் கதைகளில் மட்டுமே கிடைக்கும் அபாக்கியம் அதிகம் உண்டு.


தலைப்பு கவிதை போன்றது எனினும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.

@ @ @

“வாழ்வெனும் மூங்கில் படல்கள் ”

“வாழ்வெனும் மூங்கில் படல்கள் ”
சா. கந்தசாமியின், ‘சூரியவம்சம்’ ஒரு வாசிப்பு
சுப்பிரமணியன் ரமேஷ்




சூரியவம்சம் நாவல் என்ன சொல்ல வருகிறது என்பதை இருவிதங்களில் சொல்லலாம். முதலாவதாக அது எதையும் சொல்ல முயலவில்லை அல்லது இப்படியும் சொல்லலாம், ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படத்தின் மூலமாக சத்யஜித் ரே என்ன சொல்ல முயன்றாரோ அதைப் போன்ற ஒன்றை சா. கந்தசாமி சூரியவம்சம் மூலமாகத் தர முயன்றிருக்கிறார்.

@ @ @

செம்பொத்துகளும், நாரைகளும், கிளிகளும், பட்டாம்பூச்சிகளும் சிறகடிக்கும் காவேரியாற்றின் கரைகளில் செல்லைய்யா வளர்கின்றான். மெல்லிய சூரியனின் கதிர்கள் படர அவன் வளர்ந்து தளிர்க்கின்றான். தொட்டியிலிருந்து எடுத்து யாரோ அவனை மண்ணில் பதியமிடுகின்றார்கள். யாரோ அவனுக்குத் தண்ணீர் ஊற்றுகின்றனர், யாரோ அவனுக்கு உரமிடுகின்றார்கள். மெல்லிய உற்சாகம் குமிழிடும் ஆனந்தம் அவனுக்குள் எப்போதும் பொங்கியபடி இருக்கின்றது, அவன் வெறுமனே வளர்கின்றான். யாரோ அவன் கிளைகளைக் கழிக்கிறார்கள், யாரோ அவனுக்கு மண் அணைக்கிறார்கள், யாரோ அவன் மீது இலக்கமிடுகிறார்கள், யாரோ அவன் மீது ஆணி அறைகிறார்கள், யாரோ அவனைக் காயப்படுத்துகிறார்கள், தனக்குத் தரப்படும் யாவற்றையும் அவன் ஏற்று வளர்கிறான், நன்மைகளையும், தீமைகளையும் உண்டு வளர்கிறான், ஒவ்வொரு அனுபவங்களும் அவனை விசாலப்படுத்துகிறது, முன்னே தள்ளுகிறது. புதுச் சூழலுக்குள் முழு ஈடுபாடு கொண்டவனாய் மறுபடி செல்லைய்யா வளர்கிறான். செம்பாத்துகளும், கிளிகளும், பட்டாம்பூச்சிகளும் பறக்கும் சூழலில் தன்னுடைய பிரிய சேவலை அணைத்தபடி ஆட்டுக்குட்டிகள் பின் தொடர செல்லையா சூரியனைப் பின் தொடர்ந்து ஒரு நதியாய் நீண்டு வளர்ந்து கொண்டேயிருக்கிறான். செல்லைய்யாவைத் தொட முயலும் வாசகர்கள் தங்களை தாங்களே கொஞ்சமேனும் தொட்டுக் கொள்கிறார்கள். இதுதான் அந்த நாவலின் சாரம் எனலாம்.


நாவல் இரண்டு மனிதர்களைப் பற்றியது. ஒருவன் செல்லைய்யா மற்றொருவர் அவனுடைய அப்பா பெரியசாமி தேவர். அவர் அருமையானவராய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தவர் இறக்கும் தருவாயிலும் சொத்தென தம்முடைய மகனைத்தான் காட்டமுடிகிறது. சொர்ணம் வயிற்றுப்பாட்டிற்கே ஏங்குகிறவளாக மாறிப்போனதில் பெரியசாமி தேவரின் கையாலாகாதனத்தின் மீது ஏக கசப்பு கொண்டவளாகிறாள். செல்லைய்யா பெரியசாமியைக் கொண்டிருக்கிறான். அவன் அக்கரையும் உலகமும் பெரியசாமியைப் போலவே இருப்பதை சொர்ணம் உள்ளூர உணர்ந்தே இருக்கிறாள். இது செல்லைய்யா மீது கடுமையை ஏற்படுத்துகிறது. வள்ளியூர் சேது அக்காவானாலும் சரி, தங்கக் காப்பு தாத்தாவானாலும் சரி செல்லைய்யாவை பெரியசாமியின் மகனென்றே அடையாளப்படுத்துகின்றனர். சொர்ணத்தின் மகனென்பதில் அவர்களுக்கு ஒற்றுமை ஏதும் தென்படுவதில்லை. செல்லையா பெரியசாமியையே கொண்டிருக்கிறான் என்று உறுதி படுத்துகின்றனர். செல்லைய்யாவிற்கும் தன் தந்தையின் குணங்கள் மீதும் அவருடைய விழுமியங்கள் மீதும் இயெல்பாகவே மதிப்பு இருக்கிறது. விற்றுப்போன வீட்டின் மூங்கில் படல்களை மழையிலும் மண் அணைத்து சாயாமல் பார்த்துக் கொள்கிறான், தன் தந்தையைப் போலவே காலையில் தோட்டம் முழுதும் உலவச் செல்லுவதிலும், குளக்கரைகளைப் பார்த்துக் கொள்வதிலும், சேவல், ஆடுகளை நேசிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறான். தந்தையைப் போலவே மகனையும் வாழ்வு சூதடும் போது இவன் தன் ஆர்வத்தாலும், அக்கரையாலும் மேலெழுகிறான். தன் குடும்பத்தின் வறுமையை வெல்கிறான்.


செல்லைய்யா என்ற துள்ளித்திரியும் சிறுவன் மெல்ல அனுபவங்களால் விசாலப்பட்டு, மனிதர்களால் புடமிடப்பட்டு திடம் பெற்று வாலிபனாகிறான். பொதுவாழ்வினை நோக்கி விரிகிறான். தங்கவேலு, சோர்ணம், அல்லியூர் மணி, பாப்பாவின் கணவன் கோவிந்தன், டில்லி, பாபு போன்றவர்கள் கெடுப்பவர்களாகவும் சாம்பசிவம், ராமு, தங்க காப்பு தாத்தா, பாக்கியம், மீனாட்சி, பாப்பா, மேரி, ராமன் போன்றோர் கொடுப்பவர்களாகவும் அறிமுகம் கொள்கிறார்கள் என்றபோதும் அவன் வாழ்க்கையை அதுவாகவே ஏற்றுக் கொள்கிறான். அதனால்தான் அவன் அம்மாவிற்கு வட்டிக்கு கடன் வாங்கியேனும் பணம் அனுப்ப முடிகிறது. தங்கவேலுவைப் போலீஸ் அடித்து விலங்கிட்டுச் சென்ற காட்சிக்கு மறுக முடிகிறது. டில்லியோடும், பாபுவோடும் மறுபடி சகஜமாய் பேச முடிகிறது. பாம்புச் சட்டையைப் போலவே, அவனுடைய படிப்பும் பறிபோகிறது, அவனுடைய செல்ல ஆடும், வீடும், மேரியும் அவனுடைய உலகத்திலிருந்து பிடிங்கிக் கொள்ளப்படுகிறார்கள். இயல்பாகச் சமன் செய்து கொண்டு கிடைத்த புதுச்சூழலில் ஆர்வமும் அக்கரையும் கொண்டு வளர்கிறான். ‘செல்லைய்யா செஞ்சா சரியாத்தான் இருக்கும்’ என்பதை சாம்பசிவம், ஊமை, ராமு, மாணிக்கம், பாண்டியன், ராமன் உட்பட அனைவரும் உணருகிறார்கள் சொல்கிறார்கள், அந்த திறமைக்கான ஆமோதிப்பாகவே அவர்கள் அவனை மேலேற்றிவிடவும் செய்கிறார்கள். கபடற்ற செல்லைய்யா நகர வாழ்வின் இருண்ட பக்கங்களையும் எதிர் கொள்ள நேர்கிறது. ராணி, குடிப்பது, புகைப்பதுமான சமன் குலைவை வென்று மேலும் திடம் கொள்கிறான்.
இயற்கையோடு இயைந்த முதல் சில அத்யாயங்களின் ஊடாகக் கதை பெரிதும் நகர்ந்து விடுவதில்லை என்றாலும் அது சாதுர்யமான மனத்தயாரிப்பை செய்கிறது. சென்னைக்கு வந்த பின் வரும் அத்தியாயங்களில் ஒரு வேகமும் பொறுமையின்மையும் தெரிகிறது. ஊழலும், அரசியலும் இயக்கும் இந்திய தொழிற்சங்க அமைப்புகளில் அக்கரையான இளம் வாலிபன், யாரையும் சார்ந்திருக்காமல் வெகு வேகமாக துணைச் செயலாளராக முடியும் என்ற நினைப்பே சிரிப்பை வரவழைக்கிறது. செல்லைய்யாவிற்கு அபரீதமான ஆற்றல் இருக்கிறதென்றாலும் அவன் பொது வாழ்வின் மேல் நாட்டம் கொள்வதற்கான இயல்பான காரணங்கள் ஏதும் நாவலில் விளக்கப்படவில்லை.


@ @ @

Labels:

இராம கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" - ஒரு பார்வை.- எம்.கே.குமார்

இராம கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" - ஒரு பார்வை.- எம்.கே.குமார்


தமிழில் தோன்றிய முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து என்பது தமிழிலக்கிய ஆய்வளர்கள் சிலரின் கூற்று. பூமிப்பந்து முழுவதும் புலம்பெயர்ந்த தமிழினத்தில் தமிழின் கலாச்சாரத்தொன்மையை பாரம்பரியத்தை நீண்டகாலம் தரித்திருந்ததும் தேசிய அளவில் இன்றுவரை பெருமைப்படுத்துவதும் தமிழினத்திற்கு சிங்கப்பூரில் கிடைத்திருக்கும் இன்னுமொரு சிறப்பு. திரு.கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" கதை இத்தமிழ் சார்ந்ததும் அதன் தலைமுறைகள் சார்ந்ததுமாய் இருக்கிறது.


கதையின் நாயகர்கள்: 1) தனபால் மற்றும் 2) பார்த்திபன் கதைக்களம்: புலம்பெயர்ந்தோர்களின் வாழ்வும் திசைமாறும் பயணங்களும்திருப்பம்: ஏதுமில்லை! திருந்துதல் எதிர்பார்க்கப்படுகிறது.பிற பாத்திரங்கள்: தனபாலின் மனைவி பத்மினி, மகள் ரூபா, முன்வழுக்கைத் தலைக்காரர், பார்த்திபனின் மனைவி சாந்தாதனபாலின் குணங்கள்:தற்பெருமை பேசுபவன் கடின உழைப்பாளி எனினும் அடிக்கடி அனைத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பவன்வசதியான பெண்ணை திருமணம் செய்கிறான்எதையும் எளிதில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதவன்மேலைநாட்டு பழக்கவழக்கங்களில் ஈடுபாடு உள்ளவன்வசதியான வாழ்வு மீதும் சொகுசு மீதும் மிகுந்த வேட்கை உள்ளவன்தமிழினம் சார்ந்த மனிதர்களிடமிருந்து விலகியே வாழ நினைப்பவன்
பார்த்திபனின் குணங்கள்:மாமா - அக்கா மீது அன்புடையவன்தமிழின் மீதும் பற்றுடையவன்அக்கா பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்போதும் என்ற மனத்துடன் வாழ்கிறான்தொண்டூழியம் புரிபவன்பிறந்தநாள் கொண்டாட்டங்களில் விருப்பமற்றவன் வேறுபட்ட இரு குணாதிசயங்களைக் கொண்ட இரு நண்பர்களின் கதை! கதையின் ஒரு நாயகன் தனபால், சிறுவயது முதலே அவமானப்படுத்தப்படும் தமிழ்க் குடும்பச் சூழலுக்குள், வறுமையில் வளர்கிறான். விளைவு, அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை வாழ்க்கையில் நாடுகிறான். படித்து முன்னேறி, வசதியான பெண்ணைத் திருமணம் செய்து, வசதியான வாழ்க்கை வேண்டி வெளிநாடு சென்று மகளைப்பிரிந்து, மனைவியைப் பிரிந்து தனிமையில் வாழும்போது அவனெதிரில் விரக்தியுடன் சிரிக்கிறது அவனது நாடோடி வாழ்க்கை!


கதையின் இன்னொரு நாயகன் பார்த்திபனுக்கோ இளவயது முதலே பொதுநோக்கமும் தமிழினம் சார்ந்த செயற்பாடுகளும் மேல்நோக்கியதாகவே (இளவயது முதலே எல்லாம் இனியனவாய் அமைந்ததும் இதற்கு ஒரு காரணமோ?) அமைகின்றன. படித்து முடித்து ஒரே கம்பெனியில் வேலைசெய்து தமிழ் மன்றம் அமைத்து தொண்டூழியம் புரிந்துவருகிறான். இரு புலம்பெயர்ந்தோர் வாழ்வில் எவருடையது சிறந்த வாழ்க்கை என்பதை கருத்துக்கள் மூலமும் சிந்தனை ஓட்டங்கள் மூலமும் பார்வைக்கு வைக்கிறார் ஆசிரியர்.


நேரெதிர் குணாதிசயங்களைக்கொண்ட இரு நபர்களது கதையென்பதால் கதையை அதன் போக்கிலே விட்டிருக்கிறார் ஆசிரியர். ஆங்காங்கு சிந்தனைகளும் கருத்துகளும் பரவிக்கிடக்கின்றன. தனபாலிடம் கிளைவிரித்த தமிழ்க் கலாச்சாரமென்பது எவ்வித பரவுதலும் இன்றி முறிபட்டுப்போனது பற்றுதலற்ற நாடோடி வாழ்க்கையின் சாரம் என்றால் அந்த பரவுதல் பயனற்றுப்போனதற்கும் ஒரு தமிழ்க்கூட்டமே காரணமாய் இருந்திருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
விலங்குகளை விட சிறப்பாய் குரைக்கும் பெண்கள், அருமையாய் ஆப்பிளைக் கவ்வும் ஆண்கள், கொன்னிக்கொன்னிப் பேசப்படும் தமிழ் என குறுநகை ஏற்படுத்தும் மொழி கிடக்கிறது. தனபாலுக்கும் பியூனுக்கும் நடந்ததென்ன என்பது வெளிப்படையாய் தெரியவில்லை, அது அவசியமுமில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த இக்கதையின் கரு, நிகழ்கால வாழ்க்கையின் வினாக்களை பிரதிபலிப்பதாகவும் அர்த்தமுள்ள சில தருணங்களுக்கு விடை சொல்வதாயும் அமைகிறது. இது இக்கதையின் இன்றுவரையான உயிர்ப்புத்தன்மையை நிலைநாட்டுகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுந்த இக்கதையின் நீட்சி குறித்தான சிந்தனைகளை சிங்கப்பூர தமிழர்களிடம் இன்று நாம் காண விழையும்போது ஏமாற்றமே மிஞ்சுவது அதிர்ச்சியை அளிக்கிறது. கடந்த முப்பதாண்டுகளில் சிங்கப்பூர் எவ்வாறு பொருளாதாரத்தில் சிறந்த நாடாக முன்னேறிவிட்டிருக்கிறது என்பதையும் மாறாக தமிழ் எவ்வாறு இருக்கிறது என்பதையும் பார்க்கையில் இக்கதையின் பேசுபொருள் இன்றும் சிங்கப்பூரை முன்னிறுத்தி விவாதத்திற்குரியதாகவே இருப்பதாக எனக்குப்படுகிறது.
புலம்பெயரும் தனிமனிதன் ஒவ்வொருவனுடைய வாழ்வும் பிடுங்கி நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்றது. தழைவதும் துளிர்ப்பதும் காய்ப்பதும் கனிதருவதும் எதனாலானது என்பது இக்கதை போலவே சிந்தனைக்குரியதாகும்.

@ @ @

Labels:

மா. இளங்கண்ணனின்,‘பரிதியைக் கண்ட பனி’
சுப்பிரமணியன் ரமேஷ்
மனித வாழ்க்கையே அலைகடலில் அகப்பட்ட துரும்புதான். அதிலும் அவன் ஏழையாய் இருந்து விட்டால் அந்த ஏழைபடும் பாட்டை இலக்கியத்தில் சொல்லி மாளாது.
மா.இளங்கண்ணன் அவர்களின் ‘ பரிதியைக் கண்ட பனி’ இப்படியான ஒரு ஏழையின் உணர்ச்சிக் கொந்தளிப்பினை ஒரு புகைப்படம் போலக் காட்டுகிறது. அண்ணாமலையின் நெஞ்சம் விம்ம, மனம் கனன்று கொண்டிருக்கும் சூழலில் ஆரம்பிக்கும் கதை, உணர்ச்சிப் பெருக்கின் மறு எல்லை தொட்டு அவர் களிப்பு கொள்ளுகையில் முடிவடைகிறது. உணர்ச்சி நிலையில் தாளமாற்றமோ, அல்லது கதை முன்னகர்ந்து விரிவடைவதையோ ஆசிரியர் கருத்தாக கொள்ளாமல், மனித வாழ்வின் உணர்ச்சிச் சுழிப்பினை உணர்த்துவதில் குறியாய் இருக்கிறார்.
குப்பை அள்ளும் அண்ணாமலை குடும்பத்தையும், தன் மகன் திருமேனியையும் கரைசேர்க்க தன்னால் முடிந்த மட்டிலும் பாடு படுகிறார். பகுதி நேர வேலையாக அம்பலவாணர் வீட்டுத் தோட்டவேலைகளையும் செய்து மகனை வளர்க்கிறார். அம்பலவாணர் உதவி புரிய மகனின் மனதறிந்து அவனை மேலும் படிக்க வைத்து பட்டதாரியாக்க கனவு காண்கிறார். அடித்தட்டிலிருக்கும் தன் வம்சம், படித்த தன் பிள்ளையால் முன்னுக்கு வந்து விடும் என்ற அவரது ஆசையில் மண் விழுகிறது. பொறுப்பில்லாமல் யாரோ நாலாவது மாடியில் வைத்திருக்கும் பூந்தொட்டி தன் மகனின் தலையில் விழுந்து அவன் மண்டையை உடைப்பதன் மூலமாக . . . அலைபாய ஆரம்பிக்கும் அவரது மனம் மகன் ஆபரேஷன் முடிந்து கண்திறப்பானோ என்ற ஆவலாதியில் உணர்ச்சிக் கொந்தளிப்பாய் அவரைப் பந்தாடுகிறது, அவரது மகன் திருமேனி கண்திறந்து அவரைப் பார்க்கும் பார்வையில் சூரியனைக் கண்ட பனிபோல அவரின் துன்பமெல்லாம் பறந்தோடி விடுகிறது, என கதை முடிகிறது.
சிறு கதைக்கேற்ற கால அளவு கச்சிதமாகப் பொருந்திய கதை. கதை நிகழும் காலத்தில் அப்போதைய சமூகச் சித்திரங்களைப் பதிவு செய்த படியும் சென்றிருக்கிறது. ஓட்டைக்குப்பைத் தொட்டியிலிருந்து நீர் ஒழுக குப்பை அள்ளப்படும் காட்சி, மாடியிலே கல்லுரலில் இடிக்கும் சூழல், பணியாளர்களின் மனமறிந்து உதவிடும் முதலாளிகள், பொறுப்பில்லாமல், மாடிப்படிச் சுவரில் பூந்தொட்டிகளை வைத்து வளர்க்கும் சூழல் இப்படி.
ஆசிரியர் உணர்ச்சிப் பெருக்கினை முற்றிலுமாக உடலின் மோழியாக உரைப்பதன் மூலமாக உள்ளத்து நிலையை நயமாகக் காட்டுகிறார். ‘உள்ளம் வெந்து கொண்டிருப்பதனால் அண்ணாமலைக்கு வாய் அடைத்து விடுகிறது.’ ‘ மூச்சு விடக்கூட நேரமில்லை’ ‘இரத்த வேர்வை சிந்துகிறார்.’ ‘ பசி வயிற்றைக்கிள்ளுகிறது.’ ‘கண்களில் அருவி கொட்டுகிறது வாயில் துவாலை வைத்துக் கடித்துக் கொண்டு அழுகிறார்’ ‘ உணர்ச்சி வசப் பட்டதால் அவர் உடல் புல்லரிக்கிறது. கண்களில் இன்பக் கண்ணீர் மல்கி கன்னங்களில் உருண்டு உதட்டில் பட்டு இனிக்கிறது, உள்ளம் வேகிறது, நெஞ்சினில் தீயை அள்ளிக் கொட்டுகிறாள், நெஞ்சினில் அடித்துக் கொண்டு குருதிக் கண்ணீர் கொட்டுகிறாள், அண்ணாமலை நெஞ்சத்தைக் கசக்கிப் பிழிகிறது, நெஞ்சில் ஆயிரமாயிரம் ஈட்டிகள் பாய்கின்றன, நெஞ்சம் உருகுகின்றது, தளும்பி நிற்க்கும் கண்ணீரில் தத்தளிக்கும் சிவந்த விழிகள், வாய் வரவில்லை, நா எழவில்லை, புறங்கையைக் கட்டிக் கொண்டு, துக்கத்தை மென்று விழுங்குகிறார், நீண்ட பேருமூச்சு வெளியேறுகிறது. அவர் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த பளு பறக்கிறது பன்னீர் சிந்துகிறது. உதடுகளில் புன்னகை மின்ன, கரு விழிகளில் இன்பக் கண்ணீர் மல்குகிறது. இப்படி உணர்வுகளின் மொழியை ஆசிரியர் உடல் அசைவுகளாக விவரிப்பதன் மூலமாக குறிப்புணர்த்துகிறார்.
@ @ @

Labels:

இராமகண்ணபிரானின், ‘நாடோடிகள்’
சுப்பிரமணியன் ரமேஷ்
வேரில்லாமல் அலையும் நவீன வாழ்க்கைச் சூழலில் மரபும், பண்பாடும் ஒரு சமூகம் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள, தங்களின் இருப்பினை நிலை நிறுத்திக் கொள்ள உதவும் நங்கூரங்கள் போன்றவை அவற்றை ஒருமனிதன் எப்போதும் கைவிடுதல் கூடாது என்பது நாடோடிகள் சிறுகதையின் மையக் கருத்து.
பல்வேறு கலாச்சாரங்கள், பண்பாடுகள், இன, மொழி, மதங்கள் புழங்கும் சிங்கப்பூர் சூழலில் எளிதாகவும், இயல்பாகவும், ஒரு சமூகம் தங்களின் அடையாளத்தை இழந்துவிடமுடியும், ஒரு சமூகம் வளர்ச்சிக்கு விலையாக எதை எல்லாம் இழக்கலாம், எதையெல்லாம் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது மிகவும் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம். தன்னுடைய பலங்களாக ஒரு மனிதன் எவற்றையெல்லாம் உணருகிறானோ அவற்றை இயல்பாகவே தக்க வைத்துக் கொள்கிறான். அப்படி தன் சமூகத்தையும், அதன் கலாச்சாரத்தையும் தன்னுடைய பலமாக உணர்வதற்கு ஒருவனுக்கு அளவற்ற விழிப்புணர்வும், சுய-விசாரமும் தேவைப்படுகிறது.
இத்தகைய சுய விசாரணைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செழிப்பாக வாழ்ந்த ஒரு சமூகத்தின் பின் புலத்திலுள்ள மேலான சாரத்தை உணர்ந்து கொள்ள வழி செய்யும், ‘குணம் நாடி, குற்றமும் நாடி’ குணங்களைக் கொள்ளவும், பலவீனங்களை களையவும், வழி செய்வதின் மூலமாக ஒரு சமூகம் மேலும் வளர வழி செய்யும்.
@ @ @
மேம்போக்காக பார்க்கையில் மிக எளிதென தோன்றும் சில கேள்விகளைப் பார்க்கலாம். எது நமது பண்பாடு? எது நமது மரபு? எது நமது கலாச்சாரம்? நம் கலாச்சாரத்தின் குறைகள் எவை, அவை நமது தமிழ் சமூகத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது? நமது கலாச்சாரத்தின் நிறைகளைப் பற்றிய விழிப்புடன் நாம் இருக்கிறோமா? நமது மரபென்பது நமது தளைகளா, கண்ணிகளா, பொறிகளா? அல்லது மலையேறும் மனிதனுக்கான பாதுகாப்பு பெல்ட்டுகள் போன்றவையா நமது கலாச்சாரம்? தமிழர் பண்பாடு என்பதும் ஆரியப் பண்பாடு என்பதும் வேறுவேறானவையா அப்படியானால் இப்போதைய நமது பண்பாடு எது? நம் பண்பாடு எவ்வாறு மற்றைய பண்பாடுகளைக் காட்டிலும் மேலானது? பண்பாடு என்பது நாகரீகத்திற்கு எதிரானதா, அல்லது அனுசரணையானதா?
ஒவ்வொரு தலைமுறைக்கு கைமாறும் போதும் நாம் நமது கலாச்சாரத்தின் நுண்மையான சில இழைகளை இழந்து விடுகிறோம், நமது வாழ்க்கைச் சூழல் மாறுகையிலும், நமது வாழ்க்கை நாளுக்கு நாள் நவீனமடைகையிலும் தவிர்க்க முடியாமல் சில விஷயங்களை இழந்து, சில விஷயங்களைப் பெறுகிறோம், இழப்பினைக் குறித்தும், அதற்கு விலையாக பெற்றுக்கொண்ட விஷயங்கள் நம் வாழ்வினை செழிக்கச் செய்கிறதா அல்லது நம்மை மெல்ல இயந்திரங்களாக்கி அழிக்கிறதா என்பதைக் குறித்துமான விழிப்புணர்வு நமக்கு இருக்கிறதா?
இந்துமதம் தன் சிந்தனை, சடங்குகளுக்கெதிராக புரண்டவர்களையும் தனது அங்கத்தில் ஒரு பாதியாக மாற்றிக்கொண்டதைப் போன்று (உதாரணமாக சார்வாக சிந்தனை, மற்றும் பௌத்த கோட்பாடுகள் ) பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான ஒரு கலாச்சாரம் தன்னுள்ளே முரண்பாடான கருத்துகளையும் தக்க வைத்துக்கொண்டிருப்பது இயல்பானதுதான், அது ஒருவிதத்தில் கண்ணகியும், மாதவியும் நம் மூதாதையர் என்று ஏற்றுக் கொள்வதைப் போல, ஒரு தார ராமனும், பலதார தசரதனும் மூதாதையர் என்று கொள்வதைப்போல... அப்படியானால் நாம் அவற்றில் எதை எப்படி தெரிவு செய்யப் போகிறோம்? எந்த அடிப்படையில்?
@ @ @
தனபாலனின் வாழ்க்கையையும் அதற்கு முரணாக அவனது பால்யத்தோழன் பார்த்திபனின் வாழ்க்கையையும் அருகருகே வைத்துக் காட்டுகிறார் ஆசிரியர். தனபாலன் தன் வாழ்வை வளப்படுத்திக்கொள்ள விழைந்து, தன் பண்பாட்டையும், தான் சார்ந்த சமூகத்தையும் வலிந்து புறக்கணிக்கிறான்... மொஸ்தரான நாகரீகத்தையும், மேலைய பண்பாட்டையும் தழுவுகிறான். பொருளாதார ரீதியாக அவன் சுபீட்சம் அடைவது, சமூகத்தின் மெல்தட்டு வாசியாக அவனை மாற்றுகிறது. ஆனால் நண்பர்கள், உறவுகளை மதிக்காத தன்மை, சந்தர்ப்பவாதம் அவனது குண இயல்பாகிறது. அதே சந்தர்ப்பவாதமும், மேம்போக்கான தன்மையும் அவனது மகளுக்கும் வாய்க்க ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த தனபாலனை தவிக்க விட்டு அவரின் மகள் ஒரு அமெரிக்கனுடன் சொல்லாமல் ஓடிப்போய் அவளின் வாழ்வினை நிர்ணயித்துக் கொள்கிறாள்... அந்த சோகத்தில் மனைவி பத்மினியும் இறக்கிறாள். சோகத் தனிமையில் தன் வாழ்க்கையை சுய பரிசீலனை செய்யும் தனபாலன் தமிழர்தம் பண்பாட்டை அவர் சார்ந்திருந்தால் தம் வாழ்க்கை மகிழ்வுடன் இருந்திருக்கும் என்னும் முடிவுக்கு வருகிறார், இந்த மனமாற்றத்திற்கு அறிகுறியாக, தமிழர் பண்பான பிறர்க்கு உதவுதல், தன்னலமற்ற சேவை போக்கை அவர் மனம் நாடுகிறது என்பது தன் சேமிப்பிலிருந்து அவர் தமிழர் முன்னேற்றத்திற்காக நன்கொடை தருவதில் குறிப்புணர்த்தப்படுகிறது.
பார்த்தீபனோ ஆடம்பரமில்லாத எளிய வாழ்க்கையைத் தெரிவு செய்கிறான். வேகமான பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டிலும், அகவாழ்வை செழுமை செய்யும் கலாச்சாரத்தை தெரிவு செய்கிறான். உறவுகளையும், நட்பையும் பேணிக் காப்பதன் மூலமாக அவன் மனம் விசாலமடைகிறது, அது அவன் வாழ்விற்கு அமைதியையும், தெளிவையும் தருகிறது. அந்தத் தெளிவு மெல்ல விரிவடைந்து, தான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற தன் சமூகநலன் சார்ந்த விஷயங்களில் பிணைத்துக் கொள்ள வைக்கிறது.
கதைக்களம் மு.வா.வின் கதைக் களத்திற்கு நெருக்கமானதாக இருக்கிறது. குறிப்பாக அகல்விளக்கு கதையையும், நாடோடிகளையும் சேர்த்து வாசித்து, வாசிப்பைச் செழுமைப் படுத்திக் கொள்ளலாம்.
கதைக்கான காலம் நீண்டதாக இருப்பதன் காரணமாக நிறைய உணர்ச்சிமாற்றங்களை மிகச் சுருக்கமாக சொல்ல நேர்ந்திருக்கிறது, இது ஒரு நாவல் சுருக்கத்தை வாசிப்பதைப் போன்ற அனுபவத்தை தந்துவிடுகிறது.
@ @ @

Labels:

வாசகர் வட்ட நிகழ்வு

சென்ற கூட்டத்தில் பிரபஞ்சனின, ' சந்தியா', சா.கந்தசாமியின் 'சூரியவம்சம்', ஆகிய நாவல்களையும், இராமகண்ணபிரானின் 'நாடோடிகள்', மா. இளங்கண்ணனின் 'பரிதியைக் கண்ட பனி!' சிறுகதைகளையும், வாசிப்பு செய்து அதன் அனுபவங்கள் கட்டுரைகளாகப் படைக்கப் பட்டிருந்தன. அவைகளை இங்குப் பகிர்ந்து கொள்கிறோம்.

03.07.2007
வாசகர் வட்டம்
சந்தியா நாவல் கருத்துரை பொன் சுந்தரராசு


சந்தியா நாவல்,தமிழகத்தில் தற்போது இலக்கியக் கோலோச்சும் படைப்பாளர்களுள் ஒருவரான பிரபஞ்சன் அவர்களின் படைப்பு.
தமிழகம், புதுச்சேரி ஆகிய அரசுகளின் சிறந்த எழுத்தாளர் விருது, இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்தய அகாதெமி விருது, இலக்கியச் சிந்தனை, கோவை கஸ்தூரி ரங்கம்மாள் பரிசு உள்ளிட்ட இலக்கிய விருதுகள், அகில இந்திய இலக்கியப் பரிசான பாஷா பரிட்சத் விருது முதலிய எண்ணற்ற இலக்கிய மரியாதைகளைப் பெற்றவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.
கவிதா வெளியீடு, 224 பக்கங்கள்.1995 முதற்பதிப்பு, 2001 இரண்டாம் பதிப்பு & 2007 மூன்றாம் பதிப்பு.
சந்தியா கதாபாத்திரம்,பாரதி கனவு கண்ட ஒரு புதுமைப் படைப்பு.பாரதிதாசனார் காணத் துடித்த புரட்சிப் படைப்பு.
அக்காலந்தொட்டு இக்காலம் வரை -நசுக்கப்பட்டு வரும் பெண்ணியத்தின் உரிமைக்குரலாய்ஒடுக்கப்பட்ட பெண்ணியத்தின் ஓங்கார கீதமாய்தடுக்கப்பட்ட பெண்ணியத்தின் போராட்ட வடிவமாய்உருவாக்கப்பட்டிருக்கும் ஓர் உன்னதப் படைப்பு சந்தியா.

தனது உரிமைகளை விட்டுக் கொடுத்துச் சமரசம் செய்து கொள்ளாதவள் சந்தியா. அதே சமயம் மரியாதை காட்டுதல், மனித நேயத்தோடு நடத்தல், மானிடப் பண்புகளை விட்டு விலகாமல் இருத்தல் போன்ற மனிதப் பண்புகளையும் விட்டுக் கொடுக்காத குணச்சித்திரம் அவள். இருபத்தோராம் நூற்றாண்டின் தமிழ்ப்பெண் இப்படி இருந்தால் தேவலாமோ என்ற சிந்திக்க வைக்கிறது அவளது படைப்பு.
சந்தியாவைப் பற்றிய படைப்பாளரின் விளக்கம் இது:
அவளால் எல்லாப் பெண்களையும் போல இருக்க முடியவில்லை. அம்மா, அப்பாவோடு இருந்து அவர்கள் நம்பிக்கையை ஏற்று, அவர்களின் கனவுகளை நிஜமாக்கிக் கொண்டு, சென்று போன அவர்கள் யுகத்தின் நம்பிக்கை தருகிற நிகழ்காலப் பிரதிநிதியாகி, மண் பார்த்து நடந்து, அவர்கள் கட்டி வைக்கிற பையனை மணந்து, அவனுக்காகச் சிரித்து, அவனுக்கு மகிழ்வளிக்கும் விதத்தில் அலங்காரம் செய்து கொண்டு, அவன் கூப்பிடும்போது மறுப்பு சொல்லாமல் படுத்து, அவனுக்கு மட்டுமே சந்தோஷமளித்து, அவன் பிள்ளையை வயிற்றில் வாங்கிக் கொண்டு, வளர்ந்து தியாக தீபமாய் வீட்டிற்கு விளக்கேற்றி வைக்கிற ஒரு மின்சாரப் பெண்மணியாகி, தன் சமய தர்மத்தைத் தன் அடுத்த தலைமுறைக்குக் கையளித்துச் சென்றுவிடுகிற பதிவிரதா சிரோன்மணியாக அவளால் ஏன் இருக்க முடிவதில்லை? காரணம் மிக எளிதுதான். அவள் நவயுகத்தின் பெண். இந்தப் புதிய யுகத்தின் புதிய சிந்தனைகளை, வாழ்க்கை முறையை வரித்து, அதற்கு நாயகமாக வாழ விரும்புகிற பெண். சென்று போன யுகங்களின் வழி வந்த பெண்மணி அவள்.
ஆணாதிக்கத்தை இன்னும் கையிலேந்த விரும்பும் அல்லது ஆணாதிக்கத்திற்குக் குடைபிடிக்கும் பிற்போக்குவாதிகளின் மூளையைச் சலவை செய்யும் நோக்கில் இந்நாவலைத் துணிகரமாகப் படைத்துள்ளார் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள். அந்நோக்கத்தில் வெற்றியும் பெற்றுள்ளார் என்று உறுதியாகக் கூறலாம்.
பல பதிப்புகளாக மீண்டும் மீண்டும் உயிர்பெற்றுள்ள சந்தியா அதனை நிரூபித்துள்ளாள்.
பொது இடங்களில் ஆண்களால், பெண்கள்பால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள், சலுகைகள் எடுத்துக்கொள்ளுதல், சில்மிஷங்கள் செய்தல் போன்றவற்றைச் சந்தியா எதிர்க்கிறாள்.இது ஒன்றும் புதுதில்லை.இந்நவீன காலத்தில் பட்டணங்களில் வாழும் இந்தியப் பெண்களுள் பெரும்பாலோர் செய்யும் செயல்தான், திரைக்கதைகளில் படம் பிடிக்கப்படும் காட்சிகள்தான் இவை.
இப்படித்தான் செல்கிறது சந்தியா நாவல், சிவராமன் அறிமுகமாகும் வரை.
திருமணமானாலும் சுதந்திரம் பறிபோகாமல் தான் தானாகவே வாழ விரும்பும் நவயுகப் பெண்கள் கனவு காணும் ணின் பிரதிநிதியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறான் சிவராமன்.
சந்தியாவுக்கும் அவனுக்கும் நட்பு நெருக்கமடையும்போது, அவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடும் என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பை மீறிக் கதை திசைமாறிச் செல்லும்போதுதான் பிரபஞ்சன் நிற்கிறார்.இந்த நாவல் முழுமையாகப் பெண்ணியத்திற்குக் தோள் கொடுத்து நிற்கிறது. அதனை நிலைநிறுத்தும் பகுதிகள்தாம் நாவலின் ஜீவன். அவற்றைக் கண்ணோட்டமிடுவோம்.
1 சந்தியாவோடு அலுவலகத்தில் பணிபுரியும் புஷ்பராஜ் அவளுக்குக் காதல் கடிதம் கொடுக்கிறான். பல பெண்களுக்குக் காதல் கடிதம் கொடுத்து அவர்களைச் சங்கடத்தில் மாட்டிவிட்டவன் அவன். சந்தியா அக்கடிதத்தை அவனையே படிக்கச் சொல்லி அவனைத் திக்கு முக்காட வைக்கிறாள். தான் அவன் காதலை ஏற்று அவனோடு உடனே வந்து விட்டால் அவன் அவளை எங்கே அழைத்துச் செல்வான் என்று வினவ, கதிகலக்கிப் போகிறான் அவன் .
"சும்மா பொழுது போக்கிற்கு எழுதுவீர்களாக்கும். சும்மா நேரம், பொழுது போக்கக் காதலிப்பீர்களாக்கும். சந்தோஷத்திற்காக என்னோடு படுத்துக் கொள்வீர்களாக்கும். அப்புறம், தூங்கி எழுந்து, பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு இன்னொரு கிளார்க்குக்கு, இன்னொரு டைப்பிஸ்ட்டுக்குக் கடிதம் எழுதுவீர்களாக்கும். நான் கல்லானாலும் கணவனும் புல்லானாலும் புருஷன் என்று உங்கள் காலடியில் வீழ்ந்து கிடப்பேன் என்று எதிர்பார்த்தீர்களாக்கும்."
புஷ்பராஜ் தலை குனிகிறான். தலை குனிவது அவன் மட்டும்தானா?

2. பேருந்தில் சந்தியாவிடம் பாலியல் பலாத்காரம் செய்யும் இளை"னைக் காவல் நிலையத்தில் கொண்டு போய் நிறுத்துகிறாள். சட்டமும் விதிமுறைகளும் அரசியல் பதவிக்கும் செல்வாக்கிற்கும் இரையாவதை எண்ணிக் குமுறுகிறாள் அவள். இன்ஸ்பெக்டரிடம் பேசும்போது அக்குமுறல் வெளிப்படுகிறது.
"எது சார், சின்ன வயசு? இவருக்கென்ன வயசு அஞ்சா, பத்தா? தவிரவும் இவர் செஞ்ச காரியம் சின்னப் பையன்கள் காரியமா? அது சின்னப் பையன்கள் காரியமென்றால், இது மாதிரியான காரியங்களை அவர் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமே! அவருக்குச் சகோதரிகள் இருப்பார்கள் தானே? இடுப்புக் கீழே கையை அவர்களிடம் வைத்துப் பார்க்கலாம்தானே?" சமூகச் சீர்கேடுகளைப் பட்டியலிட்டு அவள் சீறும்போது சமாதானத்திற்காகவும் தப்பிப்பதற்காகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலுவற்ற வார்த்தைகள் கூறி வழுக்கி ஒடுகின்றனர்.
3. அவளைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை சில நிமிடங்கள் அவளுடன் பேசியவுடனே 'உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது' என்கிறான்.
"அதற்குள் என்னை எப்படி உங்களுக்குப் பிடிக்க முடியும்? என் விருப்பங்கள், சைகள், பலவீனங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? அதுபோல் உங்கள் அறிவு, ரசனை, தகுதி எதுவும் எனக்குத் தெரியாது. நாம் எப்படி அதற்குள் ஒரு முடிவுக்கு வரமுடியும்?"
பெண் பார்க்க வந்தவன் சந்தியாவின் அந்த எதிர்பாராக் கேள்விக் கணைகளால் தாக்குண்டு மீள வழிதெரியாமல் வீழ்கிறான்.
4 சேரிப் பகுதி மக்களுக்கு வசதிகள் செய்து தராத நிலை கண்டு அரசு அலுவலர்களைச் சந்தியா அர்ச்சனை செய்யும் இடம் அரசுக்குக் கொடுக்கும் சாட்டையடி.
"அவர்கள் நாகரிகத்தைப் பற்றி விமர்சிக்க உங்களுக்கோ உங்கள் அரசுக்கோ என்ன யோக்தை இருக்கிறது? இந்தச் சேரி ஜனங்கள், குறிப்பாகப் பெண்கள் கழிப்பிட வசதி செய்து தரச்சொல்லிக் கேட்டு, ஊர்வலம் நடத்தி எவ்வளவு காலம் கிறது? ஏன் செய்து தரவில்லை? உங்களுக்கென்று வீடும் குளியல் அறையும் இருக்கப் போய்த்தானே நீங்கள் வசதியாக எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வர முடிகிறது. இல்லாவிட்டால் என்ன செய்திருப்பீர்கள்? இந்தப் பெண்கள் செய்வது மாதிரி, இருள் விலகுவதற்குள் எழுந்து வந்து அவர்கள் உட்காருவது மாதிரி நீங்களும் உட்கார்ந்திருப்பீர்கள்தானே?"

ஆண், பெண் உறவு பற்றி இந்நூல் நெடுகலும் விவாதிக்கப்படும் பல தகவல்கள் பலருக்குச் சினமமூட்டும் தகவல்களாக அமையலாம். ஆனால், சிந்திக்க வேண்டிய செய்திகள் என்பதில் ஐயமில்லை. அவற்றுள் சில:
1. ஆண் துணை எனக்கு வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். நான் சில நெறிகளுடன் வாழ்வது என்று இருக்கிறேன். நான் கண்டவனுடன் சுற்ற முடியாது. யாராவது ஒருத்தனுடன் குடும்பமாக, அவனை நேசித்து, அவன் குழந்தைக்குத் தாயாகி வாழ வேண்டும் என்பதிலும் தப்பில்லை. ஆனால், ஒரு பெண் என்பவள், ஒருவன் துணையுடன் வாழ வேண்டும் என்பது நிர்ப்பந்தமா? துணை அடைவது பாதுகாப்புக் கருதி என்றால், அது அபத்தம். இல்லற இன்பம் குறிக்கோள் என்றால், அதுக்குக் குடும்பம் என்ற அமைப்பு அநீதம். அந்த இன்பத்தை திருமணமாகாமலே பெற்றுக் கொள்ள முடியாதா? - சந்தியா
2. ஒருவனுடன் சிநேகிதமாக இருக்கிறாய். ஏதோ ஒரு சமயத்தில் அவனுடன் உடலுறவு கொள்கிறாய். அந்த உறவுக்குப் பெயர் என்ன? நட்பா, தாம்பத்யமா? நட்பில் தாம்பத்யம் கலந்தால் அது நட்பாகுமா? குடும்பம் என்பது நாகரிகம். அது தளை அல்ல. கட்டு அல்ல. நீ விரும்பவில்லை என்றால் அதற்குள் வராதே! வெளியே நில். ஆனால், மனம்போல் வாழ்வது என்பது நாகரிகமற்ற நிலை என்பதையும் மறக்கக் கூடாது. - கனகா
3. கற்பு என்பது கன்னித் திரை சமாச்சாரம். பெண் தன் கன்னித் திரை கிழிபடாது அதைக் கண்ணெணனக் காப்பாற்றக் கடமைப்பட்டவள். அதைக் கிழிப்பதற்கென்றே ஒருத்தன் கணவன் பெயரில் வருவான். முதலிரவு என்பதே சட்டபூர்வமான பாலியல் பலாத்காரம். - சந்தியா 4. பெண்களை ண்கள் புறக்கணிப்பதும் சிறுமைப்படுத்துவதும் எப்படித் தவறோ, அதே போன்றதுதான் ஆண்களை நாம் வெறுப்பதும். மனிதர்கள் வெறுக்கப்படத் தக்கவர்கள் அல்லர். நேசிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆண்களாயினும் பெண்களாயினும் யாரையும் யாரும் வெறுத்துப் புறக்கணித்து வாழ்வது சாத்தியப் படாது. ஆண்கள், பெண்கள் இதில் யார் முக்கியம் என்பதல்ல விஷயம். வாழ்க்கையே முக்கியம். சந்தோஷம் தனித்து வாழ்வதில் இல்லை. சேர்ந்து வாழ்வதில் தான் இருக்கிறது. - சந்தியா
5. மனைவியைப் பொது இடத்தில் கொஞ்சுவது, பொது இடத்தில் கோபிப்பது, துக்கத்தைப் பிறர் பார்க்கக் கொண்டாடுவது எல்லாமும் ஒரு வகை பாசம் என்பது என் கருத்து. - சிவநேசன்
6. இருட்டுக்கும் பெண்களுக்கும் எப்பவும் நம் நாட்டில் சம்பந்தப்படுத்தியே வந்திருக்கிறார்கள். மாலை மயங்கியதும் நம் பெண்கள் மாடுகள் கொட்டிலில் அடங்குவது மாதிரி வீட்டுக்குள் முடங்கி விட வேண்டும். இருட்டு பத்துகளுக்கு இடமானது. அந்த பத்துகளை வெல்ல ஆண்களால் முடியும். பெண்களால் முடியாது. இருட்டியதும் பெண்களுக்கு உடம்பு வாழ்க்கை தொடங்கிவிடுகிறது. அவர்கள் ஆண்களின் உடனடித் தேவை. - சந்தியா

7. சந்தோஷம் என்பது ஆணின் கூட்டுறவால் அன்றிச் சாத்தியம் உண்டா?நீ கலவி இன்பத்தைச் சொல்கிறாய் அல்லவா? ஆண் இல்லாமல் புணர்ச்சி இன்பம் சாத்தியமில்லைதான். அந்த ஆண் கணவனாகத்தான் இருக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஏன், ஒரு நல்ல சிநேகிதனாலும் அந்த இன்பத்தை வழங்க முடியுமே! உண்மையில் கணவனைக் காட்டிலும் கருத்து ஒருமித்த சிநேகிதனால் காதல் இன்பத்தைக் கூடுதலாகத் தர முடியும் என்றே நம்புகிறேன். - சந்தியா8. சிநேகிதனோடு உறவு வைத்துக் கொண்டால், அந்த உறவுக்குச் சிநேகிதம் என்ற பெயர் பொருந்துமா? சிநேகிதனாக இருந்து கொண்டு ஒருவன் அவ்வப்போது கணவனாகவும் மாறுவான் என்றால், அந்த உறவு எதன் பால்படும்? குழப்பமும் அகெளரவமும் அல்லவா அதனால் விளையும். - கனகா
9. நீங்கள் என்ன எங்களுக்குச் சுதந்நிரம் தருவது? சுதந்திரம், தரும் பொருளன்று. அது உரிமை! நாங்கள் அதை எடுத்துக் கொள்வோம்! ஆனால், பெண்களாகிய நீங்கள் அதற்கான தகுதிகளையும் தன்மைகளையும் பெற்றிருக்கிறீர்களா? இல்லை. இன்னும் உங்கள் நகைப்பித்தும், பட்டுப் புடவை பித்தும், மேனாமினுக்கித் தனமும் உங்களிடமிருந்து போயிற்றா? இன்னும் நீங்கள் உங்கள் உடம்பால் ஆண்களைக் கட்டிப் போடலாம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து விடுவீர்கள். - சந்தியா
மேல்நாடுகளில் - ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத் திருமணப்பந்தம் என்ற அங்கீகாரம் தேவையற்றது என்ற எண்ணம் தோன்றிப் பல்லாண்டுகள் கடந்து விட்டன.
அத்தகைய உறவு அநாகரிகமானது, நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது, ஈடுபாடற்றது, உறுதியற்றது, நம்பகமற்றது, விலங்குத் தன்மையுடையது என்று ஆசிய நாடுகளும் ஏனைய நாடுகளும் அவ்வுறவைக் கொச்சைபடுத்தி வசைமாரிப் பொழிந்தன.
இன்றைய நிலை என்ன? மேலை நாடுகளின் அந்த முறை இப்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி சில ஆசிய நாடுகளில் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே விரைவாக மாறிக்கொண்டு வருகிறது.
அதற்கு என்ன காரணம்?
மேல்நாட்டினர் போக்கு எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுமளவுக்குத் தூய்மைபடுத்தப்பட்டுவிட்டதா? இல்லை.
இக்கால மனிதன் - கல்வி அறிவு மேலோங்க மேலோங்கத் தன்னை எந்தக் கட்டுப்பாட்டிற்குள்ளும் முடக்கிக் கொள்ள விரும்பாத சுயநல விரும்பியாகிவிட்டான். அதற்குச் சுதந்திர வாழ்க்கை என்று வசதியாக பெயர் வைத்துவிட்டான். அத்தகைய வாழ்க்கை வாழ்வதையே பெரிதும் விரும்புகிறவனாகிவிட்டான்.அதிலேயே மனிதன் மிகுதியும் நாட்டம் கொண்டவனாகவும் மாறிவிட்டான். தன் மகிழ்ச்சியை மட்டுமே தலையாய நோக்கமாகக் கொள்ள ஆரம்பித்துவிட்டான்.அது வரம்புகளற்ற வாழ்க்கை முறை.யாரும் யாருக்கும் கடப்பாடு கொள்ள வேண்டியதில்லை.வாழ்க்கை வாழ்வதற்கே என்பதே அதன் அடிப்படைத் தத்துவம்.அந்தப் போக்கிற்கு மேலை நாட்டு வாழ்க்கை முறை பொருத்தமானதாக அவனுக்குத் தோன்றி இருக்க வேண்டும். ஒன்று கலந்து விட்டான். இதுதான் உண்மை.
சந்தியா நாவலில்,மணவாழ்க்கை குறித்து மனிதர்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றம் பெண்ணியத்தோடு எத்தகைய நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை எழுத்தாளர் பிரபஞ்சன் தம் நாவலில் மிக அருமையாக வெளியிட்டுள்ளார். ஆண், பெண் இருவரும் தம்பதியராக சேர்ந்து வாழ்வதிலும், நண்பர்களாக இணைந்து வாழ்வதும் உள்ள நன்மை தீமைகள் நாவல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
அந்தக் கருத்துக்களை அள்ளுவதும் தள்ளுவதும் வாசகர்களைப் பொறுத்தது.ஆனால்,
நாவலின் மையக் கருத்தும் நாவலில் விவாதிக்கப்படும் ஏனைய கருத்துகளும் மனித நேயமுடைய அனைவரும் எண்ணிப் பார்க்க ஏற்றவை என்பது மறுக்க முடியாத உண்மை.

முற்றும்

Labels: