அடுத்த வாசகர் வட்டம்

அடுத்த வாசகர் வட்ட வாசிப்புக்காக "வண்ணதாசனின் சிறுகதைகள்" தெரிவு செய்யப்பட்டுள்ளது. சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள "வண்ணதாசன் சிறுகதைகள்" என்ற தொகுதியில் அவரது சில சமீபத்திய சிறுகதைகளைத் தவிர்த்து பிற கதைகள் அனைத்தும் தொகுக்கப் பட்டுள்ளது. அவைகள் பத்திற்கும் மேற்பட்ட சிறுகதை தொகுதிகளாகவும் வாசிக்கக் கிடைக்கின்றன. சிங்கப்பூரின் நூலகத்தில் பிரதிகள் கிடைக்கின்றன.

இன்றைய பகட்டும், ஆரவாரமும் நிறைந்த வாழ்க்கைச் சூழலில், மென்மையும், நுட்பமும், அழகும் நிறைந்த அவரது மனம் எளிதில் தட்டுப்படாததும்
உதாசீனப் படுத்துவதற்கு எளிதானதும் ஆகும்...ஒரு மலர்ந்த மலரை அலுவலகம் செல்லும் வழியில் பார்க்க வாய்ப்பதைப்போல...
என்பது என் கருத்து.

அவரது சிறுகதைகளில், நிறை, கூறல், சமவெளி, தோட்டத்திற்கு வெளியேயும் சில பூக்கள், பெயர் தெரியாமலே ஒரு பறவை, கிருஷ்ணன் வைத்த வீடு, தனுமை, போன்ற நல்ல கதைகளை தவற விடாதீர்கள். (எல்லாகதைகளையும் படிக்க இயலாமல் போனால்). இது போல உங்களுக்கும் ஒரு பட்டியல் இருந்தால் அதையும் அனுப்பிவையுங்கள், எல்லோரிடமும் பகிர்ந்துக் கொள்ளுவோம்.

விடுமுறைகள் முடிந்த பின்னர், நூலக அதிகாரியிடம் கலந்து பேசி கூட்டத்திற்கான தேதியை பின்னொரு மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன்.
(ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி ஆரம்பத்தில் இருக்கலாம்.)

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு