ரெ. செல்வம்: அசோகமித்திரனின் "ஒற்றன்"

விமர்சனம் : அசோகமித்திரனின் "ஒற்றன்!"

நிரப்பப்படாத இடைவெளியும் தொடர்ச்சியும்
ரெ.செல்வம்


மனிதவாழ்வின் மிக நீண்ட இருப்பு அவனால் உருவாக்கப்படும் கேள்விகளும் கண்டடையும் விடைகளுமாகவே தொடர்கிறது. அவ்வாறே சிறந்த கலை இலக்கிய படைப்புகளும் வாசகனின் அகமனதில் பிரதிகளின் இடைவெளிமூலமாக வாழ்வியலின் தத்துவார்த்தமான கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. அவற்றிற்கான பதில்களை சில தருணங்களில் நாம் கண்டடைந்தாலும் அது முழு முற்றானதாக அமைந்துவிடுவதும் இல்லை.
அசோகமித்திரனுடைய ஒற்றன்! நாவலை வாசிப்பதற்கு முன்னால் வாசக மனம் ஒரு பொதுமையான கருதுகோளை அவருடைய முன்னைய எழுத்துக்களின் மூலம் அடைய வேண்டியிருக்கிறது. குறிப்பாக அவருடைய நாவலுக்குரிய மொழி மிக வெளிப்படையாக இருப்பினும் மிக கவனமாகவே வாசிக்கவேண்டியிருக்கிறது. இல்லை எனில், இந்நாவலில் இட்டு ரப்பப்படாத பக்கங்களை அதன் ரகசியமான கழ்வுகளை தவறவிடக்கூடிய சந்தர்ப்பமாக அமைந்துவிடக் கூடும். குறிப்பாக, இந்நாவல் உருவான காலக்கட்டத்திற்குரிய உலக நாடுகளின் உறவுச்சிக்கல்கள், சமூகங்களுக்கு இடையிலான முன்முடிவுகள் மீதான கருதுகோள்கள் ஆகியவற்றை கவனப்படுத்துவது போன்றவை. வியாபகமான சமூகங்களின் இடையில் ன்றுகொண்டிருக்கும் நமக்கு பழகிப்போன சமூகத்தின் மனம் தெளிக்கப்பட்ட காட்சிகளின் பின்புலமாக இருந்து ஒரு பார்வையாளன்போல அது செயல்படுகிறது. இந்நாவல் அடையாளப்படுத்தும் குறியீடுகள் செருப்பு, மூடுபனி என நீண்ட வரிசையாக தொடரலாம்.


அவை உருவாக்கும் கவனமின்மைக்கு இடையிலான வலி இடப்பெயர்வுக்குரிய வலியாக அதன் காரகளான ஒவ்வாமை, ராதரவு, பலகீனப்படல் போன்றதாக கொள்ளலாம். மூடுபனி வன்முறையற்ற கதையாடலுக்குரிய முகங்களின் பின்னால், இருக்கக்கூடிய உறுதிப்படுத்தப்படாத வன்முறை இங்கே சில நிகழ்வுகளை நாம் தெளிவு படுத்திக்கொள்ளலாம்.

பெரிய ஆயுதங்களுக்கு இடையிலானது மட்டுமில்லை வன்முறை. அது சாதாரண கை குலுக்கலில், அறிமுகங்களில் உதிர்க்கப்படும் பெயர்களில், திட்டமிடப்படாத ஒரு சொல்லில்கூட அது பதுங்கியிருப்பதாக கொள்ள வேண்டியுள்ளது. முழு முற்றாக தனது சமூகத்தை கண்ணாடியைப் போல ஆவனப்படுத்த வேண்டிய எழுத்தாளன் தம் உணர்வுச்சிக்கலில் விலகிப்போய்விடுகிற தருணங்கள் மற்றும் பொறுப்பற்ற உணர்ச்சிப் பிண்டமாக மாறிவிடுவதை காணமுடிகிறது.


நாவலாசிரியரின் பூண்டு போன்ற உணவுப்பழக்க வழக்கங்களில் தர்ச்சார்புடைய லை யூகங்களை உருவாக்க கூடியதாக அமைகிறது. நீண்ட விவரணையற்ற கதை அமைப்பு குறிப்பிடபட வேண்டிய ஒன்று. இறுதி பாகங்களின் மேரி தம்பதிகளின் செயல்பாடு. ரூவாண்டாவிலிருந்து தொடங்கும்போது அது அலெக்ஸ் ஹய்லியின் "ரூட்ஸ்" நாவலை னைவுப்படுத்துகிறது. சுயமற்ற ரூவாண்டாவில் பிடிக்கப்பட்ட ஒரு அடிமை தன் மேல் சுமத்தப்படும் நகர்வுகளை எதிர்ப்பின்றி, தயார் நிலையில் முன் இருப்பது ஒற்றன் நாவலிலும் அது தொடர்வதாகவே உணரமுடிகிறது. இன்னும் செய்தியும் அதன் முகங்களும் இடைவெளிகளை இட்டு நிரப்பாமல் தொடர்வதாகவே உணரமுடியும்.

*******

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு