அடுத்த வாசகர்வட்ட கூட்டம்

நண்பர்களே!


ஒரு நினைவூட்டல், வரும் வாசகர் வட்டத்தின் கூட்டம் 04-06-2006 ஞாயிறு மாலை 4 மணிக்குத் துவங்கி 7 மணிவரை நிகழும், தேசிய நூலகத்தின் 'வாசிப்போம் சிங்கப்பூர்' கொண்டாட்டத்தில் தெரிவு செய்யப் பட்டிருக்கும் அசோகமித்ரனின், 'ஒற்றன்' நாவலும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளரான புதுமைதாசனின் (P.கிருஷ்ணன்) "புதுமைதாசன் சிறுகதைகள்" என்ற தொகுப்பில் உள்ள "உதிரிகள்" என்ற சிறுகதை ஆகியவற்றை ஆய்வுக்கு கருப்பொருளாகக் கொண்டுருக்கிறோம். மறக்காமல் அங்மோ-கியோ நூலகத்தின் தக்காளி அறைக்கு வந்து விடுங்கள், உங்களின் விமர்சனங்களுடன்.

ஒரு வழியாக போன கூட்டத்தின் விமர்சனங்களைத் தட்டச்சு செய்து வலைப்பூவில் வலையேற்றி விட்டேன். வலைப்பூவின் வடிவமைப்பிலும் மாறுதல்கள். இப்போது தமிழ் எழுத்துருக்கள் எளிதில் தெரியுமாறான தொழில் நுட்பத்துடன் மாற்றப் பட்டிருக்கிறது.



இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பதிவுகளை இடுவதினால், பெரும்பாலான நேரங்களில் செயலற்று இருப்பதான தோற்றம் கொள்கிறது. இது குறித்து உங்களின் யோசனைகள் கட்டாயம் தேவைப் படுகிறது.


என்ன செய்யலாம், சொல்லுங்கள்?


http://vasagarvattam.blogspot.com

e-mail: vasagarvattam@yahoo.com.sg
vasagarvattam@gmail.com

என்றென்றும் அன்புடன்,

சுப்பிரமணியன் ரமேஷ்

என்னுடைய வலைப்பதிவு:

http://subramesh.blogapot.com

email: manasazen@gmail.com

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு