வாசகர்வட்டம் - 23-8-09 சிங்க்கை வலைப்பூபதிவாளர்களுடன் ஒரு சந்திப்பு

வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்

நாள்: 23.08.2009 (ஞாயிறு)

நேரம்: மாலை 4.30மணிக்கு

இடம்: அங்மோ கியோ வட்டார பொது நூலகம் தக்காளி அறை (இரண்டாவது தளம்)

இருவர் சந்திக்கும்போது தான் காதல், காமம், குரோதம், என ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு இந்த பிரபஞ்சம் மெல்ல விரிவடைகிறது. இவர்களும் சந்திக்கிறார்கள,; விரல் நுனிக்குள் சுருங்கிவிட்ட இணையப் பெருவெளியில் சந்திப்பதுடன் சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல், ஆன்மீகம், இலக்கியம், அரசியல், சமூகம், மொழி, பண்பாட்டுடன் நட்பின் கரங்களை உயர்த்திப் பிடிக்கும், இவர்களின் இணைய உலக பயண எழுத்தின் நுட்பத்துடன் சந்தித்த தளங்களை….. சிங்கைவாழ் பதிவர்களான கோவி.கண்ணன் அவர்கள் குழலி அவர்கள் அப்பாவி முருகேசன் அவர்கள் முகவை ராம் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களுடன் 15-ற்கும் மேற்பட்ட வலைதள எழுத்தாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கலந்துரையாடலிலும் பங்கு பெறவிருக்கின்றனர். அனுமதி இலவசம் அன்புடன் அழைப்பது வாசகர் வட்டம் நண்பர்கள். சிங்கை பதிவர்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு

www.singaporetamilblogers.blogspot.com

www.sgtamilbloggers.com

www.tamilveli.com

அ. முத்துலிங்கம் கதைகளைப் பற்றி பாண்டிதுரை

மீளா பிரமிப்பினூடே படிந்துவிட்ட இழப்புகள். பாண்டித்துரை இதற்கு முன்பு அ.முத்துலிங்கத்தின் கட்டுரைதொகுப்புகளை வாசித்திருக்கிறேன். இவரின் சிறுகதை தொகுப்பு என்பது இதுவே முதல் முறை ஆனால் கட்டுரைகளின் ஈர்ப்பு ஏனோ சிறுகதைகளுக்குள் இல்லை. அக்கா – 1964 (இந்த வருடம் சரியா என்பது தெரியவில்லை) திக்சக்கரம் - 1995 வம்ச விருத்தி – 1996 வடக்கு வீதி – 1998 வாசகர் வட்டத்திற்காக நான் வாசித்த மகாராஜாவின் ரயில் வண்டி – 2001 இவரது ஐந்தாவது சிறுகதை தொகுப்புஇ இதற்கு முன்னரும் பின்னரும் வெளிவந்த சிறுகதை தொகுப்புகளை நான் படித்ததில்லை. சிறுகதையை படிப்பதற்கு முன்பு தலைப்பு பற்றிய பிரக்ஞையில் மகாராஜாவின் வண்டி என்றால் எப்படியெல்லாம் இருக்கும் என்ற கற்பனையில் பிரமிப்புடன் மிதந்து கிடந்தேன். கதையை வாசிக்க துவங்கியபோதுஇ ஒருவித சலிப்பு ஏற்பட்டது. கதையை நகர்த்தல் ஒரு துப்பறியும் கதைசொல்லல் போன்ற பிம்பம் என்னுள் படிந்ததேஇ ஆனால் பிற கதைகளை வாசிக்க வாசிக்க மாற்றம் ஏற்பட்டது. ஒட்டு மொத்த கதைகளை படித்து முடிக்கும் போது பிரமிப்பு ஏற்படுதைவிடஇ ஒரு வறண்ட மனநிலையில் ஏற்படும் சலிப்பே தோன்றிமறைந்தது. எல்லாக்கதைகளின் முடிவிலும் ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு இழப்பு படிந்துபோய்கிடக்கிறது. இருபது கதைகள் கொண்ட தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான அல்லது மனதிற்கு நெருக்கமான கதை என்றுஇ “தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில”; கதையை சொல்லலாம் பொன்னி எனும் வேலைக்காரச்சிறுமி காணமல் போவதிலிருந்து துவங்கிஇ அதன் தொடர்சியாக நிச்சயிக்கப்பட்ட தில்லை அம்பலப் பிள்ளையார் கோவிலுக்கு சென்று அங்கு இந்த கதை முழுவதும் பிண்ணப்பட்ட இரண்டு சகோதர்களில் இளையவன் இறந்து போவதோடு முடிகிறது. இரண்டு சகோதர்களில் மூத்தவனின் பார்வையில் சொல்லப்பட்ட கதையில் இடம் பெரும் சில சொல்லாடல்களை இப்போது பார்ப்போம். ‘’அந்த மார்பிள்களை நான் அபகரிப்பதற்கு பலமுறை முயன்று தோல்வியுற்றிருந்தேன். எனக்கு எரிச்சலாக வந்தது‘’. ‘’அங்கே கறுப்புப் புழுவுக்கு பாலாபிஷேகம் நடந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதும் ‘பழிகாரா இன்னும் நீ உடுக்கவில்லையா ? கார் வரப்போகிறது ஓடு ஓடு என்றாள் ‘’. ‘’நான் எப்போழுதாவது கார் ஓட்டினால் அப்படி ஒரு தொப்பி அணிந்து சாய்ந்து நின்று பீடி குடிக்க வேண்டும் என்று உடனேயே தீர்மானம் எடுத்தேன் ‘’. ‘’எனக்கும் பொன்னிக்கும் இடையில் தலையைக் கொடுத்து தம்பியும் எட்டிப்பார்த்தான். ஒப்பந்தத்தை மீறுகிறான். ஒரு குட்டு வைத்தேன். உலகம் நேரானது‘’. ‘’வுட்போர்டில் நின்றபடி ஒரு கை உள்ளே பிடிக்க மறு கை வெளியே தொங்க சின்ன மாமா சிகை கலைய அங்கவஸ்திரம் மிதக்க ஒரு தேவதூதன்போல பறந்து வந்தார். இந்த தருணத்தில் எனக்கு சின்ன மாமாவிடம் இருந்த மதிப்பு பன்மடங்கு பெருகியது. ‘’. ‘’கோயில் வந்தபோது எனக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அது ஒரு சிறிய கோவில். ஒரு குருக்களும் ஒரு மாடும் ஒரு சொறிநாயும் இரண்டு பிச்சைக்காரர்களும்தான் அதன் சொந்தக்காரர்கள் ‘’. ‘’பெற்றோர் பார்க்காத சமயத்தில் அவள் கோவில் நாயிடம் விளையாட நெருங்கினாள். அது உர்ர் என்று அதிருப்தியாக உறுமியது. சிறிது பின்வாங்குவதும் அணுகுவதுமாக இருந்தாள் அவளுடைய கெண்டைக் கால்களை நாயினுடைய கூரிய பற்கள் சந்திக்கும் தருணத்துக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன் அந்த குட்டி சந்தோஷமும் அவளுடைய தகப்பன் திடீரென்று நாயை விரட்டியதால் கெட்டுப்போனது‘’. ‘’முழங்கால் மூட்டில் ஏற்பட்ட பாவாடை நீக்கலுக்குள் நான் பார்த்துவிடாமல் இருக்க தன்னுடைய பின்பக்கம் என்னுடைய முகத்துக்கு நேராக வரும்படி பிரயத்தனமாகத் திருப்பி வைத்தாள் ‘’. ‘’இன்னும் கரியாக ஒரு நிமிடத்தில் இவன் இறந்துவிடுவான் என்பது தெரியாமல் நான் அந்த மார்பிள்களை வாங்கி பத்திரப்படுத்தினேன் ‘’. ‘’அண்ணா நீ நீந்துவாயா? ஏன்றான் தீடிரென்று. உலகத்தில் உள்ள சகல கலைகளிலும் நான் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று அவன் நினைத்தான் ‘’. ‘’எனக்கு கோபம் வந்தது. இவன் அளவுக்கு அதிகமாகக் குளத்தை அனுபவிப்தை நான் விரும்பவில்லை. இவன் செய்வதிலும் பார்க்க கூடுதலான ஒரு யுக்தியை நான் செய்துகொண்டே இருக்கவேண்டும். ‘’அப்போது என் கண்முன்னே கணுக்கால் வெள்ளத்தில் அவன் சரிந்துகொண்டிருந்தான். கனவிலே நடப்பதுபோல ஈர்க்கப்பட்டு அதையே பார்த்தேன். அவன் அப்படித் தத்தளித்தபோது எட்டிக் கைகளை கொடுத்திருந்தாலோ சத்தம் எழுப்பியிருந்தாலோ போதும். நான் செய்யவில்லை விறைத்துப்போய் ஒரு நிமிடம் வரைக்கும் அசையாமல் அங்கே தோன்றிய நீர்ச்சுழலைப் பார்த்தவாறு நின்றேன். ஒரு மந்திரம்போல அவன் சிரித்தபடி கைகொட்டி எழும்புவான் என்ற நினைப்பு எனக்குள் இருந்தது‘’. ‘’அதற்கு பிறகுதான் ஓவென்று கத்திக்கொண்டு அம்மாவிடம் ஓடியதாக ஞாபகம் ‘’. ‘’தூங்குவதுபோலத் தம்பியை பக்கவாட்டில் இரண்டு ககைளிலும் ஏந்தியபடி அவர்நடந்து வந்து நடுஅறையில் நடுக்கட்டிலில் கிடத்தினார். திடீரென்று அந்த அறையில் இருந்த காற்றை யாரோ அகற்றிவட்டார்கள். நான் வெளியே ஓடிவந்து மூச்சுவிட்டேன் ‘’. இப்போது நான் சொன்னவையெல்லாம் இந்த கதையில் வரும் இந்த கதையை சொல்லிச்செல்லும் மூத்த சிறுவனின் எண்ணங்கள் சார்ந்தவை . இவன் எந்த குணாதிசயங்களை உள்ளடக்கியவன் என்ற அனுமானத்திற்கு வாசகனை இட்டுச் செல்ல உதவுபவை இரண்டு சகோதர்களுக்கு இடையேயான பிணைப்பை கதை முழுமைக்கும் காணாலாம். இயல்பாக இரு சகோதர்கள் இருக்கும் வீடுகளில் அவர்களுக்குள் ஏற்படும் போட்டிஇ தனக்கென்று பாதுகாத்து வரும் பொக்கிஷங்கள்இ பிரச்சினைகளின் தோற்றுவாயை மறைத்தல் என்று சிறுபிராயத்தை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். மூத்த சிறுவன் நிறைய இடங்களில் அவனின் எண்ணங்கள் சாரந்து பிரமிக்கவைக்கிறான். கதைமுழுமைக்கும் மூத்த சிறுவனுக்குள் ஒரு வித குருரத்தன்மை நிரம்பியிருக்கிறது. இந்த குருரம் இளம்பிராயத்தில் பலருக்குள் ஏற்படக்கூடிய ஒன்றுதான் பின்னொருநாள் நினைக்கும்போதுஇ பலரும் இப்படியெல்லாமா இருந்திருக்கிறோம் என்றுஇ நம்மீதான கோபத்தை பரிதாபத்தை தோற்றுவிக்கும.; சிலருக்குள் இத்தகைய குருரங்கள் வாழ்க்கை முழுமைக்கும் நிரம்பிவிடுகிறது. ‘நாளை'’ சிறுகதை ஒரு கிராம அழிவிலிருந்து தப்பித்து ஒருவேளை உணவுக்காய் நீண்ட தொலைவு அலைந்து அகதிமுகாமில் தங்கவைக்கப்படும் இரு சிறுவர்களை பற்றிய கதை என்றாலும் சொல்லப்பட்ட சில பக்கங்களுக்குள் இப்படித்தான் ஒரு முகாம் ஈழத்தில் இருக்ககூடும் என்ற ஒரு முழுமையான முகாமினை கற்பனை செய்யமுடிகிறது. இதில் வரக்கூடிய மூத்த சிறுவனும் அவனது எண்ணங்களால் பிரமிக்க வைக்கிறான் ‘’மகாராஜாவின் இரயில் வண்டி’’ என்ற முதல் சிறுகதை பதின்ம வயதில் ஒருவனுக்குள் ஏற்படும் அதிர்வுகளும் மென்மையான காதலையும் பலவருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எல்லோருக்குள்ளும் இப்படி ஒன்றை அசைபோட வைக்கிறது. ‘’ஐந்தாவது கதிரை’’ சிறுகதை கணவன் மனைவிக்குள் நடைபெரும் மனம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை பேசுகிறது. கலாச்சாரங்களுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட ஒருவள் தனது மார்பகங்களில் பச்சை குத்திக்கொண்டதோடு முடிகிறது. மார்பகங்களில் பச்சை குத்தியதை படிக்கும் போது எனக்குள் படித்தபோது ஒரு வித அதிர்வு இருந்தது. ஆனால் பிறகு எனக்குள் சமாதானம் செய்து கொண்டேன் ஒரு பெண் இன்னொரு பெண்ணிற்கு பச்சை குத்தியிருக்கலாம் என்று. ‘’கடன்’’ சிறுகதை சிங்கப்பூரின் நிரந்தவாசிகளுக்கு பொருந்திப்போகக்கூடிய ஒன்று. முதுமையில் தனித்தலையும் ஒருவரின் ஏக்கங்கள் மற்றும் வாழ்வின் அன்றாட வாழ்க்கை சிக்கல்களோடு அந்த முதியவரை சாகடிப்பதுடன் முடிகிறது. கொம்புளான, தொடக்கம் , அம்மாவின் பாவாடை, பட்டம் , ராகுகாலம் என்று இன்னும் சில கதைகளை பற்றி எழுத நினைத்திருந்தேன். குறிப்பு தொடக்கம் சிறுகதை பற்றி அங்கு விவாதிக்கப்பட்டது. நண்பர் பாலுமணிமாறனுக்கு அத்தகைய அனுபவம் ஒன்று ஏற்பட்டது. அதனை உங்களோடு பகிர்ந்துகொள்வார்.


நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:

நவீன வாழ்வினில் சகமனிதனுக்கான ஈரம் வற்றிப்போய்க் கொண்டிருப்பதைக்கூட பொருட்படுத்த தவறுகிறோம். (மனிதனாய் வாழமுடியாத கணங்களின் குற்றபோதம் முள்ளாய் தொடர்ந்து உறுத்த எப்படி வாழ்வது?)

@ @ @ @

பாட்டி கதைகளின் வழியாக நமக்குள் திறக்கும் ரகசியக் கதவுகளுக்கான சாவியை தின வாழ்வின் அவசரத்தில் தொலைத்து விட்டதில், முடிவற்ற பாலையின் நெடும் பயணமாய் இவ் வாழ்க்கை...

@ @ @ @

சரித்திரம் அதை வாழ்ந்து பார்த்தவனின் வழியே பல திறப்புகளைக் கொண்டதாய் இருக்கிறது,
பாட புத்தகங்களின் வழியே அரசர்களின் சவக்கிடங்குகள் கொண்ட மயானம் தெரிகையில், சாமான்யர்களின் இதயத்திற்குள்ளிருந்து அபூர்வ மந்திரக் குளிகைகளும், மூளையின் புராதான மடிப்புகளுக்கிடையில் மறந்த பொக்கீஷங்கள் சிதறிக் கிடக்கின்றன. சில வழிகள் பாட்டிக் கதைகளுக்கான கதவுகளின் பாதையாகவும், சில நம்மிதயத்தின் கசிந்திருக்கும் காயங்களுக்கான குளிகைகள் தயாரிக்கும் மூலிகை காடுகளுக்கான பாதைகளுக்கானதாகவும் விகசிக்கின்றன...

@ @ @ @

வாழ்க்கையின் பலநிலைகளில் கடந்த காலத்தை வாழ்ந்து அனுபவித்த மனிதர்கள், தங்களின் சிங்கப்பூரை விவரிக்கும் நிகழ்ச்சியான, "நேற்றிருந்தோம்" நிகழ்ச்சியின் அக்டோபர் மாதத்திய கூட்டத்தில் திரு.பொன்.சுந்தரராசு தம் நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்வார்,
சிறந்த கல்வியாளரும், இலக்கியவாதியுமான அவரது உலகத்தையும், அவரது சிங்கப்பூரையும், நாம் இதன் வழியே அறிந்து கொண்டு நமக்கான வரலற்றையும், நம்முடைய சிங்கப்பூரையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

@ @ @ @

'நேற்றிருந்தோம்' - "நினைவு நதியில் அள்ளிய நுரைப்பூக்கள்"

'நேற்றிருந்தோம்' - "நினைவு நதியில் அள்ளிய நுரைப்பூக்கள்"


அங்மோ கியோ தேசிய நூலகத்தின் முதல் மாடியில் இருக்கும் தக்காளி அறை. வாசகர் வட்டம் நண்பர்கள் குழு தாங்கள் வாழ்ந்த 2008 ஆம் ஆண்டு காலகட்டத்தை விடுத்து காலயந்திரத்தில் கிட்டத்தட்ட ஐம்பத்தியைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று அந்த நினைவு நதியில் பயணித்து, குதூகலித்து நதியில் மிதந்து வந்த பல பூக்களை வாரியெடுத்தோம். அன்று காலயந்திரமாக செயல்பட்டவர் சிங்கை வானொலியின் ஒலி 96.8 மூத்ததயாரிப்பாளராகப் பணி புரியும் திரு செ ப பன்னீர்செல்வம்.


மாதம் ஒரு முறை நண்பர்கள் ஒன்று கூடி வாசகர் வட்டத்தில் நல்ல இலக்கியம் பற்றிய பகிர்தல் நடைபெறும். இந்த இலக்கியப் பகிர்தலின் ஒரு அங்கமாக 'நேற்றிருந்தோம்' என்ற நிகழ்வு. 'நேற்றிருந்தோம்' முதல் முறை நடைபெற்ற போது மூத்த எழுத்தாளர் திரு ராம கண்ணபிரான் சிராங்கூன் சாலை ஐம்பது வருடங்களுக்கு முன்னால் எப்படியிருந்தது என்னென்ன கடைகள் எங்கேயிருந்தன என்பதைப் பற்றிய விரிவாக விவரித்தார்.

இரண்டாம் முறையாக 'நேற்றிருந்தோம்' நிகழ்ச்சியில் பேசியவர் திரு செ ப பன்னீர்செல்வம். அவர் வசித்த புக்கிட் பாஞ்சாங் பகுதியைப் பற்றி உற்சாகத் துள்ளலோடு விவரித்த போது காலச்சக்கரத்தில் நம்முடன் அவர் பயணித்தது மட்டுமல்லாமால் அமிர்தம் குடித்து என்றும் இளமையோடு இருக்கும் தேவர்களையும் சந்தித்து வந்தாரோ என்று நினைக்கத் தோன்றியது.
ஒரு பேருந்து பயணத்தின் மூலம் தன் நினைவுப் பயணத்தைத் தொடங்கினார். பேருந்து எண் 170 - குவீன்ஸ்ரீட்டிலிருந்து ஜோகூர் பாரு பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழிப்பாதை. இன்றும் அதே தட எண் 170 அதே பகுதிகளுக்குச் செல்கிறது. வழித்தடங்கள் மாறியிருக்கலாம். ஆனால் அவர் நினைவுத்தடங்களில் இன்றும் மறையாமல் அதில் ஏறி சிங்கப்பூரின் முக்கிய நகரப் பகுதிகளுக்குச் சென்றதையும் பின்னர் ஜோகூர் வரை கடவுச்சீட்டு அனுமதிச்சீட்டு என்ற தடைகள் எதுவுமில்லால் சென்று வந்ததையும் நினைவு கூர்ந்தார்.

புக்கிட் பாஞ்சாங் வட்டாரம் புக்கித்தீமா சாலையில் பத்தாவது மைலில் அமைந்திருந்தது. மேலும் ஒன்பதாவது மைல், பத்தாவது மைல், பத்தரை மைல் என்றே குறிப்பிடப்பட்டு வந்தன. அந்த சாலை நீண்டு கிராஞ்சி உட்லண்ட்ஸ் பகுதிகளையும் உள்ளடக்கி அந்த வழியெங்கும் சிறு வசிப்பிடங்கள் இருந்து வந்தன என்று குறிப்பிட்டார். இன்று அவை பலமாடிக்கட்டடங்கள் நிறைந்த வட்டாரங்களாகவும், பெரு விரைவுச் சாலைகளும் எம்ஆர்டி பெருவிரைவு ரயில் பாதைகளும் அமையப் பெற்ற பெரு நகரத்தின் விரிவாகவும் இன்று காணப்பட்டாலும் அன்று அவை இருந்த அந்த இயற்கைச் சூழலையும் எளிய மக்களையும் கொண்ட அற்புதமான ஒரு வாழ்க்கையைப்பற்றி குறிப்பிட்ட போது விருப்பமான விளையாட்டுப் பொருளை தொலைத்து விட்டுத் தேடும் ஒரு சிறுவனின் மனத்தோடு அவர் விவரித்தக் காட்சிகள் நம்மையும் அந்த உலகத்திற்கே அழைத்துச் சென்றது.

50 களில் தொடக்கத்தில் அவர் விவரித்த அந்த வாழ்க்கை கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் ஒரு சிறு நகரத்தின் வாழ்க்கையை ஒத்திருந்தது. சுற்றிலும் நிறைய இந்தியக் குடும்பங்கள். வஉசி தமிழ்ப்பள்ளி, நாகம்மை தமிழ்ப்பள்ளி போன்ற தமிழ் வழிக் கல்வியைக் கற்பித்த தமிழ்ப்பள்ளிகள், செ ப பன்னீர் செல்வம் படித்த புக்கிட் பாங்சாங் அரசாங்கப் பள்ளி, அங்கேயிருந்த சாப்பாட்டுக் கடைகள், தோசை சுட்டு விற்ற பெண்மணி, சினிமா தியேட்டர், அங்கு பார்த்த கப்பலோட்டியத் தமிழன் திரைப்படம், மளிகைக்கடைகள், நாட்டு மருந்துக் கடை போன்ற பலவற்றையும் மறக்காமல் குறிப்பிட்டார். விலாசம் இல்லாமல் வாழ்ந்த ஏழைத் தொழிலாளிகளுக்கு தன் கடை முகவரியைக் கொடுத்து அவர்களுக்கு இந்தியாவிலிருந்து வரும் கடிதங்களை வைத்திருந்து அவர்கள் கடைக்கு வரும் போது அதைக் கொடுத்து உதவிய மளிகைக்கடைக்காரர், திராவிடச் சிந்தனையில் தீவிர ஈடுபாடு கொண்ட டீக்கடைக்காரர் களைப்பாகச் செல்லும் பள்ளிப்பிள்ளைகளைக் கூப்பிட்டு இலவசமாக டீ கொடுத்து போ போய் நன்றாகப் படி என்று சொல்லும் மனிதநேயமிக்க செயல் ஆத்திகவாதிகள் வழிபடும் கடவுளிடம் மட்டுமே காணக் கூடிய 'அன்பே சிவம்' கோட்பாடு!! யார் எவர் என்று தெரியாமலேயே ஒருவருக்கொருவர் உதவி செய்வதும், ஆபத்து என்றால் கூடி நின்று தோள் கொடுப்பதும் வார்த்தைகளால் சொல்லி உணரப்படாத கவிதைகள்!


தனி வீடு, சுற்றிலும் பழமரங்கள் நிறைந்த தோட்டம் இன்று நடுத்தர வர்க்கத்து சிங்கப்பூரர்களுக்கு எட்ட முடியாத ஒரு கனவாகவே இருக்கிறது. ஆனால் அன்று அந்த ஏழை எளிய மக்களுக்கு கிடைத்த ஒரு இனிமையான வாழ்க்கைச்சூழல். சர்க்கஸ் கூடாரத்தை விட்டு இவர் வசித்து வந்த வீட்டுத் தோட்டத்தில் இருந்த பழமரத்தைத் தேடி வந்து பழங்களைப் பறித்துச் சாப்பிட்ட யானை! காலையில் எழுந்து தோட்டத்திற்குப் போனால் தோட்டத்தில் ஒரு யானை இருந்தால் எத்தனை பிரமிப்பாக ஒரு சிறுவனுக்கு இருந்திருக்கக்கூடும்? அந்த யானை எப்படி அந்த குறுகலானப் பாலத்தைக் கடந்து தன் வீட்டிற்குள் வந்திருக்க முடியும் என்று இன்றும் விளங்காத மர்மாகவே இருக்கிறது. பழமரங்களை கூட்டமாகப் பற்ந்து வந்து வேட்டையாடிய பழந்தின்னி வௌவால்கள் இவையெல்லாம் இன்று விலங்கியல் தோட்டத்தில் மட்டுமே காணமுடியும்.


பக்கத்தில் இருந்த சமூக மன்றத்தில் இலவச திரைப்படக்காட்சியைக் காண பாய் தலையணை சாப்பாட்டு மூட்டையோடு கூட்டம் கூட்டமாக வந்து திரைப்படம் பார்த்து விட்டுச் செல்லும் மக்கள். பள்ளித் திடலில் நடைபெறும் கால்பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளைக் காண திரளும் மக்கள். உடன் வரும் தின் பண்டங்கள், ஐஸ், பட்டாணி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை இப்படி பல அடுக்குகளாக அவர் நினைவுகள் விரிந்து கொண்டே போனது.
நேரம் கருதி அவர் இரண்டரை மணி நேரம் கழித்து தன் பேச்சை முடித்துக் கொண்டார். பின்னர் மேலும் வானொலியில் பணியாற்றத் தொடங்கியதும் தான் பெற்ற அனுபவங்களையும். புது தில்லியில் பிரபல எழுத்தாளர் தி ஜானகிராமனுடன் பழகியதும் தன் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக நினைவு கூர்ந்தார்.


"வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ? "காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ வீண்படு பொய்யிலே- நித்தம் விதி தொடர்ந்திடுமோ?காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதெல்லாம் உறுதியில்லை காண்பது சக்தியாம்இந்தக் காட்சி நித்தியமாம்" என்ற பாரதி பாடலை நினைவுக் கூர்ந்து இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

சித்ரா ரமேஷ்
chitra.kjramesh@gmail.com