அடுத்த வாசகர் வட்டம்-ஒர் அறிவிப்பு.

ஒரு அறிவிப்பு

இனிய வாசகர் வட்ட நண்பர்களுக்கு நமது அடுத்த வாசகர் வட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள் பின் வருமாறு

சந்தியா- நாவல் எழுதியவர் பிரபஞ்சன்
(இந்த நாவல் சுவா சூ காங், மரைன் பரேட், ஆர்ச்சர்ட் தேசிய நூலகங்களில் இல்லை.)

சூர்யவம்சம் - எழுதியவர் சா.கந்தசாமி
(சுவா சூ காங், ஈசூன், செம்பவாங் ஜுரோங் கிழக்கு நூலகங்களில் இந்த நாவல் இல்லை)

ஒரு முக்கிய குறிப்பு. இந்த நாவலுக்கும் விக்ரமன் திரைப்படத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே ரோஜாப்பூ பாடல் சூப்பர்! சலக்கு சலக்குப் பாடல் படத்திற்கு வலு சேர்க்கின்றது போன்ற திரை விமர்சனங்களைத் தவிர்க்கவும். இந்தப் பெயரை எடுத்து ஒரு திரைப்படத்திற்கு உபயோகித்துக் கொண்டதற்கு ஏதாவது ராயல்டி கிடைத்ததா என்பதை திரு சா.கந்தசாமியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது.

சா.கந்தசாமி, பிரபஞ்சன் இருவரும் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சியை முன்னிட்டு சிங்கப்பூர் வரவிருக்கிறார்கள். எனவே நம்முடைய வாசகர் வட்டமும் இதனை ஒட்டி நடைபெறும்.

மேலும் இரு உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளும் இந்த நிகழ்ச்சிக்கு சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன.

திரு கண்ணபிரான் எழுதிய ‘gypsies’

திரு இளங்கண்ணன் எழுதிய ‘morning dew’

இந்த இரண்டு சிறுகதைகளும் விரைவில் மின்னஞ்சல் மூலம் நம் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அடுத்த வசகர் வட்டம் எப்போது, எங்கே, யாருடன் போன்ற விவரங்கள் விரைவில்!!
நான்கு கதைகள் தேர்வாகியுள்ளன. எனவே எல்லாக் கதைகளுக்கும் விமர்சனங்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும். எனவே உங்கள் நண்பர்களிடம் பேசி யார் எந்தக் கதையை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
அன்புடன்
வாசகர் வட்டத்தில் ஒரு சிறு வட்டம்

1 மறுமொழிகள்:

At , Blogger வடுவூர் குமார் மொழிந்தது...

இன்று நடந்த சந்திப்பு இங்கே.

 

Post a Comment

<< முகப்பு