பெரிதினும் பெரிது கேள் - ஒரு பார்வை

மாதங்கியின் பெரிதினும் பெரிது கேள்- ஒரு பார்வை

யெம். கே. குமார்


பாரதிதாசனின் "தன் பெண்டு தன் பிள்ளை" எனத்தொடங்கும் கவிதையை மனதில் கொண்டு உதித்த இக்கதைக்கு சிங்கப்பூரையும் சார்ஸையும் தொண்டூழியத்தையும் கொண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர் மாதங்கி.
பாரதிதாசனின் இக்கவிதைக்கும் பாரதியாரின் "தேடிச்சோறு நிதந்தின்று" கவிதைக்கும் இருக்கும் பொதுவான அசாதாரணத் தன்மையை இதுபோன்ற கதைகளின் வழியாகவே உலகுக்கு குறிப்பாக சிங்கப்பூர் வாசகர்களுக்கு அறிவிக்க முனைவது காலத்தின் கட்டாயம் எனில் அப்பணியை மாதங்கி அவர்களின் இக்கதை சிறப்பாகச் செய்திருக்கிறது.


கிஷ்கிந்தனை கதையின் ஆரம்பத்திலேயே நினைவுக்குக் கொண்டு வரும் யுகனேஸ்வரி, வாசகனைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி கதையை அரவிந்தன் மூலம் வேறுபக்கம் தள்ளுகிறார். இதன் மூலம் கிஷ்கிந்தன் கதாநாயகத் தன்மை கொன்டவனில்லை என்பதை நாம் உணர சிறிது நாழியாகிறது.
ரௌத்திரம், பேரங்காடி, காடி, தாதியர் போன்ற வார்த்தைகள் நம்பிக்கையூட்டுகின்றன.


தேசியப்பத்திரிகைக்கு மின்மடல், குழந்தைகள் அனுப்பிய வாழ்த்து அட்டை, கூல் சிங்கப்பூர் வாசகம் என சிங்கப்பூர வாழ்வியல் செய்திகள் கதைக்களம் ருசுவாக்க உதவியிருக்கின்றன.


சிறிய கோடு ஒன்றை பெரிய கோடாக்க அருகில் இன்னொரு சிறிய கோடு போடுவது போல தொண்டூழியத்தைப் பெரிதினும் பெரிதாக்க கிஷ்கிந்தனைப் பயனபடுத்தியது தெரிகிறது. கதை என்றாலே நாயகனும் நாயகியும் ஒரு வில்லனும் இருக்க வேண்டும் என்ற சினிமாத்தனம் இல்லாமல் (அரவிந்தனே இல்லாமல்) கதாநாயக கிஷ்கிந்தனையே உதறிவிட்டு கதாநாயகி மட்டும் வியட்நாம் செல்வதாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என யோசிக்க விரும்புகிறேன்.


பாசக்கார டேவிட் வாங், நெகிழும் ஜான் டேவிட் லாம், கட்டணம் பெறாத முகம்மது கு சேன் இப்படியெல்லாம் வருபவர்கள் இக்கதையின் நடப்பு அங்கீகாரத்தை அவசியமாக்குதலில் உதவியிருக்கலாம்.


கதையின் கடைசி பாராவில் திடமில்லை. யுகனேஸ்வரி மிக நல்ல பெண் என ஆசிரியர் ஏற்கனவே ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருப்பதால் இதைவிட என்ன செய்வாள் அவள் என்றே கேட்கத்தோணுகிறது.



சார்ஸின் பணியாற்றிய தாதியர்களுக்கு இக்கதை நன்றி சொல்லும்.
பெரிதினும் பெரிது கேள்- தலைப்பு எனக்குப் பிடித்திருக்கிறது!

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு