செப்டம்பர் மாத வாசகர்வட்டம்

செப்டம்பர் 03ஆம் தேதி நிகழ்ந்த வாசகர் வட்டக் கூட்டத்தில் கவிஞர் உமாமகேஸ்வரியின், " வெறும் பொழுது" கவிதைத் தொகுதி வாசிப்புக்கென கொள்ளப்பட்டது.

முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்ற அடிப்படையில் ஒரு பொது தளத்தை வரையறுத்துக் கொள்ள கூட்டத்தில் விவாதமும் பின்னர் அதனடிப்படையில் உமாமகேஸ்வரியின் கவிதைகளைப் பற்றிய ஒரு கலந்துரையாடலும், கடைசியாக எழுதி கொண்டுவரப் பெற்றிருந்த கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவைகளின் மீதான விவாதங்களுடன் கூட்டம் முடிவுக்கு வந்தது.


கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து பேர் வந்திருந்த கூட்டத்தில் காலச்சுவடு ஆசிரியர் திரு. கண்ணன் கலந்து கொண்டு பங்களிப்பினைச் செய்தார்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு