அசோகமித்திரனின் 'ஒற்றன்' -சித்ரா ரமேஷ்

அசோக மித்திரனின் ஒற்றன்.
சித்ரா ரமேஷ்


United states என்று அழைக்கப்படும் அமெரிக்கா நட்டில் அயோவா பல்கலைக்கழகத்தில் 1974-74 ம் ண்டு ஏழு மாதங்கள் தங்கி அவர் பெற்ற அனுபவங்களை ஒரு புனைக்கதையாக்கித் தந்திருக்கிறார். முதல் அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரை முன்பின் தெரியாத இடங்களில் தங்குவது, கிடைத்த சைவ உணவு வகைகளைச் சாப்பிடுவது,
விசித்திரமானப் பழக்கவழக்கங்களைக் கொண்ட சக எழுத்தாளர்களோடு பழகுவது, அதிலும் சிலர் அவருடைய அறை நண்பர்களாக இருந்து நட்புக்கும் விரோதத்திற்கும் இடைப்பட்ட ஒரு விநோதச் சேர்க்கையாக இருந்ததைச் சொல்லி கேலியும் கிண்டலும் கலந்து தந்தாலும் அதில் அடியாழத்தில் ஒரு எரிச்சலும் மெல்லியதாக ஒரு சோகமும் தென்படுகிறது.


பாஸ்போர்ட்டில் காணப்படும் புகைப்படம் யாருக்குமே அவ்வளவாக திருப்தியைத் தராத புகைப்படமாகத்தான் அமைந்து விடுகிறது. அதிலும் சில வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணப்படுகின்ற இளமையை நினைத்து ஏக்கப்படவைக்கும். அசோகமித்திரனின் முதல் அத்தியாயம் இமிகிரேஷன் வரிசையையும் பாஸ்போர்ட் போட்டோவைப் பார்த்து வெட்கப்படும் பெண்ணை தன்னுடைய வழக்கமான நடையிலேயே விவரிக்கிறார்.


அடுத்த அத்தியாயத்தில் அவர் தங்கியிருந்த மே பிளவர் கட்டத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறார். இவருக்கு சில மணி நேரங்களே முன்னால் வந்திருக்கும் பெண் நெடுநாட்கள் பழகியது போல் பேப்பரை எடுப்பதும் போஸ்ட் பாக்ஸ் போய் அன்றைய நிகழ்ச்சி நிரலை எடுத்துப் பார்த்து இன்று மிஸ்ஸிஸிப்பி ஆற்றங்கரைக்குப் போவதாகக் கூறுகிறாள். இதிலிருந்து அவருடைய சோதனைக் காலம் ஆரம்பிக்கிறது. சீரியல் புட்டை சூடான பால் விட்டு அசப்பில் நம் ஊர் பொங்கல் கணக்காக சாப்பிடுவதும் அதிகம் குடித்து விட்டு வாந்தி எடுக்கும் தற்காலிக நண்பனுக்கு உதவுவதுமாக அன்றையப் பொழுது கழிகிறது, ஆனால் இதைப் போல் புது ஊரில் புது இ டங்களில் முக்கியமாக நம்முடைய வழக்கமான சாப்பாடு, பகிர்ந்து கொள்ள நண்பர்கள் இ ல்லாத முதல் நாள் ஏற்படும் விரக்தியும் சலிப்பும் தோன்றிவிடுகிறது. பிறகு அவருடைய அறை நண்பரின் பூண்டு சாப்பிடும் பழக்கத்தால் பூண்டு வாசனையோடு பால் காபி எதையும் சாப்பிடப் பிடிக்காமல் மெல்ல பூண்டு வாடைப் பழகும்போது அந்த அறை நண்பர் கிளம்பி விடுகிறார். உன்னை மறக்க மாட்டேன் என்று கட்டிப் பிடித்து விடை பெறும் போது கூட அந்த நண்பரின் மீது வீசும் பூண்டு வாசனை விடவில்லை.


தன் பிறகு இலாரியா என்ற இ த்தாலியப் பெண்ணோடு ஸ்நேகிதம். பல மொழிகள் அறிந்த அருமையானப் பெண். இவருக்கு இத்தாலிய சைவ உணவெல்லாம் தயாரித்துக் கொடுத்து தன்னுடைய துக்கங்களையெல்லாம் பகிர்ந்து கொள்கிறாள். னால் பெண்களின் துக்கங்கள் எப்போதுமே ண்களுக்கு புரிவதில்லை. காதலிக்கும் போது காதலன் ஏற்கெனவே கல்யாணம் னவனா இல்லையா என்ற யதார்த்த உண்மைகளைக் கூட அறியாமல் காதலித்திருக்கக் கூடாது என்று அறிவுரை கூறும் தியாகராஜனுக்கு எல்லா சராசரி ண்களைப் ப்போல் பெண்களின் காதல் உணர்வு பூர்வமானது அறிவால் யோசித்து காதலிக்க முடியாது என்பது புரியவில்லை. இலாரியாவும் அந்த செமெஸ்டர் முடியும் முன்பே ஊரை விட்டு கிளம்பி விடுகிறாள். அடுத்த அனுபவம் அந்த ஊர் குளிர் பற்றியது. குளிர் என்றால் வெறும் ஸ்வெட்டர் போட்டுச் சமாளிக்கும் குளிர் கிடையாது. உறைபனிக் குளிர்! இ துவும் அவருக்கு சென்னையில் பழகாத குளிர். கே மார்ட்டுக்குப் போய் காலுக்குப் பூட்ஸ் வாங்கியதிலிருந்து தொடங்குகிறது குளிரின் கதை.
கே மார்ட்டில் வாங்கிய காலணியால் ஏற்படும் உபாதைகள். கே மார்ட்டில் வாங்கிய எந்த பொருளையும் திருப்பித் தந்து பதிலுக்கு புதியதாகத் தருவார்கள் என்று வங்கிய டைப் ரைட்டரை திப்பித் தந்து வேறு ஒரு புது டைப் ரைட்டர் வாங்கிக் கொள்ளும் வென்டூரா , அவன் கொடுத்த டைப் ரைட்டரை மீண்டும் விற்பனைக்கு வைத்து விட்டுப் போகும் கடைக்காரப்பெண் என்று அமெரிக்காவில் வாடிக்கையாளர்களை எப்படி திருப்தி படுத்துகிறார்கள் என்பதை தனக்கேநையாண்டியுடன் ரசிக்க வைக்கிறார். இதேபாணியில் தான் தான் வாங்கிய ஷூவும் யாரோ வாங்கி அந்த அளவு சரியாக இல்லாமல் போக அதை பேப்பர் வைத்து அடைத்து சரி பண்ணி பிறகு அப்படியும் சரியாகாமல் கே மார்ட்டில் மாற்றிக் கொண்டு போன ஷ¥ என்பதை உணருகிறார். அந்த ஷ¥வுடனே அந்தக் குளிர் காலம் முழுவதும் காலம் தள்ள வேண்டிய நிர்ப்பந்தம். சென்னையில் அதுவும் மழை குளிர் போன்ற இயற்கைச் சூழலை அதிகம் காணாத சூழலில் வாழப் பழகியவருக்கு அந்தக் குளிரும், புது வகையான சாப்பாடுகளும் சைவ உணவையே அதிகம் அறியாத நாட்டில் வாழ நேரிடுவது அப்படி ஒன்றும் ரசிக்கத்தக்கதாக இருந்திருக்க முடியாது. அதுவும் மத்திய வர்க்கத்து எளிமையான பிராம்மண உணவை மட்டும் உண்டு பழகியவருக்கு அந்தச் சூழலில் எத்தகைய பசி கொடுமைக்கு ஆளாக்கியிருப்பார் என்பதை சொல்லாமல் கதை முழுக்கச் சொல்லும் திறமை! ஆனால் இவற்றை மீறி சுற்றிலும் பல்வேறு நாட்டிலிருந்து வந்த இலக்கியவாதிகள், இலக்கியத்துக்கும் மேலான வேறு பல அனுபவங்களைச் சந்திக்கும் வித்தியாசமான களங்கள்! அந்த கே மார்ட்டில் போய் மிகக் குறைந்த தேவைகளுக்காக மட்டும் உள்ளே நுழையும் போதெல்லாம் ஒரு முறையாவது அந்தக் கடை பணியாளன் தூக்கிக் கொண்டு வந்து உதவி செய்யும் அளவிற்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்று சைப் பட்டு அந்த சையும் அடௌ வென்டூரா என்ற பிரேசில் நாட்டுக் கவிஞனரால் பூர்த்தியாகிறது.


எத்தியோப்பியாவிலிருந்து வந்த அபே குபேக்னா எழுதிய ஒற்றன் நாவல். அதன்ஆங்கில மொழி பெயர்ப்புக்காக அலைந்து இறுதியில் அந்த நாவலின் தலைப்பை உலகப் புத்தகச்சந்தையில் இருந்த புத்தகப் பட்டியலில் பார்த்து மகிழ்கிறார். கணக்குப் பார்த்து செல்வழிக்கும் தியாகராஜனுக்கு அபே குபேகனாவின் செலவழிக்கும் திறனைப் பார்த்து பயமாக இருக்கிறது. கையில் ஆயிரம் டாலர்களுடன் யாராவது அலைவார்களா என்று அங்கலாய்க்கிறார்.
மலிவு விலைக் கடையில் வேண்டிய சாமான்களை விட வேண்டாத சாமான்களை அதிகம் வாங்கிக் குவிக்கும் அபே வாங்கிய எதையும் சமைத்துச் சாப்பிடாமல் பாக்கெட்டில் கிடைக்கும் சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு எதிஅயும் சுத்தப் படுத்தாமல் கஜூகோ என்று ஜப்பானியப் பெண்ணைப் பற்றிப் பேசி அவளை தன்க்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். ‘டகரஜான்’ என்று அழைக்கும் அந்த கஜுகோ அபேயைச் சந்திக்க விருப்பமில்லை என்று சொல்லிவிடுகிறாள். அவளுக்கும் அவளுடைய ஏழடி கறுப்பு அமெரிக்கக் காதலனுக்கும் இருக்கும் விசித்திர பிணைப்பைப் பற்றி ச்சரியப்படுகிறார். கஜுகோவிடம் சற்று நெருக்கமாகப் பழகுவதைப் பார்த்து அபே பொறாமைப்பட்டு தோளில் குத்தி விடுகிறான். பெண் ஒருத்தி எல்லோருடனும் நெருக்கமாகப் பழகுகிறாள். தன்னுடன் மட்டும் ஏன் பழக மாட்டேன் என்கிறாள் என்ற ஆண்களுக்கே உரிய ஆங்காரம்! கஜுகோ தான் நடத்திய கவிதைக் கருத்தரங்கின் வெற்றியக் கொண்டாடுவதற்கு விருந்து தருகிறாள். சந்தோஷத்தின் உச்சியில் எல்லோரையும் முத்தமிடுகிறாள். அன்று இரவு அயோவாசிடியில் ஏதாவது தேர்தல் நடந்திருந்தால் கஜுகோ தான் அமோக வெற்றி பெற்றிருப்பாள் என்று கிண்டலாக எழுதுகிறார். இதற்கு எந்த நாட்டில் இருந்தால் எத்தனை இலக்கியம் படித்தாலும், படைத்தாலும் இந்த விஷயத்தில் ஆண்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள்தான்!


பிராவோ என்ற பெரு தேசத்துக்காரன், தன் பெயரை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம் ஆனால் சிலி நாட்டுக்காரன் பெயராக மாட்டும் மாற்றக் கூடாது என்ற கோரிக்கையுடன் அறிமுகமாகிறான். உலக இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்தவன் இலக்கியத்துறை பேராசிரியன். அபேகுபேக்னாவிற்கு நேர் மாறாக எல்லா விஷயங்களிலும் நேர்த்தியாக திட்டமிட்டு செய்பவன். அவன் திட்டமிட்டு எழுதப் போகும் நாவலுக்கு செய்த சார்ட்டைப் பார்த்து பிரமிப்பு ஏற்படுகிறது. மேலிருந்து கீழ் வரை கட்டங்கள். ஒவ்வொரு கட்டங்களும் ஒவ்வொரு வண்ணத்தில்! அவை ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கானவை. கட்டங்களுக்குள் இருக்கும் குறிகள் அவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை விளக்கும் என்று பிராவோ செய்த திட்டத்தைப் பார்த்து பிரமிக்கிறார். கடைசியில் அந்த நாவல் மிக மோசமான நாவலாக உருவெடுக்கிறது. திட்டமிடல் என்பதெல்லாம் இலக்கியத்திற்கு ஒத்து வராது. அந்த மோசமான நாவலின் பெயர் ‘மகாஒற்றன்’.


இப்படி ஒரு எழுத்தாளர்கள் எழுதிய ஒற்றன், மகா ஒற்றன் என்ற ஒரு நாவல்களின் தலைப்பையே தன் நாவலுக்கும் தலைப்பாகத் தந்து இறுதியில் சாதாரண விடை பெறுதலோடு அந்தப் பத்துப் பதினைந்து பேரோடு இனிமேல் சந்திக்க முடியாத நண்பர்களைப் பிரிகிறார்.

*********

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு