மா. இளங்கண்ணன் அவர்களின் "பரிதியைக் கண்ட பனி" - ஒரு பார்வை. -எம்.கே.குமார்.

மா. இளங்கண்ணன் அவர்களின் "பரிதியைக் கண்ட பனி" - ஒரு பார்வை. -எம்.கே.குமார்.


கதையின் நாயகன்: அண்ணாமலைகதைக்களம்: தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்புபிற பாத்திரங்கள்: அண்ணாமலையின் மகன் திருமேனி, அவரது மனைவி, மகள் மற்றும் அம்பலவானர்.முடிவு: சுபம்திருப்பம்: முடிவுக்கு முன் வரும் பிணவண்டி குப்பை அள்ளும் அண்ணாமலை தன் மகன் திருமேனியை நன்கு படிக்க வைக்க நினைக்கிறார். வசதியில்லாத அவருடைய ஆசையை, மாலை நேரத்தில் அவர் வேலைபார்க்கும் தோட்டத்தின் உரிமையாளர் அம்பலவாணர் ஆதரித்து உதவ முன்வருகிறார். அவ்வாறு முன்வரும் நேரத்தில் விதி அண்ணாமலையின் மகன் திருமேனியை விலை பேசுகிறது. திருமேனிக்கு என்ன ஆனது, அண்ணாமலையின் கனவு பலிக்குமா என்பதயெல்லாம் பரிதியைக் கண்ட பனிபோல மாறிய அண்ணாமலையின் மனம் வழியாகச் சொல்லி கதை முடிகிறது.


கதை நிகழ்காலத்தில் சொல்லப்படுவதால் சைக்கிளில் செல்லும் அண்ணாமலையை நாமும் பின் தொடர்ந்து ஓடுவது போல சுவாரஸ்யமாய் இருகிறது நடை. திருமேனிக்கு நடந்தது என்ன என்பதைச் சொல்ல இடைவேளையையும் பிறகு இன்னும் உயிரோடுதான் இருக்கிறானா என்பதைச் சொல்ல, முடிவையும் தேர்ந்தெடுத்திருப்பது கதையின் ஓட்டத்திற்கு பலம்.
அவசரம் புரியாது கீழிறங்கும் மின்தூக்கியை பொறுக்காத அப்பா! கதையில் ஒரு பாவப்பட்ட தந்தையின் மனம் பரிதவிப்பதைச் சொல்வது சிறப்பாயிருக்கிறது.
அம்பலவாணர் நல்ல எஜமானர். இவரைப்போன்றோர் கதைகளில் மட்டுமே கிடைக்கும் அபாக்கியம் அதிகம் உண்டு.


தலைப்பு கவிதை போன்றது எனினும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.

@ @ @

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு