<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-19925613</id><updated>2011-08-15T00:16:56.696+08:00</updated><category term='இராமகண்ணபிரானின் &apos;நாடோடிகள்&apos; - எம்.கே.குமார்'/><category term='Review by M.K.Kumar'/><category term='review by Ramesh  Subramaniam'/><category term='Review by Ramesh Subramanian.'/><category term='&quot;Sandya&quot; - Review by Pon Sundararasu'/><title type='text'>வாசகர் வட்டம்</title><subtitle type='html'>நல்ல இலக்கியங்கள் மீதான வாசிப்பு அனுபவம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மானஸாஜென்</name><uri>http://www.blogger.com/profile/13032688617271305971</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_xMVCjgn17LE/SQaQNxjtcCI/AAAAAAAAAC0/qbjFW26RHUQ/S220/sanchan1_0.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>66</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-6440653125352447319</id><published>2009-08-07T11:15:00.000+08:00</published><updated>2009-08-07T11:22:03.379+08:00</updated><title type='text'>வாசகர்வட்டம் - 23-8-09 சிங்க்கை வலைப்பூபதிவாளர்களுடன் ஒரு சந்திப்பு</title><content type='html'>வாசகர் வட்டம்   இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்&lt;br /&gt; &lt;br /&gt;நாள்: 23.08.2009 (ஞாயிறு)&lt;br /&gt;&lt;br /&gt;நேரம்: மாலை 4.30மணிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இடம்: அங்மோ கியோ வட்டார பொது நூலகம் தக்காளி அறை (இரண்டாவது தளம்)   &lt;br /&gt;&lt;br /&gt; இருவர் சந்திக்கும்போது தான் காதல், காமம், குரோதம், என ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு இந்த பிரபஞ்சம் மெல்ல விரிவடைகிறது.   இவர்களும் சந்திக்கிறார்கள,; விரல் நுனிக்குள் சுருங்கிவிட்ட இணையப் பெருவெளியில் சந்திப்பதுடன் சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல், ஆன்மீகம், இலக்கியம், அரசியல், சமூகம், மொழி, பண்பாட்டுடன் நட்பின் கரங்களை உயர்த்திப் பிடிக்கும், இவர்களின் இணைய உலக பயண எழுத்தின் நுட்பத்துடன் சந்தித்த தளங்களை…..   சிங்கைவாழ் பதிவர்களான   கோவி.கண்ணன் அவர்கள் குழலி அவர்கள் அப்பாவி முருகேசன் அவர்கள் முகவை ராம் அவர்கள்   நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர்.     இவர்களுடன் 15-ற்கும் மேற்பட்ட வலைதள எழுத்தாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கலந்துரையாடலிலும் பங்கு பெறவிருக்கின்றனர்.   அனுமதி இலவசம்   அன்புடன் அழைப்பது வாசகர் வட்டம் நண்பர்கள்.   சிங்கை பதிவர்கள் பற்றி அறிந்துகொள்ள  விரும்புபவர்களுக்கு&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://www.singaporetamilblogers.blogspot.com/"&gt;www.singaporetamilblogers.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.sgtamilbloggers.com/"&gt;www.sgtamilbloggers.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilveli.com/"&gt;www.tamilveli.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-6440653125352447319?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/6440653125352447319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=6440653125352447319' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/6440653125352447319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/6440653125352447319'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2009/08/23-8-09.html' title='வாசகர்வட்டம் - 23-8-09 சிங்க்கை வலைப்பூபதிவாளர்களுடன் ஒரு சந்திப்பு'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-8512467800012054682</id><published>2009-05-12T18:16:00.002+08:00</published><updated>2009-05-12T18:22:18.506+08:00</updated><title type='text'>அ. முத்துலிங்கம் கதைகளைப் பற்றி பாண்டிதுரை</title><content type='html'>மீளா பிரமிப்பினூடே படிந்துவிட்ட இழப்புகள்.   பாண்டித்துரை   இதற்கு முன்பு அ.முத்துலிங்கத்தின் கட்டுரைதொகுப்புகளை வாசித்திருக்கிறேன். இவரின் சிறுகதை தொகுப்பு என்பது இதுவே முதல் முறை ஆனால் கட்டுரைகளின் ஈர்ப்பு ஏனோ சிறுகதைகளுக்குள் இல்லை.   அக்கா – 1964 (இந்த வருடம் சரியா என்பது தெரியவில்லை) திக்சக்கரம் - 1995 வம்ச விருத்தி – 1996 வடக்கு வீதி – 1998   வாசகர் வட்டத்திற்காக நான் வாசித்த மகாராஜாவின் ரயில் வண்டி – 2001  இவரது ஐந்தாவது சிறுகதை தொகுப்புஇ இதற்கு முன்னரும் பின்னரும் வெளிவந்த சிறுகதை தொகுப்புகளை நான் படித்ததில்லை. சிறுகதையை படிப்பதற்கு முன்பு தலைப்பு பற்றிய பிரக்ஞையில் மகாராஜாவின் வண்டி என்றால் எப்படியெல்லாம் இருக்கும் என்ற கற்பனையில் பிரமிப்புடன் மிதந்து கிடந்தேன். கதையை வாசிக்க துவங்கியபோதுஇ ஒருவித சலிப்பு ஏற்பட்டது. கதையை நகர்த்தல் ஒரு துப்பறியும் கதைசொல்லல் போன்ற பிம்பம் என்னுள் படிந்ததேஇ ஆனால் பிற கதைகளை வாசிக்க வாசிக்க மாற்றம் ஏற்பட்டது. ஒட்டு மொத்த கதைகளை படித்து முடிக்கும் போது பிரமிப்பு ஏற்படுதைவிடஇ ஒரு வறண்ட மனநிலையில் ஏற்படும் சலிப்பே தோன்றிமறைந்தது. எல்லாக்கதைகளின் முடிவிலும் ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு இழப்பு படிந்துபோய்கிடக்கிறது.   இருபது கதைகள் கொண்ட தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான அல்லது மனதிற்கு நெருக்கமான கதை என்றுஇ “தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில”; கதையை சொல்லலாம்   பொன்னி எனும் வேலைக்காரச்சிறுமி காணமல் போவதிலிருந்து துவங்கிஇ அதன் தொடர்சியாக நிச்சயிக்கப்பட்ட தில்லை அம்பலப் பிள்ளையார் கோவிலுக்கு சென்று அங்கு இந்த கதை முழுவதும் பிண்ணப்பட்ட இரண்டு சகோதர்களில் இளையவன் இறந்து போவதோடு முடிகிறது. இரண்டு சகோதர்களில் மூத்தவனின் பார்வையில் சொல்லப்பட்ட கதையில் இடம் பெரும் சில சொல்லாடல்களை இப்போது பார்ப்போம்.   ‘’அந்த மார்பிள்களை நான் அபகரிப்பதற்கு பலமுறை முயன்று தோல்வியுற்றிருந்தேன். எனக்கு எரிச்சலாக வந்தது‘’.   ‘’அங்கே கறுப்புப் புழுவுக்கு பாலாபிஷேகம் நடந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதும் ‘பழிகாரா இன்னும் நீ உடுக்கவில்லையா ? கார் வரப்போகிறது ஓடு ஓடு என்றாள் ‘’.   ‘’நான் எப்போழுதாவது கார் ஓட்டினால் அப்படி ஒரு தொப்பி அணிந்து சாய்ந்து நின்று பீடி குடிக்க வேண்டும் என்று உடனேயே தீர்மானம் எடுத்தேன் ‘’.   ‘’எனக்கும் பொன்னிக்கும் இடையில் தலையைக் கொடுத்து தம்பியும் எட்டிப்பார்த்தான். ஒப்பந்தத்தை மீறுகிறான். ஒரு குட்டு வைத்தேன். உலகம் நேரானது‘’.   ‘’வுட்போர்டில் நின்றபடி ஒரு கை உள்ளே பிடிக்க மறு கை வெளியே தொங்க சின்ன மாமா சிகை கலைய அங்கவஸ்திரம் மிதக்க ஒரு தேவதூதன்போல பறந்து வந்தார். இந்த தருணத்தில் எனக்கு சின்ன மாமாவிடம் இருந்த மதிப்பு பன்மடங்கு பெருகியது. ‘’.   ‘’கோயில் வந்தபோது எனக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அது ஒரு சிறிய கோவில். ஒரு குருக்களும் ஒரு மாடும் ஒரு சொறிநாயும் இரண்டு பிச்சைக்காரர்களும்தான் அதன் சொந்தக்காரர்கள் ‘’.   ‘’பெற்றோர் பார்க்காத சமயத்தில் அவள் கோவில் நாயிடம் விளையாட நெருங்கினாள். அது உர்ர் என்று அதிருப்தியாக உறுமியது. சிறிது பின்வாங்குவதும் அணுகுவதுமாக இருந்தாள் அவளுடைய கெண்டைக் கால்களை நாயினுடைய கூரிய பற்கள் சந்திக்கும் தருணத்துக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன் அந்த குட்டி சந்தோஷமும் அவளுடைய தகப்பன் திடீரென்று நாயை விரட்டியதால் கெட்டுப்போனது‘’.   ‘’முழங்கால் மூட்டில் ஏற்பட்ட பாவாடை நீக்கலுக்குள் நான் பார்த்துவிடாமல் இருக்க தன்னுடைய பின்பக்கம் என்னுடைய முகத்துக்கு நேராக வரும்படி பிரயத்தனமாகத் திருப்பி வைத்தாள் ‘’.     ‘’இன்னும் கரியாக ஒரு நிமிடத்தில் இவன் இறந்துவிடுவான் என்பது தெரியாமல் நான் அந்த மார்பிள்களை வாங்கி பத்திரப்படுத்தினேன் ‘’.   ‘’அண்ணா நீ நீந்துவாயா? ஏன்றான் தீடிரென்று. உலகத்தில் உள்ள சகல கலைகளிலும் நான் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று அவன் நினைத்தான் ‘’.   ‘’எனக்கு கோபம் வந்தது. இவன் அளவுக்கு அதிகமாகக் குளத்தை அனுபவிப்தை நான் விரும்பவில்லை. இவன் செய்வதிலும் பார்க்க கூடுதலான ஒரு யுக்தியை நான் செய்துகொண்டே இருக்கவேண்டும்.   ‘’அப்போது என் கண்முன்னே கணுக்கால் வெள்ளத்தில் அவன் சரிந்துகொண்டிருந்தான். கனவிலே நடப்பதுபோல ஈர்க்கப்பட்டு அதையே பார்த்தேன். அவன் அப்படித் தத்தளித்தபோது எட்டிக் கைகளை கொடுத்திருந்தாலோ சத்தம் எழுப்பியிருந்தாலோ போதும். நான் செய்யவில்லை விறைத்துப்போய் ஒரு நிமிடம் வரைக்கும் அசையாமல் அங்கே தோன்றிய நீர்ச்சுழலைப் பார்த்தவாறு நின்றேன். ஒரு மந்திரம்போல அவன் சிரித்தபடி கைகொட்டி எழும்புவான் என்ற நினைப்பு எனக்குள் இருந்தது‘’.   ‘’அதற்கு பிறகுதான் ஓவென்று கத்திக்கொண்டு அம்மாவிடம் ஓடியதாக ஞாபகம் ‘’.   ‘’தூங்குவதுபோலத் தம்பியை பக்கவாட்டில் இரண்டு ககைளிலும் ஏந்தியபடி அவர்நடந்து வந்து நடுஅறையில் நடுக்கட்டிலில் கிடத்தினார். திடீரென்று அந்த அறையில் இருந்த காற்றை யாரோ அகற்றிவட்டார்கள். நான் வெளியே ஓடிவந்து மூச்சுவிட்டேன் ‘’.     இப்போது நான் சொன்னவையெல்லாம் இந்த கதையில் வரும் இந்த கதையை சொல்லிச்செல்லும் மூத்த சிறுவனின் எண்ணங்கள் சார்ந்தவை . இவன் எந்த குணாதிசயங்களை உள்ளடக்கியவன் என்ற அனுமானத்திற்கு வாசகனை இட்டுச் செல்ல உதவுபவை     இரண்டு சகோதர்களுக்கு இடையேயான பிணைப்பை கதை முழுமைக்கும் காணாலாம். இயல்பாக இரு சகோதர்கள் இருக்கும் வீடுகளில் அவர்களுக்குள் ஏற்படும் போட்டிஇ தனக்கென்று பாதுகாத்து வரும் பொக்கிஷங்கள்இ பிரச்சினைகளின் தோற்றுவாயை மறைத்தல் என்று சிறுபிராயத்தை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். மூத்த சிறுவன் நிறைய இடங்களில் அவனின் எண்ணங்கள் சாரந்து பிரமிக்கவைக்கிறான். கதைமுழுமைக்கும் மூத்த சிறுவனுக்குள் ஒரு வித குருரத்தன்மை நிரம்பியிருக்கிறது. இந்த குருரம் இளம்பிராயத்தில் பலருக்குள் ஏற்படக்கூடிய ஒன்றுதான் பின்னொருநாள் நினைக்கும்போதுஇ பலரும் இப்படியெல்லாமா இருந்திருக்கிறோம் என்றுஇ நம்மீதான கோபத்தை பரிதாபத்தை தோற்றுவிக்கும.; சிலருக்குள் இத்தகைய குருரங்கள் வாழ்க்கை முழுமைக்கும் நிரம்பிவிடுகிறது.   ‘நாளை'’ சிறுகதை ஒரு கிராம அழிவிலிருந்து தப்பித்து ஒருவேளை உணவுக்காய் நீண்ட தொலைவு அலைந்து அகதிமுகாமில் தங்கவைக்கப்படும் இரு சிறுவர்களை பற்றிய கதை என்றாலும் சொல்லப்பட்ட சில பக்கங்களுக்குள் இப்படித்தான் ஒரு முகாம் ஈழத்தில் இருக்ககூடும் என்ற ஒரு முழுமையான முகாமினை கற்பனை செய்யமுடிகிறது. இதில் வரக்கூடிய மூத்த சிறுவனும் அவனது எண்ணங்களால் பிரமிக்க வைக்கிறான்   ‘’மகாராஜாவின் இரயில் வண்டி’’ என்ற முதல் சிறுகதை பதின்ம வயதில் ஒருவனுக்குள் ஏற்படும் அதிர்வுகளும் மென்மையான காதலையும் பலவருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எல்லோருக்குள்ளும் இப்படி ஒன்றை அசைபோட வைக்கிறது.   ‘’ஐந்தாவது கதிரை’’ சிறுகதை கணவன் மனைவிக்குள் நடைபெரும் மனம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை பேசுகிறது. கலாச்சாரங்களுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட ஒருவள் தனது மார்பகங்களில் பச்சை குத்திக்கொண்டதோடு முடிகிறது. மார்பகங்களில் பச்சை குத்தியதை படிக்கும் போது எனக்குள் படித்தபோது ஒரு வித அதிர்வு இருந்தது. ஆனால் பிறகு எனக்குள் சமாதானம் செய்து கொண்டேன் ஒரு பெண் இன்னொரு பெண்ணிற்கு பச்சை குத்தியிருக்கலாம் என்று.   ‘’கடன்’’  சிறுகதை சிங்கப்பூரின் நிரந்தவாசிகளுக்கு பொருந்திப்போகக்கூடிய ஒன்று. முதுமையில் தனித்தலையும் ஒருவரின் ஏக்கங்கள் மற்றும் வாழ்வின் அன்றாட வாழ்க்கை சிக்கல்களோடு அந்த முதியவரை சாகடிப்பதுடன் முடிகிறது.       கொம்புளான, தொடக்கம் , அம்மாவின் பாவாடை, பட்டம் ,  ராகுகாலம் என்று இன்னும் சில கதைகளை பற்றி எழுத நினைத்திருந்தேன்.  குறிப்பு தொடக்கம் சிறுகதை பற்றி அங்கு விவாதிக்கப்பட்டது. நண்பர் பாலுமணிமாறனுக்கு அத்தகைய அனுபவம் ஒன்று ஏற்பட்டது. அதனை உங்களோடு பகிர்ந்துகொள்வார்.&lt;br /&gt;&lt;a href="http://www.மீளா/"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-8512467800012054682?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/8512467800012054682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=8512467800012054682' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/8512467800012054682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/8512467800012054682'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2009/05/blog-post.html' title='அ. முத்துலிங்கம் கதைகளைப் பற்றி பாண்டிதுரை'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-2378758743939221293</id><published>2009-02-28T20:44:00.000+08:00</published><updated>2009-02-28T20:49:21.597+08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_1pBi_iLwC-0/Sakys1ckyZI/AAAAAAAAAAM/2RCPU6dmroA/s1600-h/anangam_..JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5307829381675403666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 299px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_1pBi_iLwC-0/Sakys1ckyZI/AAAAAAAAAAM/2RCPU6dmroA/s400/anangam_..JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-2378758743939221293?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/2378758743939221293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=2378758743939221293' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/2378758743939221293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/2378758743939221293'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2009/02/blog-post.html' title=''/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_1pBi_iLwC-0/Sakys1ckyZI/AAAAAAAAAAM/2RCPU6dmroA/s72-c/anangam_..JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-4006901974550930655</id><published>2008-10-02T21:51:00.007+08:00</published><updated>2008-10-02T22:39:24.333+08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ffcccc;"&gt;நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffcc00;"&gt;நவீன வாழ்வினில் சகமனிதனுக்கான ஈரம் வற்றிப்போய்க் கொண்டிருப்பதைக்கூட பொருட்படுத்த தவறுகிறோம். (மனிதனாய் வாழமுடியாத கணங்களின் குற்றபோதம் முள்ளாய் தொடர்ந்து உறுத்த எப்படி வாழ்வது?)&lt;br /&gt;&lt;br /&gt;@ @ @ @   &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி கதைகளின் வழியாக நமக்குள் திறக்கும் ரகசியக் கதவுகளுக்கான சாவியை தின வாழ்வின் அவசரத்தில் தொலைத்து விட்டதில், முடிவற்ற பாலையின் நெடும் பயணமாய் இவ் வாழ்க்கை...&lt;br /&gt;&lt;br /&gt;@ @ @ @&lt;br /&gt;&lt;br /&gt;சரித்திரம் அதை வாழ்ந்து பார்த்தவனின் வழியே பல திறப்புகளைக் கொண்டதாய் இருக்கிறது,&lt;br /&gt;பாட புத்தகங்களின் வழியே அரசர்களின் சவக்கிடங்குகள் கொண்ட மயானம் தெரிகையில், சாமான்யர்களின் இதயத்திற்குள்ளிருந்து அபூர்வ மந்திரக் குளிகைகளும், மூளையின் புராதான மடிப்புகளுக்கிடையில் மறந்த பொக்கீஷங்கள் சிதறிக் கிடக்கின்றன. சில வழிகள் பாட்டிக் கதைகளுக்கான கதவுகளின் பாதையாகவும், சில நம்மிதயத்தின் கசிந்திருக்கும் காயங்களுக்கான குளிகைகள் தயாரிக்கும் மூலிகை காடுகளுக்கான பாதைகளுக்கானதாகவும் விகசிக்கின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;@ @ @ @&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையின் பலநிலைகளில் கடந்த காலத்தை வாழ்ந்து அனுபவித்த மனிதர்கள், தங்களின் சிங்கப்பூரை விவரிக்கும் நிகழ்ச்சியான, &lt;span style="color:#33ccff;"&gt;"&lt;strong&gt;&lt;span style="color:#66ff99;"&gt;நேற்றிருந்தோம்"&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;span style="color:#ffcc66;"&gt;&lt;span class=""&gt;நிகழ்ச்சியின் &lt;/span&gt;அக்டோபர் மாதத்திய கூட்டத்தில்&lt;/span&gt; &lt;strong&gt;திரு.பொன்.சுந்தரராசு&lt;/strong&gt;&lt;/span&gt; தம் நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்வார்,&lt;br /&gt;சிறந்த கல்வியாளரும், இலக்கியவாதியுமான அவரது உலகத்தையும், அவரது சிங்கப்பூரையும், நாம் இதன் வழியே அறிந்து கொண்டு நமக்கான வரலற்றையும், நம்முடைய சிங்கப்பூரையும் உருவாக்கிக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;@ @ @ @ &lt;a href="http://2.bp.blogspot.com/_xMVCjgn17LE/SOTZfFPnzrI/AAAAAAAAABA/Vv2teUAThcs/s1600-h/1210083.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5252562193427713714" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 425px; CURSOR: hand; HEIGHT: 331px" height="290" alt="" src="http://2.bp.blogspot.com/_xMVCjgn17LE/SOTZfFPnzrI/AAAAAAAAABA/Vv2teUAThcs/s400/1210083.jpg" width="675" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-4006901974550930655?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/4006901974550930655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=4006901974550930655' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/4006901974550930655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/4006901974550930655'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2008/10/blog-post.html' title=''/><author><name>மானஸாஜென்</name><uri>http://www.blogger.com/profile/13032688617271305971</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_xMVCjgn17LE/SQaQNxjtcCI/AAAAAAAAAC0/qbjFW26RHUQ/S220/sanchan1_0.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xMVCjgn17LE/SOTZfFPnzrI/AAAAAAAAABA/Vv2teUAThcs/s72-c/1210083.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-2463957618401231556</id><published>2008-05-06T16:49:00.002+08:00</published><updated>2008-05-06T17:04:01.986+08:00</updated><title type='text'>'நேற்றிருந்தோம்' - "நினைவு நதியில் அள்ளிய நுரைப்பூக்கள்"</title><content type='html'>'நேற்றிருந்தோம்'       -     "நினைவு நதியில் அள்ளிய நுரைப்பூக்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;          அங்மோ கியோ தேசிய நூலகத்தின் முதல் மாடியில் இருக்கும் தக்காளி அறை. வாசகர் வட்டம் நண்பர்கள் குழு தாங்கள் வாழ்ந்த 2008 ஆம் ஆண்டு காலகட்டத்தை விடுத்து காலயந்திரத்தில் கிட்டத்தட்ட ஐம்பத்தியைந்து ஆண்டுகள்  பின்னோக்கிச் சென்று அந்த நினைவு நதியில் பயணித்து, குதூகலித்து நதியில் மிதந்து வந்த பல பூக்களை வாரியெடுத்தோம். அன்று காலயந்திரமாக செயல்பட்டவர் சிங்கை வானொலியின் ஒலி 96.8 மூத்ததயாரிப்பாளராகப் பணி  புரியும்  திரு செ ப பன்னீர்செல்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;               மாதம் ஒரு முறை நண்பர்கள் ஒன்று கூடி வாசகர் வட்டத்தில் நல்ல இலக்கியம் பற்றிய     பகிர்தல்  நடைபெறும்.  இந்த இலக்கியப் பகிர்தலின் ஒரு அங்கமாக 'நேற்றிருந்தோம்' என்ற நிகழ்வு. 'நேற்றிருந்தோம்' முதல் முறை நடைபெற்ற போது மூத்த எழுத்தாளர் திரு ராம கண்ணபிரான் சிராங்கூன் சாலை ஐம்பது வருடங்களுக்கு முன்னால் எப்படியிருந்தது என்னென்ன கடைகள் எங்கேயிருந்தன என்பதைப் பற்றிய விரிவாக விவரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;       இரண்டாம் முறையாக 'நேற்றிருந்தோம்' நிகழ்ச்சியில் பேசியவர்                         திரு செ ப பன்னீர்செல்வம். அவர் வசித்த புக்கிட் பாஞ்சாங் பகுதியைப் பற்றி உற்சாகத் துள்ளலோடு விவரித்த போது காலச்சக்கரத்தில் நம்முடன் அவர் பயணித்தது மட்டுமல்லாமால் அமிர்தம் குடித்து என்றும் இளமையோடு இருக்கும் தேவர்களையும் சந்தித்து வந்தாரோ என்று நினைக்கத் தோன்றியது.&lt;br /&gt; ஒரு பேருந்து பயணத்தின் மூலம் தன் நினைவுப் பயணத்தைத் தொடங்கினார். பேருந்து எண் 170 - குவீன்ஸ்ரீட்டிலிருந்து ஜோகூர் பாரு பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழிப்பாதை. இன்றும் அதே தட எண் 170 அதே பகுதிகளுக்குச் செல்கிறது. வழித்தடங்கள் மாறியிருக்கலாம். ஆனால் அவர் நினைவுத்தடங்களில் இன்றும் மறையாமல் அதில் ஏறி சிங்கப்பூரின் முக்கிய நகரப் பகுதிகளுக்குச் சென்றதையும் பின்னர் ஜோகூர் வரை கடவுச்சீட்டு அனுமதிச்சீட்டு என்ற தடைகள் எதுவுமில்லால் சென்று வந்ததையும் நினைவு கூர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;             புக்கிட் பாஞ்சாங் வட்டாரம் புக்கித்தீமா சாலையில் பத்தாவது மைலில் அமைந்திருந்தது. மேலும் ஒன்பதாவது மைல், பத்தாவது மைல், பத்தரை மைல் என்றே குறிப்பிடப்பட்டு வந்தன. அந்த சாலை நீண்டு கிராஞ்சி உட்லண்ட்ஸ் பகுதிகளையும் உள்ளடக்கி அந்த வழியெங்கும் சிறு வசிப்பிடங்கள் இருந்து வந்தன என்று குறிப்பிட்டார். இன்று அவை பலமாடிக்கட்டடங்கள் நிறைந்த வட்டாரங்களாகவும், பெரு விரைவுச் சாலைகளும் எம்ஆர்டி பெருவிரைவு ரயில் பாதைகளும் அமையப் பெற்ற பெரு நகரத்தின் விரிவாகவும் இன்று காணப்பட்டாலும் அன்று அவை இருந்த அந்த இயற்கைச் சூழலையும் எளிய மக்களையும் கொண்ட அற்புதமான ஒரு வாழ்க்கையைப்பற்றி குறிப்பிட்ட போது விருப்பமான விளையாட்டுப் பொருளை  தொலைத்து விட்டுத் தேடும் ஒரு சிறுவனின் மனத்தோடு அவர் விவரித்தக் காட்சிகள் நம்மையும் அந்த உலகத்திற்கே அழைத்துச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;                 50 களில் தொடக்கத்தில் அவர் விவரித்த அந்த வாழ்க்கை கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் ஒரு சிறு நகரத்தின் வாழ்க்கையை ஒத்திருந்தது. சுற்றிலும் நிறைய இந்தியக் குடும்பங்கள். வஉசி தமிழ்ப்பள்ளி, நாகம்மை தமிழ்ப்பள்ளி போன்ற தமிழ் வழிக் கல்வியைக் கற்பித்த தமிழ்ப்பள்ளிகள், செ ப பன்னீர் செல்வம் படித்த புக்கிட் பாங்சாங் அரசாங்கப் பள்ளி, அங்கேயிருந்த சாப்பாட்டுக் கடைகள், தோசை சுட்டு விற்ற பெண்மணி, சினிமா தியேட்டர், அங்கு பார்த்த கப்பலோட்டியத் தமிழன் திரைப்படம், மளிகைக்கடைகள், நாட்டு மருந்துக் கடை போன்ற பலவற்றையும் மறக்காமல் குறிப்பிட்டார்.     விலாசம் இல்லாமல் வாழ்ந்த ஏழைத் தொழிலாளிகளுக்கு தன் கடை முகவரியைக் கொடுத்து அவர்களுக்கு இந்தியாவிலிருந்து வரும் கடிதங்களை வைத்திருந்து அவர்கள் கடைக்கு வரும் போது அதைக் கொடுத்து உதவிய மளிகைக்கடைக்காரர், திராவிடச் சிந்தனையில் தீவிர ஈடுபாடு கொண்ட டீக்கடைக்காரர் களைப்பாகச் செல்லும்     பள்ளிப்பிள்ளைகளைக் கூப்பிட்டு இலவசமாக டீ கொடுத்து போ போய் நன்றாகப் படி என்று சொல்லும் மனிதநேயமிக்க செயல் ஆத்திகவாதிகள் வழிபடும் கடவுளிடம் மட்டுமே காணக் கூடிய 'அன்பே சிவம்' கோட்பாடு!! யார் எவர் என்று தெரியாமலேயே ஒருவருக்கொருவர் உதவி செய்வதும், ஆபத்து என்றால் கூடி நின்று தோள் கொடுப்பதும் வார்த்தைகளால் சொல்லி உணரப்படாத கவிதைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                  தனி வீடு, சுற்றிலும் பழமரங்கள் நிறைந்த தோட்டம் இன்று நடுத்தர வர்க்கத்து சிங்கப்பூரர்களுக்கு எட்ட முடியாத ஒரு கனவாகவே இருக்கிறது. ஆனால் அன்று அந்த ஏழை எளிய மக்களுக்கு கிடைத்த ஒரு இனிமையான வாழ்க்கைச்சூழல். சர்க்கஸ் கூடாரத்தை விட்டு இவர் வசித்து வந்த வீட்டுத் தோட்டத்தில் இருந்த பழமரத்தைத் தேடி வந்து  பழங்களைப் பறித்துச் சாப்பிட்ட யானை! காலையில் எழுந்து தோட்டத்திற்குப் போனால் தோட்டத்தில் ஒரு யானை இருந்தால் எத்தனை பிரமிப்பாக ஒரு சிறுவனுக்கு இருந்திருக்கக்கூடும்? அந்த யானை எப்படி அந்த குறுகலானப் பாலத்தைக் கடந்து தன் வீட்டிற்குள் வந்திருக்க முடியும் என்று இன்றும் விளங்காத மர்மாகவே இருக்கிறது. பழமரங்களை கூட்டமாகப் பற்ந்து  வந்து வேட்டையாடிய பழந்தின்னி வௌவால்கள் இவையெல்லாம் இன்று விலங்கியல் தோட்டத்தில் மட்டுமே  காணமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;            பக்கத்தில் இருந்த சமூக மன்றத்தில் இலவச திரைப்படக்காட்சியைக் காண பாய் தலையணை சாப்பாட்டு மூட்டையோடு கூட்டம் கூட்டமாக வந்து திரைப்படம் பார்த்து விட்டுச் செல்லும் மக்கள். பள்ளித் திடலில் நடைபெறும் கால்பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளைக் காண திரளும் மக்கள். உடன் வரும் தின் பண்டங்கள், ஐஸ், பட்டாணி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை இப்படி பல அடுக்குகளாக அவர் நினைவுகள் விரிந்து கொண்டே போனது.&lt;br /&gt; நேரம் கருதி அவர் இரண்டரை மணி நேரம் கழித்து தன் பேச்சை முடித்துக் கொண்டார். பின்னர் மேலும் வானொலியில் பணியாற்றத் தொடங்கியதும் தான் பெற்ற அனுபவங்களையும். புது தில்லியில் பிரபல எழுத்தாளர் தி ஜானகிராமனுடன் பழகியதும் தன் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக நினைவு கூர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;           "வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ? "காலமென்றே ஒரு  நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ வீண்படு பொய்யிலே- நித்தம் விதி தொடர்ந்திடுமோ?காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதெல்லாம் உறுதியில்லை காண்பது சக்தியாம்இந்தக் காட்சி நித்தியமாம்"  என்ற பாரதி பாடலை நினைவுக் கூர்ந்து இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்ரா ரமேஷ்&lt;br /&gt;&lt;a href="mailto:chitra.kjramesh@gmail.com"&gt;chitra.kjramesh@gmail.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-2463957618401231556?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/2463957618401231556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=2463957618401231556' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/2463957618401231556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/2463957618401231556'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2008/05/blog-post.html' title='&apos;நேற்றிருந்தோம்&apos; - &quot;நினைவு நதியில் அள்ளிய நுரைப்பூக்கள்&quot;'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-4400636228732081592</id><published>2008-03-26T15:30:00.002+08:00</published><updated>2008-03-26T15:39:47.722+08:00</updated><title type='text'>வண்ணதாசன் சிறுகதைகள்’ - என் வாசிப்பனுபவம்</title><content type='html'>‘வண்ணதாசன் சிறுகதைகள்’ - என் வாசிப்பனுபவம்இராம.வயிரவன்,                       Sunday 10-Feb-2008------------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் படிக்கத்தூண்டிய வரிகள்: ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ சிறுகதைத் தொகுப்பில் என நினைக்கிறேன் - ‘இந்த பலூன் விக்கிற முருகேசனை விட நான் என்ன வாழ்ந்து கிழித்துவிட்டேன்’ - இந்த முன்னுரை வரிகள்தான் என்னை இவரின் கதைகளைப் படிக்கத்தூண்டிய வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ரமேஷின் ‘வண்ணதாசன் சிறுகதைகள்’ பற்றிய குறிப்புக்களுடன், பாண்டியனின் இந்த வாசகர்வட்டத்திற்கான மின்மடல் அழைப்பைப் பார்த்தவுடனேயே நான் முடிவு செய்துவிட்டேன் இதில் கலந்துகொண்டு என்வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று. காரணம் வண்ணதாசன் கதைகள் எனக்குள் ஏற்படுத்திய வாசிப்பனுபவம்தான். வண்ணதாசன் கதைகளைத் தேர்வு செய்தவர்களுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பலமுறை முயற்சித்தும் இவரின் நூல்கள் கிடைக்கவில்லை, அதனால் மீண்டும் வாசிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை ஆனாலும் முன்பு படித்தபோது ஏற்பட்ட  நினைவடுக்குகளிலிருந்து சில குறிப்புக்கள் மற்றும் வாசிப்பனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அதனால் குறிப்புக்களில் தவறுகள் இருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதைக்கரு: கதைக்கருவாக வாழ்வியல் முரண்களையும், மெல்லிய உணர்வுகளையும் ஆசிரியர் அழகான கதைகளாக்கி விடுகிறார். ‘ஒரு நிலைக்கண்ணாடி..சில இடவல மாற்றங்கள்’ என்கிற கதையில் அக்காள் தங்கை இருவரின் முரண்பட்ட கேரக்டரை ஒப்பிடுகிறார். ‘ஒருமரம் ..சில மரங்கொத்திகள்’ என்கிற கதையில் ஒரு கிழவி தான் வளர்த்த மாமரத்தின் மேல் கொண்டுள்ள பற்று அறிந்து அவளுக்குப் பிறகு அனுமதிக்கப் பட்டும் முடிவை மாற்றிக்கொண்டு மரத்தை வெட்டாமல் விட்டுபோகிறது கதையாகிறது.&lt;br /&gt;கதை சொல்லுகிற உத்தி:இவர் கதைகளில் இவரின் கதை சொல்லுகிற உத்தி எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக இவரின் கதைகளைப் பலமுறை படித்திருக்கிறேன். அப்படிப்படித்த கதைகளில் ஒன்று ‘ஒட்டுதல்’ என்கிற சிறுகதை.&lt;br /&gt;ஒட்டுதல்கணவனைப் பறிகொடுத்த பெண் ஒன்னரை மாதத்தில் மீண்டும் வேலைக்குச் செல்லுகிறபோது நடக்கிற நிகழ்வு கதையாகி விடுகிறது. துக்கம் வெல்ல ‘ஒட்டுதல்’ தேவை என்பது கரு.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகளும் நிகழ்வுகளுமாக கதை சொல்லப்படுகிறது. நினைவுகளையும் நிகழ்வுகளையும் பிணைக்கிற இடங்கள் அருமை. சில விசயங்கள் நேரடியாகச் சொல்லாமல் சில குறிப்புக்களிலிருந்து வாசகர் புரிந்து கொள்ள வேண்டும். &lt;br /&gt;ஆரம்பமும் முடிவும்: இவர் கதைகளில் கதையின் ஆரம்பமும் முடிவும் அழகாக, பொருத்தமாக அமைந்திருக்கின்றன.‘ஒருமரம் ..சில மரங்கொத்திகள்’ - என்கிற கதை  ‘எந்த மரத்தை வெட்டப்போகிறோமோ அந்த மரத்தின் நிழலிலேயே கோடறிகள், அறிவாள் எல்லாவற்றையும் வைக்கவேண்டியிருந்தது..’ என்று ஆரம்பிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஒரு நிலைக்கண்ணாடி..சில இடவல மாற்றங்கள்’ என்கிற கதையில் ஆரம்பம் - ‘உங்க வீட்டு மச்சிலே ஒரு நிலைக்கண்ணாடி உண்டே அது இன்னமும் இருக்கா அக்கா?’ என்று தங்கை அக்காளிடம் கேட்பதாக ஆரம்பிக்கும். முடிவு ‘..அப்படியெல்லாம் நாங்களும் உட்கார்ந்து பேசினோம் என்றால் நாங்களும் இடையில் எங்காவது சிரிப்போம் இல்லையா? அந்த சிரிப்பு எப்படி இருக்கும்? இன்னும் இருக்கிறதா என்று மீனா கேட்டாளே எங்க வீட்டு நிலைக்கண்ணாடி - அதில் பார்த்தால் ஒரு வேளை தெரியுமோ?’ என்று கதை முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நடை: திகட்டாத பொருத்தமான நடை கதைகளுக்கு அழகூட்டுகின்றன.&lt;br /&gt;‘விதை பரவுதல்’ - ‘திறந்த கதவின் மூலமாக உள்ளே ஓடி வரப்போவது போல தரையிலிருந்து தெறிக்கிற மழைத்துளி முட்டியது’ என்ற வரிகள் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஒருமரம் ..சில மரங்கொத்திகள்’ - கதையில் - ‘நசநசவென்று மாமரத்தின் வாசம் காற்றில் ஒரு எட்டு கூட எடுத்து வைத்திருக்காது. அதற்குள்..’ என்கிற வரிகள்- ‘விளக்கை உரசினால் பூதம் வருவது மாதிரி மாவிலையைக் கசக்கினால் ஆயா வருமோ,..’ என்கிற வரிகள்‘ஒட்டுதல்’ - கதையில்- ‘ஒருவரை ஒருவர் நகர்த்திக் கொண்டது போல எல்லோரும் வாசலுக்கு வந்தார்கள்’ என்கிற வரிகள்.- ‘கைகளைக் கூப்பினாளே தவிரக் கும்பிடுகிற மனநிலை இல்லை..’ என்கிற வரிகள்- ‘கண்ணாடி பார்த்தாள். பொட்டில்லா நெற்றி மட்டும் தெரிந்தது.’ என்கிற வரிகள்&lt;br /&gt;இவையெல்லாம் இவர் கதைகளைப் படித்தபோது பிடித்துப்போய் மனதில் தங்கிப்போன வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் யோசனை: வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் இவரின் கதைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு தங்களின் எழுத்தை மேலும் செம்மைப் படுத்திக் கொள்ளலாம் என்பது என் யோசனை.&lt;br /&gt;&lt;br /&gt;-சுபம்-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-4400636228732081592?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/4400636228732081592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=4400636228732081592' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/4400636228732081592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/4400636228732081592'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2008/03/blog-post_26.html' title='வண்ணதாசன் சிறுகதைகள்’ - என் வாசிப்பனுபவம்'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-5461292407582086021</id><published>2008-03-20T09:33:00.002+08:00</published><updated>2008-03-20T09:37:01.331+08:00</updated><title type='text'>இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் -   வண்ணதாசனுக்கு நன்றி!</title><content type='html'>இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் -  &lt;br /&gt;வண்ணதாசனுக்கு நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியின் மையப்பகுதியில் செருப்பு தைப்பவரைத்தேடி அலைந்து ஏழு எட்டு மணி அளவில் பிரதான சாலை ஒன்றில் ஒருவரைத் தரிசித்தேன். நீர்த்தேங்கியிருந்த பள்ளமான சாலைப்பகுதியைத் தாண்டி அவர் அமர்ந்திருந்தார். நான் சென்ற நேரம் அன்றைய அவரது பொழுதின் முடிவுக்காலமாதலால் எல்லா உபகரணங்களையும் மூட்டை கட்டிவிட்டி வெளியிலிருந்து பார்க்க நன்கு இறுக்கி நையப்பட்ட ஒரு குப்பைத்தொட்டியைப்போன்ற தோரணையுள்ள ஒரு இடமாக்கிவிட்டு எழுந்து நகரவிருந்தார். நான் வந்து அவரிடம் சேர்ந்தபொழுது அவர் என்னை வெகு எளிதாய் உதாசீனப்படுத்தியிருக்கக்கூடும். ஏனெனில் நான் வேண்டியது அத்தனை மூட்டையையும் பிரித்து எடுத்து செய்யத்தகுந்த வருமானம் தரக்கூடிய வேலையில்லை. ஆனாலும் சாலைத்தூசிகள் சூழ்ந்த உலகில் வண்டிச்சத்தங்களும் இரைச்சலும் முண்டியடிக்கும் வெளிச்சத்துக்கு ஏமாந்த அவ்வேளையில் ஒட்டுமொத்த மூட்டைகளையும் பிரித்து குத்தூசியையும் நூலையில் எடுத்து அவர் அவ்வேலையைச்செய்தார். இரண்டு விஷயங்கள் என்னை வசீகரித்தன. அவ்வேலையைச் செய்ய அவர் காட்டிய முனைப்பும் அக்கறையும் ஒன்று. மற்றொன்று எங்களிடையே சிறு மின்னலைப்போல தோன்றி மறைந்த நாங்கள் இருவரும் திருப்தியடைந்த ஒரு தருணம்! பெரும் மின்னல் ஒன்று வெட்டிச்சென்றபின் அதைச் சார்ந்து ஒரு வெளிச்சம் பரவிக்கிடந்து மறையுமே அதைப்போல அது இன்றுவரை மறைந்தும் மறையாததாய் இருக்கிறது. பல்வேறு பிரிவுத்துவம் வாய்ந்த இவ்வாழ்வில் எதையும் சாராது வரும் பூரணத்துவம் மிகுந்த அந்தத் திருப்தியானது எத்தகைய புனைவும் எளிதில் தராத ஒன்று. வண்ணதாசன் கதைகளில் அம்மின்னலும் அதன் தாக்கமும் எனக்கு நிறைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்புகளில் 'நடுகை' (பாதிமட்டுமே) மற்றும் 'கிருஷ்ணன் வைத்த வீடு' ஆகிய இரண்டை மட்டும் வாசிக்கும் பாக்கியம் இக்காலத்தில் எனக்கு கிட்டியிருந்தது.&lt;br /&gt;தனது திருமணத்திற்கு மேளம் வாசித்தவரைப் பற்றிய ஒரு கதை, அமரர் ஊர்தியைப் பின்தொடருபவனைப் பற்றிய இன்னொரு கதை, தனது மாமரத்திலிருந்து சிறுகுச்சி ஒன்று ஒடிக்கப்படுவதை உணர்ந்து வீட்டிலிருந்து எழுந்து வரும் கிழவியின் கதை, வெறும் மின்மினிப்பூச்சிகளின் வெளிச்சத்தில் அலசப்படும் "தாழம்பூ" தாத்தாவின் கதை, நகர வாழ்க்கையில் நிலை தடுமாறி ஊர் திரும்ப ஏங்கும் 'நெல்லை சிவாஜி' குத்தாலிங்கம் அண்ணாச்சியின் கதை என கதை என்ற பெயரில் நிகழ்வுகள் பதியப்படுவதை நெகிழ்ச்சியுடன் ஆமோதிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவில் ஒரே மாதிரியாகத்தான் நகர்ந்து போகிறார்கள் - மேளம் வாசிப்பவர்கள் அனைவரும் எனக்கு; தரையில் சிந்தும் பூக்களைத் தவிர்த்துக்கொண்டே அமரர் ஊர்தியைப் பின் தொடர்ந்து சென்றவர்களில் நானும் ஒருவன்; கிழவியினுடைய மாமர குச்சியின் வாசனையை குழந்தையின் காதுக்கடியில் கிடைக்கும் பால்வாசனையாய் உணர நேர்ந்தமையில் ததும்பிய மகிழ்வு; நீளமான கூந்தலைக்கொண்ட தலையில் தவழும் தாழம்பூவின் நறுமணத்தில் தாத்தாவை விட நான் திளைத்திருந்தமையில் கிடைத்த மோகம்; சில பேருடைய குடிவாசனை மட்டும் எப்போதுமே எனக்கு பிடித்திருந்தாய் இருக்கும் நிலைமை என மனம் இளகும் உயிர் நெகிழும் ஐம்புலன்களும் ஏங்கும் இலக்கிய சுகத்தை சில கதைகள் ஏற்படுத்திச்சென்றிருக்கின்றன.&lt;br /&gt;அடுக்கி வைக்கும் செங்கல்களைப்போல நிகழ்வுகளால் கதையைக் கட்டமைக்கும் கலையைக் காண நேருவதுண்டு. ஒரே ஒரு செங்கல்லைக்கொண்டு தாஜ்மஹாலையே கட்ட முயலும் சம்பவத்திற்கிணையான இலக்கியங்களுமுண்டு. செங்கல்லையே காட்டாது அதைப்பற்றிய உலகை அலசும் கதைகளுமுண்டு. ஒரே ஒரு செங்கல்லைத் திரும்ப திரும்பப் பார்த்து அதன் செம்மைத்தனத்தை பதிய முற்படுவதும் உண்டு. வண்ணதாசனின் கதைகள் இதை அடிப்படையாகக்கொண்டது என நினைக்கிறேன். பலமுறை பார்ப்பதால் உண்டாகும் இயற்கையான சலிப்பையும் மீறி ஏதோ ஒன்று தர முயலுவது இவரது படைப்புகளின் வெற்றிக்கதையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;'யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்த', நடந்து பார்க்காத சசிப்பெண்ணின் பாதத்தை துணியால் வேலைக்காரன் மூடுவதை மறக்க நினைத்தும் முடியாத 'கிருஷ்ணன் வைத்த வீடு' மறக்க முடியாத ஒரு கதை மட்டுமல்ல; செவ்வியல் சிறுகதையின் கட்டுமான வடிவத்திற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணமும் என்பேன். சிறந்த வாசகனை இக்கதை தத்தெடுத்துக்கொள்ளும் என்பதை உணர நேருகையில் மகிழ்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமா வீட்டிற்கு எதற்காகவோ சென்றிருந்தேன். அங்கு என்ன நடந்தது என்பதும் ஞாபகமில்லை. ஆனால் நான் திரும்ப வேண்டும். இரவு எட்டு-ஒன்பது மணிக்கு காட்டின் வழியே எனது வீட்டுக்கு நான் திரும்பவரவேண்டிய சூழ்நிலை. யாரும் துணைக்கு இல்லை. எதற்கு துணை என்று இப்போது நினைத்தாலும் அன்று அந்த இருளைக் கடந்து வீட்டுக்கு வந்துசேர்ந்த சம்பவத்தையே நான் அடைந்த மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். வெற்றி என்றால் யாரை எதிர்த்து? இருட்டையா? இருட்டு எனக்கு என்ன செய்தது? இருட்டு எப்படி எனக்கு எதிரியானது? இருட்டை ஜெயித்தேன் என்றால் இருட்டுக்கா நான் பயந்தேன்? இல்லை இருட்டின் அடையாளங்களுக்கா? இருட்டின் அடையாளங்கள்தான் என்ன? பூச்சி, பாம்பு, பேய், பூதம், திருடர்கள்? அதுசரி, இருட்டின் அடையாளங்கள் இவைகள் மட்டும் தானா?&lt;br /&gt;இருட்டை தேர்ந்த புகைப்படக்கலைஞனைப்போல, ஓவியனைப்போல அடிக்கடி அலசுகிறார் வண்ணதாசன். சாலாச்சி அக்காவும், திலகா அக்காவும், சந்திமுனைப் பிள்ளையாரும் இருளும் வெளிச்சமும் போல எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;இவ்விரு தொகுப்புகளிலும் கதைகளை எங்கும் நான் காணவில்லை. வெறும் புனைவு மட்டுமே கதை என்று கொண்டோமானால் அவைகள் எவற்றையும் இத்தொகுப்புகளில் நான் காணவில்லை. புனைவுகளின் தட்டையான தடங்களை எங்கும் நான் தரிசிக்கவில்லை. வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை மட்டுமே கதைக்களங்களில் விரவிக்கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் மானசாஜென்னிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது 'நிலை' என்று வண்ணதாசனின் ஒரு கதை இருப்பதாய்ச் சொன்னார். நான் இப்போது அதைப்படிக்கவில்லை. ஆனால் 'நிலை' என்ற பெயரில் ஏறக்குறைய ஏழுவருடங்களுக்கு முன் ஒரு கதை படித்தேன். சிறந்த சிறுகதைகளாய் யாரோ ஒருவர் தொகுத்த அத்தொகுப்பில் அதுவும் ஒன்று. நள்ளிரவு வரை வேலை செய்துவிட்டு தீபாவளிக்கு முந்தைய இரவில் வீடு திரும்பும் ஒருவனின் கதை அது. அந்தக் கதையும் அதில் வரும் லாரியில் அடிபட்டுச்செத்துக்கிடக்கும் ஒரு எலியும் எனக்கு இன்றுவரை நினைவிலாடுகின்றன.&lt;br /&gt;இரண்டு விஷயங்களுக்காய் திரு. வண்ணதாசனுக்கு நான் நன்றி சொல்ல விழைவது எதார்த்தமானது என நினைக்கிறேன்.&lt;br /&gt;ஒன்று, நேற்றுவரை இருட்டு, வெறும் இருட்டாகவே எனக்கு இருந்திருக்கிறது - இப்போது அது, நெருங்கிய ஒரு உறவாகி விட்டிருக்கிறது -இரண்டாவது, எப்போதும் பார்வையிலிருந்து எளிதாய் நகர்ந்துவிடும் எந்த ஒன்றையும், இப்போது மீண்டும் ஒருமுறையாவது பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் - வண்ணதாசனால்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி. அன்பன்,&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="mailto:yemkaykumar@yahoo.com"&gt;yemkaykumar@yahoo.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-5461292407582086021?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/5461292407582086021/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=5461292407582086021' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/5461292407582086021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/5461292407582086021'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2008/03/blog-post_5819.html' title='இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் -   வண்ணதாசனுக்கு நன்றி!'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-1282240201616358735</id><published>2008-03-20T09:19:00.002+08:00</published><updated>2008-03-20T09:30:35.648+08:00</updated><title type='text'>வண்ணதாசனின் அன்புப் பிரபஞ்சத்தில் சில பிரளய மழைத்துளிகள்</title><content type='html'>வண்ணதாசனின் அன்புப் பிரபஞ்சத்தில் சில பிரளய மழைத்துளிகள்  &lt;br /&gt;&lt;br /&gt; சித்ரா&lt;br /&gt;&lt;br /&gt; ‘அன்பு’ இந்த வார்த்தை வள்ளுவர் காலத்திலிருந்து கையாளப்பட்டு வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அதில் அன்பாக இருத்தல் என்ற நிலையை விட அன்பு இல்லாத வாழ்க்கை எப்படி வறட்சியடைந்து கிடக்கிறது என்று சொல்லப்பட்டவையே அதிகம் என்று தோன்றுகிறது. அன்பகத்தான் இல்லாதான் உயிர் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? வன்முறைதான் மனிதனின் இயல்பா? ஏனைய மிருகங்களிலிருந்து உயர்ந்த பரிணாம வளர்ச்சி பெற்ற உயர்நிலை மிருகமாய் வாழ்வதுதான் மனிதனின் தனி அடையாளமா? சுற்றிலும் நாம் பார்க்கும் மிருகங்கள் ஒன்று கூட திட்டமிட்டு கொலை செய்வதில்லை. கையில் கத்தியுடன் அலையவில்லை. முதுகில் அரிவாளுடன் காத்திருக்கவில்லை. கைத்துப்பாக்கி ஏவுகணை ஒன்றைக்கூட கண்டு பிடித்து அதை மற்ற மிருகங்களுக்கு விற்று வாழவில்லை. தன்னை துன்புறுத்தினால் தற்காத்துக் கொள்ள மட்டும் மகாத்மா காந்தி சொன்ன ஆயுதங்களான கூரிய பற்கள், நகங்கள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்கின்றன. பசி என்ற தேவைக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன. புலிக்குப் பசி எடுக்காத போது மான்குட்டி கூட பக்கத்தில் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். வேட்டையை விளையாட்டாகப் பழகியது மனிதன் மட்டும் தான்.&lt;br /&gt; மனித வேட்டையாடும் போது மட்டும் ஆயுதங்களோடு கூடுதலாக சூழ்ச்சி, நயவஞ்சகம் போன்ற அறிவுத்திறன் கொண்ட புதிய ஆயுதங்களையும் சேர்த்துக் கொள்கிறான். { கொஞ்சம் கொட்டாவி வருகிறதா? இதுக்குத்தான் மத்தியான நேரங்களில் மெகாத் தொடர்களையும் திரைப்படங்களையும் பார்க்கக் கூடாது என்பது!!!] சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.வாசல் கதவு தட்டப்படுகிறது. யார் என்று மாயக்கண் மூலம் பார்க்கும் போது கையில்அரிவாளோடு உன்னைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று சொன்னால் வராத ஆச்சரியம் வாசலில் நின்று கொண்டு உங்களிடம் அன்பாகப் இருக்கப்போகிறேன் என்று நமக்குத் தெரிந்தவர்கள் சொன்னால் ஏற்படும் திடுக்கிடல்!! எதற்காகத் தேவையில்லாமல் நம்மிடம் பிரியம் காட்ட வேண்டும் கடன் கேட்கப் போகிறார்களோ? ‘கடன் அன்பை முறிக்கும்’ என்று சொல்லிவிடலாமா என்ற வாசகத்தைக் கதவில் தொங்க விடலாமா என்று ஒரு கண நேரத்தில் எக்கச்சக்க எண்ணங்கள்! வம்பு வளர்க்கவும், பிறர் மனம் வாட வீண் கதைகள் பேசுவதும் ஆயுதங்கள் கொண்டு துன்புறுத்துவதும் மனிதனின் இயல்பான குணங்களாக யாரும் சொல்லித்தராமல் வருகிறது. பிறரிடம் நேசத்தைக் காட்டத்தான் சொல்லித்தர வேண்டியிருக்கிறது. நீதி நூல்கள் எழுதப்பட நேரிடுகிறது. சட்டம், ஒழுங்கு, தண்டனை என்று பயமுறுத்தி அவனை நெறிப்படுத்த வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; பிறரிடம் கனிவாகப் பேசுவது, பிரியத்துடன் பழகுவது என்பதெல்லாம் ஒரு கைதேர்ந்த விற்பனையாளன் தன் பொருட்களை விற்பதற்காக வாடிக்கையாளரிடம் காரண காரியங்களோடு காட்டும் அன்பைப் போல் ஒரு செயற்கையான விஷயமாகிவிட்டது.  ஒரு விற்பனை முடிந்ததும் டக்கென்று மாறும் முகபாவம் நீ யாரோ நான் யாரோ என்று அடுத்த வாடிக்கையாளரை பிடிக்க்ப் போகும் அவசரங்களோடு யந்திரத்தனமான மனிதர்கள் மத்தியில் அன்பு அதிலும் எதையும் எதிர்பார்க்காத அன்பு என்பதே காணக்கிடைக்காதப் பொருளாகி விட்ட ஒரு காலக்கட்டத்தில் அன்பிலே தோய்ந்து அன்பிலே வாழ்ந்து அன்புக்காக உருகும் மனிதர்களைப் பற்றியக் கதைகள். (இப்படி பரீட்சைக்குப் படிப்பது போல் இப்படி வண்ணதாசன் கதைகளை அதுவும் அந்த சற்றே பெரிதான சிறுகதைத் தொகுப்பைப் படித்ததன் வம்புதான் இது.) இந்த மாதிரி பெரியப் புத்தகங்களை அதுவும் நமக்கு விருப்பமான எழுத்துக்கள் ஒட்டுமொத்தமாகக் கிடைப்பது ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும் இதைக் கையாள்வதில் இருக்கும் சிரமங்கள் என்னைப்போல் படிப்பாளிகளுக்கு மட்டும் தான் புரியும். பெரியப் புத்தகங்களைக் கையில் எடுத்தாலே கனக்கிறது தூக்கம் வருகிறது என்ற காரணத்தினாலேயே வகுப்பில் கூடிய மட்டும் தூங்காமல் கோழிக்கிறுக்கலாக நோட்ஸ் எடுத்து அதையே பல்கலைக் கழக பரீட்சை வரைக்கும் படித்து, வகுப்பில் தூங்காமல் நோட்ஸ் எடுக்கும் காரணத்தினால் அவ்வப்போது சந்தேகம் கேட்டு நல்ல விஷயம் தெரிந்த ஆசிரியரை குழப்பி ஆராய்ச்சி படிப்பு வரை நீ போனால் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும் என்று வாழ்த்தி வீரவணக்கம் செய்து விடுவார். இந்தப் பெரிய புத்தகத்தைக் கூட இரண்டாகவோ மூன்றாகவோ பைண்ட் செய்தால் நன்றாக இருக்கும் என்று புத்தகம் வாங்கும் போதே திலீப்குமாரிடம் சொல்லி அவர் என்னை அற்பப் பதர் மாதிரி பார்த்தார்.  என்னைப் போல் யாராவது ஒரு சக படிப்பாளி இதைப் பற்றி யோசித்திருக்க மாட்டாரா அட நம்ம நெனச்சதையே இவங்களும் சொல்றாங்களே என்று சொல்லமாட்டர்களா என்று ஒரு நப்பாசைதான்!&lt;br /&gt;&lt;br /&gt; மிச்சம்:&lt;br /&gt;&lt;br /&gt; உடலை விற்கும் பெண்ணின் அந்தரங்கம், அழகுணர்ச்சி, எதிர்காலத்தைப் பற்றியப் பயம், தனிமை, வறுமை சாதாரணமாகச் சிரித்துக் கொண்டே கேட்கும் விசாரிப்பில் அன்புத்துளிகளை உணர்தல் என்று பனி குளிர்வது மாதிரி சில சமயம் சந்தோஷமும் குளிர்கிறது.“சுருக்கா டீயை வாங்கியாந்தா என்ன? பனியில் நிண்ணா ரெண்டு பேருக்கும் ஒடம்புஎன்னத்துக்கு ஆகும்?”, என்ற சாதாரணக் கேள்வி அவளுக்கு தரும் ஆறுதல்ஒரு கண நேரத்துக்குத்தான் என்றாலும் அந்த எளிய மக்கள் ஒருவர் செய்யும் தொழில் மற்றவர் அறிந்தாலும் அதையும் தாண்டி ஏண்டா எல்லோரும் வச்சிக் குடிச்ச மிச்சத்தைக் குடிக்கறே என்ற கேள்வியின் மூலம் எச்சிலாகிப் போன தன் வாழ்க்கையைப்பற்றிய வெறுப்புகளை உமிழ்கிறாள். உணருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனுமை:&lt;br /&gt;&lt;br /&gt; இந்தக் கதையைப் பற்றி அநேகமாக எல்லோரும் எழுதியிருக்கக் கூடும். வண்ணதாசனுக்கேக் கூட மிகவும் பிடித்தக் கதையாக இருக்கலாம். இந்த மௌனமே காதலாகிற நேரம் அதுவும் காமம் கலக்காதக் காதல் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு கற்பனைச் சுகம். தினமும் சந்திக்கும் இல்லை அடிக்கடி சந்திக்கும் யாரோ ஒருத்திக்காக மனதில் ஒரு சிம்மாசனம் போட்டு அதில் அவளை மகாராணியாக்கும் கற்பனை அநேகமாக நிறைய ஆண்களுக்கு இருக்கும். முக்கியமாக அவளுக்காக காத்திருப்பதும் அவளை நினைத்து ஏங்குவதும் அவளுக்கு அது தெரியாமலே வாழ்க்கை ஓடிவிடுவதுமாக ஒரு புரட்டப்பபடாதப் பக்கமாக பேசப்படாத சொல்லாக எழுதப்பாடாதப் பாடலாக எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கலாம். ஞானப்பனுக்கு டெய்ஸி வாத்திச்சியின் வளப்பமான உடலைப் பார்த்து சராசரி ஆண்மகனாய் அவன் உடல் அலைகிறது. தனலெட்சுமி தன்னுடைய பலகீனமான காலுடன் உடைமரக்காடுகளின் மத்தியில் மணலில் நடக்கும் போது படும் கஷ்டம் இனி அவளுக்குக் கிடையாது. பஸ் காலனி வரை போக ஆரம்பித்து விட்டது என்பதிலிருந்து தனுவின் நினைவு அவனுள் மெழுகைப் போல் உருகி உருகி உறைந்து அவள் உதிர்த்த நீலப்பூ ஞானப்பன் புத்தகங்களுக்கு மத்தியில் பழுப்புத்தடமாகி இருக்கிறது. டெய்ஸியின் அணைப்பு அவன் அந்தரங்க எதிர்ப்பார்ப்பை மீறி எதிர்க்கவே செய்கிறது. தனலெட்சுமிதான் வேணுமாக்கும் என்று அவள் செய்கின்ற நையாண்டி இன்னும் அவள் மீது வெறுப்பை அதிகப்படுத்துவதாகவே இருக்கிறது. வெறும் பார்வை மட்டுமெ இந்த நேசத்தில் சொல்லப்படிருக்கிறது. தினசரி நடந்து செல்லும் பாதையில் இப்படி ஒரு சலனம் உருவானதை தனு உணராமலேயே அவள் வாழ்க்கை முடிவடைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் போகும்&lt;br /&gt;&lt;br /&gt; சுந்தரம் எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை. கொஞ்சம் போலி வார்த்தைகள், கெட்டிக்காரத்தனம், அதிகாரம், கொஞ்சல், கெஞ்சல் இப்படி ஏதாவது ஒன்றுடன் கலந்து காட்ட வேண்டியிருக்கிறது. வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது. தன்னுடைய பதினாறாவது வயதில் எந்தக் கவலையும் இல்லாமல் சினிமா பார்க்க முடிந்தது. கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தது. அம்மாவிடம் கோபித்துக் கொண்டு தட்டை வீசி எறிய முடிந்தது. புத்தகம் வாங்கிப் படிக்க முடிந்தது. வாலிபால் வாங்கி விளையாட முடிந்தது. படிப்பு முடிந்ததும் வேலையைப் பற்றிய எந்த யோசனையும் இல்லாமல் வாழ முடிந்தது. இப்படி அனுபவித்த இளமையின் சுகம் தன்னைத் தேடி வந்த வந்த பையனின் ‘இளமையில் வறுமை’யின் மூலம் உறுத்துகிறது. அவனுக்கு தன்னால் உதவ முடியாது என்ற கையாலாகத்தனத்தை விட அவனுக்கு ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும் என்று குருட்டு யோசனை பிடித்திருக்கிறது. நண்பன் கிட்டுவின் காதல் தோல்வி தற்கொலை முயற்சியிலும் தோல்வியில் முடிகிறது. ஆட்டுரலுடன் கட்டப்பட்ட பிச்சம்மா, அவள் காட்டும் பிரியம், அந்த வீட்டின் உழைப்பும் வறுமையும் சினிமா தியேட்டர் வாசலில் எண்ணெய் சூட்டில் வேகும் மொத்தக் குடும்பம், ஆனால் அதில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் உறவின் நெருக்கம் வசதி வந்தால் இப்படி சார்ந்து வாழும் நிர்ப்பந்தங்கள் இல்லாத வாழ்க்கையில் ஒரு விலகல் வந்து விடுகிறது. இப்படி பூவடுக்குகள் போல் எக்கச்சக்க மனிதர்கள் வருகிறார்கள். புலம்பலாய் தொடங்கும் கதை புன்னகையில் முடிகிறது. கதைக்குள் எக்கச்சக்கக் கதைகள் வரும் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;புளிப்புக்கனிகள்&lt;br /&gt;&lt;br /&gt; சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதைப்போல் தான் விரும்பியப் பெண் அதுவும் அழகான பெண் தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்டாள் என்றவுடன் “ நா எதுக்கு வருத்தப்படணும்? தெருவோட மானம் நாறிப் போகாம இவ்வளவோட போச்சேண்ணு சந்தோஷம்லா படணும்? எந்தச்சவம் இருந்தா என்ன? எந்தச்சவம் போனா என்ன? இதுவா மனுஷனுக்குக் கவலை?”, என்ற கேள்வியில் தெரியும் கயமைத்தனம் அவன் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிறான் என்பது புரிந்ததும் பரிதாபத்துக்குரியவனாகிறான். அவள் அழகு காஞ்சனா போலயிருக்கிறாள் என்று ரசித்தது, அவள் கவனத்தை ஈர்க்க உரத்தக் குரலில் பேசி வம்பு செய்தது, எதற்கும் படியாத அந்தக் காதல் கடைசியில் கீழ்த்தரமாய் அது சீவல் பார்ட்டிதானாம் அவள் தம்பியை வைத்து சரி செய்து விடலாம் என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொள்ளும் சராசரிக்கும் கீழானவன் இப்படிப்பட்டவர்களிடம் தன்னைக் கற்புக்கரசி என்று நிரூபித்துக்கொள்ள எதற்காக பெண்கள் பாடுபட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்&lt;br /&gt;&lt;br /&gt; ஆண்கள் எத்தனை பேர் கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியில் செல்வார்கள்?இல்லை என்னால் தனியாக சமாளிக்க முடியும் என்று குழந்தையுடன் மாமியார் வீட்டுக்குப் போய்அம்மா வரலியா என்ற இடைவிடாக் கேள்விகளில் மனம் சுருங்கி பஸ்ஸில் வீடு திரும்புகிறான். பெரிதாக அழத்தொடங்கும் குழந்தையைச் சமாளிக்க வகை தெரியாது தவிக்கையில் முன்பின் அறிமுகமில்லாதவர்களெல்லாம் செய்யும் உதவி. அம்மாவை இழந்து தவிக்கும் பிள்ளையும் தானும் அனாதரவாக இப்படிப்பட்டப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதாய் ஒரு கணம் மனம் தன் கற்பனையை பறக்க விடுகிறது. பார்ப்பதற்கு முரட்டுத்த்னமாக தோற்றமளிக்கும் எட்டையா. அந்த முதிர்ந்த மனிதரின் கனிவான மொழியில் குழந்தை சமாதானமாகி தூங்கி விடுகிறாள். அவர் பேசும் அந்தக் குழந்தை மொழியில் அவருக்கு அந்த சிறு பெண் அன்னையாகி சோறு பொங்கி அவருக்கு ஊட்டி இத்தனையும்  செய்து கடைசியில் தூங்கி விடுகிறாள். குழந்தைக்கு அவர் சொல்லும் வார்த்தை விளங்கியிருக்க . முடியாது. ஆனால் அந்த அன்பின் மொழி மட்டும் புரிந்திருக்கும். குழந்தையுடன் இறங்கும் போது பாத்துய்யா பாத்து என்று மிருதுவாய் தோளைத் தொடும் தோழமை. இதெல்லாம் எங்கோ ஒரு உலகத்தில் நடக்கலாம், நடந்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் இந்த நவீன வாழ்க்கை முறையில் தோன்றாமல் இல்லை. எம் ஆர் டி ரயிலில் பேருந்தில் லேசாகக் குழந்தை சிணுங்க ஆரம்பித்ததும் அதை சமாதானப்படுத்த இருந்த இடத்திலிருந்தே வாயில் பிளாஸ்டிக் சமாதானப்படுத்தியைச் சொருகும் பெற்றோர்கள், லேசான அழுகுரலுக்கே முகம் சுளிக்கும் புதுயுக மனிதர்கள், குழந்தைக்குத் தெரிந்த மொழியில் அது தன் தேவையைச் சிரித்தோ அழுதோ தெரியப் படுத்துகிறது என்பதைப் புத்தகத்தில் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்கள். குழந்தை நம்மைப்பார்த்து சிரித்து விட்டால் பதிலுக்கு சிரிக்க தயக்கம் காட்டும் நாகரிகம். சிரித்தது பெரிய தவறு போல் தலையை அமுக்கி வலுக்கட்டாயமாக ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை காட்டும் அம்மாக்கள்.அறிமுகமில்லாதவர்கள் உன்னைப் பார்த்து சிரிக்கவோ தொடவோ அனுமதிக்காதே என்று  வக்கிரங்களுக்கு வடிகால் தேடும்  ஒரு சில மிருகங்களுக்காக வலுக்கட்டாயமாக தேவையில்லாதவற்றை மூளையில் திணித்து குழந்தைகளிடமிருந்து பறிக்கப்படும் குழந்தைப் பருவம்.இவற்றையெல்லாம் தினமும் சந்தித்துக் கொண்டிருக்கும் நமக்கு வேறு எதோ உலகத்தில் இவையெல்லாம் நடந்திருக்கக் கூடும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மிதிபட:&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் நடுத்தர வர்க்கம், அடிமட்டத்து பெண்கள், முறை தவறியவர்கள் யாராக இருந்தாலும் மனதின் அடியாழத்தில் வலியுடன் வாழ்க்கையை நேசிக்கிறார்கள். கூடவே ஆணகளையும் நேசிக்கிறார்கள். தனித்தன்மையுடன் ஒளிர்கிறார்கள். ஆனால் ஆண்களால் இழிவுப் படுத்தப் படுகிறார்கள். அடிஉதைகளை தாங்குகிறார்கள். அதே வன்மத்துடன் பதிலுக்கு வேறுவிதமாக தாக்குகிறார்கள். மனதளவில் ஒட்டாமல் வாழும் புருஷனுடன் கோபித்துக்கொண்டு பிறந்த வீடு போய் இருந்து விட்டு திரும்பும் மனைவி. திரும்பி வரும் போது வீட்டின் அலங்கோலத்தைக் கண்டு முகம் சுளிக்கிறாள். அவள் முகம் சுளிப்பதைப் பார்த்து கயமைத்தனத்தோடு கொச்சையாகப் பேசி மனதால் துன்புறுத்திக் கொண்டெயிருக்கும் கணவன், மின்சாரம் போகும் கணநேர இருட்டில் அவள் உடலை மட்டும் சொந்தம் கொண்டாட வரும் கணவனை உதறித்தள்ளி விட்டுக் கிளம்புகிறாள், குனிந்து பையை எடுக்கும் போது  தன்னை இடுப்பில் உதைப்பானோ என்ற பயத்துடனே! பெண்கள் தனக்குக் கீழானவர்கள். அவளை உடலால் மனதால் எப்படி வேண்டுமானாலும்துன்புறுத்தலாம். உடல் சேர்க்கைக்கூட அவளை அவமதிப்பதற்கும் துன்புறுத்துவதற்குமான ஒரு ஆயுதம். தேவைப்பட்டால் அவளை தெய்வநிலைக்கு உயர்த்திக்கொள்ளவும் தேவையில்லை என்றால் தூக்கி எறியவும் தயங்காது இதை சாதாரண விஷயமாக அதில் ஒன்றும் தவறில்லை என்று நினைத்த காலகட்டத்திலிருந்து விலகி வெகுதூரம் வந்து விட்டதாக சில சமயம் தோன்றினாலும் எங்கே வெகுதூரம் ஒதோ இங்கே பக்கத்தில் தான் இருக்கிறது என்று அவ்வப்போது ஒரு தோற்றம்  பூதமாய் நம் கண் முன் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைக்க முடியாத ஒப்பனைகள்&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பாவுக்கும் கல்யாண மாப்பிள்ளைக்கும் இருந்த உடல் நெருக்கம் கடைசி வரை கதாநாயகனுக்கு  உறுத்தலாகவேயிருக்கிறது. த்ன்னுடன் நெருக்கமாக இருந்தவன் கல்யாணத்திற்கு வந்து சகஜமாகப் பழகுவதும் பேசுவதும் தன்னிடமும் தேவையற்ற நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதை விரும்பாத ஆண்மனம். மீண்டும் மீண்டும் பாப்பாவையும் கல்யாணப்பெண்ணையும் ஒப்பிட்டு எப்படி தன் நண்பன் இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதித்தான் என்பதை யோசிக்கிறான். நண்பனின் கல்யாணத்திற்கு ஒரு நாள் விடுப்பில் அவசரம் அவசரமாக வந்து கல்யாணத்தையும் முழுமையாகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் செய்யும் அதே வேலையையே இங்கும் வந்து மொய் எழுதும் வேலையைச் செய்கிறான். இதை கிட்டத்தட்ட சொந்த அனுபவம் போல் தொகுத்திருக்கிறார் நண்பனின் திருமணத்தில் கலந்து கொண்டோம் என்ற சந்தோஷம் இல்லாமல் எரிச்சலோடு கிளம்புகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பொதுவாகவே இவர் கதைகளில் பெரிய லட்சியவாதிகள், ஒழுக்கசீலர்கள் இப்படியெல்லாம் கிடையாது. சாதாரண மனிதர்கள். ஆனால் நுண்ணியமான எண்ணங்களில் சிறு செயல்பாடுகளில் அசாதாரணமானவர்கள் ஆகிறார்கள். வண்ணதாசன் இவரை அறிந்தவர்கள் இவர் பல கதைகளில் பல்வேறு வடிவங்களில் புன்னகைப்பதுப் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்ரா ரமேஷ்       &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-1282240201616358735?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/1282240201616358735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=1282240201616358735' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/1282240201616358735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/1282240201616358735'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2008/03/blog-post_20.html' title='வண்ணதாசனின் அன்புப் பிரபஞ்சத்தில் சில பிரளய மழைத்துளிகள்'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-6717711865553565559</id><published>2008-03-20T09:16:00.001+08:00</published><updated>2008-03-20T09:19:02.068+08:00</updated><title type='text'>வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள்</title><content type='html'>10-02.2008&lt;br /&gt;வாசகர் வட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள்&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டித்துரை&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளையும் என்னால் படிக்க இயலவில்லை. புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 117 சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் 60க்கும் மிகுதியான சிறுகதைகள் படித்துள்ளேன். திரு சுப்ரமண்யம் ரமேஷ் குறிப்பிட்ட கதைகளில் தனுமை தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் சமவெளி கூறல் நிறை மட்டுமே படிக்க நேர்ந்தது. நான் இன்னும் என்னை படைப்புகளை நுகர்ந்து என் எண்ணப்பாடுகளை வெளிப்படுத்த தயார் செய்யவில்லை அல்லது இன்னும் அதீதமாக இலக்கிய படைப்புகளை படிக்காததன் தயக்கமாகவும் இருக்கலாம். என்னை ஏதோ ஒரு தளத்திற்கு அழைத்துச்செல்லும் களமாக வாசகர்வட்டம் இருப்பதால் என் பயிற்சியாகவே இந்த முயற்சியும்&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே வண்ணதாசன் சிறுகதைகளில் கதைசொல்லக்கூடிய உக்தி ஒன்று போலத்தான் தெரிகிறது. இதை இவரது பல சிறுகதைகளில் காணமுடிகிறது (நான் படித்தவரையில்) அல்லது பிறரின் சிறுகதைகளில் கவனிக்க தவறிய அம்சமாகவும் இருக்கலாம். ஒரு கதையில் டிபன்பாக்ஸ் இன்னும் சிலகதைகளில் போர்வை தலைவலி தேரோட்டம் என்று இது போன்ற ஒன்றை மையப்படுத்து அல்லது அதீதமாக தென்படச்செய்து இதனூடாக அந்த கதையை விவரித்து விஸ்தரித்து செல்லும் பொழுதுதான் வண்ணதாசன் என்னை வியக்கச்செய்கிறார். நான் விரும்பி படித்த யாளிகள் கதை இன்னும் சில கதைகள் அலுப்பு தட்டச் செய்தது. திரு.சுப்ரமணியம் ரமேஷ் குறிப்பிட்ட தனுமை என்னும் சிறுகதை என்னை ரொம்பவே கவர்ந்தது அதை என்னால் இங்கு எப்படி என்று விவரிக்க இயலாதது வருத்தமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அருவியும் 3 சிரிப்பும் பக்கம் -131ல்&lt;br /&gt;&lt;br /&gt;குற்றால அருவியில் இரு நண்பர்களுக்கு இடையேயான சம்பாசனைகளில் இந்த சிறுகதை காட்டப்படுகிறது. கடைவைத்திருக்கும் அண்ணாச்சி என்னத்தை அனுபவித்திருக்க கூடும் என்ற இவர்களின் உரையாடலால் அண்ணாச்சி முதன் முறையாக வாழ்தலின் தரிசனத்தை அனுபவிக்க முயல்கிறார். இந்த சிறுகதையை படிக்கும்பொழுது என் ஞாபகத்திற்கு வந்தது பொன்.ராமச்சந்திரனும் ஆனந்தவிகடனும். பொன்.ராமச்சந்திரன் நேற்றிருந்தோம் முதல் சந்திப்பில் எம்.ஆர்.டிக்காக காத்திருந்த தருணத்தை சொன்னது அநேக பேர் இப்படித்தான் இருக்கின்றோம். சிலரோ தெரிந்தும் அத்தகு வாழ்தலை நுகர விருப்பமின்றியே விடைபெறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவியில் வண்ணதாசன் எழுதிவரும் தொடர் அகம் புறம் எப்பொழுதாவது படிப்பதுண்டு அப்படி சமீபத்திய அவரது பதிவு புலி பற்றி வரும் கனவு (யானை பற்றிய கனவுகள்தான் இவருக்கு அதிகமாக வருமாம்) இறுதியில் எல்லோரையும் கனவு காணச்சொல்லியிருப்பார் அந்தக் கனவும் அண்ணாச்சியுடன் பொருந்திப்போவதாகவே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்று ஞாபகம் எனும் சிறுகதை பக்கம் 175-ல்&lt;br /&gt;&lt;br /&gt;டிபன் பாக்ஸ் பற்றிய ஞாபகங்களை எடுத்துச்செல்லும் அந்தக் கதையில் இறுதியில் வரும் வரிகள்&lt;br /&gt;&lt;br /&gt;“ வாட்ச்மேன் இவள் பார்ப்பதற்கு பதில் சொல்வது போல ‘ நம்ம எஃப் கிளார்க்குமா ஓவர்டைம் செய்தாரு வேலைனா வீடும் அவருக்கு மறந்து போகும்னு சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு சிரிப்பு வரவில்லை தனக்கு டிபன் பாக்ஸ் ஞாபகம் வந்தது போல் அவருக்கு வீட்டின் ஞாபகம் வரவேண்டும் “&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிறுகதையில் டிபன்பாக்ஸை மறந்துவிட்டுச் சென்று மீண்டும் எடுக்க வரும்பொழுது 100 பேர் பணிபுரிந்த அலுவலகமா இது என்று அந்த நிசப்தத்தில் தன்னை அவள் தொலைத்திருப்பாள். இந்த கதையின் ஓட்டம் வேறு என்றாலும் முடிவு நான் மேலே சொன்ன கதையுடன் ஒன்றுபடுகிறது. அண்ணாச்சிக்கு ஞாபகப்படுத்தியது போல் கடந்து செல்லும் பொழுது நமக்கும் யாரவது ஞாபகபடுத்த வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தோம் இருந்தோம் சென்றோம் இப்படித்தான் இங்கு அநேக பேர் வாழ்ந்து செல்கின்றனர் நம்மை சுற்றிலும் நாம் தவறவிட்ட வாழ்வியல்களை அதற்குரிய கணத்துடன் வண்ணதாசனின் பல சிறுகதைகளில் காணமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணாத்திப்பூச்சியின் நினைவுகளுடன்&lt;br /&gt;பாண்டித்துரை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-6717711865553565559?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/6717711865553565559/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=6717711865553565559' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/6717711865553565559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/6717711865553565559'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2008/03/blog-post.html' title='வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள்'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-6428023696793409839</id><published>2007-12-23T10:37:00.000+08:00</published><updated>2007-12-25T10:10:18.060+08:00</updated><title type='text'>அடுத்த வாசகர் வட்டம்</title><content type='html'>&lt;div align="left"&gt;அடுத்த வாசகர் வட்ட வாசிப்புக்காக &lt;span style="color:#66ffff;"&gt;"வண்ணதாசனின் சிறுகதைகள்"&lt;/span&gt; தெரிவு செய்யப்பட்டுள்ளது. சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள "வண்ணதாசன் சிறுகதைகள்" என்ற தொகுதியில் அவரது சில சமீபத்திய சிறுகதைகளைத் தவிர்த்து பிற கதைகள் அனைத்தும் தொகுக்கப் பட்டுள்ளது. அவைகள் பத்திற்கும் மேற்பட்ட சிறுகதை தொகுதிகளாகவும் வாசிக்கக் கிடைக்கின்றன. சிங்கப்பூரின் நூலகத்தில் பிரதிகள் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பகட்டும், ஆரவாரமும் நிறைந்த வாழ்க்கைச் சூழலில், மென்மையும், நுட்பமும், அழகும் நிறைந்த அவரது மனம் எளிதில் தட்டுப்படாததும்&lt;br /&gt;உதாசீனப் படுத்துவதற்கு எளிதானதும் ஆகும்...ஒரு மலர்ந்த மலரை அலுவலகம் செல்லும் வழியில் பார்க்க வாய்ப்பதைப்போல...&lt;br /&gt;என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது சிறுகதைகளில், நிறை, கூறல், சமவெளி, தோட்டத்திற்கு வெளியேயும் சில பூக்கள், பெயர் தெரியாமலே ஒரு பறவை, கிருஷ்ணன் வைத்த வீடு, தனுமை, போன்ற நல்ல கதைகளை தவற விடாதீர்கள். (எல்லாகதைகளையும் படிக்க இயலாமல் போனால்). இது போல உங்களுக்கும் ஒரு பட்டியல் இருந்தால் அதையும் அனுப்பிவையுங்கள், எல்லோரிடமும் பகிர்ந்துக் கொள்ளுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுமுறைகள் முடிந்த பின்னர், நூலக அதிகாரியிடம் கலந்து பேசி கூட்டத்திற்கான தேதியை பின்னொரு மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;(ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி ஆரம்பத்தில் இருக்கலாம்.)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-6428023696793409839?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/6428023696793409839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=6428023696793409839' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/6428023696793409839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/6428023696793409839'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/12/blog-post_23.html' title='அடுத்த வாசகர் வட்டம்'/><author><name>மானஸாஜென்</name><uri>http://www.blogger.com/profile/13032688617271305971</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_xMVCjgn17LE/SQaQNxjtcCI/AAAAAAAAAC0/qbjFW26RHUQ/S220/sanchan1_0.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-6730778548925148371</id><published>2007-12-11T10:14:00.001+08:00</published><updated>2007-12-16T11:07:08.386+08:00</updated><title type='text'>நகுலனின் கவிதையுலகு</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff9966;"&gt;மயக்கும்- சங்கமம், சங்கமம்- மயக்கம் என்பதனால் என்பதனால்? &lt;/span&gt;&lt;span style="color:#ff9966;"&gt;ஒன்றுமில்லை - நகுலனின் கவிதையுலகம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ffcc66;"&gt;மானஸாஜென்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#ffcc66;"&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வெளியும் உள்ளிருட்டும் முயக்கம் கொள்ளும் அறை, வெருட்டும் உச்சிப் பொழுதில் பிணத்தின் அடியில் தொடரும் நாய், அல்லது நட்சத்திரங்கள் சிரிக்க பாரவண்டி உருளும் ஓசை, மரங்களாய் இருந்து சூரல் நாற்காலிகளாகவும், மேஜைகளாகவும் மௌனித்து பரிமாணானித்திருக்கும் அறை, குப்பிகளும், நூல்களும் மயக்கத்திற்கு உதவ இருட்திட்டுகளின் ஊடாக மூச்சு நின்றால் பேச்சும் நிற்க அங்கே நகுலன் எப்போதும் இருக்கலாம் அல்லது எப்போதும் போல இல்லாமலேயும் இருக்கலாம். இவை எதற்கும் அர்த்தமில்லை. நகுலன் எழுதினால் அவை வேறு கதை அப்போது அர்த்தத்திற்கு முக்கியம் ஏதுமில்லை. அர்த்தமின்மை வலுப் பெற்று அர்த்தம் கொள்ளும். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;நகுலனும், நவீனனும் தனிமையும் வெறுமையும் போந்த ஒரு கோட்டின் இரு முனையில் ஒருவரை ஒருவர் மிக ஆழமாகவும், நுட்பமாகவும் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள். சுசீலா கோட்டின் இங்கும் அங்கும் தென்படுகிறாள். அவர்கள் எல்லோரும் டி.கே.துரைசாமியைத் தேட முற்படுகின்றனர், அவரோ காணாமல் போகும் அவரின் நிழலைத்தேடி அலைகிறார், அலைச்சலுக்கு இடையூறான தன் உடலையும் கழற்றிக் கோட் ஸ்டேண்டில் மாட்டியும் அலைச்சல் நிற்பதில்லை. சுசீலாவோ எப்போதும் போல ஏதும் சொல்வதில்லை எனினும் நிழல் தேடும்-சாவில் தேடி என்ன ஆகப்போகிறது என்பதை யாரும் அவருக்கு சொல்லத் தேவையில்லை, அதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை நகுலனோ, நவீனனோ ஏற்கனவே அவருக்கு சொல்லியிருக்கக் கூடும், அல்லது துரைசாமி அவர்களிருவருக்கும். அவர்களுக்கும் அது குறித்த பெரிய விளக்கங்கள் ஏதும் தேவையாயில்லை, அல்லது அவருக்கும்... ஏனெனில் அவரும் புறுந்தையை, அல்லது அந்த மஞ்சள் வண்ணப் பூனையை, அல்லது அந்த செங்கல்வண்ண நாயை, அல்லது இந்திரகோபப் பூச்சியைப் பார்த்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லது வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;முற்றாகவிடுபடாத தனிமை உண்மையில் இருண்மை கொண்டது. வள்ளலாரின் தனித்திருத்தலுக்கும், ஒரு இருத்தலியலாளரின் தனிமைக்குமான மெல்லிய கோடு. பெயரில் என்ன ஆகப்போகிறது நகுலனின் தனிமைக்கும் அவரின் நாயின் தனிமைக்குமான வேறுபாடு. ‘நாய்கள் வயதாவது குறித்து கவனம் கொள்வதில்லை’ என்னும் போது நகுலன் இங்கிருந்து அங்கு நகர்கிறார். அதாவது அங்கும் இருக்கிறார். முற்றாக கரையும் தனிமையை, சாவை ஒரு நிம்மதிக்கான வேண்டுதலாக கொள்வது அவரது நோக்கமல்ல. வாய்த்திருக்கும் தனிமையை தீர்க்கமாக அவதானித்தால் அதன் முடிவான இடம் அது என்ற அவரது தத்துவத்தின் முடிபை, அனுபவமாகப் பெற்றிட ஒரு எதிர்பார்ப்பும், அதற்குத் தயாரான நிலைமையுமே, சாவிடம் அவர் கொள்ளும் உறவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நகுலனின் தனிமை ஒரு கோணத்தில் சொன்னால், தீவிரமான தன் முனைப்பானது. அதன் காரணமாகவே பிளவு பட்டது. அவரது பலம் அத்வைதத்தின்பால் அவருக்கிருந்த ஈடுபாட்டின் காரணமாக இப்பிளவு பட்ட மனப் பிழற்வையும் குறியீட்டுகளாக்கி அவரது கலை மனம் படைப்புகளாக்குகிறது. மனப்பிழற்வின் ஆகக் கூடிய கணங்களைக் காட்சிப்படுத்துகிறதன் மூலமாக மனப்பிளவின் கோட்டினை வெற்றிகரமாக நிரம்ப இடங்களில் அழித்து போதம் கொள்கிறது அவரது படைப்புகள், முக்கியமாகக் கவிதைகள். இன்னொரு விதமாகச் சொன்னால் கூர்ந்த அவதானிப்பில் நகுலன் சென்றடையும் இடம் உயிர்ப்பின் விளையாட்டாய் சதா நிகழ்ந்தவாரிருக்க, துரைசாமியோ, நவீனனோ, தானோ அல்லது யாரோ நினைவுப் பாதையின் குறுக்கும் நெடுக்குமாக அவரை இழுத்துக் கொண்டு அலைய ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்போது தட்டுப்படும் வார்த்தைகளில் ஒளிரும் வார்த்தைகளை அது தன்னிடமிருந்தாலும், வாசிப்பின் அடுக்குகளில் இருந்தாலும் அள்ளி சிந்திவிடுகிறார் சித்தத்தை... அவரே சொல்வது போல சிமெண்ட் தரையில் தானிய மணிகளைப் போல. வெற்றிகரமான கவிஞன், தோல்வி அடைந்த ஞானி. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இருண்மை மிக இயல்பாக மயக்கம் கொள்வது அவரது படைபின் விசேஷமான அம்சம் இத்தகைய எதிர்நிலைகளின் சாதகமான ஒத்திசைவு அவரது படைப்புகளின் தனித்துவமான மனோநிலையையும், உணர்வு நிலையையும் வாசகர்களுக்கு பரிச்சியப் படுத்துகிறது. நகுலனுக்கும் அவரது படைப்பின் உலகத்திற்குமான உறவும் அத்தகைய மயக்கத்தினை தன்னுடைய ஆதாரப் புள்ளியாகக் கொண்டிருக்கிறது. அவரது மரபான பின்புலம்(Traditional)-நவீனத்திற்கான(Avant-garde ) இலக்கிய ஈடுபாடும், வார்த்தைகளைத் தெரிவு செய்வதில் உள்ள நுட்பம் மற்றும் அவைகளைக் கொண்டாடும் மனோநிலை, இதன் எதிர்நிலையாக வார்த்தைகளின் சம்பிரதாயமான அர்த்தங்களை உதாசித்து தனக்கான அர்த்தத்தை ஸ்தாபித்துக் கொள்வது, தமிழ் புலமையும் - ஆங்கிலப் படிப்பும், மனப்பிழற்வும்-போதமும், நாவலில் கவிதை முயங்குவதும், சாதாரண வார்த்தைகள் நகுலனின் விசேஷ ஆளுமையில் கவிதையாக மிளிர்வதும், இருத்தலுக்கும், சாவுக்குமான அவரது விசாரத்தில் அடையும் மனோநிலை, கற்பனைக்கும்- நினைவுக்கும், மற்றும் நினைவுக்கும்-நிகழ்காலத்திற்கும் இப்படி எதிர்நிலைகளின் மயக்கம் படைப்பில் கலாப்பூர்வமான வெற்றியை நல்குகின்றன. ஏராளமான கதவுகள் மூடியும் திறந்தபடியும் எந்தக் கதவு எப்போது திறக்கும் என சொல்லமுடியாதபடி வாசிப்பவனை பிரமிப்பூட்டுகின்றன. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;நகுலனின் மொழியைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். தீவிர அனுபவத்தின் சாரமாகத் தெரிக்கும் சில வார்த்தைகள், செங்குத்தான பாறையில் தொற்றி ஏறும் மலையேற்ற வீரனுக்கு கைப்பிடி பள்ளங்களாகவும், பற்றியேற துருதிக் கொண்டிருக்கும் பாறை நீட்சிகளைப் போன்றும் பயன்படுபன. வார்த்தைகளின் கண்ணிகள் சம்பிரதாயமான தர்கத்தளத்தில் இயங்குவதை குலைக்கிறது, நகுலனின் கவி ஆளுமை. மொழியில் புழங்கும் சாதாரண வார்த்தைகளை, வாக்கிய அமைப்புகளை தன் ஆளுமைக்கேற்ப மாற்றிப் போடுவதன் மூலமாக அர்த்தமிழக்கச் செய்தோ, அல்லது நகுலனின் பிரத்யோக உலகிற்கேற்ப தனித்த அர்த்தங்களைக் கொள்ளும் தனித்துவமான பதங்களோ அல்லது சாதாரண வார்த்தைகள் திரும்பத் திரும்ப வேறு விதமான அர்த்த பாவங்களில் பயன்படுத்தப்பட்டதாலேயே நகுலனின் உலகின் விசேஷ கருவிகளாகவோ மாறி அவரின் உலகை சிருஷ்ட்டிக்கின்றன. மௌனி, லா.சா.ரா. போன்றவர்களை நகுலன் இவ்விஷயத்தில் ஒத்துப் போகிறார் எனலாம். மேலும் அவர்கள் உலகமும் குறுகிய வட்டத்துக்குள் அமைவுறுவதோடு, மொழியின் மனவெளி, வாசிப்பு அனுபவத்தில்அதிர்வுகளை உண்டாக்குவது. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;மொழியின் அர்த்தங்கள் கைவிட்ட நிலையில், அர்த்தங்களைக் கோர்ப்பதன் மூலமாக இயந்திரத்தனமாக தர்கங்களையும், நினைவுகளையும் தொடர்ந்து வலைப்பின்னும் மனம், ஸ்தம்பித்துப் போகிறது. இத்தகைய ஸடோரி (satori)கள் நகுலனின் கவிதையின் சாத்தியப்பாடுகள். அந்த அர்த்தத்தில் இவரது குறுங்கவிதைகள் ஒரு வித புதிர்கள். (koan)&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;கவிதைகளில் நகுலனின் இடம் எல்லோருக்கும் வசீகரமானது, ஆனால் ‘நகுலனாகாமல்’ நகுலனின் இடம் கைகூடாது, அல்லது நகுலனால் மட்டுமே நகுலனின் கவிதைகள் சாத்தியம். ஏனெனில் நகுலனும் நகுலனின் கவிதைகளும் வேறானதல்ல.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff66;"&gt;@ @ @&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-6730778548925148371?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/6730778548925148371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=6730778548925148371' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/6730778548925148371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/6730778548925148371'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/12/blog-post.html' title='நகுலனின் கவிதையுலகு'/><author><name>மானஸாஜென்</name><uri>http://www.blogger.com/profile/13032688617271305971</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_xMVCjgn17LE/SQaQNxjtcCI/AAAAAAAAAC0/qbjFW26RHUQ/S220/sanchan1_0.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-396219636130912091</id><published>2007-10-24T22:40:00.000+08:00</published><updated>2007-12-11T11:10:21.413+08:00</updated><title type='text'>நகுலன் ஒரு வாசகப் பார்வை -ஜெயந்தி சங்கர்</title><content type='html'>&lt;span style="color:#999900;"&gt;போவதையே நினைத்தபடி இருந்தவன் வாசகப் பார்வை: ஜெயந்தி சங்கர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffcc00;"&gt;While I thought that I was learning how to live, I have been learning how to die. -Leonardo da Vinci&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;       மரபிலிருந்து வெளியேறிட முடியாத அல்லது விரும்பாத தத்துவங்களை உதிர்க்கும் ஒரு தனித்துவமான கவிதை மொழி நகுலனுடையது. மரபில் ஒரு காலும் நவீனத்தில் ஒரு காலுமாக இருக்கும் நகுலன் தன் சாதிப் பின்னணியை எழுத்திலும் வாழ்விலும் நிராகரித்த நகுலன் தன் கவிதை மொழியில் மரபை விடாது பற்றியிருப்பது ஒரு சுவாரஸியமான முரண் என்று எனக்குத் தோன்றுகிறது. நவீன தமிழ் கவிதையின் துவக்க கட்டத்தில் வாழ்ந்த கவிஞர் எனும் நியாயமான காரணத்தையும் மறந்திட முடியாது தான். 'நாயர்' என்று புனைப்பெயரில் எழுதியிருக்கிறார் என்பதை அறியும் போது பொதுவாக சாதிப்பிரிவில் இல்லை அவரின் வெறுப்பு, தன் சாதியின் மீது மட்டுமே என்பதும் நிரூபணமாகிறது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;சிலர் வந்ததும் வந்து சென்ற பிறகும் சூன்யமாகவே மிஞ்சுகிறார்கள்&lt;br /&gt;என்ற அனுபவம் நாம் அறிந்திருக்கக் கூடிய எல்லோரிடமும் நமக்கு ஏற்படுவதில்லை என்றாலும் சில தருணங்களில் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும்.&lt;br /&gt;எதைத் திறந்தால் என்ன கிடைக்கும் என்று திறந்துகொண்டே இருக்கிறார்கள்.&lt;br /&gt;இதைவிட எளிமையாகவும் குறைந்த சொற்களிலும் தேடலைச் சொல்லிவிட முடியாது என்று நான் வியந்தேன்.&lt;br /&gt;'உரையாடல்' என்ற கவிதையில்&lt;br /&gt;பிராந்தி அருந்திய உச்ச நிலையில் நான் என்னுடனேயே பேசுகிறேன்; என்னைக் கண்டு நானே சிரிக்கிறேன் என்னையே நான் அதட்டுகிறேன்&lt;br /&gt;என்று சொல்லும் நகுலன் தன் தனிமையை அப்பட்டமாகச் சொல்லி விட்டார்.&lt;br /&gt;யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? எல்லாம்&lt;br /&gt;என்று சொல்லும் போது நகுலனுக்கு தனிமையில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.&lt;br /&gt;மொழிபெயர்ப்பு மற்றும் பழம் இலக்கியங்களின் தாக்கம் கொண்ட கவிதைகளைக் காட்டிலும் முதல் வாசிப்பில் வார்த்தை விளையாட்டு போலத் தோன்றி அடுத்த வாசிப்பில் தத்துவம் கூறும் முறையில் அமைந்திருக்கும் கவிதைகளே நகுலனின் கவிதைகளில் பரவலான கவனமும் முக்கியத்துவமும் பெரும் போலத் தெரிகிறது. வார்த்தை விளையாட்டு போலத் தோற்றம் தரும் இவ்வகையான கவிதைகள் தான் நகுலனிடமிருந்து அதிகம் கிடைத்திருக்கின்றன.&lt;br /&gt;நினைவு ஊர்ந்து செல்கிறது பார்க்கப் பயமாக இருக்கிறது பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.&lt;br /&gt;என்ற வரிகளிலும் சதா ஊர்ந்துசெல்லும் நினைவுகளைக் குறித்து ஒருவிதமான பயமும் ஆர்வமும் கொள்வதை தனக்கே உரித்தான பாணியில் சொல்லும் அனுபவமும் நமக்கு அறிமுகமானது தான்.&lt;br /&gt;***&lt;br /&gt;அதிகமும் மரணத்தைப் பாடியிருப்பதாகத் தெரிகிறது. அந்த மரணத்திற்குக் காத்திருக்கவே தனிமையைத் தனதென ஏற்றிருக்கிறார் இந்தக் கவி. அல்லது நிழலென ஒரு அடர் தனிமையில் வாழ முடிவெடுத்ததால் சாவை எதிர்பார்த்துத் தன் வாயிலையே பார்த்திருந்தாரோ? வாழ்க்கையில் வெறுப்புற்றோ அல்லது வாழ்ந்து முடித்து போதுமென்று நினைத்துத் தான் தான் மரணத்தை விரும்பினாரோ?! வாழ பயந்து தான் மரணத்தை விரும்பினாரா என்ற கேள்விகளுண்டு என்னில். மரணத்தை எள்ளிடம் கவிகளுக்கு மத்தியில், மரணமேயில்லாத உலகைக் கற்பனைசெய்து காட்சிப்படுத்தி மகிழும் கவிஞர்களுக்கிடையே இவரளவுக்கு மரணத்தை மிகத் தீவிரமாக சந்திக்கத் துடித்த ஒரு கவிஞர் இருப்பாரா என்றே தெரியவில்லை.&lt;br /&gt;மரணத்துக்குப் பின் என்ன, மரணத்துக்குப் பின்னான வாழ்வு என்று ஏதேனும் ஒன்று உண்டா என்று பல்வேறு கேள்விகளையும் தாங்கிய மரணம் குறித்த மர்மங்களில் சாதாரணமாக மற்றெவருக்குமே இருக்கக் கூடிய ஆர்வத்தின்/ஈடுபாட்டின் தீவிரத்தைக்காட்டிலும் நகுலனில் இருந்த தீவிரம் 'தேகத்தையே உரித்து கோட்- ஸ்டேண்டில் தொங்க விடுகிற' அளவிற்கு பன்மடங்கு அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. உடலைத் துறந்து உணர்ந்துவிடத் தவிக்கும் அந்தத் தீவிரத்தின் தாக்கம் தான் அவர் வாழ்க்கை முறையிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கின்றது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;தன் தேகத்திடம்&lt;br /&gt;"இல்லை நீ அங்கேயே தொங்கிக் கொண்டிரு; உன்னைப்பிடித்துக் கொண்டு நான் தொங்குவதை விட நீ தனியாகத் தொங்கிக் கொண்டிருப்பது தான் ரண்டு பேருக்கும் நல்லது" என்று, சொல்லிவிட்டு அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளியே செல்கிறான்.&lt;br /&gt;என்று நகுலன் சொல்லுபோது தன் உடலையே பாரமாக நினைப்பதை நம்மால் மேலும் உறுதிசெய்து விடமுடிகிறது. உடலின்றி உலகை ஒரு பார்வையாளனாகக் காணும் ஆசையும் இதில் கசிவதை நம்மால் உணரமுடியும்.&lt;br /&gt;மனிதருள் சிலந்தியும் பெண்டிருள் சிதலும் உண்டு.&lt;br /&gt;எனும் போது ஏன் //மனிதருள் சிதலும் பெண்டிருள் சிலந்தியும்// என்று பாடக் கூடாது என்று எனக்குத் தோன்றியது. இடக்கா? இருக்கலாம். ஆனால், தோன்றியதென்னவோ உண்மை.&lt;br /&gt;இருப்பதற்கு என்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்&lt;br /&gt;என்று ஒருவித pessimistic தொனியில் சொன்ன நகுலன் தமிழ் நவீன கவிதையின் துவக்கமாக என்றென்றும் தமிழிலக்கியத்தில் இருக்கத் தான் போகிறார் என்று தோன்றுவதையும் உணர்கிறேன். அதிக அங்கீகாரம் இல்லாததால் அவருக்கு ஏதேனும் ஆதங்கம் இருந்திருக்குமோ?&lt;br /&gt;***&lt;br /&gt;எப்பொழுதும் அவள் நினைவு தான் அவள் யார் என்று கேட்காதீர்கள் சுசீலாவின் பல உருவங்களில் இரு உருவம்&lt;br /&gt;என்று சொல்லும் தன் 'சுசிலா'வைப் பற்றி எல்லோரும் யார் என்று துருவிப் பார்க்கும் பார்வைகளாலும் கேள்விகளாலும் வெறுப்படைந்த நகுலனின் உணர்ச்சி வெளிப்பாட்டை கீழ்காணும் வரிகளில் நாம் புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;அவள் யார் என்று கேட்காதீர்கள் உங்கள் துருவிப்பார்க்கும் கண்களுக்குச் சற்று ஓய்வு கொடுங்கள் உங்களுக்கு இதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது அக்கறையுமில்லை.&lt;br /&gt;சுசீலாவைக் குறித்து மற்றொரு கவிதையில்,&lt;br /&gt;நேற்று ஒரு கனவு முதல் பேற்றில் சுசீலாவின் கர்ப்பம் அலசிவிட்டதாக இந்த மனதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.&lt;br /&gt;என்று அவர் சொல்லும் போது கட்டுப்பாடற்று அலையும் தன் மனதைக் குறித்து அலுத்துக் கொண்டு சொல்லுமிடத்தில் ஆழ்மனம் பலவேளைகளில் கொள்ளும் விசித்திர விகாரங்கள் கனவுகளாக மேலெழுவதை இயல்பாகச் சொல்கிறார். அதுவும் நம் மனதுக்கு நெருக்கமானவர்களைப் பற்றியே இவ்வகைக் கனவுகள் அமைவதை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். சுசிலாவுடன் மனதளவில் வாழ்ந்து வரும் நகுலன் அவள் கர்ப்பம் தரித்திருப்பதாகவும் கரு கலைந்தது போன்றும் கனவு காண்வது இதையே தான் உறுதி செய்கிறது.&lt;br /&gt;வேளைக்குத் தகுந்த வேஷம் ஆளுக்கேற்ற அபிநயம் இதுதான் வாழ்வென்றால் சாவதே சாலச் சிறப்பு&lt;br /&gt;என்று சொல்லும் நகுலனுக்கு பாசாங்குகளில் இருக்கும் வெறுப்பு தெளிவாக நமக்குப் புரிகிறது. அதனால் தான்,&lt;br /&gt;மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும்&lt;br /&gt;என்று சொல்லும் நகுலகின் கோபம் பாசாங்கு செய்யும் அனைவரின் மீதுமாகப் பாய்கிறது. வாய் பேசாத போதிலும் சதா நம் உள்ளம் பேசிக் கொண்டே தானே இருக்கிறது? மூச்சடங்கும் போது தான் அது அடங்குமோ என்னவோ. அத்தகைய அமைதியைத்தான் நகுலன் தான் காத்திருந்த மரணத்தில் தேடினாரோ!? அவரின் தனிமை அதற்குத் துணை போனதோ அல்லது அதற்கென்றே தனிமையை சுவீகரித்தாரோ தெரியவில்லை.&lt;br /&gt;மனங்கொள்ளும் விபரீத கற்பனைக்குச் சான்றாக நகுலன் எழுதிய&lt;br /&gt;யார் தலையையோ சீவுகிற மாதிரி அவன் பென்சில் சீவிக் கொண்டிருந்தான்&lt;br /&gt;என்ற கவிதை குழந்தை உருவில் உருகி வழியும் மெழுகுவர்த்தியைப் பற்றி யாரோ எழுதிய கவிதையை நினைவூட்டுகிறது.&lt;br /&gt;***&lt;br /&gt;நான் உண்மையில் 'ராமச்சந்திரா' கவிதையை மனதில் வைத்துக் கொண்டு தான் நான் இந்தத் தொகுப்பை அணுகினேன். ஆகவே, பெரிய முன்முடிவென்று என் மனதில் எதுவும் இல்லாதிருந்தாலும் ஒரு வித எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அதே நேரத்தில் நகுலனின் உரைநடையை (நாவல்கள்!) விட அவரின் சில கவிதைகள் எனக்குப் பிடித்தே இருந்தன, வேறு சில கவிதைகள் ஒரு வித சோர்வு கலந்த சலிப்பை ஏற்படுத்திய போதிலும் கூட.&lt;br /&gt;கை எழுதி அலுத்துவிட்டது. கண் பார்த்து மூளை சிந்தித்து மனம் அதையும் - இதையும் நினைத்து நினைத்து&lt;br /&gt;என்பது போன்ற பல வரிகளில் கவிஞருக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையின்மை தூக்கலாக தெறிக்கிறது. காலனைக் காலால் மிதிப்பேன் என்ற பாரதியின் கவிமொழியில் வாழ்வதற்கான ஆர்வம் இருக்கும். ஏழ்மை போன்ற பல நெருக்கடிகள் மிகுந்த அவரது வாழ்க்கையிலும் அவருக்கு வாழ ஆசை இருந்தது என்பதில் இருக்கக்கூடிய சுவாரஸியத்துக்கு நகுலனின் இந்த நம்பிக்கையின்மையின் தீவிரத்தின் சுவாரஸியம் ஒருவிதத்திலும் குறைந்தில்லை.&lt;br /&gt;'Death most resembles a prophet who is without honor in his own land or a poet who is a stranger among his people' என்று Kahlil Gibran சொன்னது நகுலனுக்கு மிகவும் பொருந்துகிறது. 'கோட்- ஸ்டேண்ட்' கவிதைகள் பரவலாக அறியப் படுகிற நியாயம் யாருக்கும் புரியும். நகுலனின் கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசிக்கும் போது ஏற்படக் கூடிய உணர்வு முற்றிலும் வேறு விதமாக இருக்கும் என்று தோன்றும் வேளையில், ஒரு தொகுப்பாக வாசிக்கும் நாட்களில் என்னிலும் ஒருவித மனச்சோர்வு (depression) படிந்ததை உணர முடிந்ததைத் தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-396219636130912091?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/396219636130912091/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=396219636130912091' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/396219636130912091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/396219636130912091'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/10/review-by-jeyanthi-sankar.html' title='நகுலன் ஒரு வாசகப் பார்வை -ஜெயந்தி சங்கர்'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-2402387848807818402</id><published>2007-10-24T22:37:00.000+08:00</published><updated>2007-12-11T11:28:06.114+08:00</updated><title type='text'>'நகுலன் கவிதைகள்' வாசிப்பு: ரெ பாண்டியன்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff99ff;"&gt;நகுலனின் கவிதைகள்யாருமில்லாத பிரதேசத்தில் காலியான பின்னும் வெட்டவெளி நோக்கி அசைந்தாடிக் கொண்டிருக்கும் சூரல் நாற்காலி&lt;br /&gt;ரெ.பாண்டியன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவன் கேட்டான்“என்னைத் தெரியுமா?&lt;br /&gt;“தெரியவில்லையே “ என்றேன்&lt;br /&gt;“உன்னைத் தெரியுமா ?” என்று கேட்டான்&lt;br /&gt;“தெரியவில்லையே “ என்றேன்&lt;br /&gt;“பின் என்னதான் தெரியும் ? “ என்றான்&lt;br /&gt;உன்னையும் என்னையும் தவிர வேறு எல்லாம் தெரியும்&lt;br /&gt;என்றேன். (பக்கம் 198, நகுலன் கவிதைகள், காவ்யா வெளியீடு, 2001)&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தைப்பற்றி நாளிதழின் சேதிகளாய், தடித்த புத்தகங்களின் பக்கங்களாய் எழுத்துக்களாய், தகவலாய் தெரியும். என்னைப்பற்றியும் உன்னைப்பற்றியும் (அதாவது எனது சுற்றம்) பற்றியும் அனுபவபூர்வமாய் இன்னும் எதுவும் நிச்சயமாகத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;“எல்லாமே&lt;br /&gt;வெகு எளிமையாகத்தான்&lt;br /&gt;இருக்கிறது&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;“எல்லாம்” என்பதுதான்&lt;br /&gt;என்ன என்று தெரியவில்லை” (பக்கம் 184)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் “எல்லாம்” போத புத்தியால் ஒரு செயல்பாட்டை, அதன் உப-செயல்பாடுகளுடன், செயல்பாட்டின் கொள்கை அடிப்படைகளை அறிந்து வைத்திருப்பது; இரண்டாவது “எல்லாம்” அபோதபூர்வமாய் ( அதே செயல்பாட்டை சுயமான அனுபவமாக உள்வாங்கி ) உணர்தல் அல்லது நான் உள்வாங்கியிருக்கும் அனுபவத்தளம் எவ்வளவு தூரம் அரைக்கிணறு தாண்டிய தனமானது என்பதை புரியவைக்கும் ஒரு தூரத்து வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு&lt;br /&gt;இப்பொழுதும்&lt;br /&gt;அங்குதான்&lt;br /&gt;இருக்கிறீகளா? “&lt;br /&gt;என்று&lt;br /&gt;கேட்டார்&lt;br /&gt;“எப்பொழுதும்&lt;br /&gt;அங்குதான் இருப்பேன்”&lt;br /&gt;என்றேன். (பக்கம் 191)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தன் முன்தீர்மானத்தில் இவரை வைத்திருக்கும் இடம், போட்டு வைத்திருக்கும் புறக்கணிப்பின் பின்வாசல்கடை - இவற்றிலிருந்து இவராய் நகர்ந்துவிடமுடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தை&lt;br /&gt;செத்த வீட்டில்&lt;br /&gt;துக்கம் விசாரிக்கச்&lt;br /&gt;சென்று திரும்பியவர்&lt;br /&gt;சொன்னார்&lt;br /&gt;“செத்த வீடாகத்&lt;br /&gt;தெரியவில்லை&lt;br /&gt;ஒரே சந்தை இரைச்சல் “ (பக்கம் 189 )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இழவு வீட்டின் மௌனத்தை சடங்குபூர்வமாய் கடைப்பிடிப்பதை எதிர்பார்த்து சென்ற மனம் அங்கிருந்த இயல்பு நிலையை “இரைச்சலாய்” பார்த்து அதிர்ச்சி கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்&lt;br /&gt;வீட்டிற்குள்&lt;br /&gt;இருந்தோம்&lt;br /&gt;வெளியில்&lt;br /&gt;நல்ல மழை&lt;br /&gt;ஒரு சொரூப நிலை (பக்கம் 186 )&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டவெளியை நம்மிடமிருந்து அடைமழை அடைத்து, தடுத்துவிடும் வேளை (water curtain போல) – மழை சுழ, வீடு மட்டும் என்கிற ஒற்றை இருப்பும், வீட்டிற்குள்ளான ஓசைகளின் லயத்திலும் தட்பத்திலும் நனையாது நனைந்து லயிக்கும் அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிக் கவிதை&lt;br /&gt;யாருமில்லாத பிரதேசத்தில்&lt;br /&gt;என்ன நடந்து கொண்டிருக்கிறது ?&lt;br /&gt;எல்லாம். (பக்கம் 177 )&lt;br /&gt;&lt;br /&gt;நிழலேயற்ற, கண்கூசும், வெயில் எரிக்கும் பாலைவனத்தில் யானைகள் நீர் அருந்த பத்து கிலோமீட்டர் தூரம் நடக்கின்றன. அதுபோன்ற ஒரு பகல்வேளையில் ஒரு நகர்புறத்து அலுவலக அவசரகதியில் மனிதர்கள் தங்களை மறந்த காரியங்களில். ஒரே தருணத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் அறிந்த யதார்த்தங்கள் தவிர்த்து, அறியாத யதார்த்தங்கள் எத்தனை?&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போலவே இன்னொரு கவிதை:&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும்&lt;br /&gt;கத்தாழைச் செடி&lt;br /&gt;சப்பாத்தி முள்&lt;br /&gt;பாலைவனச் சோலைகள்&lt;br /&gt;எனத்&lt;br /&gt;தோற்றமளிக்கும்&lt;br /&gt;கானல்நீர்ப் பரப்புகள்&lt;br /&gt;ஊர்ந்து செல்லும்&lt;br /&gt;ஒட்டகங்கள்&lt;br /&gt;இங்கும்&lt;br /&gt;உயிர் சலித்துக்கொண்டிருக்கிறது (பக்கம் 187 )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டேஷன்&lt;br /&gt;ரயிலை விட்டிறங்கியதும்&lt;br /&gt; ஸ்டேஷனில் யாருமில்லை&lt;br /&gt;அப்பொழுதுதான்&lt;br /&gt;அவன் கவனித்தான்&lt;br /&gt;ரயிலிலும் யாருமில்லை&lt;br /&gt;என்பதை;&lt;br /&gt;ஸ்டேஷன் இருந்தது&lt;br /&gt;என்பதை&lt;br /&gt;“அது ஸ்டேஷன் இல்லை”&lt;br /&gt;என்று நம்புவதிலிருந்து&lt;br /&gt;அவனால் அவனை&lt;br /&gt;விடுவித்துக் கொள்ள&lt;br /&gt;முடியவில்லை&lt;br /&gt;ஏனென்றால்&lt;br /&gt;ஸ்டேஷன் இருந்தது. (பக்கம் 169 )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டேஷனில் இப்பொழுது யாருமில்லை. ஆனால் வேறு யார் யாரோ வெவ்வேறு காலங்களில் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், இப்போது வந்த ரயிலிலும் (நினைவுகள் பயணம் போன பாதை) வந்து நின்ற ஸ்டேஷனிலும் (நினைவுகள் வந்துசேர்ந்து, உலவி நிற்கும் இடத்திலும்) யாருமில்லை என்பதால், இது ஸ்டேஷன் இல்லை (இதற்கு முன் இந்த இடம்வரை யாருடைய நினைவுப்பாதையும் நீண்டதில்லை) என்றாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமச்சந்திரன்&lt;br /&gt;ராமச்சந்திரனா&lt;br /&gt;என்று கேட்டேன்&lt;br /&gt;ராமச்சந்திரன்&lt;br /&gt;என்றார்&lt;br /&gt;எந்த ராமச்சந்திரன்&lt;br /&gt;என்று நான் கேட்கவில்லை&lt;br /&gt;அவர் சொல்லவுமில்லை. (பக்கம் 169)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவசரகதி என்கிற வெள்ளத்தில் தனக்குள்ளேயே மனிதன் மூழ்கிப்போனான். அதற்குப் பிறகு அடுத்த மனிதனின் தனித்த அடையாளங்களில் அக்கறை கொள்ளுமளவிற்கு அவன் பொறுமையற்று போனான். “ராமச்சந்திரனா” என்பது தனது அலுவலை விரைந்து முடிக்க எண்ணி கேட்கப்படும் கேள்வி. அதற்கு அவர் “ராமச்சந்திரன் “ என்றதும் வந்த காரியம் உடனே நிறைவேறியதின் ஆசுவாசம் உள்ளுக்குள். புதுமைப்பித்தனின் “மனித யந்திரம் “ கதையில் இயந்திரமாய் இயங்கும் சர்வர் மனிதனாகும் தருணம் (கீழே விழுந்த கைக்குட்டையை அவன் கவனிப்பது) இங்கே நிகழாமல் போகிறது. நிகழாமல் போன “எந்த ராமச்சந்திரன் “ என்கிற கேள்வியைத் தொடர்ந்திருக்கக்கூடிய சம்பாஷணை தொடர்பு, பின்னர் நினைவு கூரப்பட்டு, மனிதர்களுக்கிடையில் பாதாளமாய் விழுந்துவிட்ட மௌனம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல்&lt;br /&gt;வழக்கம்போல் வெளிவாசல்&lt;br /&gt;திண்ணையில் சூரல் நாற்காலியில்&lt;br /&gt;உட்கார்ந்திருக்கிறான்.&lt;br /&gt;அந்தி மயங்கும் வேளை&lt;br /&gt;..&lt;br /&gt;மண்சுவரில் இலை, நிழல்களைக்&lt;br /&gt;காணும்போது கலையின்&lt;br /&gt;வசீகர சக்தி அவனை ஆட்கொள்கிறது.&lt;br /&gt;வெயில் மறைகிறது&lt;br /&gt;..&lt;br /&gt;கையெழுத்து மறையும் வேளை&lt;br /&gt;..&lt;br /&gt;“பட்”டென்று நிழல்கூட&lt;br /&gt;இல்லாமல் போகிறது. இருள்&lt;br /&gt;எங்கும் “கப்”பென்று பரவுகிறது.&lt;br /&gt;மரம், தந்திக்கம்பம், வீடு –&lt;br /&gt;எல்லாமே மறைகின்றன.&lt;br /&gt;எங்கும் “திட்டு திட்டாக”&lt;br /&gt;இருள் மாத்திரம் எஞ்சி நிற்கிறது. (பக்கம் 168)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல தொடங்கும் ஒரு அந்திவேளை – இருள் விழுந்தபிறகு, அசேதனப்பொருட்களின் சேதன வடிவம் “திட்டு திட்டாக “ எஞ்சி நிற்கிறது. பழக்கத்தின் களிம்பேறிப்போன மனதின் ரசிப்புத்தன்மைக்கு, கலையின் வசீகரச் சக்தி ஒரு புது அதிர்ச்சியை தந்து செல்கிறது : எது உண்மையில் அழகு ? வெயிலும் வெளிச்சமும் அதன் வெவ்வேறான நிறச்சாயல்களும் - அவை சிந்திவைக்கும் நிழல்களுமா அல்லது அங்கு பகல்-இரவு எப்பொழுதும் இருக்கும் இயற்கையா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பல உண்மைகளைச் சொல்கிறார்&lt;br /&gt;ஒரு உண்மையைச் சொல்லாமல் இருப்பதற்கு (பக்கம் 181 )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உண்மையை மறைக்கவேண்டுமானால், அதன் வெற்றிடத்தை மறைக்க அதன் அருகருகே இருக்கும் பிற பாதகமற்ற உண்மைகளை இலை, தழைகளை இழுத்துப்போட்டு ஒரு குழியை மூடுவதுபோல மூடவேண்டும்.&lt;br /&gt;நகுலனின் கலை&lt;br /&gt;&lt;br /&gt;“எவற்றின் நடமாடும் சாயைகள் நாம்? “ என்ற மௌனியின் கதாபாத்திரத்தின் கேள்வி நகுலனது கவிதைகளின் ஆதார கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. தனிமையின் சஞ்சாரத்தில் மொழியின் வார்த்தைகள் மீதும், புலன்கள்வழி அவரை வந்தடையும் காட்சிகள் மீதும், ஒலிகளின்மீதும் (குயிலின் கூகூ),உணர்வுநிலைகள் மீதும் அவரது பரந்த வாசிப்பின்மீதும், மரணத்தின்மீதும், தன்னிலிருந்து விடுபட்டு தன்னையே பார்த்துக்கொள்ளும் முயற்சிமீதும்(கோட்ஸ்டாண்ட்-ல் உடலை கழற்றி தொங்கவிட்டதும் காணமற்போகும் அவரது நிழல்) அவரது கேள்விகள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரல் நாற்காலி காலியாகிவிட்டது. ஆனால், நகுலனோடு பயணிக்கவிரும்பும் வாசகனின் பார்வையில் அது அசைந்தாடுவது இன்னும் நிற்கவில்லை.&lt;br /&gt;&lt;span style="color:#ffcc66;"&gt;@ @ @&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(புதிய வாசகனுக்கு நகுலனை அறிமுகப்படுத்தும் விதமாய் இக்கட்டுரை தொடங்கப்பட்டது. நகுலன் மேலும் அனுமதிக்கும் இன்னொரு சந்தர்ப்பத்தில் இது முற்றுப்பெறலாம் )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-2402387848807818402?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/2402387848807818402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=2402387848807818402' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/2402387848807818402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/2402387848807818402'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/10/blog-post_24.html' title='&apos;நகுலன் கவிதைகள்&apos; வாசிப்பு: ரெ பாண்டியன்'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-5961676243210585756</id><published>2007-10-24T20:52:00.000+08:00</published><updated>2007-10-24T22:25:16.132+08:00</updated><title type='text'>ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா .பாஸ்கருடனான கலந்துரையாடல்</title><content type='html'>ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா .பாஸ்கருடனான கலந்துரையாடல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;22.02.2007 ஞாயிறு அன்று சிங்கப்பூரில் அமைந்துள்ள அமோக்கிய நூலகப்பிரிவில் தீவிர இலக்கியவாசிப்பில் ஈடுபட்டிருக்கும்  வாசகர் வட்டம் ஓவியர் கா.பாஸ்கர் அவர்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு. செல்வம் அவர்கள் ஓவியர் கா. பாஸ்கர் அவர்களை அறிமுகம் செய்ததையடுத்து ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல் கலகலப்பாக அரங்கேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;கா. பாஸ்கர் சென்னை ஓவியக்கல்லூரி மாணவர் அங்கு ஓவியத்தில் முதுகலைபட்டத்தை முடித்து பல்வேறு ஓவியபோட்டிகளில் கலந்துகொண்டும்  தற்சமயம் சிங்கப்பூரில் கணிணி வரைகலைபிரிவில் பணிபுரிகிறார். ஓவியர் சந்துரு ஆர். வி.பாஸ்கர் தட்சணாமூர்த்தி இவர்களின் மாணவர் கா.பாஸ்கர் என்பது சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்திப்பை மிகப்பெரிய அனுபவமாக எடுத்துகொள்வதாக ஆரம்பித்து நான் இங்கு வரலாறுகளை பற்றி பேசவரவில்லை ஓவியத்தை மட்டும் பேசவந்துள்ளேன் என்றார்.  ஓவியம் எழுத்து இரண்டும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதாக கருதும் இவர் ஓவியம் பயின்ற கால கட்டத்தில் ஓவியத்தை தாண்டி வேறு பக்கங்களில் அதிகம் சென்றதில்லையாம். ஓவியக் கல்லூரியில் காலடி எடுத்துவைக்கும் முன் இவரது கனவு மிகப்பெரிய சினிமா போஸ்டர் டிசைனராக வருவதாக இருந்ததாம் .  ஆனால் கல்லூரியில் நுழைந்த பின்தான் ஓவியம் என்பது புகழுக்காகவும் எல்லோருக்காகவும் தெரியபடுத்தவேண்டும் என்பதற்காகவும் செய்யும் செயலாக இல்லை என்பதை உணர்ந்ததாகவும் கூறும் பாஸ்கர் ஓவியத்திற்கும் இவருக்கும் உள்ள தொடர்பினை நிர்ணயிக்கவே 5 ஆண்டுகள் தேவைபட்டதாம்.  இது ஓவியம் என்று இல்லை எழுத்து இன்னபிற கலைகளுக்கும் பொருந்துவதாகவும் கருதுகிறார். அவரது கல்லூரிக் காலத்து நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டார் . முதல் இரண்டுவருடங்களில் பார்ப்பதை வரைந்து பின் வந்த காலகட்டத்தில் ஓவியம் சார்ந்த சிற்பம் புகைப்படம் அச்சுக்கலை என்று பல்வேறுவகையான கலைகளுக்கு பயிற்சியளிக்கப்படும்போது தான் ஓவியன் அவன் எந்த திசையில் பயணிக்கவேண்டும் என்று முடிவு எடுப்பதாகவும் மேலும் ஓவியத்தில் புதுவகையான மாற்றங்களை புகுத்தவும் தயாராகின்றனர் என்கிறார். டெல்லியுளுள்ள மாடர்ன் ஆர்ட் காலரிக்கு ஒவிய போட்டிக்கு 10000 க்கும் மேற்ப்பட்ட படைப்புகள் வந்தால் அதில் சிறந்த ஓவியமாக 100 க்கும் குறைவான ஓவியம் தேர்ந்தெடுக் படுமாம் அப்பொழுது ஓவியரின் சிறப்பினை கண்டுகொள்ள முடியுமாம். கல்லூரி காலகட்டத்தில் இவரது படைப்புகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றதும் குறிப்பிடதக்கது . பயிற்சி காலகட்டத்தில் ஆபுர்வமாக சில விருந்தினர்கள் வருவார்கள் என்றும் அப்படி நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வினை நினைவுகூறும் இவர் சிவக்குமார் நடிகர் என்பதைவிட சிறந்த ஓவியராம் .&lt;br /&gt;&lt;br /&gt;16ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்து இன்று வரை ஓவியம் அடைந்த வளர்சியினை ரவிந்தான தாகூர் ரவிவர்மா ரெனாசன் மைக்கல் ஏஞ்சலோ எம்ரான் வான்கோ பிக்காசோ மோன்ரியான் சந்துரு ஆர். வி.பாஸ்கர் அல்போன்சா என்று வரிசைபடுத்தி எங்களுக்கு காண்பித்தது என்போன்றவர்களுக்கு ஓவியம் பற்றிய புரிதலை ஏற்படுத்த தூண்டுவதாக அமைந்தது. ஓவியனும் ஓவியனும் சந்தித்து கலந்துரையாடுவதை விட ஒரு ஓவியனும் எழுத்தாளனும் சந்திக்கும்போது இருவரிடம்மிருந்தும் வெளிப்படும் படைப்புகள் மிகச்சிறந்ததாக வருவதாக கருதும் இவர் சிங்கப்பூரில் கிடைந்த நட்பு வட்டங்கள் தான் எழுத்தின் மீதான புரிதலை தூண்டியதாம். பார்ப்பதை வரைவதைவிட நாம் பார்த்ததில் நினைப்பதை வரையஆரம்பித்த இவர் எல்லா இசங்களிளும் குழு மனப்பான்மை இருந்ததாகவும் அதனால்தான் கலைகள் ஒவ்வொருகாலகட்டத்திலும் பல்வேறு விதமான வளர்ச்சியினை எட்டியுள்ளதாம். சினிமா புகைப்படகலைஞர்கள் பின்னோக்கிசென்று ஓவியத்தில்லிருந்தான் பல்வேறு காட்சி அமைப்புகளை அறிந்து தற்பொழுது சினிமாவில் பயன்படுத்துவதாக சொல்லி 18 ம் நூற்றாண்டின் ஓவியத்தை பிரதிபலிக்கும் சில தமிழ்சினிமாவை குறிப்பிட்டபோது சிரிப்பலை எழுந்து அடங்கியது.  மரபு பற்றி தெரிந்து கொள்ளும் போதுதான் நவின ஓவியத்தை சிறப்பாக வiயைமுடியும் என்று நம்பும் இவர் இலக்கியங்கள் பற்றியும் அதன் மீதான குழுமனப்பான்மை பற்றியும் ஆங்காங்கே தொட்டுச்சென்றது அவரது மனஅதிர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்தது .  எகிப்திய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது ஆரம்பகாலகட்டத்திலேயே நாம் மிகச்சிறந்த ஓவியத்தை வரைய ஆரம்பித்துவிட்டதாகவும் நம்மிடமிருந்துதான் ஓவியத்திற்கான வண்ணங்களை ஆரம்பகாலகட்டத்தில் எகிப்தியர்கள் எடுத்துச்சென்றதாகவும் அதற்கான வரலாறுகளை தான் நாம் பத்திரப்படுத்த தவறிதை குறிப்பிட்டு பிரிட்டிஷ்சாரின் வருகையால் நாம் நம்முடைய அஜந்தா குகைகள் உட்பட பல்வேறு ஓவியங்ளை கண்டுகொள்ள நேரிட்டதையும் விவரித்தது ஓவியத்தின் மீதான அதித ஈடுபாட்டை காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் விமர்சகர் இந்திரன் அவர்கள் எழுதிய நவின ஓவியம் என்னும்  நூலை வாங்கி படித்தால் தமிழக ஓவியர்கள் பற்றியும் நவின ஒவியத்தை பற்றியும் அறிந்துகொள்ள உதவுவதாகவும் மேலும் கும்பகோணத்தை சேர்ந்த எழுத்தாளர் தேனுகா அவர்கள் பியத்மோன்ரியான் பற்றி எழுதிய புத்தகமும் ஓவியம் பற்றிய புரிதலை பூர்த்திசெய்வதாக இருக்கும் படைப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மரபு நவினம் என்று மாறிமாறி பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இவரது எண்ணம் இவரது படைப்புகளை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது அவ்வளவுதானாம். அத்தலைமுறையின் தேவைகளுக்கு ஏற்ப அவர்கள் வேண்டியதை எடுத்துகொள்ளட்டுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின் கலந்துரையாடலில் கேட்கப்பட்ட ஓவியத்தின் மூலம் சழுகத்திற்கு என்இதன் பின் கலந்துரையாடலில் கேட்கப்பட்ட ஓவியத்தின் மூலம் சழுகத்திற்கு என்ன சொல்ல வருகிறீர்கள் ஓவியத்தை நவின ஓவியத்தை புரிந்துகொள்வது எப்படி வரலாறுகளை ஓவியன் அடுத்த தலைமுறைக்கு கடத்திச்செல்கிறானா அப்படி நீங்கள் செய்கிறீர்களா என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஓவியர் கா. பாஸ்கருடனான இந்த கலந்துரையாடல் எழுத்தாளர்கள் திருமதி . ஜெயந்தி சங்கர் திருமதி . மாதங்கி திரு.கண்ணபிரான் கவிஞர் திரு. பாலுமணிமாறன் தீவிர இலக்கிய வாசிப்பாளர் திரு. மணி  உள்ளிட்ட கலந்துகொண்ட இலக்கிய ஆர்வர்களை ஓவியத்தின் மீதான புரிதல் ஓவியம் மற்றும் எழுத்துடனான தொடர்பை அறிதல் என்று பயனுள்ளதாக அமைந்தது. என்போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு படைப்பினை எப்படி அணுகுவது என்று கண்டுகொள்ள களமாக இந்த கலந்துரையாடல் அமைந்ததில் கலந்துகொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியே .&lt;br /&gt;&lt;br /&gt;அருமையான கலந்துரையாடலை ஏற்பாடு செய்த வாசகர் வட்டம் திரு          ரெ. பாண்டியன் உள்ளிட்ட நண்பர்கள் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் கிளை பிரிவான அமோக்கியநூலகம் மற்றும் நிகழ்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரையிருந்து எங்களின் தேவைகளை பூர்த்தி செய்ததோடு அருமையான சிற்றுண்டியை கொடுத்து உபசரித்த நூலகத்தின் நிர்வாகியில் ஒருவரான நிர்மலா அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை  பதிவு செய்கிறேன் .&lt;br /&gt;குறிப்பு:&lt;br /&gt;ஆரஞ்சு வண்ண ஆடை அணிந்திருப்பவர் ஓவியர் கா. பாஸ்கர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-5961676243210585756?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/5961676243210585756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=5961676243210585756' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/5961676243210585756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/5961676243210585756'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/10/blog-post.html' title='ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா .பாஸ்கருடனான கலந்துரையாடல்'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-6917153283327676723</id><published>2007-07-10T22:24:00.000+08:00</published><updated>2007-12-11T11:17:46.323+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இராமகண்ணபிரானின் &apos;நாடோடிகள்&apos; - எம்.கே.குமார்'/><title type='text'>இராமகண்ணபிரானின் 'நாடோடிகள்' - எம். கே. குமார்.</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#33ccff;"&gt;இராம கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" - ஒரு பார்வை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#33ccff;"&gt;எம்-கே. குமார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் தோன்றிய முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து என்பது தமிழிலக்கிய ஆய்வளர்கள் சிலரின் கூற்று. பூமிப்பந்து முழுவதும் புலம்பெயர்ந்த தமிழினத்தில் தமிழின் கலாச்சாரத்தொன்மையை பாரம்பரியத்தை நீண்டகாலம் தரித்திருந்ததும் தேசிய அளவில் இன்றுவரை பெருமைப்படுத்துவதும் தமிழினத்திற்கு சிங்கப்பூரில் கிடைத்திருக்கும் இன்னுமொரு சிறப்பு. திரு.கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" கதை இத்தமிழ் சார்ந்ததும் அதன் தலைமுறைகள் சார்ந்ததுமாய் இருக்கிறது.&lt;br /&gt;கதையின் நாயகர்கள்: 1) தனபால் மற்றும் 2) பார்த்திபன்&lt;br /&gt;கதைக்களம்: புலம்பெயர்ந்தோர்களின் வாழ்வும் திசைமாறும் பயணங்களும்&lt;br /&gt;திருப்பம்: ஏதுமில்லை! திருந்துதல் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;பிற பாத்திரங்கள்: தனபாலின் மனைவி பத்மினி, மகள் ரூபா, முன்வழுக்கைத் தலைக்காரர், பார்த்திபனின் மனைவி சாந்தா&lt;br /&gt;தனபாலின் குணங்கள்:&lt;br /&gt;தற்பெருமை பேசுபவன்&lt;br /&gt;கடின உழைப்பாளி எனினும் அடிக்கடி அனைத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பவன்&lt;br /&gt;வசதியான பெண்ணை திருமணம் செய்கிறான்&lt;br /&gt;எதையும் எளிதில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதவன்&lt;br /&gt;மேலைநாட்டு பழக்கவழக்கங்களில் ஈடுபாடு உள்ளவன்&lt;br /&gt;வசதியான வாழ்வு மீதும் சொகுசு மீதும் மிகுந்த வேட்கை உள்ளவன்&lt;br /&gt;தமிழினம் சார்ந்த மனிதர்களிடமிருந்து விலகியே வாழ நினைப்பவன்&lt;br /&gt;பார்த்திபனின் குணங்கள்:&lt;br /&gt;மாமா - அக்கா மீது அன்புடையவன்&lt;br /&gt;தமிழின் மீதும் பற்றுடையவன்&lt;br /&gt;அக்கா பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்&lt;br /&gt;போதும் என்ற மனத்துடன் வாழ்கிறான்&lt;br /&gt;தொண்டூழியம் புரிபவன்&lt;br /&gt;பிறந்தநாள் கொண்டாட்டங்களில் விருப்பமற்றவன்&lt;br /&gt;வேறுபட்ட இரு குணாதிசயங்களைக் கொண்ட இரு நண்பர்களின் கதை! &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;கதையின் ஒரு நாயகன் தனபால், சிறுவயது முதலே அவமானப்படுத்தப்படும் தமிழ்க் குடும்பச் சூழலுக்குள், வறுமையில் வளர்கிறான். விளைவு, அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை வாழ்க்கையில் நாடுகிறான். படித்து முன்னேறி, வசதியான பெண்ணைத் திருமணம் செய்து, வசதியான வாழ்க்கை வேண்டி வெளிநாடு சென்று மகளைப்பிரிந்து, மனைவியைப் பிரிந்து தனிமையில் வாழும்போது அவனெதிரில் விரக்தியுடன் சிரிக்கிறது அவனது நாடோடி வாழ்க்கை! &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;கதையின் இன்னொரு நாயகன் பார்த்திபனுக்கோ இளவயது முதலே பொதுநோக்கமும் தமிழினம் சார்ந்த செயற்பாடுகளும் மேல்நோக்கியதாகவே (இளவயது முதலே எல்லாம் இனியனவாய் அமைந்ததும் இதற்கு ஒரு காரணமோ?) அமைகின்றன. படித்து முடித்து ஒரே கம்பெனியில் வேலைசெய்து தமிழ் மன்றம் அமைத்து தொண்டூழியம் புரிந்துவருகிறான். இரு புலம்பெயர்ந்தோர் வாழ்வில் எவருடையது சிறந்த வாழ்க்கை என்பதை கருத்துக்கள் மூலமும் சிந்தனை ஓட்டங்கள் மூலமும் பார்வைக்கு வைக்கிறார் ஆசிரியர். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;நேரெதிர் குணாதிசயங்களைக்கொண்ட இரு நபர்களது கதையென்பதால் கதையை அதன் போக்கிலே விட்டிருக்கிறார் ஆசிரியர். ஆங்காங்கு சிந்தனைகளும் கருத்துகளும் பரவிக்கிடக்கின்றன. தனபாலிடம் கிளைவிரித்த தமிழ்க் கலாச்சாரமென்பது எவ்வித பரவுதலும் இன்றி முறிபட்டுப்போனது பற்றுதலற்ற நாடோடி வாழ்க்கையின் சாரம் என்றால் அந்த பரவுதல் பயனற்றுப்போனதற்கும் ஒரு தமிழ்க்கூட்டமே காரணமாய் இருந்திருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;விலங்குகளை விட சிறப்பாய் குரைக்கும் பெண்கள், அருமையாய் ஆப்பிளைக் கவ்வும் ஆண்கள், கொன்னிக்கொன்னிப் பேசப்படும் தமிழ் என குறுநகை ஏற்படுத்தும் மொழி கிடக்கிறது. தனபாலுக்கும் பியூனுக்கும் நடந்ததென்ன என்பது வெளிப்படையாய் தெரியவில்லை, அது அவசியமுமில்லை. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த இக்கதையின் கரு, நிகழ்கால வாழ்க்கையின் வினாக்களை பிரதிபலிப்பதாகவும் அர்த்தமுள்ள சில தருணங்களுக்கு விடை சொல்வதாயும் அமைகிறது. இது இக்கதையின் இன்றுவரையான உயிர்ப்புத்தன்மையை நிலைநாட்டுகிறது.&lt;br /&gt;முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுந்த இக்கதையின் நீட்சி குறித்தான சிந்தனைகளை சிங்கப்பூர தமிழர்களிடம் இன்று நாம் காண விழையும்போது ஏமாற்றமே மிஞ்சுவது அதிர்ச்சியை அளிக்கிறது. கடந்த முப்பதாண்டுகளில் சிங்கப்பூர் எவ்வாறு பொருளாதாரத்தில் சிறந்த நாடாக முன்னேறிவிட்டிருக்கிறது என்பதையும் மாறாக தமிழ் எவ்வாறு இருக்கிறது என்பதையும் பார்க்கையில் இக்கதையின் பேசுபொருள் இன்றும் சிங்கப்பூரை முன்னிறுத்தி விவாதத்திற்குரியதாகவே இருப்பதாக எனக்குப்படுகிறது.&lt;br /&gt;புலம்பெயரும் தனிமனிதன் ஒவ்வொருவனுடைய வாழ்வும் பிடுங்கி நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்றது. தழைவதும் துளிர்ப்பதும் காய்ப்பதும் கனிதருவதும் எதனாலானது என்பது இக்கதை போலவே சிந்தனைக்குரியதாகும். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#33cc00;"&gt;@ @ @&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33ccff;"&gt;மா. இளங்கண்ணன் அவர்களின் "பரிதியைக் கண்ட பனி" - ஒரு பார்வை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;span style="color:#33ccff;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#33ccff;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;கதையின் நாயகன்: அண்ணாமலை&lt;br /&gt;கதைக்களம்: தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பு&lt;br /&gt;பிற பாத்திரங்கள்: அண்ணாமலையின் மகன் திருமேனி, அவரது மனைவி, மகள் மற்றும் அம்பலவானர்.&lt;br /&gt;முடிவு: சுபம்&lt;br /&gt;திருப்பம்: முடிவுக்கு முன் வரும் பிணவண்டி&lt;br /&gt;குப்பை அள்ளும் அண்ணாமலை தன் மகன் திருமேனியை நன்கு படிக்க வைக்க நினைக்கிறார். வசதியில்லாத அவருடைய ஆசையை, மாலை நேரத்தில் அவர் வேலைபார்க்கும் தோட்டத்தின் உரிமையாளர் அம்பலவாணர் ஆதரித்து உதவ முன்வருகிறார். அவ்வாறு முன்வரும் நேரத்தில் விதி அண்ணாமலையின் மகன் திருமேனியை விலை பேசுகிறது. திருமேனிக்கு என்ன ஆனது, அண்ணாமலையின் கனவு பலிக்குமா என்பதயெல்லாம் பரிதியைக் கண்ட பனிபோல மாறிய அண்ணாமலையின் மனம் வழியாகச் சொல்லி கதை முடிகிறது. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;கதை நிகழ்காலத்தில் சொல்லப்படுவதால் சைக்கிளில் செல்லும் அண்ணாமலையை நாமும் பின் தொடர்ந்து ஓடுவது போல சுவாரஸ்யமாய் இருகிறது நடை. திருமேனிக்கு நடந்தது என்ன என்பதைச் சொல்ல இடைவேளையையும் பிறகு இன்னும் உயிரோடுதான் இருக்கிறானா என்பதைச் சொல்ல, முடிவையும் தேர்ந்தெடுத்திருப்பது கதையின் ஓட்டத்திற்கு பலம். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;அவசரம் புரியாது கீழிறங்கும் மின்தூக்கியை பொறுக்காத அப்பா! கதையில் ஒரு பாவப்பட்ட தந்தையின் மனம் பரிதவிப்பதைச் சொல்வது சிறப்பாயிருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;அம்பலவாணர் நல்ல எஜமானர். இவரைப்போன்றோர் கதைகளில் மட்டுமே கிடைக்கும் அபாக்கியம் அதிகம் உண்டு. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;தலைப்பு கவிதை போன்றது எனினும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#cc66cc;"&gt;@ @ @&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-6917153283327676723?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/6917153283327676723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=6917153283327676723' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/6917153283327676723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/6917153283327676723'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/07/ramakannapirans-nadoodi-review-by.html' title='இராமகண்ணபிரானின் &apos;நாடோடிகள்&apos; - எம். கே. குமார்.'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-5380652522724874079</id><published>2007-07-07T12:00:00.000+08:00</published><updated>2007-07-07T12:04:47.440+08:00</updated><title type='text'>மா. இளங்கண்ணன் அவர்களின் "பரிதியைக் கண்ட பனி" - ஒரு பார்வை. -எம்.கே.குமார்.</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(51, 204, 255);font-size:130%;" &gt;மா. இளங்கண்ணன் அவர்களின் "பரிதியைக் கண்ட பனி" - ஒரு பார்வை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 204, 255);"&gt;.  -&lt;span style="color: rgb(255, 102, 102);"&gt;எம்.கே.குமார்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 102);"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகன்: அண்ணாமலைகதைக்களம்: தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்புபிற பாத்திரங்கள்: அண்ணாமலையின் மகன் திருமேனி, அவரது மனைவி, மகள் மற்றும் அம்பலவானர்.முடிவு: சுபம்திருப்பம்: முடிவுக்கு முன் வரும் பிணவண்டி குப்பை அள்ளும் அண்ணாமலை தன் மகன் திருமேனியை நன்கு படிக்க வைக்க நினைக்கிறார். வசதியில்லாத அவருடைய ஆசையை, மாலை நேரத்தில் அவர் வேலைபார்க்கும் தோட்டத்தின் உரிமையாளர் அம்பலவாணர் ஆதரித்து உதவ முன்வருகிறார். அவ்வாறு முன்வரும் நேரத்தில் விதி அண்ணாமலையின் மகன் திருமேனியை விலை பேசுகிறது. திருமேனிக்கு என்ன ஆனது, அண்ணாமலையின் கனவு பலிக்குமா என்பதயெல்லாம் பரிதியைக் கண்ட பனிபோல மாறிய அண்ணாமலையின் மனம் வழியாகச் சொல்லி கதை முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதை நிகழ்காலத்தில் சொல்லப்படுவதால் சைக்கிளில் செல்லும் அண்ணாமலையை நாமும் பின் தொடர்ந்து ஓடுவது போல சுவாரஸ்யமாய் இருகிறது நடை. திருமேனிக்கு நடந்தது என்ன என்பதைச் சொல்ல இடைவேளையையும் பிறகு இன்னும் உயிரோடுதான் இருக்கிறானா என்பதைச் சொல்ல, முடிவையும் தேர்ந்தெடுத்திருப்பது கதையின் ஓட்டத்திற்கு பலம்.&lt;br /&gt;அவசரம் புரியாது கீழிறங்கும் மின்தூக்கியை பொறுக்காத அப்பா! கதையில் ஒரு பாவப்பட்ட தந்தையின் மனம் பரிதவிப்பதைச் சொல்வது சிறப்பாயிருக்கிறது.&lt;br /&gt;அம்பலவாணர் நல்ல எஜமானர். இவரைப்போன்றோர் கதைகளில் மட்டுமே கிடைக்கும் அபாக்கியம் அதிகம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைப்பு கவிதை போன்றது எனினும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 102);"&gt;@  @  @&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-5380652522724874079?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/5380652522724874079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=5380652522724874079' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/5380652522724874079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/5380652522724874079'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/07/blog-post_9717.html' title='மா. இளங்கண்ணன் அவர்களின் &quot;பரிதியைக் கண்ட பனி&quot; - ஒரு பார்வை. -எம்.கே.குமார்.'/><author><name>மானஸாஜென்</name><uri>http://www.blogger.com/profile/13032688617271305971</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_xMVCjgn17LE/SQaQNxjtcCI/AAAAAAAAAC0/qbjFW26RHUQ/S220/sanchan1_0.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-946558325703214822</id><published>2007-07-07T11:25:00.000+08:00</published><updated>2007-07-07T11:58:16.437+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Review by Ramesh Subramanian.'/><title type='text'>“வாழ்வெனும் மூங்கில் படல்கள் ”</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(51, 255, 51); font-weight: bold;"&gt;“வாழ்வெனும் மூங்கில் படல்கள் ”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 255, 51); font-weight: bold;"&gt;சா. கந்தசாமியின், ‘சூரியவம்சம்’ ஒரு வாசிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 153, 0); font-weight: bold;"&gt;சுப்பிரமணியன் ரமேஷ் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    சூரியவம்சம் நாவல் என்ன சொல்ல வருகிறது என்பதை இருவிதங்களில் சொல்லலாம். முதலாவதாக அது எதையும் சொல்ல முயலவில்லை அல்லது இப்படியும் சொல்லலாம், ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படத்தின் மூலமாக சத்யஜித் ரே என்ன சொல்ல முயன்றாரோ அதைப் போன்ற ஒன்றை சா. கந்தசாமி சூரியவம்சம் மூலமாகத் தர முயன்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 153, 102);"&gt;@ @ @&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    செம்பொத்துகளும், நாரைகளும், கிளிகளும், பட்டாம்பூச்சிகளும் சிறகடிக்கும் காவேரியாற்றின் கரைகளில் செல்லைய்யா வளர்கின்றான். மெல்லிய சூரியனின் கதிர்கள் படர அவன் வளர்ந்து தளிர்க்கின்றான். தொட்டியிலிருந்து எடுத்து யாரோ அவனை மண்ணில் பதியமிடுகின்றார்கள். யாரோ அவனுக்குத் தண்ணீர் ஊற்றுகின்றனர், யாரோ அவனுக்கு உரமிடுகின்றார்கள். மெல்லிய உற்சாகம் குமிழிடும் ஆனந்தம் அவனுக்குள் எப்போதும் பொங்கியபடி இருக்கின்றது, அவன் வெறுமனே வளர்கின்றான். யாரோ அவன் கிளைகளைக் கழிக்கிறார்கள், யாரோ அவனுக்கு மண் அணைக்கிறார்கள், யாரோ அவன் மீது இலக்கமிடுகிறார்கள், யாரோ அவன் மீது ஆணி அறைகிறார்கள், யாரோ அவனைக் காயப்படுத்துகிறார்கள்,  தனக்குத் தரப்படும் யாவற்றையும் அவன் ஏற்று வளர்கிறான், நன்மைகளையும், தீமைகளையும் உண்டு வளர்கிறான், ஒவ்வொரு அனுபவங்களும் அவனை விசாலப்படுத்துகிறது, முன்னே தள்ளுகிறது. புதுச் சூழலுக்குள் முழு ஈடுபாடு கொண்டவனாய் மறுபடி செல்லைய்யா வளர்கிறான். செம்பாத்துகளும், கிளிகளும், பட்டாம்பூச்சிகளும் பறக்கும் சூழலில் தன்னுடைய பிரிய சேவலை அணைத்தபடி ஆட்டுக்குட்டிகள் பின் தொடர செல்லையா சூரியனைப் பின் தொடர்ந்து ஒரு நதியாய் நீண்டு வளர்ந்து கொண்டேயிருக்கிறான். செல்லைய்யாவைத் தொட முயலும் வாசகர்கள் தங்களை தாங்களே கொஞ்சமேனும் தொட்டுக் கொள்கிறார்கள். இதுதான் அந்த நாவலின் சாரம் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    நாவல் இரண்டு மனிதர்களைப் பற்றியது. ஒருவன் செல்லைய்யா மற்றொருவர் அவனுடைய அப்பா பெரியசாமி தேவர். அவர் அருமையானவராய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தவர் இறக்கும் தருவாயிலும் சொத்தென தம்முடைய மகனைத்தான் காட்டமுடிகிறது. சொர்ணம் வயிற்றுப்பாட்டிற்கே ஏங்குகிறவளாக மாறிப்போனதில் பெரியசாமி தேவரின் கையாலாகாதனத்தின் மீது ஏக கசப்பு கொண்டவளாகிறாள். செல்லைய்யா பெரியசாமியைக் கொண்டிருக்கிறான். அவன் அக்கரையும் உலகமும் பெரியசாமியைப் போலவே இருப்பதை சொர்ணம் உள்ளூர உணர்ந்தே இருக்கிறாள். இது செல்லைய்யா மீது கடுமையை ஏற்படுத்துகிறது. வள்ளியூர் சேது அக்காவானாலும் சரி, தங்கக் காப்பு தாத்தாவானாலும் சரி செல்லைய்யாவை பெரியசாமியின் மகனென்றே அடையாளப்படுத்துகின்றனர். சொர்ணத்தின் மகனென்பதில் அவர்களுக்கு ஒற்றுமை ஏதும் தென்படுவதில்லை. செல்லையா பெரியசாமியையே கொண்டிருக்கிறான் என்று உறுதி படுத்துகின்றனர். செல்லைய்யாவிற்கும் தன் தந்தையின் குணங்கள் மீதும் அவருடைய விழுமியங்கள் மீதும் இயெல்பாகவே மதிப்பு இருக்கிறது. விற்றுப்போன வீட்டின் மூங்கில் படல்களை மழையிலும் மண் அணைத்து சாயாமல் பார்த்துக் கொள்கிறான், தன் தந்தையைப் போலவே காலையில் தோட்டம் முழுதும் உலவச் செல்லுவதிலும், குளக்கரைகளைப் பார்த்துக் கொள்வதிலும், சேவல், ஆடுகளை நேசிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறான். தந்தையைப் போலவே மகனையும் வாழ்வு சூதடும் போது இவன் தன் ஆர்வத்தாலும், அக்கரையாலும் மேலெழுகிறான். தன் குடும்பத்தின் வறுமையை வெல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    செல்லைய்யா என்ற துள்ளித்திரியும் சிறுவன் மெல்ல அனுபவங்களால் விசாலப்பட்டு, மனிதர்களால் புடமிடப்பட்டு திடம் பெற்று வாலிபனாகிறான். பொதுவாழ்வினை நோக்கி விரிகிறான். தங்கவேலு, சோர்ணம், அல்லியூர் மணி, பாப்பாவின் கணவன் கோவிந்தன், டில்லி, பாபு போன்றவர்கள் கெடுப்பவர்களாகவும் சாம்பசிவம், ராமு, தங்க  காப்பு தாத்தா, பாக்கியம், மீனாட்சி, பாப்பா, மேரி, ராமன் போன்றோர் கொடுப்பவர்களாகவும் அறிமுகம் கொள்கிறார்கள் என்றபோதும் அவன் வாழ்க்கையை அதுவாகவே ஏற்றுக் கொள்கிறான். அதனால்தான் அவன் அம்மாவிற்கு வட்டிக்கு கடன் வாங்கியேனும் பணம் அனுப்ப முடிகிறது. தங்கவேலுவைப் போலீஸ் அடித்து விலங்கிட்டுச் சென்ற காட்சிக்கு மறுக முடிகிறது. டில்லியோடும், பாபுவோடும் மறுபடி சகஜமாய் பேச முடிகிறது. பாம்புச் சட்டையைப் போலவே, அவனுடைய படிப்பும் பறிபோகிறது, அவனுடைய செல்ல ஆடும், வீடும், மேரியும் அவனுடைய உலகத்திலிருந்து பிடிங்கிக் கொள்ளப்படுகிறார்கள். இயல்பாகச் சமன் செய்து கொண்டு கிடைத்த புதுச்சூழலில் ஆர்வமும் அக்கரையும் கொண்டு வளர்கிறான். ‘செல்லைய்யா செஞ்சா சரியாத்தான் இருக்கும்’ என்பதை சாம்பசிவம், ஊமை, ராமு, மாணிக்கம், பாண்டியன், ராமன் உட்பட அனைவரும் உணருகிறார்கள் சொல்கிறார்கள், அந்த திறமைக்கான ஆமோதிப்பாகவே அவர்கள் அவனை மேலேற்றிவிடவும் செய்கிறார்கள். கபடற்ற  செல்லைய்யா நகர வாழ்வின் இருண்ட பக்கங்களையும் எதிர் கொள்ள நேர்கிறது. ராணி, குடிப்பது, புகைப்பதுமான சமன் குலைவை வென்று மேலும் திடம் கொள்கிறான்.&lt;br /&gt;    இயற்கையோடு இயைந்த முதல் சில அத்யாயங்களின் ஊடாகக் கதை பெரிதும் நகர்ந்து விடுவதில்லை என்றாலும் அது சாதுர்யமான மனத்தயாரிப்பை செய்கிறது. சென்னைக்கு வந்த பின் வரும் அத்தியாயங்களில் ஒரு வேகமும் பொறுமையின்மையும் தெரிகிறது. ஊழலும், அரசியலும் இயக்கும் இந்திய தொழிற்சங்க அமைப்புகளில் அக்கரையான இளம் வாலிபன், யாரையும் சார்ந்திருக்காமல் வெகு வேகமாக துணைச் செயலாளராக முடியும் என்ற நினைப்பே சிரிப்பை வரவழைக்கிறது. செல்லைய்யாவிற்கு அபரீதமான ஆற்றல் இருக்கிறதென்றாலும் அவன் பொது வாழ்வின் மேல் நாட்டம் கொள்வதற்கான இயல்பான காரணங்கள் ஏதும் நாவலில் விளக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 204, 0);"&gt;@  @  @&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-946558325703214822?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/946558325703214822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=946558325703214822' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/946558325703214822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/946558325703214822'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/07/blog-post_1781.html' title='“வாழ்வெனும் மூங்கில் படல்கள் ”'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-4697661725617080462</id><published>2007-07-07T11:21:00.000+08:00</published><updated>2007-07-07T12:00:17.222+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Review by M.K.Kumar'/><title type='text'>இராம கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" - ஒரு பார்வை.- எம்.கே.குமார்</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(255, 153, 0);"&gt;இராம கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" - ஒரு பார்வை.- எம்.கே.குமார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  தமிழில் தோன்றிய முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து என்பது தமிழிலக்கிய ஆய்வளர்கள் சிலரின் கூற்று. பூமிப்பந்து முழுவதும் புலம்பெயர்ந்த தமிழினத்தில் தமிழின் கலாச்சாரத்தொன்மையை பாரம்பரியத்தை நீண்டகாலம் தரித்திருந்ததும் தேசிய அளவில் இன்றுவரை பெருமைப்படுத்துவதும் தமிழினத்திற்கு சிங்கப்பூரில் கிடைத்திருக்கும் இன்னுமொரு சிறப்பு. திரு.கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" கதை இத்தமிழ் சார்ந்ததும் அதன் தலைமுறைகள் சார்ந்ததுமாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகர்கள்: 1) தனபால் மற்றும் 2) பார்த்திபன் கதைக்களம்: புலம்பெயர்ந்தோர்களின் வாழ்வும் திசைமாறும் பயணங்களும்திருப்பம்: ஏதுமில்லை! திருந்துதல் எதிர்பார்க்கப்படுகிறது.பிற பாத்திரங்கள்: தனபாலின் மனைவி பத்மினி, மகள் ரூபா, முன்வழுக்கைத் தலைக்காரர், பார்த்திபனின் மனைவி சாந்தாதனபாலின் குணங்கள்:தற்பெருமை பேசுபவன் கடின உழைப்பாளி எனினும் அடிக்கடி அனைத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பவன்வசதியான பெண்ணை திருமணம் செய்கிறான்எதையும் எளிதில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதவன்மேலைநாட்டு பழக்கவழக்கங்களில் ஈடுபாடு உள்ளவன்வசதியான வாழ்வு மீதும் சொகுசு மீதும் மிகுந்த வேட்கை உள்ளவன்தமிழினம் சார்ந்த மனிதர்களிடமிருந்து விலகியே வாழ நினைப்பவன்&lt;br /&gt;பார்த்திபனின் குணங்கள்:மாமா - அக்கா மீது அன்புடையவன்தமிழின் மீதும் பற்றுடையவன்அக்கா பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்போதும் என்ற மனத்துடன் வாழ்கிறான்தொண்டூழியம் புரிபவன்பிறந்தநாள் கொண்டாட்டங்களில் விருப்பமற்றவன் வேறுபட்ட இரு குணாதிசயங்களைக் கொண்ட இரு நண்பர்களின் கதை! கதையின் ஒரு நாயகன் தனபால், சிறுவயது முதலே அவமானப்படுத்தப்படும் தமிழ்க் குடும்பச் சூழலுக்குள், வறுமையில் வளர்கிறான். விளைவு, அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை வாழ்க்கையில் நாடுகிறான். படித்து முன்னேறி, வசதியான பெண்ணைத் திருமணம் செய்து, வசதியான வாழ்க்கை வேண்டி வெளிநாடு சென்று மகளைப்பிரிந்து, மனைவியைப் பிரிந்து தனிமையில் வாழும்போது அவனெதிரில் விரக்தியுடன் சிரிக்கிறது அவனது நாடோடி வாழ்க்கை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் இன்னொரு நாயகன் பார்த்திபனுக்கோ இளவயது முதலே பொதுநோக்கமும் தமிழினம் சார்ந்த செயற்பாடுகளும் மேல்நோக்கியதாகவே (இளவயது முதலே எல்லாம் இனியனவாய் அமைந்ததும் இதற்கு ஒரு காரணமோ?) அமைகின்றன.   படித்து முடித்து ஒரே கம்பெனியில் வேலைசெய்து தமிழ் மன்றம் அமைத்து தொண்டூழியம் புரிந்துவருகிறான். இரு புலம்பெயர்ந்தோர் வாழ்வில் எவருடையது சிறந்த வாழ்க்கை என்பதை கருத்துக்கள் மூலமும் சிந்தனை ஓட்டங்கள் மூலமும் பார்வைக்கு வைக்கிறார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரெதிர் குணாதிசயங்களைக்கொண்ட இரு நபர்களது கதையென்பதால் கதையை அதன் போக்கிலே விட்டிருக்கிறார் ஆசிரியர். ஆங்காங்கு சிந்தனைகளும் கருத்துகளும் பரவிக்கிடக்கின்றன. தனபாலிடம் கிளைவிரித்த தமிழ்க் கலாச்சாரமென்பது எவ்வித பரவுதலும் இன்றி முறிபட்டுப்போனது பற்றுதலற்ற நாடோடி வாழ்க்கையின் சாரம் என்றால் அந்த பரவுதல் பயனற்றுப்போனதற்கும் ஒரு தமிழ்க்கூட்டமே காரணமாய் இருந்திருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.&lt;br /&gt;விலங்குகளை விட சிறப்பாய் குரைக்கும் பெண்கள், அருமையாய் ஆப்பிளைக் கவ்வும் ஆண்கள், கொன்னிக்கொன்னிப் பேசப்படும் தமிழ் என குறுநகை ஏற்படுத்தும் மொழி கிடக்கிறது. தனபாலுக்கும் பியூனுக்கும் நடந்ததென்ன என்பது வெளிப்படையாய் தெரியவில்லை, அது அவசியமுமில்லை.&lt;br /&gt;பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த இக்கதையின் கரு, நிகழ்கால வாழ்க்கையின் வினாக்களை பிரதிபலிப்பதாகவும் அர்த்தமுள்ள சில தருணங்களுக்கு விடை சொல்வதாயும் அமைகிறது. இது இக்கதையின் இன்றுவரையான உயிர்ப்புத்தன்மையை நிலைநாட்டுகிறது.&lt;br /&gt;முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுந்த இக்கதையின் நீட்சி குறித்தான சிந்தனைகளை சிங்கப்பூர தமிழர்களிடம் இன்று நாம் காண விழையும்போது ஏமாற்றமே மிஞ்சுவது அதிர்ச்சியை அளிக்கிறது. கடந்த முப்பதாண்டுகளில் சிங்கப்பூர் எவ்வாறு பொருளாதாரத்தில் சிறந்த நாடாக முன்னேறிவிட்டிருக்கிறது என்பதையும் மாறாக தமிழ் எவ்வாறு இருக்கிறது என்பதையும் பார்க்கையில் இக்கதையின் பேசுபொருள் இன்றும் சிங்கப்பூரை முன்னிறுத்தி விவாதத்திற்குரியதாகவே இருப்பதாக எனக்குப்படுகிறது.&lt;br /&gt;புலம்பெயரும் தனிமனிதன் ஒவ்வொருவனுடைய வாழ்வும் பிடுங்கி நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்றது. தழைவதும் துளிர்ப்பதும் காய்ப்பதும் கனிதருவதும் எதனாலானது என்பது இக்கதை போலவே சிந்தனைக்குரியதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;@ @ @&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-4697661725617080462?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/4697661725617080462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=4697661725617080462' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/4697661725617080462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/4697661725617080462'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/07/blog-post_8341.html' title='இராம கண்ணபிரான் அவர்களின் &quot;நாடோடிகள்&quot; - ஒரு பார்வை.- எம்.கே.குமார்'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-1319325772670143992</id><published>2007-07-07T11:05:00.000+08:00</published><updated>2007-07-07T11:06:25.358+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='review by Ramesh  Subramaniam'/><title type='text'></title><content type='html'>மா. இளங்கண்ணனின்,‘பரிதியைக் கண்ட பனி’&lt;br /&gt;சுப்பிரமணியன் ரமேஷ்  &lt;br /&gt;  மனித வாழ்க்கையே அலைகடலில் அகப்பட்ட துரும்புதான். அதிலும் அவன் ஏழையாய் இருந்து விட்டால் அந்த ஏழைபடும் பாட்டை இலக்கியத்தில் சொல்லி மாளாது. &lt;br /&gt;       மா.இளங்கண்ணன் அவர்களின் ‘ பரிதியைக் கண்ட பனி’ இப்படியான ஒரு ஏழையின் உணர்ச்சிக் கொந்தளிப்பினை ஒரு புகைப்படம் போலக் காட்டுகிறது. அண்ணாமலையின் நெஞ்சம் விம்ம, மனம் கனன்று கொண்டிருக்கும் சூழலில் ஆரம்பிக்கும் கதை, உணர்ச்சிப் பெருக்கின் மறு எல்லை தொட்டு அவர் களிப்பு கொள்ளுகையில் முடிவடைகிறது. உணர்ச்சி நிலையில் தாளமாற்றமோ, அல்லது கதை முன்னகர்ந்து விரிவடைவதையோ ஆசிரியர் கருத்தாக கொள்ளாமல், மனித வாழ்வின் உணர்ச்சிச் சுழிப்பினை உணர்த்துவதில் குறியாய் இருக்கிறார்.  &lt;br /&gt;       குப்பை அள்ளும் அண்ணாமலை குடும்பத்தையும், தன் மகன் திருமேனியையும் கரைசேர்க்க தன்னால் முடிந்த மட்டிலும் பாடு படுகிறார். பகுதி நேர வேலையாக அம்பலவாணர் வீட்டுத் தோட்டவேலைகளையும் செய்து மகனை வளர்க்கிறார். அம்பலவாணர் உதவி புரிய மகனின் மனதறிந்து அவனை மேலும் படிக்க வைத்து பட்டதாரியாக்க கனவு காண்கிறார். அடித்தட்டிலிருக்கும் தன் வம்சம், படித்த தன் பிள்ளையால் முன்னுக்கு வந்து விடும் என்ற அவரது ஆசையில் மண் விழுகிறது. பொறுப்பில்லாமல் யாரோ நாலாவது மாடியில் வைத்திருக்கும் பூந்தொட்டி தன் மகனின் தலையில் விழுந்து அவன் மண்டையை உடைப்பதன் மூலமாக . . . அலைபாய ஆரம்பிக்கும் அவரது மனம் மகன் ஆபரேஷன் முடிந்து கண்திறப்பானோ என்ற ஆவலாதியில் உணர்ச்சிக் கொந்தளிப்பாய் அவரைப் பந்தாடுகிறது, அவரது மகன் திருமேனி கண்திறந்து அவரைப் பார்க்கும் பார்வையில் சூரியனைக் கண்ட பனிபோல அவரின் துன்பமெல்லாம் பறந்தோடி விடுகிறது, என கதை முடிகிறது.  &lt;br /&gt;       சிறு கதைக்கேற்ற கால அளவு கச்சிதமாகப் பொருந்திய கதை. கதை நிகழும் காலத்தில் அப்போதைய சமூகச் சித்திரங்களைப் பதிவு செய்த படியும் சென்றிருக்கிறது. ஓட்டைக்குப்பைத் தொட்டியிலிருந்து நீர் ஒழுக குப்பை அள்ளப்படும் காட்சி, மாடியிலே கல்லுரலில் இடிக்கும் சூழல், பணியாளர்களின் மனமறிந்து உதவிடும் முதலாளிகள், பொறுப்பில்லாமல், மாடிப்படிச் சுவரில் பூந்தொட்டிகளை வைத்து வளர்க்கும் சூழல் இப்படி.  &lt;br /&gt;       ஆசிரியர் உணர்ச்சிப் பெருக்கினை முற்றிலுமாக உடலின் மோழியாக உரைப்பதன் மூலமாக உள்ளத்து நிலையை நயமாகக் காட்டுகிறார். ‘உள்ளம் வெந்து கொண்டிருப்பதனால் அண்ணாமலைக்கு வாய் அடைத்து விடுகிறது.’ ‘ மூச்சு விடக்கூட நேரமில்லை’ ‘இரத்த வேர்வை சிந்துகிறார்.’ ‘ பசி வயிற்றைக்கிள்ளுகிறது.’ ‘கண்களில் அருவி கொட்டுகிறது வாயில் துவாலை வைத்துக் கடித்துக் கொண்டு அழுகிறார்’ ‘ உணர்ச்சி வசப் பட்டதால் அவர் உடல் புல்லரிக்கிறது. கண்களில் இன்பக் கண்ணீர் மல்கி கன்னங்களில் உருண்டு உதட்டில் பட்டு இனிக்கிறது, உள்ளம் வேகிறது, நெஞ்சினில் தீயை அள்ளிக் கொட்டுகிறாள், நெஞ்சினில் அடித்துக் கொண்டு குருதிக் கண்ணீர் கொட்டுகிறாள், அண்ணாமலை நெஞ்சத்தைக் கசக்கிப் பிழிகிறது, நெஞ்சில் ஆயிரமாயிரம் ஈட்டிகள் பாய்கின்றன, நெஞ்சம் உருகுகின்றது, தளும்பி நிற்க்கும் கண்ணீரில் தத்தளிக்கும் சிவந்த விழிகள், வாய் வரவில்லை, நா எழவில்லை, புறங்கையைக் கட்டிக் கொண்டு, துக்கத்தை மென்று விழுங்குகிறார், நீண்ட பேருமூச்சு வெளியேறுகிறது. அவர் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த பளு பறக்கிறது பன்னீர் சிந்துகிறது. உதடுகளில் புன்னகை மின்ன, கரு விழிகளில் இன்பக் கண்ணீர் மல்குகிறது. இப்படி உணர்வுகளின் மொழியை ஆசிரியர் உடல் அசைவுகளாக விவரிப்பதன் மூலமாக குறிப்புணர்த்துகிறார். &lt;br /&gt;@  @  @&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-1319325772670143992?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/1319325772670143992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=1319325772670143992' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/1319325772670143992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/1319325772670143992'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/07/blog-post_6359.html' title=''/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-405041966356117932</id><published>2007-07-07T11:00:00.000+08:00</published><updated>2007-07-07T11:02:30.977+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='review by Ramesh  Subramaniam'/><title type='text'></title><content type='html'>இராமகண்ணபிரானின், ‘நாடோடிகள்’&lt;br /&gt;சுப்பிரமணியன் ரமேஷ்  &lt;br /&gt;     வேரில்லாமல் அலையும் நவீன வாழ்க்கைச் சூழலில் மரபும், பண்பாடும் ஒரு சமூகம் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள, தங்களின் இருப்பினை நிலை நிறுத்திக் கொள்ள உதவும் நங்கூரங்கள் போன்றவை அவற்றை ஒருமனிதன் எப்போதும் கைவிடுதல் கூடாது என்பது நாடோடிகள் சிறுகதையின் மையக் கருத்து.  &lt;br /&gt;     பல்வேறு கலாச்சாரங்கள், பண்பாடுகள், இன, மொழி, மதங்கள் புழங்கும் சிங்கப்பூர் சூழலில் எளிதாகவும், இயல்பாகவும், ஒரு சமூகம் தங்களின் அடையாளத்தை இழந்துவிடமுடியும், ஒரு சமூகம் வளர்ச்சிக்கு விலையாக எதை எல்லாம் இழக்கலாம், எதையெல்லாம் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது மிகவும் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம். தன்னுடைய பலங்களாக ஒரு மனிதன் எவற்றையெல்லாம் உணருகிறானோ அவற்றை இயல்பாகவே தக்க வைத்துக் கொள்கிறான். அப்படி தன் சமூகத்தையும், அதன் கலாச்சாரத்தையும் தன்னுடைய பலமாக உணர்வதற்கு ஒருவனுக்கு அளவற்ற விழிப்புணர்வும், சுய-விசாரமும் தேவைப்படுகிறது.   &lt;br /&gt;      இத்தகைய சுய விசாரணைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செழிப்பாக வாழ்ந்த ஒரு சமூகத்தின் பின் புலத்திலுள்ள மேலான சாரத்தை உணர்ந்து கொள்ள வழி செய்யும், ‘குணம் நாடி, குற்றமும் நாடி’  குணங்களைக் கொள்ளவும், பலவீனங்களை களையவும், வழி செய்வதின் மூலமாக ஒரு சமூகம் மேலும் வளர வழி செய்யும். &lt;br /&gt;@ @ @ &lt;br /&gt;      மேம்போக்காக பார்க்கையில் மிக எளிதென தோன்றும் சில கேள்விகளைப் பார்க்கலாம். எது நமது பண்பாடு? எது நமது மரபு? எது நமது கலாச்சாரம்? நம் கலாச்சாரத்தின் குறைகள் எவை, அவை நமது தமிழ் சமூகத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது? நமது கலாச்சாரத்தின் நிறைகளைப் பற்றிய விழிப்புடன் நாம் இருக்கிறோமா? நமது மரபென்பது நமது தளைகளா, கண்ணிகளா, பொறிகளா? அல்லது மலையேறும் மனிதனுக்கான பாதுகாப்பு பெல்ட்டுகள் போன்றவையா நமது கலாச்சாரம்?  தமிழர் பண்பாடு என்பதும் ஆரியப் பண்பாடு என்பதும் வேறுவேறானவையா அப்படியானால் இப்போதைய நமது பண்பாடு எது? நம் பண்பாடு எவ்வாறு மற்றைய பண்பாடுகளைக் காட்டிலும் மேலானது? பண்பாடு என்பது நாகரீகத்திற்கு எதிரானதா, அல்லது அனுசரணையானதா? &lt;br /&gt;     ஒவ்வொரு தலைமுறைக்கு கைமாறும் போதும் நாம் நமது கலாச்சாரத்தின் நுண்மையான சில இழைகளை இழந்து விடுகிறோம், நமது வாழ்க்கைச் சூழல் மாறுகையிலும், நமது வாழ்க்கை நாளுக்கு நாள் நவீனமடைகையிலும் தவிர்க்க முடியாமல் சில விஷயங்களை இழந்து, சில விஷயங்களைப் பெறுகிறோம், இழப்பினைக் குறித்தும், அதற்கு விலையாக பெற்றுக்கொண்ட விஷயங்கள் நம் வாழ்வினை செழிக்கச் செய்கிறதா அல்லது நம்மை மெல்ல இயந்திரங்களாக்கி அழிக்கிறதா என்பதைக் குறித்துமான விழிப்புணர்வு நமக்கு இருக்கிறதா? &lt;br /&gt;      இந்துமதம் தன் சிந்தனை, சடங்குகளுக்கெதிராக புரண்டவர்களையும் தனது அங்கத்தில் ஒரு பாதியாக மாற்றிக்கொண்டதைப் போன்று (உதாரணமாக சார்வாக சிந்தனை, மற்றும் பௌத்த கோட்பாடுகள் ) பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான ஒரு கலாச்சாரம் தன்னுள்ளே முரண்பாடான கருத்துகளையும் தக்க வைத்துக்கொண்டிருப்பது இயல்பானதுதான், அது ஒருவிதத்தில் கண்ணகியும், மாதவியும் நம் மூதாதையர் என்று ஏற்றுக் கொள்வதைப் போல, ஒரு தார ராமனும், பலதார தசரதனும் மூதாதையர் என்று கொள்வதைப்போல... அப்படியானால் நாம் அவற்றில் எதை எப்படி தெரிவு செய்யப் போகிறோம்? எந்த அடிப்படையில்? &lt;br /&gt;@  @  @ &lt;br /&gt;      தனபாலனின் வாழ்க்கையையும் அதற்கு முரணாக அவனது பால்யத்தோழன் பார்த்திபனின் வாழ்க்கையையும் அருகருகே வைத்துக் காட்டுகிறார் ஆசிரியர். தனபாலன் தன் வாழ்வை வளப்படுத்திக்கொள்ள விழைந்து, தன் பண்பாட்டையும், தான் சார்ந்த சமூகத்தையும் வலிந்து புறக்கணிக்கிறான்... மொஸ்தரான நாகரீகத்தையும், மேலைய பண்பாட்டையும் தழுவுகிறான். பொருளாதார ரீதியாக அவன் சுபீட்சம் அடைவது, சமூகத்தின் மெல்தட்டு வாசியாக அவனை மாற்றுகிறது. ஆனால் நண்பர்கள், உறவுகளை மதிக்காத தன்மை, சந்தர்ப்பவாதம் அவனது குண இயல்பாகிறது. அதே சந்தர்ப்பவாதமும், மேம்போக்கான தன்மையும் அவனது மகளுக்கும் வாய்க்க ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த தனபாலனை தவிக்க விட்டு அவரின் மகள் ஒரு அமெரிக்கனுடன் சொல்லாமல் ஓடிப்போய் அவளின் வாழ்வினை நிர்ணயித்துக் கொள்கிறாள்... அந்த சோகத்தில் மனைவி பத்மினியும் இறக்கிறாள். சோகத் தனிமையில் தன் வாழ்க்கையை சுய பரிசீலனை செய்யும் தனபாலன் தமிழர்தம் பண்பாட்டை அவர் சார்ந்திருந்தால் தம் வாழ்க்கை மகிழ்வுடன் இருந்திருக்கும் என்னும் முடிவுக்கு வருகிறார், இந்த மனமாற்றத்திற்கு அறிகுறியாக, தமிழர் பண்பான பிறர்க்கு உதவுதல், தன்னலமற்ற சேவை போக்கை அவர் மனம் நாடுகிறது என்பது தன் சேமிப்பிலிருந்து அவர் தமிழர் முன்னேற்றத்திற்காக நன்கொடை தருவதில் குறிப்புணர்த்தப்படுகிறது. &lt;br /&gt;      பார்த்தீபனோ ஆடம்பரமில்லாத எளிய வாழ்க்கையைத் தெரிவு செய்கிறான். வேகமான பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டிலும், அகவாழ்வை செழுமை செய்யும் கலாச்சாரத்தை தெரிவு செய்கிறான். உறவுகளையும், நட்பையும் பேணிக் காப்பதன் மூலமாக அவன் மனம் விசாலமடைகிறது, அது அவன் வாழ்விற்கு அமைதியையும், தெளிவையும் தருகிறது. அந்தத் தெளிவு மெல்ல விரிவடைந்து, தான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற தன் சமூகநலன் சார்ந்த விஷயங்களில் பிணைத்துக் கொள்ள வைக்கிறது.  &lt;br /&gt;      கதைக்களம் மு.வா.வின் கதைக் களத்திற்கு நெருக்கமானதாக இருக்கிறது. குறிப்பாக அகல்விளக்கு கதையையும், நாடோடிகளையும் சேர்த்து வாசித்து, வாசிப்பைச் செழுமைப் படுத்திக் கொள்ளலாம்.  &lt;br /&gt;      கதைக்கான காலம் நீண்டதாக இருப்பதன் காரணமாக நிறைய உணர்ச்சிமாற்றங்களை மிகச் சுருக்கமாக சொல்ல நேர்ந்திருக்கிறது, இது ஒரு நாவல் சுருக்கத்தை வாசிப்பதைப் போன்ற அனுபவத்தை தந்துவிடுகிறது.&lt;br /&gt;@  @  @&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-405041966356117932?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/405041966356117932/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=405041966356117932' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/405041966356117932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/405041966356117932'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/07/blog-post_6641.html' title=''/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-1827609467249662838</id><published>2007-07-07T10:28:00.000+08:00</published><updated>2007-07-07T10:37:11.873+08:00</updated><title type='text'>வாசகர் வட்ட நிகழ்வு</title><content type='html'>சென்ற கூட்டத்தில் பிரபஞ்சனின, ' சந்தியா', சா.கந்தசாமியின் 'சூரியவம்சம்', ஆகிய நாவல்களையும், இராமகண்ணபிரானின் 'நாடோடிகள்',    மா. இளங்கண்ணனின் 'பரிதியைக் கண்ட பனி!' சிறுகதைகளையும்,  வாசிப்பு செய்து அதன் அனுபவங்கள் கட்டுரைகளாகப் படைக்கப் பட்டிருந்தன.  அவைகளை இங்குப் பகிர்ந்து கொள்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-1827609467249662838?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/1827609467249662838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=1827609467249662838' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/1827609467249662838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/1827609467249662838'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/07/blog-post_07.html' title='வாசகர் வட்ட நிகழ்வு'/><author><name>மானஸாஜென்</name><uri>http://www.blogger.com/profile/13032688617271305971</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_xMVCjgn17LE/SQaQNxjtcCI/AAAAAAAAAC0/qbjFW26RHUQ/S220/sanchan1_0.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-737282923648670147</id><published>2007-07-07T10:12:00.000+08:00</published><updated>2007-07-07T10:52:35.236+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='&quot;Sandya&quot; - Review by Pon Sundararasu'/><title type='text'></title><content type='html'>03.07.2007&lt;br /&gt;வாசகர் வட்டம்&lt;br /&gt;சந்தியா   நாவல் கருத்துரை  பொன் சுந்தரராசு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியா நாவல்,தமிழகத்தில் தற்போது இலக்கியக் கோலோச்சும் படைப்பாளர்களுள் ஒருவரான பிரபஞ்சன் அவர்களின் படைப்பு.&lt;br /&gt;தமிழகம், புதுச்சேரி ஆகிய அரசுகளின் சிறந்த எழுத்தாளர் விருது, இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்தய அகாதெமி விருது, இலக்கியச் சிந்தனை, கோவை கஸ்தூரி ரங்கம்மாள் பரிசு உள்ளிட்ட இலக்கிய விருதுகள், அகில இந்திய இலக்கியப் பரிசான பாஷா பரிட்சத் விருது முதலிய எண்ணற்ற இலக்கிய மரியாதைகளைப் பெற்றவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.&lt;br /&gt;கவிதா வெளியீடு, 224 பக்கங்கள்.1995 முதற்பதிப்பு, 2001 இரண்டாம் பதிப்பு &amp;amp; 2007 மூன்றாம் பதிப்பு.&lt;br /&gt;சந்தியா கதாபாத்திரம்,பாரதி கனவு கண்ட ஒரு புதுமைப் படைப்பு.பாரதிதாசனார் காணத் துடித்த புரட்சிப் படைப்பு.&lt;br /&gt;அக்காலந்தொட்டு இக்காலம் வரை -நசுக்கப்பட்டு வரும் பெண்ணியத்தின் உரிமைக்குரலாய்ஒடுக்கப்பட்ட பெண்ணியத்தின் ஓங்கார கீதமாய்தடுக்கப்பட்ட பெண்ணியத்தின் போராட்ட வடிவமாய்உருவாக்கப்பட்டிருக்கும் ஓர் உன்னதப் படைப்பு சந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;தனது உரிமைகளை விட்டுக் கொடுத்துச் சமரசம் செய்து கொள்ளாதவள் சந்தியா. அதே சமயம் மரியாதை காட்டுதல், மனித நேயத்தோடு நடத்தல், மானிடப் பண்புகளை விட்டு விலகாமல் இருத்தல் போன்ற மனிதப் பண்புகளையும் விட்டுக் கொடுக்காத குணச்சித்திரம் அவள். இருபத்தோராம் நூற்றாண்டின் தமிழ்ப்பெண் இப்படி இருந்தால் தேவலாமோ என்ற சிந்திக்க வைக்கிறது அவளது படைப்பு.&lt;br /&gt;சந்தியாவைப் பற்றிய படைப்பாளரின் விளக்கம் இது:&lt;br /&gt;அவளால் எல்லாப் பெண்களையும் போல இருக்க முடியவில்லை. அம்மா, அப்பாவோடு இருந்து அவர்கள் நம்பிக்கையை ஏற்று, அவர்களின் கனவுகளை நிஜமாக்கிக் கொண்டு, சென்று போன அவர்கள் யுகத்தின் நம்பிக்கை தருகிற நிகழ்காலப் பிரதிநிதியாகி, மண் பார்த்து நடந்து, அவர்கள் கட்டி வைக்கிற பையனை மணந்து, அவனுக்காகச் சிரித்து, அவனுக்கு மகிழ்வளிக்கும் விதத்தில் அலங்காரம் செய்து கொண்டு, அவன் கூப்பிடும்போது மறுப்பு சொல்லாமல் படுத்து, அவனுக்கு மட்டுமே சந்தோஷமளித்து, அவன் பிள்ளையை வயிற்றில் வாங்கிக் கொண்டு, வளர்ந்து தியாக தீபமாய் வீட்டிற்கு விளக்கேற்றி வைக்கிற ஒரு மின்சாரப் பெண்மணியாகி, தன் சமய தர்மத்தைத் தன் அடுத்த தலைமுறைக்குக் கையளித்துச் சென்றுவிடுகிற பதிவிரதா சிரோன்மணியாக அவளால் ஏன் இருக்க முடிவதில்லை? காரணம் மிக எளிதுதான். அவள் நவயுகத்தின் பெண். இந்தப் புதிய யுகத்தின் புதிய சிந்தனைகளை, வாழ்க்கை முறையை வரித்து, அதற்கு நாயகமாக வாழ விரும்புகிற பெண். சென்று போன யுகங்களின் வழி வந்த பெண்மணி அவள்.&lt;br /&gt;ஆணாதிக்கத்தை இன்னும் கையிலேந்த விரும்பும் அல்லது ஆணாதிக்கத்திற்குக் குடைபிடிக்கும் பிற்போக்குவாதிகளின் மூளையைச் சலவை செய்யும் நோக்கில் இந்நாவலைத் துணிகரமாகப் படைத்துள்ளார் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள். அந்நோக்கத்தில் வெற்றியும் பெற்றுள்ளார் என்று உறுதியாகக் கூறலாம்.&lt;br /&gt;பல பதிப்புகளாக மீண்டும் மீண்டும் உயிர்பெற்றுள்ள சந்தியா அதனை நிரூபித்துள்ளாள்.&lt;br /&gt;பொது இடங்களில் ஆண்களால், பெண்கள்பால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள், சலுகைகள் எடுத்துக்கொள்ளுதல், சில்மிஷங்கள் செய்தல் போன்றவற்றைச் சந்தியா எதிர்க்கிறாள்.இது ஒன்றும் புதுதில்லை.இந்நவீன காலத்தில் பட்டணங்களில் வாழும் இந்தியப் பெண்களுள் பெரும்பாலோர் செய்யும் செயல்தான், திரைக்கதைகளில் படம் பிடிக்கப்படும் காட்சிகள்தான் இவை.&lt;br /&gt;இப்படித்தான் செல்கிறது சந்தியா நாவல், சிவராமன் அறிமுகமாகும் வரை.&lt;br /&gt;திருமணமானாலும் சுதந்திரம் பறிபோகாமல் தான் தானாகவே வாழ விரும்பும் நவயுகப் பெண்கள் கனவு காணும் ணின் பிரதிநிதியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறான் சிவராமன்.&lt;br /&gt;சந்தியாவுக்கும் அவனுக்கும் நட்பு நெருக்கமடையும்போது, அவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடும் என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பை மீறிக் கதை திசைமாறிச் செல்லும்போதுதான் பிரபஞ்சன் நிற்கிறார்.இந்த நாவல் முழுமையாகப் பெண்ணியத்திற்குக் தோள் கொடுத்து நிற்கிறது. அதனை நிலைநிறுத்தும் பகுதிகள்தாம் நாவலின் ஜீவன். அவற்றைக் கண்ணோட்டமிடுவோம்.&lt;br /&gt;1 சந்தியாவோடு அலுவலகத்தில் பணிபுரியும் புஷ்பராஜ் அவளுக்குக் காதல் கடிதம் கொடுக்கிறான். பல பெண்களுக்குக் காதல் கடிதம் கொடுத்து அவர்களைச் சங்கடத்தில் மாட்டிவிட்டவன் அவன். சந்தியா அக்கடிதத்தை அவனையே படிக்கச் சொல்லி அவனைத் திக்கு முக்காட வைக்கிறாள். தான் அவன் காதலை ஏற்று அவனோடு உடனே வந்து விட்டால் அவன் அவளை எங்கே அழைத்துச் செல்வான் என்று வினவ, கதிகலக்கிப் போகிறான் அவன் .&lt;br /&gt;"சும்மா பொழுது போக்கிற்கு எழுதுவீர்களாக்கும். சும்மா நேரம், பொழுது போக்கக் காதலிப்பீர்களாக்கும். சந்தோஷத்திற்காக என்னோடு படுத்துக் கொள்வீர்களாக்கும். அப்புறம், தூங்கி எழுந்து, பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு இன்னொரு கிளார்க்குக்கு, இன்னொரு டைப்பிஸ்ட்டுக்குக் கடிதம் எழுதுவீர்களாக்கும். நான் கல்லானாலும் கணவனும் புல்லானாலும் புருஷன் என்று உங்கள் காலடியில் வீழ்ந்து கிடப்பேன் என்று எதிர்பார்த்தீர்களாக்கும்."&lt;br /&gt;புஷ்பராஜ் தலை குனிகிறான். தலை குனிவது அவன் மட்டும்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;2. பேருந்தில் சந்தியாவிடம் பாலியல் பலாத்காரம் செய்யும் இளை"னைக் காவல் நிலையத்தில் கொண்டு போய் நிறுத்துகிறாள். சட்டமும் விதிமுறைகளும் அரசியல் பதவிக்கும் செல்வாக்கிற்கும் இரையாவதை எண்ணிக் குமுறுகிறாள் அவள். இன்ஸ்பெக்டரிடம் பேசும்போது அக்குமுறல் வெளிப்படுகிறது.&lt;br /&gt;"எது சார், சின்ன வயசு? இவருக்கென்ன வயசு அஞ்சா, பத்தா? தவிரவும் இவர் செஞ்ச காரியம் சின்னப் பையன்கள் காரியமா? அது சின்னப் பையன்கள் காரியமென்றால், இது மாதிரியான காரியங்களை அவர் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமே! அவருக்குச் சகோதரிகள் இருப்பார்கள் தானே? இடுப்புக் கீழே கையை அவர்களிடம் வைத்துப் பார்க்கலாம்தானே?" சமூகச் சீர்கேடுகளைப் பட்டியலிட்டு அவள் சீறும்போது சமாதானத்திற்காகவும் தப்பிப்பதற்காகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலுவற்ற வார்த்தைகள் கூறி வழுக்கி ஒடுகின்றனர்.&lt;br /&gt;3. அவளைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை சில நிமிடங்கள் அவளுடன் பேசியவுடனே 'உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது' என்கிறான்.&lt;br /&gt;"அதற்குள் என்னை எப்படி உங்களுக்குப் பிடிக்க முடியும்? என் விருப்பங்கள், சைகள், பலவீனங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? அதுபோல் உங்கள் அறிவு, ரசனை, தகுதி எதுவும் எனக்குத் தெரியாது. நாம் எப்படி அதற்குள் ஒரு முடிவுக்கு வரமுடியும்?"&lt;br /&gt;பெண் பார்க்க வந்தவன் சந்தியாவின் அந்த எதிர்பாராக் கேள்விக் கணைகளால் தாக்குண்டு மீள வழிதெரியாமல் வீழ்கிறான்.&lt;br /&gt;4 சேரிப் பகுதி மக்களுக்கு வசதிகள் செய்து தராத நிலை கண்டு அரசு அலுவலர்களைச் சந்தியா அர்ச்சனை செய்யும் இடம் அரசுக்குக் கொடுக்கும் சாட்டையடி.&lt;br /&gt;"அவர்கள் நாகரிகத்தைப் பற்றி விமர்சிக்க உங்களுக்கோ உங்கள் அரசுக்கோ என்ன யோக்தை இருக்கிறது? இந்தச் சேரி ஜனங்கள், குறிப்பாகப் பெண்கள் கழிப்பிட வசதி செய்து தரச்சொல்லிக் கேட்டு, ஊர்வலம் நடத்தி எவ்வளவு காலம் கிறது? ஏன் செய்து தரவில்லை? உங்களுக்கென்று வீடும் குளியல் அறையும் இருக்கப் போய்த்தானே நீங்கள் வசதியாக எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வர முடிகிறது. இல்லாவிட்டால் என்ன செய்திருப்பீர்கள்? இந்தப் பெண்கள் செய்வது மாதிரி, இருள் விலகுவதற்குள் எழுந்து வந்து அவர்கள் உட்காருவது மாதிரி நீங்களும் உட்கார்ந்திருப்பீர்கள்தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;ஆண், பெண் உறவு பற்றி இந்நூல் நெடுகலும் விவாதிக்கப்படும் பல தகவல்கள் பலருக்குச் சினமமூட்டும் தகவல்களாக அமையலாம். ஆனால், சிந்திக்க வேண்டிய செய்திகள் என்பதில் ஐயமில்லை. அவற்றுள் சில:&lt;br /&gt;1. ஆண் துணை எனக்கு வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். நான் சில நெறிகளுடன் வாழ்வது என்று இருக்கிறேன். நான் கண்டவனுடன் சுற்ற முடியாது. யாராவது ஒருத்தனுடன் குடும்பமாக, அவனை நேசித்து, அவன் குழந்தைக்குத் தாயாகி வாழ வேண்டும் என்பதிலும் தப்பில்லை. ஆனால், ஒரு பெண் என்பவள், ஒருவன் துணையுடன் வாழ வேண்டும் என்பது நிர்ப்பந்தமா? துணை அடைவது பாதுகாப்புக் கருதி என்றால், அது அபத்தம். இல்லற இன்பம் குறிக்கோள் என்றால், அதுக்குக் குடும்பம் என்ற அமைப்பு அநீதம். அந்த இன்பத்தை திருமணமாகாமலே பெற்றுக் கொள்ள முடியாதா? - சந்தியா&lt;br /&gt;2. ஒருவனுடன் சிநேகிதமாக இருக்கிறாய். ஏதோ ஒரு சமயத்தில் அவனுடன் உடலுறவு கொள்கிறாய். அந்த உறவுக்குப் பெயர் என்ன? நட்பா, தாம்பத்யமா? நட்பில் தாம்பத்யம் கலந்தால் அது நட்பாகுமா? குடும்பம் என்பது நாகரிகம். அது தளை அல்ல. கட்டு அல்ல. நீ விரும்பவில்லை என்றால் அதற்குள் வராதே! வெளியே நில். ஆனால், மனம்போல் வாழ்வது என்பது நாகரிகமற்ற நிலை என்பதையும் மறக்கக் கூடாது. - கனகா&lt;br /&gt;3. கற்பு என்பது கன்னித் திரை சமாச்சாரம். பெண் தன் கன்னித் திரை கிழிபடாது அதைக் கண்ணெணனக் காப்பாற்றக் கடமைப்பட்டவள். அதைக் கிழிப்பதற்கென்றே ஒருத்தன் கணவன் பெயரில் வருவான். முதலிரவு என்பதே சட்டபூர்வமான பாலியல் பலாத்காரம். - சந்தியா 4. பெண்களை ண்கள் புறக்கணிப்பதும் சிறுமைப்படுத்துவதும் எப்படித் தவறோ, அதே போன்றதுதான் ஆண்களை நாம் வெறுப்பதும். மனிதர்கள் வெறுக்கப்படத் தக்கவர்கள் அல்லர். நேசிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆண்களாயினும் பெண்களாயினும் யாரையும் யாரும் வெறுத்துப் புறக்கணித்து வாழ்வது சாத்தியப் படாது. ஆண்கள், பெண்கள் இதில் யார் முக்கியம் என்பதல்ல விஷயம். வாழ்க்கையே முக்கியம். சந்தோஷம் தனித்து வாழ்வதில் இல்லை. சேர்ந்து வாழ்வதில் தான் இருக்கிறது. - சந்தியா&lt;br /&gt;5. மனைவியைப் பொது இடத்தில் கொஞ்சுவது, பொது இடத்தில் கோபிப்பது, துக்கத்தைப் பிறர் பார்க்கக் கொண்டாடுவது எல்லாமும் ஒரு வகை பாசம் என்பது என் கருத்து. - சிவநேசன்&lt;br /&gt;6. இருட்டுக்கும் பெண்களுக்கும் எப்பவும் நம் நாட்டில் சம்பந்தப்படுத்தியே வந்திருக்கிறார்கள். மாலை மயங்கியதும் நம் பெண்கள் மாடுகள் கொட்டிலில் அடங்குவது மாதிரி வீட்டுக்குள் முடங்கி விட வேண்டும். இருட்டு பத்துகளுக்கு இடமானது. அந்த பத்துகளை வெல்ல ஆண்களால் முடியும். பெண்களால் முடியாது. இருட்டியதும் பெண்களுக்கு உடம்பு வாழ்க்கை தொடங்கிவிடுகிறது. அவர்கள் ஆண்களின் உடனடித் தேவை. - சந்தியா&lt;br /&gt;&lt;br /&gt;7. சந்தோஷம் என்பது ஆணின் கூட்டுறவால் அன்றிச் சாத்தியம் உண்டா?நீ கலவி இன்பத்தைச் சொல்கிறாய் அல்லவா? ஆண் இல்லாமல் புணர்ச்சி இன்பம் சாத்தியமில்லைதான். அந்த ஆண் கணவனாகத்தான் இருக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஏன், ஒரு நல்ல சிநேகிதனாலும் அந்த இன்பத்தை வழங்க முடியுமே! உண்மையில் கணவனைக் காட்டிலும் கருத்து ஒருமித்த சிநேகிதனால் காதல் இன்பத்தைக் கூடுதலாகத் தர முடியும் என்றே நம்புகிறேன். - சந்தியா8. சிநேகிதனோடு உறவு வைத்துக் கொண்டால், அந்த உறவுக்குச் சிநேகிதம் என்ற பெயர் பொருந்துமா? சிநேகிதனாக இருந்து கொண்டு ஒருவன் அவ்வப்போது கணவனாகவும் மாறுவான் என்றால், அந்த உறவு எதன் பால்படும்? குழப்பமும் அகெளரவமும் அல்லவா அதனால் விளையும். - கனகா&lt;br /&gt;9. நீங்கள் என்ன எங்களுக்குச் சுதந்நிரம் தருவது? சுதந்திரம், தரும் பொருளன்று. அது உரிமை! நாங்கள் அதை எடுத்துக் கொள்வோம்! ஆனால், பெண்களாகிய நீங்கள் அதற்கான தகுதிகளையும் தன்மைகளையும் பெற்றிருக்கிறீர்களா? இல்லை. இன்னும் உங்கள் நகைப்பித்தும், பட்டுப் புடவை பித்தும், மேனாமினுக்கித் தனமும் உங்களிடமிருந்து போயிற்றா? இன்னும் நீங்கள் உங்கள் உடம்பால் ஆண்களைக் கட்டிப் போடலாம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து விடுவீர்கள். - சந்தியா&lt;br /&gt;மேல்நாடுகளில் - ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத் திருமணப்பந்தம் என்ற அங்கீகாரம் தேவையற்றது என்ற எண்ணம் தோன்றிப் பல்லாண்டுகள் கடந்து விட்டன.&lt;br /&gt;அத்தகைய உறவு அநாகரிகமானது, நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது, ஈடுபாடற்றது, உறுதியற்றது, நம்பகமற்றது, விலங்குத் தன்மையுடையது என்று ஆசிய நாடுகளும் ஏனைய நாடுகளும் அவ்வுறவைக் கொச்சைபடுத்தி வசைமாரிப் பொழிந்தன.&lt;br /&gt;இன்றைய நிலை என்ன? மேலை நாடுகளின் அந்த முறை இப்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி சில ஆசிய நாடுகளில் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே விரைவாக மாறிக்கொண்டு வருகிறது.&lt;br /&gt;அதற்கு என்ன காரணம்?&lt;br /&gt;மேல்நாட்டினர் போக்கு எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுமளவுக்குத் தூய்மைபடுத்தப்பட்டுவிட்டதா? இல்லை.&lt;br /&gt;இக்கால மனிதன் - கல்வி அறிவு மேலோங்க மேலோங்கத் தன்னை எந்தக் கட்டுப்பாட்டிற்குள்ளும் முடக்கிக் கொள்ள விரும்பாத சுயநல விரும்பியாகிவிட்டான். அதற்குச் சுதந்திர வாழ்க்கை என்று வசதியாக பெயர் வைத்துவிட்டான். அத்தகைய வாழ்க்கை வாழ்வதையே பெரிதும் விரும்புகிறவனாகிவிட்டான்.அதிலேயே மனிதன் மிகுதியும் நாட்டம் கொண்டவனாகவும் மாறிவிட்டான். தன் மகிழ்ச்சியை மட்டுமே தலையாய நோக்கமாகக் கொள்ள ஆரம்பித்துவிட்டான்.அது வரம்புகளற்ற வாழ்க்கை முறை.யாரும் யாருக்கும் கடப்பாடு கொள்ள வேண்டியதில்லை.வாழ்க்கை வாழ்வதற்கே என்பதே அதன் அடிப்படைத் தத்துவம்.அந்தப் போக்கிற்கு மேலை நாட்டு வாழ்க்கை முறை பொருத்தமானதாக அவனுக்குத் தோன்றி இருக்க வேண்டும். ஒன்று கலந்து விட்டான். இதுதான் உண்மை.&lt;br /&gt;சந்தியா நாவலில்,மணவாழ்க்கை குறித்து மனிதர்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றம் பெண்ணியத்தோடு எத்தகைய நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை எழுத்தாளர் பிரபஞ்சன் தம் நாவலில் மிக அருமையாக வெளியிட்டுள்ளார். ஆண், பெண் இருவரும் தம்பதியராக சேர்ந்து வாழ்வதிலும், நண்பர்களாக இணைந்து வாழ்வதும் உள்ள நன்மை தீமைகள் நாவல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.&lt;br /&gt;அந்தக் கருத்துக்களை அள்ளுவதும் தள்ளுவதும் வாசகர்களைப் பொறுத்தது.ஆனால்,&lt;br /&gt;நாவலின் மையக் கருத்தும் நாவலில் விவாதிக்கப்படும் ஏனைய கருத்துகளும் மனித நேயமுடைய அனைவரும் எண்ணிப் பார்க்க ஏற்றவை என்பது மறுக்க முடியாத உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-737282923648670147?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/737282923648670147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=737282923648670147' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/737282923648670147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/737282923648670147'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/07/blog-post_3573.html' title=''/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-4995242851791154858</id><published>2007-04-24T12:11:00.000+08:00</published><updated>2007-04-24T12:30:27.555+08:00</updated><title type='text'>நெடுங்குருதி           எஸ்.ராமகிருஷ்ணன்</title><content type='html'>நெடுங்குருதி           எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;                  வேம்பலை ஒரு கற்பனையூர். ஆனால் வேம்பர்கள் கற்பனை மனிதர்கள் இல்லை. ஊரின் கதை. அதில் வாழ்ந்த மனிதர்களின் கதை. அந்த மனிதர்கள் வீரர்கள். நெஞ்சுரம் மிக்கவர்கள். அசாத்திய தைரியசாலிகள். ஆனால் இந்த குணங்கள் அவர்கள் அறம் வளர்க்காமல் மறம் வளர்க்க மட்டுமே உதவுகின்றது. செய்யும் தொழிலே தெய்வம் என்ற   அப்பாவித்தனங்கள் கிடையாது. ஐந்து மிகப் பெரிய பாவங்களின் ஒன்றாக கருதப்படும் களவுத் தொழிலே இவர்களது தொழில். கதைகள், காவியங்கள், திரைப்படங்கள் போன்ற அழகியல் கலை வடிவங்கள் அனைத்தும் எதிர்மறையான   மனிதர்களை கதாநாயகனாக்கி அப்படிப்பட்ட மனிதர்களாக இருப்பது ஒன்றும் தவறில்லை என்ற ஒரு தவறான       போதனையைத் தருவது சரியா தவறா என்ற பட்டிமன்றம் நடத்த வேண்டாம்.  காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் நாயகன் ஒரு திருடன். மலைக்கள்ளன், ராபின்ஹ¥ட், வேலுச்சாமி நாயக்கர், கொக்கி குமார், தளபதி சூர்யா, மலையூர் மம்மட்டியான், ஜம்புலிங்கம், வீரப்பன், நம்ப திருமங்கையாழ்வார் கடைசியாக  தொழிலதிபர் வேடம் போட்டுக் கொண்ட குரு இப்படி எக்கச்சக்க கதாபாத்திரங்கள் எங்கோ சட்டத்தை மீறுபவர்களாகவும் செய்தது திருத்தொண்டிற்காக, மக்களுக்காக, ஏழைபாழைகளுக்கு ஒரு கதி மோட்சம் கிடைக்காதா என்று ஆயிரம் காரணங்கள் நியாயப்படுத்த   முயன்றாலும் சரியாகத்தான் இருக்கும் என்று சில சமயங்கள் நம்மையறியாமல் அவர்கள் பக்கம் திரும்பினாலும் தவறு தவறுதான்!  சிகரெட் குடித்து ஸ்டைலாக புகை விடுவது, சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிப்பது போன்ற விஷயங்களால் சிகரெட் பிடிப்பது நல்ல விஷயமாகாது. மது குடித்து விட்டு தங்கள் மனத்தடைகளை உடைத்தெறிந்து விட்டு மனதில் இருப்பதை உளறிக் கொட்டுவது ரியலிசம். ஆனால் மது அருந்திவிட்டு வீரனாய் மாறுவது மாஜிக்கல் ரியலிசமா? அதே போல் நெடுங்குருதியும் யதார்த்தம், அதியற்புதங்கள் நிறைந்த யதார்த்தம் இரண்டுக்கும் நடுவில் ஓடிகொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;       கள்ளர் பயம் என்பது வெறும் பொருளைத் தொலைத்து விட்டுத் தேடும் துயரமா? இல்லை வெறும் பொருள்  போனால் பரவாயில்லை உயிர் போகும் பயமா? கள்ளர்கள் களவாடுவதோடு தங்கள் தொழிலை நிறுத்தி விடுவதில்லை. கொலை செய்யவும் அஞ்சாதவர்கள் எனபதும் மறுக்க முடியாத உண்மைதானே! திருடக் கொடுத்துவிட்டுப் பரிதவிப்பது     வாழ்க்கையின் மிகப் பெரிய சோகங்களில் ஒன்று.   மாதம் முழுவதும் உழைத்து அதை சம்பளத் தேதியன்று ஒரு கணத்தில்  பிக் பாக்கெட்காரனிடம் பறி கொடுப்பதன் அவலத்தை நேரில் கண்டவர்கள் இருப்பார்கள். கூட்ட நெரிசலில் பஸ் கண்டக்டருக்குத் தெரிந்த முகம் தென்பட்டவுடன் லேசுபாசாக சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு அபாய அறிவிப்புத் தந்த    பின்பும் பர்ஸ் தொலைந்தது என்று புகார் கொடுக்க முற்படும் போதே நாந்தான் அப்பவே ஜாக்கிரதையா இருங்கன்னு சொன்னேனே என்று கூறும் பஸ் கண்டக்டர்கள். எந்த பஸ்ஸ¤ல போனீங்க என்று விசாரிக்கும் போலிஸ் "ஓ 12Cயா" என்று அர்த்தம் நிறைந்த "ஓ" போடும் காவலர்கள். குற்றங்கள் மிகக் குறைந்தே அளவுக் கொண்ட சிங்கப்பூரில் கூட அசந்து மறந்து சைக்கிளை சரியாகப் பூட்டாமல் வைத்து விட்டால் அப்புறம் சைக்கிளை மறந்து விட வேண்டியதுதான். யானை விலை 60 வெள்ளி என்றால் அங்குசத்தின் விலை 50 வெள்ளி! சைக்கிளின் விலை 60 வெள்ளி என்றால் அதை பூட்டுவதற்கு தோதாய் வாங்கும் சங்கிலி, பூட்டு பொன்ற உபரிச் சாமானகளின் விலை கிட்டத்த்ட்ட 30 வெள்ளி!&lt;br /&gt;                 நல்ல மார்க்   வாங்கினால் ஸ்கூல் போவதற்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி தந்து பின் கொடுத்த வாக்குறுதியை    நிறைவேற்றிய கடமை தவறா பெற்றோர்கள் ரொம்ப நெருக்கமாகத் தெரிந்தவர்கள் தான்! முதல் நாள் புது சைக்கிளோடு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பையன். மத்தியானம் அரக்க பரக்க முகம் முழுக்க பதட்டமாக "அம்மா! சைக்கிள்ல •பிரன்ட் வீல் மட்டும் தான் இருக்கு. மிச்சத்தைக் காணும்", என்றான். முன் பக்கச் சக்கரத்தில் கனமான சங்கிலிப் போட்டுக் கட்டி வைத்து விட்டுப் போனதால் அது மட்டும் மிச்சம். சரி போய் அதையாவது எடுத்துக் கொண்டு வருவோம் என்று போனால் போகும் நேரத்தில் அதையும் காணும். பெரிய ரம்பத்தை எடுத்துக் கொண்டு வந்து சங்கிலியை அறுத்து முன் பக்கச் சக்கரத்தையும் எடுத்துக் கொண்டு போகத் தேவையான அவகாசத்தை கொடுத்து விட்டு     வீட்டுக்கு ஓடி வந்த அசட்டுப் பையன்.  அதன் பிறகு சைக்கிள் என்று வாயேத் திறக்கவில்லை. ஆனால் எட்டு வருடங்களுக்குப் பிறகும் 'அம்மா என்னோட ப்ளூ சைக்கிள் மாதிரியே இன்னிக்கிப் பாத்தேன் அவன் தான் என்னோட சைக்கிளை திருடியிருப்பானோ" என்று சைக்கிள்,பள்ளி, பரபரப்பு எல்லாம் கடந்த பெரிய மனிதனாக ஆன பிறகும் அவனுள் தொடர்ந்து  கொண்டேயிருக்கும் அந்த குழந்தைத் தனமும் ஏக்கமும்! வீட்டில் பால்கனியை தண்ணீர் விட்டு கழுவினால் நன்றாக இருக்கும் என்று பால்கனியில் இருந்த சைக்கிளை வெளியில் வைத்து விட்டு அலம்பித் தள்ளி விட்டு வெளியே வந்து   பார்த்தால்????பெற்ற பெண்ணிடம் திட்டு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டத் தாய். இந்த அவமானத்தைத் தங்க முடியாமல் அடுக்கு மாடி தளத்தின் கீழே சுற்றிக் கொண்டிருந்த போலீஸிடம் சொன்னால் "ஹவ் டு •பைன்ட்பைசைக்கிள்? ஈவன் ஐ ஹவ் லாஸ்ட் மைன்", என்று சக சோகத்தை இருவரும் பகிர்ந்து கொண்டதோடு சரி! சைக்கிள் போனது போனதுதான்!அப்புறம் என்ன     நினைத்தாரோ என்னவோ "டிட் யூ சீ எனிபடி டேக்கிங் யுவர் சைக்கிள்? யூ ஷோ மீ தென் ஐ வில் கெட் இட்!", என்று வேறு சொல்லி வெறுப்பேற்றினார். சைக்கிளை எடுத்துக் கொண்டுப் போவதைப் பார்த்திருந்தால் இந்த வீர மங்கை அவளே துரத்திக் கொண்டுப் போய் &lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பேசியே&lt;/span&gt;&lt;/strong&gt; அவனைத் திருத்தி சைக்கிளை மீட்டு &lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;'பைசைக்கிளை மீட்ட     பைங்கிளி'&lt;/strong&gt;  என்று ஒரு திரைப் படமே எடுத்திருக்கலாமே&lt;/span&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;          எனவே இதிலிருந்து அறியும் நீதி யாதெனின் வேம்பர்கள் போன்றவர்கள் வேறு வடிவங்களில் சில சமயம் சமுதாயத்தில் மிகப் பெரிய மனிதர்களாக நன்கொடை என்று கேட்டால் வாரித் தரும்  ராபின்ஹ¤ட் வள்ளல்களாக மாறுவேடங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். திருடர்களாகப் பார்த்து ஏதாவது  திருப்பித் தந்தால், இல்லை திருந்தினால் நம்மைப் போன்ற அப்பாவிகள் பிழைப்பார்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;          எல்லாரும் வெறும் கதையைப் பற்றியே எழுதினால் எப்படி? அதற்குத்தான் இவ்வளவு முன்னுரை! என்பிலதனை வெயில் போலக் காயுமே... என்ற கோடைக் காலத்தில் துவங்கும் கதை, ஆண்டாள் பாடிப் பரவசமாய் ஆண்டவனுடன் கலந்த மேன்மைமிக்க பனிக்காலத்தில் முடிகிறது. கோடையின் கொடுமை, சினம், வெம்மை, பஞ்சம், வறட்சி இவையெல்லாம் அடுத்தெடுத்து வரும் பருவங்களின் சுழற்சியில் மாறி குளுமை பரவுவது போல் வேம்பர்களின்   வாழ்க்கை முறைகள், அவநம்பிக்கைகள், வேதனைகள்,கயமைகள் காலசுழற்சியில் மாறி வேறு ஊர்களுக்குச் சென்று வேறு விதமான வாழ்க்கை முறைகளைத் தேர்ந்தெடுத்து வாழ்வதைக்  காலக்குறீயீடுகளாகக் காடுகிறாரா ஆசிரியர்?&lt;br /&gt;&lt;br /&gt;       கோடைக்காலம், காற்றடிக்காலம், மழைக்காலம், பனிக்காலம் என்ற நாலு காலம் தான் வேம்பர்களுக்கு! வானம் பார்த்த வறண்ட செம்மண்பூமியில் வசந்த காலம் ஏது? ஆங்கில துரைமார்களின் சட்டங்களை எதிர்த்தவர்களுக்கு அவர்கள் வகுத்த பருவகாலங்களையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லையே!நாகு என்ற பதினோரு வயது சிற்வனின் பார்வையில் கதை தொடங்குகிறது. கதை ஒரு நூறு வருடங்களுக்குப்         பின்னோக்கிப் பார்க்கிறது.  ஆதிலட்சுமியக்கா சொல்லும் கதைகளை அப்படியே நம்பி விடும் அப்பவித்தனம். சென்னம்மாக் கிழவி பிடிச்சித் தின்னுருவா என்று மிரட்டுவதும், இன்னிக்கி ராத்திரி சென்னம்மா வானத்தில பறப்பா முழுச்சுக்கிட்டு இருந்தாப் பாரு என்று சொல்வதை நம்புகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;        நாகு பறவைகளின் கூட்டத்தை ரசிப்பது பின்னாளில் ரத்தினாவதி மூலம் பிறந்த ஆண் குழந்தை திருமாலின்     விசித்திர ரசனையை ஒத்திருக்கிறது. கல்யானை, மண்புழு, தவளைகளைத் தோழனாக்கிக் கொள்கிறான். கதை முழுவதும் யாரும் அவர்கள் வாழும் வாழ்க்கையில் நிறைவடையாமல் வாழ்கிறார்கள். சாகிறார்கள். களவாடிக் கொண்டு வந்த பணம் பொருள் எதுவுமே அவர்கள் வாழ்க்கைக்கு அடைப்படை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. ஏழ்மை, பஞ்சம், பசி பட்டினியுடன் தான் வாழ்கிறார்கள். எப்போதும் ஏதோ ஒரு போராட்டம், பிடிபட்டு விடுவொமா என்ற பயம், நம்மை யாராவது காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சம், நம்மை யாராவது காட்டிக் கொடுக்கும் முன்பாக நாம் முந்திக் கொண்டு விடலாமே என்ற நயவஞ்சகத்தனம் இவற்றோடு வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட பயங்களோடு சமூகத்தில் குற்றப்பரம்பரையாக அடையாளம் காணப்பட்டு வேறு விதமாக வாழ்க்கையைத் தொடர வாய்ப்புகள் கிடைத்தும் நீ யார் என்னை திருடக் கூடாது என்று சொல்லும் என்ற வீம்பு அதன் பின் தொடரும் வன்முறையில் நிகழும் நாகுவின் குரூரச்சாவு, உடலை விற்றுப் பிழைக்கும் ரத்தினாவதிக்கு நிகழும் வன் புணர்ச்சி, வலிகள் நிறைந்த வாழ்க்கை, திருமாலின் நினைவாக அவன் பிள்ளையை பெற்று வளர்த்தல், உடலை விற்றுப் பிழைக்கும் தொழில் வேண்டாம் என்று விலகி கடை வைத்துப் பிழைப்பு நடத்தினாலும் அவளைத் துரத்தும் பழைய வாழ்க்கை, வாட்டும் காமம், அவளது கான்வெண்ட் படிக்க வேண்டும் என்ற நிறைவேறாதக் கனவு, அதை தன் பிள்ளைத் திருமால் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற வேட்கை இவையனைத்தும் ரத்தினாவதி வாழ்க்கையைச் சுற்றிப் பிணைந்து கிடக்கின்றன. ஆனால் எதுவுமே           நிறைவேறாமல், திருமணப் பந்தம் பாதியிலேயே முடிந்து,திருமாலுக்கும் நல்ல அம்மாவாக நடந்து கொள்ளாமல்,  ஆசைநாயகியாய் வாழும் வாழ்க்கையையும் தொடர முடியாமல் மேகவெட்டை நோய் வந்து தற்கொலை செய்து கொள்வது யதார்த்தத்தின் ஒரு பக்கம். மறுபக்கம் நாகு முறைப் படி மணந்த மனைவி மல்லிகா அவன் மகள் வசந்தாவின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;            நடுவே வரும் வேம்பர்களின் கதை, வெஸ்லி துரையை துரத்தி துரத்திக் கொல்லும் வேம்பன், தேவானை சிங்கி• இவர்களின் கதை, பகீரின் மனைவி, மகள்கள், இப்படி மனிதர்கள் வருகிறார்கள்.  யாராலும் வெல்ல முடியாத      விஷயங்கள் இவர்கள் மூலம் சொல்லாமல் சொல்லப் படுகின்றன. வேட்கைகள், உடலைச் சார்ந்த காம வேட்கைகள்,• உள்ளத்தைச் சுடும் காதல்கள், வாழ்தலுக்குரிய வேட்கைகள், கனவுகள் காண முடியாத கட்டில் வேண்டும் கேட்கும் பகீரின் மனைவி வேம்பலைக்கு ஒரு விசித்திரப் பரிசு கொடுக்கிறாள். குரங்குகள் கைகளை உயர்த்தி மணி அடிக்கும் மணிக்கூண்டு! இதன் மூலம் வேம்பலை தன் கைக்குள் அடங்கி விட்டதாக அவள் எண்ணுகிறாள்.ஆனால் ஊர் மக்களுக்கு அவை ஒன்றும் சந்தோஷப்படுத்தவில்லை. மாறாக பயமுறுத்துகின்றன. ஊமை வேம்பு இரவு நேரங்களில் உம் உம் என்று சத்தமிடுவது, வாங்கி வந்த பசுமாட்டில் தெய்வத்தைக் காண்பது, காமதேனு என்பது,• பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் வசந்தா, அவள் தோழி ஜெயக்கொடி இருவரும் ஒரே ஆளைக் காலிப்பதும், ஒருவனையேத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைப்பதும்  இப்படி சில சமயம் எதார்த்தத்தை மீறிய  கதைகளோடு எதார்த்தப் புனைவுகளும் ராமகிருஷ்ணனை ஒரு சிறந்த கதை சொல்லியாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;          கதை முழுக்க பெண்கள், பெண்களைச் சுற்றி வரும் சோகங்கள், கண்ணீர் இப்படி பரிதாபத்துக்குரியப் பெண்கள் நிறைய பேர். ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்கள், அவர்கள் அதற்குத் தேடும் தீர்வுகள் இவற்றை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை என்ற உண்மை. வசந்தா பார்த்துப் பேசி பழகியறியாத தந்தை, வாழாத அவரது ஊர் இதை    நாடிச் செல்கிறாள். எந்த இடத்தில் இருந்தாலும் அவள் விரும்பிய ஒன்றுமே நடக்காத போது மீண்டும் பழைய சுழற்சிக்குச் செல்வதை விரும்புகிறாளோ என்று எண்ண வைக்கும் முடிவு!&lt;br /&gt;&lt;br /&gt;சித்ரா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-4995242851791154858?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/4995242851791154858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=4995242851791154858' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/4995242851791154858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/4995242851791154858'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/04/blog-post.html' title='நெடுங்குருதி           எஸ்.ராமகிருஷ்ணன்'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-1630837862141698943</id><published>2007-04-11T13:28:00.000+08:00</published><updated>2007-04-12T15:32:40.439+08:00</updated><title type='text'>நெடுங்குருதி ஒரு பார்வை-ஜெயந்தி சங்கர்</title><content type='html'>&lt;span style="color:#ff9900;"&gt;எஸ் ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ccffff;"&gt;வாசிப்பு: ஜெயந்தி சங்கர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ccffff;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;உறுபசி கொண்ட ஊர் - வேம்பலை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;ஊரையும் உணர்வையும் பாத்திரங்களாக்கும் வித்தை எஸ் ராவின் எழுத்துக்குப் பலம். மூன்று தலைமுறைகளைத் தொட்டுச் செல்லும் 'நெடுங்குருதி'யின் முக்கிய கதாபாத்திரம் வெம்மை என்றால் 'உறுபசி'யில் காமம். நூலாசிரியருக்குப் பிடித்தமான வ்ய்யில் அவரின் எளிய நடையைத் தொடர்ந்து நிழலெனக் கூடவே வருகிறது. வெயில் மீதான எஸ் ராவின் காதல் உறுபசையில் வெளிப்படும் இடங்களெல்லாம் கதையோடு ஒட்டாமல் துருத்திக்கொண்டு நின்றிருக்கும். ஆனால், அதற்கு நேர்மாறாய் 'நெடுங்குருதியில்' பின்னிப் பிணைந்து கிடக்கிறது. வெயில் மீது தன்க்கிருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டை அனுபவித்து வெளிப்படுத்திடக் கிடைத்த பெரிய வாய்ப்பாக இந்நாவலை சிறிய வாய்ப்பாக வெயில் திரைப்பட விமர்சனத்தையும் (ஜனவர் 07 - உயிர்மை) மிகச்சரியாகப் பயன் படுத்திக் கொண்டுவிடுகிறார் என்பதை நாம் சுவாரஸியத்துடன் அவதானிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாவலை படித்து முடிக்கும் வரையில் நமக்குள்ளும் வெம்மை படர்வதை உணர முடியும். வெய்யிலில்லாமல் வேம்பலை இல்லை. சரி, ஆனால் படித்து முடிக்கும் போது 'வேம்பலை'யில்லாமல் பூமியில் வெயிலே இருக்காதோ என்ற பிரமை ஏற்பட்டு விடுமளவிற்கும் வேம்பலை என்றால் வெயில், வெயில் என்றால் வேம்பலை என்று தீர்மானித்து விடக் கூடிய மனநிலைக்கு நம்மை கொணர்ந்து விட எஸ் ராவால் முடிகிறது. வேம்பலையைப் பிரிந்த நாகு, வசந்த போன்ற பாத்திரங்களின் ஊர்பற்றிய உணர்வுகளுடன் நம்மால் எளிதில் பொருந்தி விட முடிகிறது. ஏனென்றால் ஒவ்வொருக்குள்ளும் ஏதோ ஒரு ஊர் பால் இத்தகைய ஒரு பற்றுதல் இருந்து தானே விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமம் பரிச்சயமில்லாத என்னைப் போன்றவர்களுக்கு நாவலின் துவக்கத்திலிருந்தே புதிய ஓர் உலகதிற்குள் பிரவேசிக்கும் அனுபவம் உண்டாகவே செய்யும். வெய்யில் உக்கரமேறிப் போன 'வேம்பலை' என்ற கிராமம் தான் கதையின் முக்கியப் பாத்திரமும் முக்கியக் களமும். அதே நேரத்தில் இரவில் பிசுபிசுக்கும் இருளும், வெயிலுக்கு இணையான கதைஞரின் கவனத்தை ஆங்காங்கே பெற்று விடுகிறது. எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சுற்றி வராமல் நிகழ்வுகள் வேம்பலையைச் சுற்றியே வருகின்றன.&lt;br /&gt;குருதிக் கறையும், அதன் ருசியைக் கண்ட நிலமும், சதா முறுக்கேறித் திரியும் அதன் வாலிபர்களும் திடீரென்று காணாமல் போகும் ஆண்களை நினைத்துக் கண்ணீர் விடும் பெண்களும் என்று நெடுங்குருதியில் மக்கள் அலைந்தபடியிருக்கிறார்கள். கதையில் நெடுக படிந்திருப்பது வேம்பலையின் வெக்கையுடனான நிழல் மட்டுமல்ல, வேண்டாமென்று ஊரை விட்டு ஓடிச்சென்று ஒளிந்து கொண்ட எண்ணற்ற நபர்களின் இழப்புகளும், தூரத்தே இருக்கும் போது ஊரின் பால் அவர்கள் கொள்ளும் ஏக்கமும் தான். ஏனென்றால், ஊரை தாம் வாழும் நிலமாகப் பார்க்காமல் உறவாகப் பார்க்கிறார்கள் அம்மக்கள். ஊரைத் தம் சொந்தமாகக் கருதும் அவர்களால் தம் ஊருடன் வெயிலுடன் கோபிக்கவும் கொஞ்சவும் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கத்தியை எடுத்துக் காட்டி வெயிலோடு சண்டைக்குக் கிளம்பிவிடும் அளவுக்கு வேம்பலையின் மக்களால் சூரியனையும் அது கக்கும் வெய்யிலையும் கூட தமதென்று எற்று இயைந்து விட முடிவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆசிரியர் சொல்வது போல பெரும்பாலும் 'ஊர்ந்தும்' சிலவேளைகளில் 'பாம்பென நெளிந்தும்' செல்லும் வெய்யிலைக் 'குடித்து' ஆட்கள் வாழவும் கருவிலிருந்து சிசுக்கள் வளரவும் செய்கின்றனர். அவ்வாறு வெயிலைக் குடித்தபடியே வெம்மையேறியிருக்கும் இவர்கள் மழைக்குப் பிறகான காலையில் குளிர்மை கொண்டு புன்னகைத்தபடியே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தம் வீட்டின் கால்நடைகளை தங்களின் பிள்ளைகளைப்போல் நேசித்திடும் வேம்பலையின் மக்கள் விசித்திரமானவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைகள், வழிபாடுகள் அனைத்துமே ஏன் பல்வேறு அமானுஷ்யங்களும் கூட நான் இதுவரை கேட்டிராதவையாகவே இருக்கின்றன. ஆசிரியர் மிகுந்த கலையுணர்வோடு சொன்னபோதிலும் கூட அம்மக்களின் வறுமையானது மனதை மிகவும் கனக்கத்தான் செய்துவிடுகிறது. பரதேசிகள் இருவரும் பசி மிகுந்த நேரத்தில் ஊரில் உணவு எதுவும் கிடைக்காது ஏமாற்றத்துடனும் கோபமாகவும் ஊரை விட்டுப் போகும் போது மனதைப் பிசைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எறும்புகள் குறித்து ஆதிலட்சுமி நாகுவிடம் சொல்வதெல்லாம் அவனால் நம்ப முடிந்த அளவிற்கு நம்மாலும் ஒன்றிவிட முடிகிறது. குறீயீடுகளாக பறவைகளும் புழுக்களும் கதையோட்டத்திற்கு சுவாரஸியத்தை மட்டுமில்லாமல் பல்வேறு அனுமானங்களையும் விட்டுச் செல்கின்றன. ஆதிலட்சுமி, நீலா, வேணி, பக்கீர் போன்ற பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் உலவுகின்றன. சிறுவயதில் நாகுவின் பெற்றோர் சண்டை போட்டுக் கொள்ளும் இடங்களும் நிகழ்வுகளும் கண்முன் நடப்பதைப் போலவே விரிகின்றன. ப்க்கீருக்கு என்னதான் ஆயிற்று என்று கடைசி வரை சொல்லாமல் ஊகங்களுக்கு விட்டு விடுகிறார் ஆசிரியர். பக்கீரின் மனைவி தன் கணவனுக்காகக் காத்திருக்காமல் வாழ்க்கையை நடைமுறையில் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து விடுகிறாள்.ரத்தினாவதி கடைசி வரை நாகுவை நினைத்தபடியே வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஓடி, பாலியல் நோய் பீடித்து, இறுதியில் தற்கொலை செய்து கொள்வது பரிதாபமாக இருக்கிறது. குழந்தைமை மறுக்கப்பட்ட திருமால் சூழ்நிலையின் குழந்தையாகிவிடுவதும் இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளது. பவுலின் கடந்த காலம் திருமலுக்கு ஏற்படும் பாதிப்பை நமக்குள்ளும் விட்டுச் செல்லத் தவறவில்லை. இறையியல் படிப்பை மேற்கொண்ட திருமால் மற்றும் பவுல் ஆகியோரின் உள்மனப் போராட்டங்களும் நம்பகத்தன்மையோடு நகர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கதையை ஆசிரியர் உண்மைக்கு மிக நெருங்கி சொல்வது மாதிரியும் அதே வேளையில் அதை விட்டு தூரத்திலிருந்து சொல்வது மாதிரியும் உணர முடிவது ஒரு வித்தியாசமான அனுபவம். ஒரு நவீன கவிதைக் கொடுக்கும் உள்ளார்ந்த ஒரு லயம் மற்றும் அனுபவதிற்கிணையான ஓர் அனுபவத்தை கொடுத்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு வாழ்வியலை கலை நேர்த்தியோடு சொல்வதால் இந்நாவல் தமிழின் முக்கிய நவீன நாவல் பட்டியலில் நிச்சயம் அதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நாவல் என்ற பொதுவான வடிவத்திலிருந்து கொஞ்சம் விலகி சில சோதனை முயற்சிகளில் ஈடுபடும் எஸ் ரா உறுபசியிலும் சரி, நெடுங்குருதியிலும் சரி நல்லதொரு வாசிப்பனுபவத்தினைக் கொடுத்து விட்டே செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;pithcher plant, venus flytrap போன்ற மாமிசமுண்ணும் செடிகளை (carnivores) நினைவு படுத்துகிறது தன் நாவால் சுழற்றிச் சுழற்றி தன்னுள் மக்களை இழுத்துக் கொள்ளும் வேம்பலை. ஊரின் மீதும், தன் அய்யாவின் மீதும் தனக்கிருக்கும் பற்றை வெளிப்படுத்திக்கொண்டு வசந்தா பேசிடும் வேளையில் அவளிடம் "ஏய் வசந்தா, உங்கப்பா ஜாடையிலேயே, அவரப்போலவே கால்ல வடுவோட திருமால்னு உனக்கொரு அண்ணன் தூரத்துல வடக்க இருக்காண்டி", என்று சொல்லிடத் தோன்றுகிறது. வேம்பலையை நோக்கிப் பயணப்படும் அவ்வேளையில் வசந்தா ஓரகத்தி பெற்றுடுத்த தன் கணவனின் குழந்தைக்கு ஆசையாக 'நாகு' என்று தன் தந்தையின் பெயரைச் சூட்டுவதும் அதைத் தாமே வளர்க்கலாம் என்று சொல்லுவதும் இன்னொரு 'நாகு' உருவாகப் போகிறான் என்று குறிப்பால் உணர்த்துவதைப் போலிருக்கிறது. வேம்பலையைப் போலவே மேலும் மேலும் நாகுக்ககளை உருவாக்கும் தாகமானது ஆசிரியருக்கும் தீராது தொடர்ந்திடுமோ......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;@  @   @&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-1630837862141698943?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/1630837862141698943/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=1630837862141698943' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/1630837862141698943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/1630837862141698943'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/04/nedunguruthi-review-by-jayanthi-sankar.html' title='நெடுங்குருதி ஒரு பார்வை-ஜெயந்தி சங்கர்'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-4252488998315538892</id><published>2007-03-29T18:27:00.000+08:00</published><updated>2007-03-31T18:46:12.515+08:00</updated><title type='text'>ஜே.பி. சாணக்யாவின் 'கனவுப்புத்தகம்'- ஒரு பார்வை</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ccccff;"&gt;ஜே. பி. சாணக்யாவின் 'கனவுப்புத்தகம்'&lt;/span&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;strong&gt;மானஸாஜென்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஜே. பி. சாணக்யாவின் படைப்புகள் பாலுணர்வுகள் அழுத்தப்பட்டிருக்கு ஒரு சமகால தமிழ் மற்றும் இந்திய பசப்பல்களை தவிர்ப்பதற்காக பிதுங்கிக் கொண்டு வெளியே வந்து விழுபவை. இதன் காரணமாக பல அடுக்குகள் கொண்ட கதைகளானாலும் 'புணர்தல், புணர்தல் நிமித்தம்' என வகைப்படுத்தி விடலாம் அவரது கனவுப் புத்தகத்தின் பெரும்பாலான கதைகளை. உடலின் இச்சைகளை போற்றுவதும், துய்ப்பதும், கீழ்த்தரமான வெளிப்பாடுகள் என்றும் அவற்றை ஒருவன் வெற்றி கொள்ள வேண்டும், கடந்து செல்ல வெண்டுமென்றே கிட்டத்தட்ட எல்லா மத தத்துவங்களும் அறிவுறுத்தினாலும், இந்திய (இந்து, பெளத்த, ஜைன) மத தத்துவங்களில் இக்கருத்தின் ஆதிக்கம் ஆழமானது, அல்லது அப்படி அறிவுறுத்துவதாகத்தான் சராசரியான சமகால இந்தியன் புரிந்து கொண்டுள்ளான்.(காமத்தை அங்கீகரிக்கும் தந்திரசாஸ்திரங்களும் கூட புணர்தலை ஒரு கதவு போலத்தான் பாவிக்கின்றன. அது ஒரு இடமல்ல, வேறு ஒரு இடத்தை சென்றடைவதற்கான ஒரு வாயில்.) இதன் காரணமாக காமத்தை, காதலாக்குவதும், காதலை தெய்வீகமாக்குவதுமான ஒரு பாசாங்கு விரிவு கொள்கிறது. இன்னொரு புறம் உடலின் இச்சைகள் மனிதனை அலைக்கழிக்கிறது. சமூகக் கோட்பாடுகளையோ, மதிப்பீடுகளையோ ஒழுக்க விதிகளையோ அவை அறிவதில்லை, சுமத்தப்பட்டாலோ சமூகத்தின் ஒப்புதலுக்காக அவைகளை உடல் கைவிடுவதுமில்லை, காத்திருப்பதுமில்லை. தான் மதிப்பிடப் படுவதற்கான சமுகத்தின் அளவு கோலுக்கும் தன் உடலின் தேவைகளுக்கும் இடையே மாட்டிக்கொள்ளும் மனிதன் பிளவுபட்டவனாகிறான், குற்றவுணர்வு கொள்கிறான். தேவை, நிராகரிப்பு, குற்றவுணர்வு என பல கோணங்களில் அசைந்து கொண்டிருக்கும் ஆடிகளுக்கிடையில் மாட்டிக் கொள்ளும் ஒரு சிறுவனும், சிறுமியும் பின் எப்போதுமே திரும்ப முடியாத பிம்பங்களின் அலைகழிப்பில் சிக்கிக் கொள்வதன் ஊடாக ஆணும், பெண்ணுமாகத் திடப்படுகின்றனர்.புணர்விற்கான வழியாகவும், சமூகத்தின் அங்கிகரிப்பிற்குமான அடையாளமாகவும் இந்திய சமூகத்தின் பிரஜை, குடும்ப அமைப்பையும் கணவன் மனைவி உறவையும் அடையாளம் காண்கிறான். உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம், நிர்பந்தம் உளவியல் ரீதியான பெரும் பாரமாகக் கவிழ்கிறது அவர்கள் மீது. அது பயம், கவலை, அதிகாரம், ஆதிக்கம், ஒடுக்குமுறை என சிராய்ப்புகளையும், காயங்களையும், புண்களையும், வடுக்களையும் நிரந்தரமாய் உற்பத்தி செய்து கொண்டே வாழ்வினை புரையோடிப் போன ஒரு வதைக் கூடமாக மாற்றிவிடுகிறது. நடுத்தர, கீழ் தட்டு நிலையிலிருக்கும் ஆண்களும், பெண்களும், காமத்தை தன் உறவின் சிக்கல்களோடு எதிர் கொள்வதும், தந்திர யுக்திகளின் ஊடாக அதிகாரத்திற்கான சமன்பாடுகளை மாற்றிக் கொண்டே இருப்பதுமான படக்காட்சிகளாக கனவுப் புத்தகம் விரிவு கொள்கிறது. கலவி, கரும்பாகவும், கம்பாகவும் மாறி மாறி சுவைக்கவும், துவைக்கவும் செய்கிறது. இன்னொரு கோணத்தில் இந்திய சமூகத்தில் பாலுணர்வு ஒடுக்கம் என்பதை ஆரிய சிந்தனை முறையாகக் கருதினால், அதன் ஆதிக்கம் குறித்த எதிர்ப்புணர்வில் விளைந்த திராவிடப் படைப்புகள் இவை என்றும் கருதலாம். &lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* * * * * * * * * * * *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜே. பி. சாணக்யாவின் கதா மாந்தர்கள் நுணுக்கமான சித்தரிப்பின் ஊடாக உயிர்க்கிறார்கள். இரையைப் பின் தொடரும் புலியென சத்தமின்றி பின் தொடரும் கவனத்தில் ஒரு சமூகத்தட்டு மனிதர்களின் அநிச்சையாய் இயல்பான உடல் மொழிகள், பாவனைகள், பேச்சு பழக்கங்கள், எதுவும் விடுபடுவதில்லை. இத்தனைக்கும் அக உலக எண்ணங்களை அவர் பெரும்பாலும் தொடர்வதில்லை. கச்சிதமான புற சித்தரிப்புகளின் ஊடாகவே கடினமான உடல் உழைப்புக்குச் சொந்தமான அம் மக்களின் வாழ்வினை நமக்கு அறிமுகப் படுத்திவிடுகிறார். தன்னைச் சூழ்ந்த மக்களின் வாழ்க்கை மீது பிரக்ஞையும், அக்கரையும், அன்பும் கொண்ட மனதிலிருந்தே இத்தகைய புனைவுகள் சாத்யமாகின்றன என்பதே ஜே. பி. சாணக்யாவின் பலம். இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளின் மையங்கள் ஒருமை கொள்வதற்கு மாறாக சிதறியே காணப்படுகின்றன. இக் குவிமையச் சிதறல் ஒரு சிறுகதை வாசிப்பு அனுபவத்தை அதன் முடிவில் இருத்தாமல் அதன் பயணத்திலேயே தக்கவைத்துக் கொள்கிறது. கனவுப்புத்தகம், ஆண்களின் படித்துறை, கடவுளின் நூலகம், கறுப்புக்குதிரைகள் போன்ற கதைகள் கறாராக எடிட் செய்யப்பட்டிருந்தால் நவீன சிறுகதைப் போக்கிற்கான மாதிரிகளாக தன்னைப் பிரஸ்தாபித்துக் கொள்ளாவிட்டாலும், இன்னமும் சிறப்பான இடத்தை அடைந்திருக்கும் என்பது எனது எண்ணம். கனவுப் புத்தகத்தின் கதைகளை அதன் தன்மைகளைக் கொண்டு மூன்று அடுக்குகளாகப் பிரிக்கலாம். இரண்டாவது ஆப்பிள், கனவுப்புத்தகம், கடவுளின் நூலகம், ஆண்களின் படித்துறையின் முற்பகுதி ‘ஆதியில் எல்லாம் ஒளியாய் இருந்தது’ என்னும் வாக்கியம் போல புனைவு கொள்ளும் கதைகள். அமராவதியின் பூனை, மஞ்சள் நீலம், ஆண்களின் படித்துறையின் பிற்பகுதி, வெள்ளை, கண்ணாம்பூச்சி போன்ற கதைகள் மறு அடுக்கு. உடலின் இச்சைகள் அலைகழிக்கும் வாழ்க்கையில் ஆண்களால் திருப்திபடுத்தவே இயலாத பெண்களும், அவர்களின் ‘உறவுகளுக்கு விஸ்வாசமற்ற’ தன்மையும், அவர்களை தக்கவைத்துக் கொள்ள விழையும் ஆண்கள் தங்களின் சகல வீரத்தையும், ஆண்மையும் வெளிப்படுத்தியும் கூட புரிந்து கொள்ள முடியாத புதிர்களாய் பெண்கள் விரிவுகொள்வதையும், தங்களின் சந்தேகங்களிலும், பயங்களிலும் சிறு குழந்தைகளாய் அவமானப்பட்டு சிறுத்துவிடும் ஆண்களும், என விரியும் கதைகள். கோடைவெயில், பதியம், கறுப்புக்குதிரைகள் போன்ற சமூக அலைகழிப்பில் சிதறும் மனித சித்தரிப்புகளின் கதைகள். சிறுபத்திரிக்கைச் சூழலில் பழக்கமான கதைகள். திரும்பத் திரும்ப அறிமுகப் படுத்தப்பட்டதாலேயே அவை அதிர்வுகள் ஏதும் ஏற்படுத்தாமல் சற்றே மிகை போலத் தோற்றம் கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாலுணர்வுகள் குறித்த பாசாங்குகள் குறைந்த சமூகத்தில் இக் கதைகளின் பின்னுள்ள ‘புரட்சி’ பெரிதும் மட்டுப் படுகிறது. ஆனால் காமம் சார்ந்த அரசியல் கூர்மைப்படுகிறது என்பதையும் சிங்கப்பூரின் சூழலில் வாழும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;* * * * * * * * * *&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-4252488998315538892?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/4252488998315538892/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=4252488998315538892' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/4252488998315538892'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/4252488998315538892'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/03/blog-post_29.html' title='ஜே.பி. சாணக்யாவின் &apos;கனவுப்புத்தகம்&apos;- ஒரு பார்வை'/><author><name>மானஸாஜென்</name><uri>http://www.blogger.com/profile/13032688617271305971</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_xMVCjgn17LE/SQaQNxjtcCI/AAAAAAAAAC0/qbjFW26RHUQ/S220/sanchan1_0.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-5266279768350676983</id><published>2007-03-23T11:40:00.000+08:00</published><updated>2007-04-12T15:34:38.121+08:00</updated><title type='text'>அடுத்த வாசகர் வட்டம்-ஒர் அறிவிப்பு.</title><content type='html'>ஒரு அறிவிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;இனிய வாசகர் வட்ட நண்பர்களுக்கு நமது அடுத்த வாசகர் வட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள் பின் வருமாறு&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியா- நாவல் எழுதியவர் பிரபஞ்சன்&lt;br /&gt;(இந்த நாவல் சுவா சூ காங், மரைன் பரேட், ஆர்ச்சர்ட் தேசிய நூலகங்களில் இல்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யவம்சம் - எழுதியவர் சா.கந்தசாமி&lt;br /&gt;(சுவா சூ காங், ஈசூன், செம்பவாங் ஜுரோங் கிழக்கு நூலகங்களில் இந்த நாவல் இல்லை)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முக்கிய குறிப்பு. இந்த நாவலுக்கும் விக்ரமன் திரைப்படத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே ரோஜாப்பூ பாடல் சூப்பர்! சலக்கு சலக்குப் பாடல் படத்திற்கு வலு சேர்க்கின்றது போன்ற திரை விமர்சனங்களைத் தவிர்க்கவும். இந்தப் பெயரை எடுத்து ஒரு திரைப்படத்திற்கு உபயோகித்துக் கொண்டதற்கு ஏதாவது ராயல்டி கிடைத்ததா என்பதை திரு சா.கந்தசாமியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சா.கந்தசாமி, பிரபஞ்சன் இருவரும் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சியை முன்னிட்டு சிங்கப்பூர் வரவிருக்கிறார்கள். எனவே நம்முடைய வாசகர் வட்டமும் இதனை ஒட்டி நடைபெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இரு உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளும் இந்த நிகழ்ச்சிக்கு சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திரு கண்ணபிரான் எழுதிய ‘gypsies’&lt;br /&gt;&lt;br /&gt;திரு இளங்கண்ணன் எழுதிய ‘morning dew’&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு சிறுகதைகளும் விரைவில் மின்னஞ்சல் மூலம் நம் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வசகர் வட்டம் எப்போது, எங்கே, யாருடன் போன்ற விவரங்கள் விரைவில்!!&lt;br /&gt;நான்கு கதைகள் தேர்வாகியுள்ளன. எனவே எல்லாக் கதைகளுக்கும் விமர்சனங்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும். எனவே உங்கள் நண்பர்களிடம் பேசி யார் எந்தக் கதையை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;வாசகர் வட்டத்தில் ஒரு சிறு வட்டம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-5266279768350676983?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/5266279768350676983/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=5266279768350676983' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/5266279768350676983'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/5266279768350676983'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/03/announcement-for-next-programme.html' title='அடுத்த வாசகர் வட்டம்-ஒர் அறிவிப்பு.'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-7140559475124028238</id><published>2007-03-22T08:44:00.000+08:00</published><updated>2007-03-31T18:43:56.163+08:00</updated><title type='text'>நெடுங்குருதி :வாசிப்பு ரெ. பாண்டியன்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#ffcc66;"&gt;எஸ் ராமகிருஷ்ணனின் “நெடுங்குருதி”&lt;br /&gt;களவாடப்பட்ட வாழ்வின் மெல்ல கலையும் நிச்சலனம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#ffcc66;"&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#33ff33;"&gt;ரெ.பாண்டியன்&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது யாருடைய கதை ?&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இது நாகுவின் கதை; அடுத்து நாகுவின் குடும்பத்தின், சந்ததியின் கதை ; பிறகு இது வேம்பலை கிராமத்தில் வாழும் ஒரு குடும்பத்தின் கதை ; அப்புறம் இது வேம்பர்கள் என்னும் குழுவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கதை. இன்னும் அதே வேம்பலையில் வாழும் வேம்பர்களின் கதை.&lt;br /&gt;நாவல் மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் சமூகத்தின் பார்வை எது ?&lt;br /&gt;கள்ளர்கள் அல்லது கொலைஞர்கள் பிறர் பொருளை அபகரிப்பதை தொழிலாகக்கொண்டு வாழ்பவர்கள்.&lt;br /&gt;எந்த நிலையிலும் அடுத்தவனை வஞ்சிக்காமல் இருக்கவேண்டும் என்பது காவியங்கள் ஏற்றிப்பிடிக்கும் தர்மம்.&lt;br /&gt;ஆனால், வேம்பர்களின் வாழ்வை அபகரித்த வரலாற்று , அரசியல், சமூகவியல் காரணிகள் யாவை ? அவற்றை எளிதாக கண்முன் அடையாளப்படுத்த முடியுமா?&lt;br /&gt;இந்த காரணிகளை வேம்பர்களே எதிர்கொண்டுள்ளனரா? அல்லது அவர்களை எதிர்கொள்ள விடாமல் வைத்திருக்கும் உள் நிலவரம் என்ன? வேம்பர்கள் அவர்களது களவு வாழ்வில்கூட கடைப்பிடிக்கும் சில நெறிமுறைகளுக்கான அர்த்தம் என்ன? அவன் அந்த நெறிமுறைகளுக்கு வந்தடைந்த அனுபவம் என்ன?&lt;br /&gt;அவர்களின் சந்ததியில் விலகல்கள் உண்டா? (இவை நாவல் ஆராயும் கேள்விகள்)&lt;br /&gt;ஒரு வேம்பனின் கதையை எப்படிச் சொல்லலாம்?&lt;br /&gt;கதையின் பிரதான கதாபாத்திரங்கள் நாகு, நாகு அய்யா, ரத்னா.&lt;br /&gt;நாகு இரண்டுங்கெட்டான் மனநிலை வளர்ச்சியுடையவன்; அவன் அவனது அய்யாவைப்போல திடசித்தமான திருடனில்லை; பயப்பிராந்தியோடு வளர்ந்தவன். ஆனாலும் திருட்டில் ஈடுபட்டு, குறை ஆயுளில்&lt;br /&gt;இறந்துபோகிறான்.&lt;br /&gt;ரத்னா நாகுவின் நகர்புறத்து வடிவம். பர்மாக்காரனின் வன்புணர்ச்சியில் தைரியம் எல்லாம் வடிந்துபோகிறது; காலம் முழுக்க தனது தனிமையை தொலைக்க, போராடி தோற்றுப்போகிறாள்.&lt;br /&gt;நாகு, ரத்னா இருவருமே தனியான ஆளுமை உடையவர்கள் இல்லை. கள்ளன் என்றும் விலைமாது என்றும் பொதுமைப்படுத்தும் பெயர்களுக்குள் பெரும் தத்தளிப்பு நிறைந்த மனிதர்கள் இருப்பதை இருவரும் பிரதிநிதிக்கிறார்கள்.&lt;br /&gt;வெளியில் “சாமி மாதிரி”யான கடினசித்தம் படைத்த நாகுவின் அய்யா தனது குடும்ப வாழ்வில் ஏற்படும் வீழ்ச்சிகளால் (பொருள் ஈட்டுவதில் தோல்வி, நீலாவின் , நாகுவின் மரணங்கள்) உள்ளூர உடைந்துபோகிறார்.&lt;br /&gt;ஒரு காலத்தில் பலராலும் அஞ்சப்பட்ட சிங்கி என்கிற வேம்பன் காதலுக்காக திருட்டுத்தொழிலையே விட்டுவிட்ட பிறகும், மீதி வாழ்வை சீரழிந்த நிலையிலேயே தொடரவேண்டிய அவலம்; அவன் ஒரு சிறுவனாக, தன் தாய் வேம்பனின் மனைவி என்பதால் அடைந்த அவமானங்களை பற்றிய ஞாபகங்களோடு முதுமையின் தனிமையில் கழித்துக்கொண்டு, இறந்துபோன கூட்டாளி குருவனோடு ஆடுபுலி ஆட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான்.&lt;br /&gt;இடுப்பு விலகிய லட்சுமணனை திருடு போன களவு நகைகளுக்காக அவன் மகன் சீனி வேல்கம்பால் கொன்றுவிட்டு, பிறகு உண்மையை தெரிந்துகொண்டு, பழிவாங்க புறப்பட்டு, அவனும் பழியாகிறான்.&lt;br /&gt;இடுப்பு விலகி, கழுத்தில் ஆயுளுக்கும் கொண்டி மாட்டப்பட்ட வேதனைக்குரல் ஊர் முழுக்க கேட்டுக்கொண்டிருக்கும் சூழல்.&lt;br /&gt;வேம்பர் குடும்பத்து பெண்களான சுப்புத்தாய், வேணி, மல்லிகா போன்றவர்கள் ஆளுமையற்றவர்களாக, துயரத்தை மௌனமாக எதிர்கொள்பவர்களாக இருக்க, பக்கீரின் விதவை மனைவி ஆளுமைமிக்கவளாக வேம்பலைக்குள் நுழைகிறாள். வேம்பர் சந்ததியில் கண்ணீரை விலக்கி வைக்கும் முதல் பெண் வசந்தா.&lt;br /&gt;வசந்தாவும் திருமாலும் நாகு அய்யாவின் நிகழ்கால தலைமுறை சந்ததியினர் (சிறு கதாபாத்திரங்கள் தான்). நாகு அய்யாவின் / வேம்பர்களின் பரம்பரையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களின் குறியீடாக வசந்தாவும், திருமாலும் வருகிறார்கள்.&lt;br /&gt;வசந்தாவின் ஆளுமை துலங்க கிட்ணா-சேது-சங்கு, தோழி-குருநாதன் ஆகியோருடனான அனுபவங்கள் விரிகின்றன; திருமாலின் ஆளுமை துலங்க பவுல்-கிருபை-தங்கபுஷ்பம்-லயனல்சார்-இறையியல் பள்ளி அனுபவங்கள் விரிகின்றன.&lt;br /&gt;புத்திசாலித்தனமாக பிழைத்துக்கொள்பவன் காயம்பு.&lt;br /&gt;இவ்வளவு பேர் இருக்க, குறை ஆயுள் உடைய நாகு பிரதான பாத்திரம் ஆனது ஏன்?&lt;br /&gt;கள்வர்களின் சந்ததியின் விலகல் புள்ளி நாகு. முதன்முதலாக (சின்னுவின்) இரத்தம் பார்த்து, மனக்கலக்கத்துக்கு உள்ளானவன். அத்தோடு அவனது சந்ததி வேம்பலையின் சாபத்தை எதிர்கொள்ள இரண்டு வழிகளில் பிரிகிறது. ஒன்று, வேம்பர் மரபோடு தன்னை துண்டித்துக்கொள்கிறது (திருமாலின் பாதை) ; மற்றொன்று, வளர்த்துக்கொண்ட தனது ஆளுமையோடு, வேம்பலைக்குத் திரும்புகிறது (வசந்தாவின் பாதை).&lt;br /&gt;நாகு அய்யாவின் வீழ்ச்சியின் தொடர்ச்சி நாகு ; நாகு அய்யாவின் பாதிப்பு வசந்தாவிடமே தொடர்கிறது. தானறியாத, குறை ஆயுளில் மறைந்த தந்தை பற்றிய ஏக்கம் ஒரு புதிய கனவின் தொடக்கமாகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;வேம்பர் வாழ்வின் கதியில் எதிர்படும் முரண் எது ?&lt;br /&gt;&lt;br /&gt;1. இயற்கையின் வஞ்சனை : பகல் பற்றி எரிவது போன்ற தீவிரம் கொள்ளும் வெக்கை.&lt;br /&gt;வெக்கையின் விளைவான வறட்சி. ஊரைவிட்டு கிளம்பிபோன மனிதர்களால், சூன்யமாய் காட்சியளிக்கும் கிராமம். அன்றாட வாழ்விற்கு அலைக்கழிக்கப்படும் நிலையும், கடுமையான தனிமை உணர்வும் மனிதர்களை உள்ளூர இறுகிப் போக வைக்கிறது.&lt;br /&gt;2. வாழ்க்கையின் வஞ்சனை : அசம்பாவிதங்களின் தொடர் சம்பவிப்பு.&lt;br /&gt;நீலாவின் மரணம் அம்மாவைக் கொல்கிறது; அம்மாவின் மரணம் நாகுவை தடம் புரள வைக்கிறது ; சின்னுவின் இரத்தம் பார்த்தல், நாகுவை அதிர வைக்கிறது. நாகுவின் மரணம் மல்லிகா / ரத்னாவதி ஆகியோரின் வாழ்வை நிர்க்கதியாக்குகிறது; இரண்டாவது வாய்ப்பாக வரும் பூபாலனின் மரணம் ரத்னாவதியை பழைய வாழ்வுக்கு திரும்பச் செய்கிறது.&lt;br /&gt;3. காலத்தின் வஞ்சனை&lt;br /&gt;கொற்கை பாண்டியனின் வீரர்களுக்கு தப்பி வந்த வரலாறு ; வேல்சி துரையால் துன்புறுத்தலுக்கு உள்ளானது; 42 வேம்பர்கள் கொல்லப்பட்டது ; மற்றவர்களின் குதிகால் நரம்பும் குரல்வளை நரம்பும் வெட்டப்பட்டது ; வேம்பனின் கண்களில் நிரந்திரமாக குடிகொண்ட பயம்.&lt;br /&gt;பிறகு மீண்டும் களவுக்குப் புறப்பட்டு, போலீசின் கைரேகை வேட்டை, கச்சேரி காவல் என்று அவர்களின் வீழ்ச்சி தொடர்கிறது.&lt;br /&gt;‘நாகு’ வின் சாத்தியப்பாடுகள்&lt;br /&gt;திருட்டுத் தொழிலிலிருந்து நாகுவின் விலகலை சாத்தியப்படுத்தியிருக்கக்கூடியவள் அவனின் அம்மா சுப்புத்தாய். கனகாம்பரத்தின் தலையை அவன் உடைத்ததற்காக, அவனுக்கு சூடு போட்டவள். அவன் சூரிக்கத்தியைத் தீட்டுவதை தாத்தாவைப்போல பார்த்துக்கொண்டிருந்திருக்கமாட்டாள்.&lt;br /&gt;நாகு பழைய வரலாற்றை நேர் செய்யக் கூடிய வாய்ப்பைப்பெறவேண்டி இருந்தவன்; அம்மாவின் மரணம் அவனை திசையற்ற வெளியில் அலையவைத்து விடுகிறது. ஆனால், சிங்கி திருட்டுத்தொழிலை தெய்வானை மீது கொண்ட காதலினால் விட்டுவிட்டாலும், தெய்வானை கொடூரமானவளாக மாறிப்போகிறாள்.&lt;br /&gt;வழிதவறி திருட்டில் நுழைந்து, அதன் சவாலை எதிர்கொள்ளமுடியாமல் வாழ்வை இழக்கிறான் ஒருவன் ; வழிதவறி திருட்டை கைவிட்டு குடும்ப வாழ்வில் நுழைந்தவன், தாம்பத்யத்தின் சவாலை எதிர்கொள்ளமுடியாமல் தனிமைபடுகிறான்.&lt;br /&gt;நாவலின் ஆரம்பத்தில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கடும் சண்டை நடக்கிறது; வேணி அக்காள் அழும் குரல் தெருவில் வீட்டை நோக்கி நடந்துவந்து கொண்டிருக்கும் நாகுவுக்கு கேட்கிறது. உடனே அவன் திரும்பி தெருவை நோக்கி நடக்கிறான். சிறுவயது மனதில் ஏற்படும் இது போன்ற பதட்டங்கள் எவ்வளவு தூரம் பிற்கால வாழ்வை தடுமாற்றங்கள் உள்ளதாக ஆக்குமென்பதற்கு நாகுவின் பிற்பகுதி வாழ்வே உதாரணம்.&lt;br /&gt;நாகு அய்யாவின் பாதை&lt;br /&gt;பக்கீரைக் கொன்றது நாகு அய்யா; பக்கீரின் மனைவி இரு சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு, சுயதொழில் முயற்சியாலும் பிறகு ரெட்டியாருக்கு ‘தொடுப்பாகி’ போவதாலும் குடும்பத்தை கரையேற்றுகிறாள்; நாகுவும் வேணியும் வேம்பலைக்கு வரும்போதெல்லாம், பக்கீரின் மனைவியை காணச்செல்கின்றனர். ஆனால், நாகு அய்யா பக்கீரின் மனைவியை நடத்தைக் கெட்டவள் என்று திட்டுகிறார்.&lt;br /&gt;இந்த இடத்தில் நாகு அய்யாவின் மனோபவம் என்ன? அவர் என்ன எதிர்பார்க்கிறார் ?&lt;br /&gt;விதவையானவுடன் பக்கீரின் மனைவி சுப்புத்தாயைப்போல கண்ணீரும் கம்பலையுமாக காலம் தள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். வேணி திருமணமாகி போகும் தருணத்தில் “என்ன கஷ்டம் வந்தாலும் உன் அம்மாவைப்போல தைரியாமாய் இருக்கணும் “ என்கிறார் - அதாவது, சுப்புத்தாயின் வாழ்வை உருக்குலைக்க செய்வதையெல்லாம் செய்துவிட்டு. அவர் நினைத்தால் குடும்பத்தைவிட்டு ஓடிப்போய்விடுவார், பிறகு சாவகாசமாக திரும்பி வருவார். இருக்கும் கொஞ்சநஞ்ச குடிநீரையும் கால்கழுவ பயன்படுத்துபவராக நாவலில் அவர் அறிமுகமாகிறார்.&lt;br /&gt;ஆணாதிக்கம் பற்றி நேரடியாக நாவலில் பேசப்படாவிட்டாலும், நாவலின் வரும் அத்தனை பெண்களும் (சுப்புத்தாய், மல்லிகா, வேணி, ரத்னாவின் பிற்பகுதி வாழ்வு) துயர நிழல்களாகவே வருகிறார்கள் – வசந்தாவையும் பக்கீரின் மனைவியைத் தவிர.&lt;br /&gt;பிறகு பெண்களுக்கு பேய் பிடிப்பது பற்றியும், ஆண்களுக்கு பேய் பிடிப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த பெண்களைப் பிடித்த பேய் ஆணைத் தவிர வேறு யார் ?&lt;br /&gt;வேம்பலையின் சாபத்துக்கும் இவர்களின் கண்ணீருக்கும் சம்பந்தம் உண்டா? ரத்னா ‘வேட்டைக்கு தப்பிய மிருகங்களுக்கு ஏற்படும் மூர்க்கம்போல ஏற்பட்டு மாறிவிடுகிறாள்; மல்லிகா “வேலை பைத்தியமா”கிறாள்; ஏன் என்று கேட்டால், ஓங்காரித்து அழத் தொடங்கிறாள்; சிடுசிடுப்பாகி போகிறாள்;&lt;br /&gt;நாகு அய்யாவின் பிற்பகுதி வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது; வாழ்வின் கொடும் வெக்கையிலிருந்தும் தாங்கொண்ணா துயரத்திலிருந்தும் ஓடி ஒளிவதல்ல, மல்லிகாவிற்கும் வசந்தாவிற்கும் ஆசுவாசத்திற்காக சாய்ந்துகொள்ளும் ஒரு சுவராகவாவது இருப்பதுதான் தனது குறைந்தபட்ச நல்லது செய்தலாக இருக்கும் என்கிற நிலைக்கு வருகிறார்.&lt;br /&gt;நாகு அய்யாவோடு ஒப்பிடும்போது நாகுவுக்கு தன் வேணி அக்கா வாழ்நிலைப்பற்றியும் வெற்றிலைச் சத்திர விலைமாதுபற்றியும் வருத்தம் ஏற்படுகிறது. ரத்னாவின் தோழியின் மகளை மடியில் வைத்து முடி இறக்க சம்மதிக்கிற அளவுக்கு திறந்த மனோபாவம் அவனுக்கு இருக்கிறது.&lt;br /&gt;வேம்பனின் நிகழ்கால வேர் 1 : வசந்தா&lt;br /&gt;கல்லூரிக்குமேல் வட்டமிடும் பருந்து வேம்பலையைச் சேர்ந்தது என்று வசந்தாவுக்குத் தோன்றுகிறது. நாவலில் அவள் தற்கொலையிலிருந்து உயிர்பிழைப்பதன்மூலம், அவள் “மறுபிறப்பு எடுத்துவிட்டாள்; அவளை இனி வேம்பலையின் சாபம் ஒன்றும் செய்யாது “.&lt;br /&gt;வசந்தாவுக்கு படிப்பு பிடிக்கவில்லை; தினமும் தலையில் கொட்டுவாங்கும் வசந்தா; ஆனால் அவள் அழுவதேயில்லை; யாரும் அழுதாலும் பிடிப்பதேயில்லை; அவள் புது டீச்சருக்கு வணக்கம் சொல்வதில்லை; அதனால் ஏற்படும் தண்டனைக்கு வேதனைப்படுவதில்லை; அவளுக்கு இருட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்கும்; அவளைப் பார்க்க யாரும் வருவதில்லை ; அவளுக்கும் அம்மாவிடம் பேசப்பிடிப்பதில்லை; ஆனால், வேம்பலைக்கு வந்துவிட்டுச் சென்றபிறகு, அம்மாவின் நிலை மீது வருத்தம் ஏற்படுகிறது. பழைய வேம்பலை வாழ்வு அம்மாவைப்போன்ற எளிய மனிதர்களின் வாழ்வின் மீது நிகழ்த்திய தாக்குதல் பற்றிய புரிதல் அது.&lt;br /&gt;பதின்ம வயதில் ஒரே ஆளைத் திருமணம் செய்யமுடியாத காரணத்தால், தோழியின் பேச்சைக்கேட்டு கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வசந்தாதான், தனது கணவன் சேதுவை கிட்ணா அபகரிப்பதை கண்டு, கணவனை விட்டு விலகுகிறாள்.&lt;br /&gt;ஒரு சிறு குற்றத்திற்காக, சின்னுவை தண்டிக்கிறான் நாகு; ஆனால், நாகுவின் மகள் வசந்தா சேதுவின் அண்ணியிடம் சேதுவுக்குள்ள கள்ள உறவை மன்னித்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தையை ஏற்றுகொள்கிறாள். நாகுவின் வம்சகுணத்திலிருந்து வசந்தா விலகும் புள்ளி இது.&lt;br /&gt;நாகு வேம்பர்களின் தற்கால நிர்க்கதி வாழ்வின் குறியீடு; அடுத்த தலைமுறை வசந்தா வேர்களைத் தேடி வருகிறாள். வேர்களின் பலவீனமான அம்சங்களை அவள் மீறவேண்டும். அதற்கான ஆளுமை அவளிடம் இருக்கிறது. (சுப்புத்தாயிடமும் மல்லிகாவிடமும் இல்லாதது )&lt;br /&gt;அவள் வேர்களின் பலவீன அம்சங்களை மீறும் தருணங்கள் நாவலுக்கு வெளியே இருக்கிறது (முடிவுக்கு பின்னால்)&lt;br /&gt;ஊமைவேம்பு நாகுவின் காலத்தில் காய்ப்பதோ பூப்பதோ இல்லை; வசந்தாவின் காலத்தில்தான் பூக்கிறது.&lt;br /&gt;வேம்பனின் நிகழ்கால வேர் 2 : திருமால்&lt;br /&gt;பூபாலனின் மரணமும் அத்தைக்காரியின் திடீர் மனமாற்றங்களும் ரத்னாவை பழைய வாழ்வை நோக்கி திருப்புகிறது. இது திருமாலின் வாழ்வின் கதியை மாற்றிவிடுகின்றன.&lt;br /&gt;வேம்பர் வாழ்ககைச்சூழலிலிருந்தும் ரத்னாவின் நகர்ப்புறச் சூழலிலிருந்தும் துண்டிக்கப்பட்டு, மிஷன் பள்ளியின் பாதுகாப்பு விதிகளுக்குள் தன்னிச்சையாக வளர்கிறான்.&lt;br /&gt;அவன் சிறுவர்விடுதி கம்பிகளைப் பிடித்துக்கொண்டு எத்தனையோ நாட்கள் அழுதிருக்கிறான்; காலப்போக்கில், அம்மா அவனது மனத்திலிருந்து விலகிப்போகத் தொடங்கினாள்; பள்ளிக்கூடத்தின் நெல்லிமரத்தடியும் கிழிந்த காகிதங்களின் மக்கிய வாசனையும் அவனை வளர்த்தன. ஓட்டு அணில்களைப் போல தன்னிச்சையாக பள்ளியினுள் அவன் உலா வர ஆரம்பித்தான்.&lt;br /&gt;லயனல்சாரின் தந்தையைப்போன்ற பராமரிப்பில் எதையும் நடுநிலையிலிருந்து பார்க்க கற்றுக்கொள்கிறான்.&lt;br /&gt;பவுல் மார்க்சியம் பற்றி பேசுகிறான்; இறையியலின் போதாமைகளையும் இறுக்கத்தையும் பற்றி பேசுகிறான்; அவன் தன் அப்பா கிருபையை வெறுக்கிறான், அம்மாவின் பாதையில். ஆனால், பவுலின் அப்பாவின் மீது தான் திருமாலுக்கு வாஞ்சை பிறக்கிறது. கிருபையை சந்தேக நோயாளியாக மாற்றியது யார்? தங்கபுஷ்பம் கிருபைக்குத் தெரியாமல் திருடி பரண்மீது சேர்த்துவைத்த பணமா ? இது வீட்டிற்குள் நடந்த திருட்டு; கிருபையிடம் திருடியது பணம் மட்டும்தானா ?&lt;br /&gt;கிருபைக்கு விஷம் வைத்து தங்கபுஷ்பம் கொன்றுவிடுகிறாள். இதைப்பற்றி பவுலுக்கு உள்ளுணர்வு தட்டும்போது, இந்த புரிதலுக்கு காரணமான திருமால்மீது மனவிலகல் ஏற்படுகிறது; “நீ தோழர் சீனிவாசனை இனி சந்திக்கவேண்டாம்“ என்கிறான். மார்க்சியமும், ஏங்கல்சும் தோழர் சீனிவாசனும் பவுலின் தனியுடைமையன்றோ?&lt;br /&gt;&lt;br /&gt;வேம்பனின் நகர்புற பிரதிபலிப்பு : ரத்னாவதி&lt;br /&gt;&lt;br /&gt;பர்மாக்காரனுடனான வன்புணர்ச்சி அனுபவத்திற்கு பிறகு, அவளது தைரியம் யாவும் வடிந்துவிடுகிறது. முன்பின் அறியாதவர்களோடு படுக்கையை பகிர்ந்துகொள்ளும் வாழ்விலிருந்து விலக ரத்னா விலக விரும்புகிறாள். முதலில் நாகு, பிறகு பூபாலன், அத்தைக்காரி. எல்லாம் பொய்த்து போகிறது.&lt;br /&gt;யாருமற்ற தனிமை என்கிற அச்சம் அவளை துரத்துகிறது. சினிமாவுக்கு வருகிறாயா என்று அழைத்தவன் தொடங்கி, அஸ்ரஸ் முதலாளிவரை அவள் தனது தனிமையை வெல்ல நடத்தும் அவல முயற்சிகள்; மேக நோய் வந்த பிறகு மீண்டும் தனிமை. ஜெயராணியோடு தங்க வருகிறாள்; அவளும் இவளை ஒரு லாட்ஜில் ரூமில் தள்ளிவிட்டு, கிளம்பிவிடுகிறாள். தற்கொலை அவள் தனது தனிமைக்கு எதிராக தொடுக்கும் இறுதி அஸ்திரம்.&lt;br /&gt;ரத்னாவுக்கு ஏன் மிஷன் பள்ளி பிடித்திருக்கிறது ?&lt;br /&gt;அவள் கோயிலுக்கு வெளியே கடை வைத்திருந்தாலும், கோயிலுக்குள் போக விரும்பியதில்லை; ஒருதடவை பூபாலனோடு போனபோது ஒரு போலீஸ்காரன் (பழைய வாடிக்கையாளன்?) “இப்பொழுதெல்லாம் பார்க்கவே முடிவதில்லையே, ஆமா இது யாரு? “ என்கிறான். அவள் விட்டு விலகினாலும் அவளது பழைய வாழ்வு அவளை பின்தொடர்கிறது;&lt;br /&gt;அவள் தனது மகனுக்கு விரும்பும் ஒரு புதிய தொடக்கம் மிஷன்பள்ளி மூலமாகத் தான் சாத்தியம் என்று நினைக்கிறாள்; கிறிஸ்தவம் வெளிப்படையாக வழங்கும் மன்னிப்பு, பரிசுத்தம், எளிமை என்கிற மாற்று யதார்த்தம் பற்றிய அவளது எண்ணங்கள் அவளுக்கு மன ஆசுவாசத்தை வழங்குகிறது.&lt;br /&gt;மாற்றங்களை எதிர்கொள்ளும் வேம்பர்கள்&lt;br /&gt;கல்வியின் அறிமுகத்தை, கிறிஸ்தவ மதத்தின் அறிமுகத்தை, தூக்கம் பற்றிய ஆராய்ச்சியை போனால்போகிறது என ஏற்றுக்கொள்ளும் வேம்பர்கள் மின்சாரத்தை நிராகரித்துவிடுகிறார்கள். மின்சாரம் வேம்பர்கள் மிகவும் நேசிக்கும் இருட்டைப் போக்கிவிடும். அவர்களின் வாழ்க்கைப்பாட்டையும் நிறுத்திவிடும் என்பதால்.&lt;br /&gt;நாவலின் சொல்முறை&lt;br /&gt;நாவலில் எங்குமே கள்ளர்கள்மீது நமக்கு எதிர்மறையான என்ணம் ஏற்படவில்லை. காரணம் அவர்களின் வாழ்நிலையின் மீதான சோகம்.&lt;br /&gt;ஆனால், கள்ளர்கள் மீதான எதிர்மறையான எண்ணம் சமூகத்தின் பொது நனைவிலியில் இருக்கிறது; வேல்சு துரை வரலாற்றில் எப்படி வேம்பர்களை ஒடுக்கினான் என்கிற சமூக பார்வை அல்லது பிரதாபம் நாவலின் தொடக்கத்துக்கு முன்னே உள்ளது. நாவல் இந்த பொது பார்வை தாண்டிய உள்-நிலவரங்களுக்குள் தனது விசாரணையை செய்கிறது.&lt;br /&gt;நாகு அய்யா ஒரு “சாமி” மாதிரி ஆள் என்பது மிகவும் பிற்பாடு போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. மாட்டுத் திருட்டு பற்றி துப்பு சொல்பவர்கள்மீது விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகமும் கோபமும் மட்டுமே எதிர்மறையான ஒரே பதிவு. நாகு அய்யா செய்த பக்கீரின் கொலையும் நேரடியாகச் சொல்லப்படவில்லை.&lt;br /&gt;நாவலின் தொனி ஒரு சீரான நீரோடை ; பகீரதன பாய்ச்சல்கள் இல்லை; நாகுவின் மரணம் கடைசிக்கு மூன்றாவது பாராவில் நடுவரியில் சொல்லப்படுகிறது; நீலாவின் மரணமும் ரத்னாவின் தற்கொலையும் அவ்வாறே.&lt;br /&gt;‘கோடைகாலத்’தை நாகுவின் எங்கும் தப்பிச்செல்லமுடியாத கஷ்டமான பால்யம், ‘காற்றடிக்கும் காலத்’தை நாகுவின் வாலிப சாகஸம் மற்றும் திடீர் மரணம், ‘மழைக் காலத்’தை அடுத்த தலைமுறையின் பள்ளிகளுக்குள் சிறைப்பட்ட பால்யம், ‘பனிக்காலத்’தை மூன்றாம் தலைமுறையின் அளுமையின் சோதனைக்காலம், மற்றும் ரத்னாவதியின் மரணம் ஆகியவற்றை சுட்டி நிற்கிறதாக வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்ராவின் கலை&lt;br /&gt;&lt;br /&gt;நாவலில் எந்த ஒரு நிகழ்வின்மீதோ ஒரு கதாபாத்திரத்தின்மீதோ ஆசிரியர் தனது அபிப்பிராயத்தையோ அல்லது ஒரு எள்ளலையோகூட தெரிவிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். ஒரு தொனி மாறுதலையோ அல்லது புனைவின் ஏதோ ஒன்றிற்கு தரும் முக்கியத்துவத்தையோ எங்கும் உணரமுடியவில்லை; இந்த நாவல் எழுதப்பட்டதன் அல்லது செதுக்கப்பட்டதன் தடயத்தை இதன் பக்கங்களில் எங்கும் காணமுடியவில்லை.&lt;br /&gt;எந்த குறிப்பிட்ட இலக்குகளையும் அவர் நாவலில் வலியுறுத்தவில்லை; நாவலில் வேம்பர்களின் உள்நிலவரங்கள் கூடிய வரலாற்றை நிகழ்கால தலைமுறையான வசந்தாவிற்கும் திருமாலுக்கும் விரித்து இணைப்பதன்மூலம், கள்ளர்கள் விலைமாதுகள் என்கிற பொதுமைக்கு பின்னே இருக்கும் பொது மனநனைவிலியின் அந்தரங்க மனத்தீட்டை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதியற்புத யதார்த்த அம்சங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1)இறந்த மனைவியிடமிருந்து பச்சைக்குத்தப்பட்ட தேளை சிங்கி கிழவன் பெற்றுக்கொள்ளும் இடம்.&lt;br /&gt;2)ஊமை வேம்பை தஞ்சமடையும் பேய் பிடித்த பெண்கள் ; அவர்களின் கூந்தலைப் பிடித்து ஊமைவேம்போடு ஆணியடித்துவிடும் கோடங்கி.&lt;br /&gt;[கோடாங்கியாக வேல்சு துரையும் உள்ளூர் போலிசும்; பேய் பிடித்த பெண்களாக வேம்பர்கள்; வேம்பலை அவர்களது சரணாலயம் – சுபிட்சத்திற்கு வழியில்லாத “ஊமைவேம்பு” ஊர் ; அவர்களது தைரியம் வேல்சு துரையாலும் / தலைவிதி வேம்பலையின் சாபத்தாலும் அங்கே நிரந்திரமாக ஆணியடிக்கப்பட்டிருக்கிறது என்றும் இதை வாசிக்கலாம்.]&lt;br /&gt;3) சென்னம்மாளின் முற்றிய வயதும், வாய்க்காத மரணமும் தீராத தாகமும் : வேம்பலையின்மீதான சாபத்தின் மனித உரு (personification).&lt;br /&gt;4) இரு வேம்பலைகள் : இறந்தவருக்கு ஒன்று, இருப்பவருக்கு ஒன்று.&lt;br /&gt;5) பக்கீரின் மனைவியின் கனவு : அவளுக்கும் கணவனுக்கும் ஏற்பட்டுவிட்ட நிரந்திர பிரிவைத் தெரிவிக்கும் கனவு.&lt;br /&gt;6) வேணிக்கு கிணற்றுத் தண்ணீர் கைக்கு எட்டாததாகவே கனவு வருகிறது ; கனவு முடிந்து, கதவு வழியே வீட்டிற்குள் திறந்த மார்புடன் கிடக்கும் தாயைப் பார்க்கிறாள்; பசியடங்காத பூனை ஒன்று இரவில் அலைகிறது; கனவும் நனவும் வேம்பலை பெண்ணின் வாழ்வு வாழ்க்கைப்பற்றிய ஈரத்தின் ஏக்கத்திற்கும் ஆணின் அடங்காதபசிக்கும் இடையிலான சிறுவட்டத்தின் பரப்பளவுக்குள்தான் என்பதன் சூசகம்.&lt;br /&gt;7) வீட்டிற்கு ஆகாத கோயிலுக்கு நேர்ந்துவிட்ட செவலைப்பசு.&lt;br /&gt;8) உள்ளங்கையைப்போல பாதுகாக்கும், தப்பிப்போகாமல் சிறைவைக்கும், தப்பிப் போனவரை மீண்டும் தன்வசமாக்கும் தன்மை&lt;br /&gt;9) ஆணியைப் பிடுங்கியதும் தேள் கொட்டுவது, பிடுங்கிய ஆணியை திரும்ப அடிக்க முடியாது தடுமாறும் வீரம்மாள்&lt;br /&gt;10) வேம்பர் குதிகாலில் தழும்பு, இன்னும் பல.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து வாழ்வில் அதியற்புத யதார்த்தத்தின் அர்த்தம் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;நூறு குடும்பங்களே உள்ள ஒரு சிறு கிராமம். எந்த நவீன வசதிகளும் சென்றடையாத, வெக்கையும் அடைமழையும் சூறைக்காற்றும் துர்மரணங்களும் அலைக்கழிக்கும் நிலவெளி.&lt;br /&gt;எந்த நவீன அறிவும் வந்துசேராத மனிதன்.&lt;br /&gt;அவன் தன் சூழல் சார்ந்த, இருப்பு சார்ந்த , துர்மரணங்கள் சார்ந்த அச்சத்தைப் போக்கவேண்டும். என்ன செய்வான் ?&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை அச்சுறுத்தும் கொடும் வெக்கை வயது முற்றி மரணம் வாய்க்காத சென்னம்மாளின் தீராத தாகமாகத்தான் இருக்கவேண்டும். சென்னம்மாள் அவர்களோடு வாழ்ந்தவள். அவளுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுத்தால் அவளைப்பற்றி அச்சமின்றி வாழலாம்.&lt;br /&gt;வெக்கை தீர்ந்து வந்த அடைமழை நிச்சயமாக சென்னம்மாள் கொண்டுவந்ததாகத்தான் இருக்கவேண்டும். அப்படிச் சொன்னால்தான் சென்னம்மாளோடு நன்றி பாராட்டியதாகும் . அவளின் ஆசியையும் பெற்றதாகும். தனக்கு முன்னால் இறந்தவள் தனக்கு தாய்தானே ? தாய் காக்கும் தெய்வமும் தானே ?&lt;br /&gt;வேல்சின் போலீஸ்காரர்கள் துரத்திவந்தபோது வேம்பர்கள் வேம்பின்கீழ் ஒளிந்துகொண்டார்கள் ; வேம்பு தனது அடர்த்தியாலும், அது தந்த இருட்டாலும், நிசப்தத்தாலும் காட்டின் ஒலிகளாலும் அவர்களைக் காத்தது.&lt;br /&gt;ஆனால், அதை அப்படிச் சொன்னால் நன்றி பாராட்டியதாகுமா ?&lt;br /&gt;ஆக வேம்பு தங்களின் குலதெய்வம்போல, தாயைப்போல வயிற்றைத் திறந்து அவர்கள் அனைவரையும் உள்வாங்கி, அவர்களைக் காத்ததுதானே உண்மை ?&lt;br /&gt;தனது சூழலின் மீதான அச்சத்தை வெல்ல, வேம்பன் தன் சூழல்மீது நட்பும், உறவும் கொண்டாடியே ஆக வேண்டும். வெக்கையும் அடைமழையும் சூறைக்காற்றும் அவனது தாயின் சேய் மீதான கோபமன்றி வேறென்ன ?&lt;br /&gt;தெய்வானையின் கையிலிருந்த தேளை சிங்கி தன் உள்ளங்கையில் பெற்றுக்கொள்வதன் அர்த்தமென்ன ?&lt;br /&gt;தேள் வேம்பர்களின் பச்சைக்குத்தப்பட்ட சின்னம் ; சிங்கியைப் பிரிந்த பிறகு பண்டாரத்தின் மகளான தெய்வானை செய்துகொண்ட இந்த சின்னம் கணவன்மீதான அன்பின் குறியீடு ? அவளது கொடுங்குணம் தன்னால் தாயாக முடியாததின் சுய கோபமாய் இருக்கலாம்; மரணத்திற்கு பின்னாலான அவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட மௌன சம்பாஷணை அது? அதில் அவள் தன் உள்ளார்ந்த அன்பை அவனுக்கு தெரிவித்துவிட்டாள். அன்பு தேளாய் கொட்டுவது யார் வாழ்வில்தான் புதிது?&lt;br /&gt;நகரத்து வாழ்வின் அதியற்புத யதார்த்தத்தின் அம்சங்கள்&lt;br /&gt;மூச்சிரைப்பு நோய் உள்ள லயனல் சாரின் மனைவி. இவ்வளவு இறையுணர்வு உள்ள குடும்பத்தில் ஏன் இவ்வளவு துன்பம் என்று பிரான்சிஸ் திருமால் நினைக்கிறான்.&lt;br /&gt;கேள்வியை மாற்றியும் வாசிக்கலாம் : இவ்வளவு மரண பயம் இருப்பதால்தான், உயிரைப் பற்றிக்கொள்ள இவ்வளவு பிராயத்தனம் (பிரார்த்தனையும் அதன் வழியான வாழ்வும்) பத்ததிகள் நிரம்பிய சடங்காய் (stylized rituals) ஆக செயல்படுத்தப்படுகிறது. குடும்பத்து நால்வரின் பிரார்த்தனைகளில் அவளது உயிர் காக்கப்படும் என்ற நம்பிக்கைக்கும் சென்னம்மாள் வேம்பலையை காக்கிறாள் , ஊமைவேம்பு வேம்பனின் முன்னோர்களை காத்த தெய்வம் என்று சொல்வதற்கும் வேறுபாடு என்ன ?&lt;br /&gt;மிஷன்பள்ளி பற்றிய ரத்னாவதியின் மாற்று யதார்த்தம் மீதான ஈர்ப்பும் இதோடு சேர்ந்ததுதான்.&lt;br /&gt;கிராமத்தில் காடு, மலை, மிருகங்கள், பூச்சிகள், இருட்டு, மழை, காற்று, துர்மரணம் என்கிற அச்சங்கள்.&lt;br /&gt;(நாகுவின் பயப்பிரமைகளுக்கு நிர்வாணப் பரதேசிகள்தான் நிவாரணம் தருகிறார்கள் : “எல்லாம் சரியாகிவிடும்” )&lt;br /&gt;நகரத்தில் நம்மை சிறைவைத்திருக்கும் நகரத்தின் இயக்கம், அதன் கதி, சுற்றுச்சூழ நிறைந்திருக்கும் மனிதர்கள், நோய்கள், தனிமை பற்றிய அச்சங்கள்.&lt;br /&gt;அச்சங்கள் தான் வேறுபடுகின்றன தவிர, அச்சங்களே மனிதனுக்கு நடுக்கமேற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அச்சத்தை வெல்ல நம்பிக்கைகள் தேவை - அது நிறுவனமாக்கப்பட்டிருக்கும் இறையியலாகவோ மார்க்சியமாகவோ இருக்கலாம் .&lt;br /&gt;நாவலின் மையச்சரடு&lt;br /&gt;நாவல் வேம்பனின் வாழ்வின் விரிவுகளைக்கொண்டு விசாரிக்க விரும்புவனவற்றை ஒற்றைப் பதத்தில் குறிப்பாலுணர்த்த முடியுமா?&lt;br /&gt;‘கள்ளர் பயம்’&lt;br /&gt;எந்த பழிக்கும் அஞ்சாத கள்ளனைப்பற்றி கள்ளர் அல்லாதவர் கொள்ளும் பயம் இது. யாருமற்ற சூழ்நிலையும் இருட்டும் அவன் இல்லாதபோதும் அவனைப் பற்றிய நினைவை கிளறுபவை.&lt;br /&gt;கடினசித்தம் படைத்த கள்ளனுக்குள்ளும் இருக்குமா பயங்கள் ?&lt;br /&gt;கள்ளர் அல்லாதவர்களின் பயங்களிலிருந்து வேறுபட்டவையா அவை ? கள்ளர் அல்லாதவர்களின் வாழ்விலும் சாதாரணமாய் ததும்பி வழியும் கள்ளத்தனங்களை நியாயப்படுத்தும் அச்சங்கள் மாதிரித்தானா அவையும் ? &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ccccff;"&gt;**********&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-7140559475124028238?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/7140559475124028238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=7140559475124028238' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/7140559475124028238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/7140559475124028238'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/03/nedunguruthi-review-by-rpandian.html' title='நெடுங்குருதி :வாசிப்பு ரெ. பாண்டியன்'/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-5568455158947270892</id><published>2007-03-20T10:42:00.000+08:00</published><updated>2007-03-20T10:48:04.988+08:00</updated><title type='text'>ஜே.பி. சாணக்கனவுப்புத்தகம்-ஜெயந்தி சங்கர்</title><content type='html'>&lt;span style="color:#ff6600;"&gt;ஜே.பி.சாணக்யாவின் 'கனவுப் புத்தகம்'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff99ff;"&gt;- வாசிப்பு: ஜெயந்தி சங்கர் -&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆணின் ego சீண்டப்படும் போது அவன் கொள்ளும் ஆக்ரோஷம், தன்னுடைய அபரிமிதமான பாலியல் உணர்வையே ஆணாதிக்கத்திற்கு எதிரான தனது பலமானத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு பெண்ணின் இயல்பு, என்று சில விநோத உணர்வுகள் இக்கதைகளில் சொல்லப் பட்டிருந்தாலும் அதிகமும் தாய்-மகள் அல்லது அக்கா-தங்கை ஒரே ஆணை விரும்புவது போன்ற உறவுச் சிக்கல்களே அதிகம் பேசப்பட்டிருப்பதாகத் தெரிகின்றன. இவ்வகை உணர்வுப் போராட்டங்களைப் படிக்கும் போது கிருஷ்ண சோப்தியின் சிறிய இந்தி நாவல் (தமிழில் - லட்சுமி விஸ்வநாதன் / நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா) 'மித்ர வந்தி'யின் நினைவு வந்தது. இரண்டும் வேறு பட்டிருந்தாலும் சில ஒற்றுமைகளைக் கொண்டவை. இந்த விதமான கருக்களைக் கொண்ட கதைகள் 'கண்ணாமூச்சி, 'ஆண்களின் 'படித்துறை', 'இரண்டாவது ஆப்பிள்' ,'அமராவதியின் பூனை' இதிலிருந்து மாறுபட்ட கதைகள் 'கடவுளின் நூலகம்', 'பதியம்', 'கனவுப்புத்தகம்', 'கோடை வெயில்', 'கருப்புக் குதிரைகள்', 'மஞ்சள் நீலம் வெள்ளை' போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விதவிதமான அனுமானங்களுக்கு வழிவிடக் கூடியது தொகுப்பின் முதல் கதையான 'கடவுளின் நூலகம்' (ப. 11). ஒரு அனுமானத்தை கதைஞரே கதையினூடாகச் சொல்லி விடுகிறார். அதுவும் நம்பக் கூடியதாக இருந்த போதிலும் உண்மையில் நாற்பது வயதைக் கடந்த கதையின் நாயகன் தான் ஏதோ காரணத்தினால் தன் கடந்த கால வாழ்க்கையின் நினைவுகளை இழந்திருப்பதாகத் தோன்றுகிறது. 'பேசாம நான் எங்கியாவது அடிபட்டுச் செத்திருக்கலாம்' ( ப.33) என்று நாயகி சொல்லுமிடமும் நாயகி கட்டிக் கொண்டிருந்த பழைய மாடல் வாட்ச்சும் (ப.34) இதை உறுதி செய்கின்றன. இக்கதையின் தலைப்பு நிச்சயம் ஆய்வுக்குறியது. நாயகனின் கடந்த காலமான ஆசிரியர் பணி ஊகிக்கக் கூடியது. அதே போல ஆசிரியர்-மாணவி காதலும் கூட. பாத்திரங்களுக்குப் பெயர் கொடுக்காமலே எழுதி முடித்திருக்கிறார். படிக்கும் தறுவாயில் இது வாசகனுக்கு உரைக்காத வகையில் நாயகனின் எண்ணவோட்டமும் நேர்த்தியான கதையின் கட்டமைப்பும் பலமாக அமைந்திருக்கின்றன. வாசகனின் ஏற்படும் எதிர்பார்ப்பு கதை சட்டென்று முடியும் போது ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். நீண்ட ஒரே வரியினைக் கொண்ட கடைசி பத்தி அவசியமா என்று தொன்றுவதையும் தவிர்க்க முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனது பிரதியாகவோ தனது பிம்பமாகவோ தன் மகளையோ மகனையோ நினைக்கும் ஒரு பெற்றோரின் நிலையினைத் துல்லியமாகச் சொல்லும் கதை 'பதியம்' (ப. 51). ஆனாலும், எத்தனை பெற்றோருக்கு அவனும்/ அவளும் ஒரு தனி மனிதன் / மனுஷி (an individual) என்ற சிந்தனை வந்து விடுகிறது? மகளைப் பற்றி செல்லம் விரித்திருந்த அனைத்துக் கற்பனைகளையும் மறந்து யதார்த்தத்தை விழுங்குவது வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புட்டுப்புட்டு வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எளிய சரள மொழி ஜே.பி. சாணக்கியாவின் பலம். life span என்பதற்கிணையான 'வாழ்வின் சட்டகம்' (ப. 17), 'தவறுணர்ச்சி' போன்ற சொற்களை கொஞ்சமும் துருத்திக் கொண்டிராத வகையில் மிகப் பொருத்தமாகப் பயன் படுத்தியிருக்கிறார். தனது உரைநடைக்கென்று உருவாக்கிக் கொண்ட மொழியை இவர் மிகக் கவனமாகக் கையாள்வது வாசகன் உணரக் கூடியது. இருந்தாலும், அவ்வப்போது ஆசிரியரினுள் இருக்கும் கவிஞன் எட்டிப் பார்க்கவே செய்கிறான். சாணக்கியாவின் உரைநடையில் 'காடு' லலிதாவின் தனியான நடையைப் பார்க்கும் (ப. 108); 'அன்னத்தின் உடலுறுப்புகள்' ஆண்களைப் பார்க்கும் (ப. 97); 'சாயங்காலம்' மெதுவாக எட்டிப் பார்க்கும் (ப. 111); 'கூரை' பார்த்துக் கொண்டிருக்கும் (ப. 114). இவையெல்லாமே ரசிக்கக் கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'கோடை வெயில்' கதையில் விவரிக்கப் படும் வெயிலைப் படிக்கப் படிக்க எனக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை நினைவு படுத்தியது. அவருக்கு 'வெயில்' மிகவும் பிடிக்குமாமே. கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் வழியில் உள்ளுணர்வினால் போலீஸ்காரரின் சூழ்ச்சியினை உணர்கிறான் சேகர். மனைவியிடம் அவனுக்கு இருந்த ஒருவித possessiveness தான் அவனில் அந்தக் கற்பனையை விரிக்கிறது. வரப் போகும் ஏதோ ஒரு இக்கட்டை முன்பே கற்பனையாகவோ கனவாகவோ நம்மில் உணர்த்தி விடும் விநோத கணங்களை நான் எல்லோரும் அனுபவித்திருப்போம். அது இங்கும் இயல்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது. போலீஸ்காரர் தன் பெண்டாட்டி செத்த அன்றே வசந்தாவின் மீது கண் வைத்து விடுகிறார். 'கறி சமைக்குமா?' என்று போலிஸ்காரர் கேட்பது சேகருக்குள் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது என்றே தோன்றுகிறது. கதை வளர வளர ஆசிரியரின் நடையும் பலவிதமான ஊகங்களுக்கும் வழிவிடுகிறது. கடைசியில் உண்மையிலேயே போலீஸ்காரர் அவர்களின் ஏழ்மையையும் சேகரின் வேலையில்லாத நிலையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு பாலியல் சுரண்டலில் இறங்குகிறார். வேலை வாகிக் கொடுக்கிறேன் என்று சொன்னதுமே வசந்தாவைத் தனதாகவே நினைக்கிறார் போலீஸ்காரர். அது அவர் சேகரை அப்புறப்படுத்தப்படும் அவசரத்திலும் (ப. 48 - 'நாளைக்கி காலைல எங்கூடவே கிளம்பி வந்திரு,..') கணவன்-மனைவி மகிழ்ச்சியில் மறைவில் கொஞ்சிக் கொள்வதை உணர்ந்து (ப. 47) குரல் கொடுத்து தடுத்து விடுவதிலும் தெரிகிறது. 'மாமா' என்று சேகர் போலீஸ்காரரைக் கூப்பிடுவது வசந்தா அவரை 'அண்ணா' என்று கூப்பிடுவதும் உறவுகளில் குழப்பத்தைக் கொடுக்கின்றன. திட்டமிட்டே தான் ஆசிரியர் இதைச் செய்தாரா என்றும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஆண்களின் படித்துறை' யில் லலிதா தனது அம்மா அன்னத்திடமிருந்து தான் வேறுபட்டவள் என்று மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ளவும் தனதும் ஒழுக்கத்தினை எல்லோர் மனதிலும் பதிய வைக்கவும் வேண்டிய நெருக்கடியில் இருக்கிறாள். அவளின் எண்ணங்களும் செயல்களும் (ப. 105) இயல்பாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. பல முறை நிராகரித்துக் கடந்து விட்டு, எல்லாக் கதைகளையும் படித்த பிறகு இக்கட்டுரைக்கென்று இந்தக் கதையினையும் படித்து முடித்தேன். அன்னத்தின் போக்கும் எந்த ஒரு ஆணிடமும் பொருளாகவோ பணமாகவோ பெற்றுக் கொள்வதில்லை என்ற அவளின் கொள்கையும் முரண்பட்டிருப்பதைப் போல முதலில் தோன்றக் கூடும். தன்னைச் சுற்றியிருக்கக் கூடிய ஆண்களின் பார்வையில் தன்னைக் கொஞ்சமும் தாழ்த்திக் கொண்டு விடாமல் நிமிர்ந்து நிற்க நினைக்கிறாள் என்பதும் புரியத் தான் செய்கிறது. இருந்தாலும், அன்னத்தின் பாத்திரப் படைப்பு எதார்த்தத்தையும் தாண்டி ஆச்சரியத்தையும் பல்வேறு விதமான உணர்வுகளையும் வாசகனின் மனதில் எற்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது. செல்வம் திட்டமிட்டு லலிதாவைக் காதலித்து தாய் மகள் இருவரையும் குறிவைப்பது என்பதை ஒரு ஆணின் குணநலனாகப் பார்க்க முடிகிறது. அதே சமயம் செல்வத்துடன் உடலுறவு கொண்டு விட்டு தன் மகள் லலிதாவுடன் அவனின் திருமணம் பற்றி பேசுவது பயங்கர அதிர்ச்சியைக் கொடுக்கிறது. இதெல்லாம் சாத்தியமா? இப்படியும் ஒரு பெண் இருப்பாளா? என்று ஏராளமான கேள்விகள் எழுகின்றன. கடைசியில் லலிதாவின் தற்கொலை அநியாயமாகவோ மிகைப் படுத்தப் பட்டதாகவோ தெரியவில்லை. தற்கொலைக்குத் துணியும் ஒருவரின் எண்ணங்களில் இருக்கக் கூடிய குழப்ப நிலையைச் சொல்லியிருக்கும் விதம் அருமை. லலிதாவின் தற்கொலை முயற்சி வெற்றியா தோல்வியா என்று சொல்லாமல் விட்டதும் நன்றாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஆண்களின் படித்துறை' கதையில் ஒரு இடத்தில் கூட 'குளித்தல்' எனும் சொல்லைப் பயன் படுத்தாமல் ஒவ்வொரு இடத்திலும் 'நீராடுதல்' எனும் சொல்லையே பயன்படுத்துவது ஏன்? தற்சயலா இல்லை திட்டமிட்டா? வேண்டுமென்றே என்றால் ஏன் அப்படி? தாவணி என்று சொல்லாமல் லலிதா 'அரைப் புடவை' உடுத்திச் செல்வதாகச் சொல்வதும் புதியதாக இருக்கிறது. பழைய சொற்களைப் புதுப்பிக்கும் நோக்கமோ என்னவோ. 'மஞ்சள் நீலம் வெள்ளை' கதையிலும் கூட கதையின் முதல் வரியே - சாலையாந்தோப்பில் அப்பு, குப்பு என்ற இரு நண்பர்கள் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தார்கள்- என்பது. மிகவும் பழையரக வாக்கியமான இது அப்புக்கும் குப்புக்கும் பின்னால் வரப் போகும் இடைவிடாத சண்டையினை குறிப்பாக உணர்த்திடவா? 'ரெண்டாளம் கெட்டவள்' (ப. 105) என்றால் என்ன? 'வெகுளி'யா? ரிக்ஷாக்காரன், சேரி/சென்னை வட்டார மொழி, குடி, குழப்பங்கள் என்று ஜெயகாந்தனின் கதா மாந்தர்களையும் கதைச் சாயலையும் நினைவு படுத்துவதாக அமைந்திருக்கிறது 'கண்ணாமூச்சி' ( ப.70). விநோதமான தாய்-மகள் சக்களத்தி உறவும் போராட்டமும் பி.ஏ.கிருஷ்ணனின் 'புலிநகக் கொன்றையில்' வரும் விஷமிரக்கும் இளைஞனைப் பற்றிய பொன்னம்மாள்-ஆண்டாள் இருவரின் சிந்தனை ஓட்டங்கள் கொடுத்த அதே போன்றதொரு அதிர்வைக் கொடுக்கத் தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துக் கொண்ட விளிம்பு நிலை மாந்தர்களின் கதைகளைச் சொல்லும் நூலாசிரியர் அதையே தன் எழுத்துக்குச் சாதகமாக்கிக் கொண்டு பாலியல் சொற்களையும் விவரிப்புகளையும் தேவைக்கதிகமாகவே கையாள்வதை நெருடலுடன் உணர முடிகிறது. (போர்னோ என்றால் என்ன என்று சொல்லக்கேட்ட அளவில், அவ்வகைகளின் பரிச்சயம் இல்லாத நிலையில்) porno வகையில் துளியும் தயக்கமில்லாமல் சேர்த்து விடக்கூடிய விவரிப்புகள் பெரும்பாலான கதைகளில். இவ்வளவு துக்கலாக (பச்சையாக?) தமிழில் இதுவரை யாரும் எழுதியிருக்கிறார்களா என்று யோசித்ததில் 'இல்லை' என்ற (இன்றைய எனது வாசிப்பில்) பதிலே மிஞ்சியது. கரிச்சான் குஞ்சின் 'பசித்த மானிடம்' பேசிய ஒரு பால் உறவு போன்ற எடுத்துக்காட்டுக்கள் பலவற்றில் சொல்லப் பட்டிருந்த கண்ணியமான மொழி இங்கு நினைவில் கொள்ளத் தக்கது. எழுதப்பட்ட காலத்தைக் கணக்கில் கொண்டால் எழுதப்பட்ட விஷயம் மிகவும் அதிர்ச்சி கொடுக்கக் கூடியது. இருப்பினும் எதார்த்தம் என்ற பெயரிலோ மொழி என்ற பெயரிலோ வரம்புகள் மீறப்படாமல் இருக்கும் நடை மேலும் பரவலாம வாசகர்களைக் கண்டடையுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-5568455158947270892?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/5568455158947270892/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=5568455158947270892' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/5568455158947270892'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/5568455158947270892'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/03/blog-post_20.html' title='ஜே.பி. சாணக்கனவுப்புத்தகம்-ஜெயந்தி சங்கர்'/><author><name>மானஸாஜென்</name><uri>http://www.blogger.com/profile/13032688617271305971</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_xMVCjgn17LE/SQaQNxjtcCI/AAAAAAAAAC0/qbjFW26RHUQ/S220/sanchan1_0.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-3803789371848042363</id><published>2007-03-08T20:24:00.000+08:00</published><updated>2007-03-08T20:32:12.091+08:00</updated><title type='text'>ஆதவனின் 'காகிதமலர்கள்'-ரே. பாண்டியன்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff6666;"&gt;வாய் நிறைய உண்மை பேச முடியாத வாழ்க்கை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#33ff33;"&gt;ரெ.பாண்டியன் / நவம்பர் 06&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இருபது வருடங்களுக்கு முன்பு நான் இந்த நாவலை வாசித்தபோது, செல்லப்பா விசுவத்தை சந்திக்க விமான நிலையத்துக்கு போய்க்கொண்டிருந்தான். இருவரும் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கப் போகும் தருணத்தில், பழைய செல்லப்பா இறந்துவிடுவான் என்று செல்லப்பாவின் மனதில் எண்ணம் ஓடும். அந்த வரிகள் அன்றைய காலத்தில் என்னை பெரும் உத்வேகத்துக்கு உள்ளாக்கிய வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது நான் “தேடல்”, “அடையாளச்சிக்கல்” போன்ற வார்த்தைகளை அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்த வார்த்தைகள் பிரதிநுவப்படுத்தும் குழப்பங்களுக்கு உள்ளாகியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பங்களைத் தீர்த்துவைக்க எந்த நாவலும் எழுதப்படுவதில்லை என்றாலும், அடையாளச்சிக்கல் பற்றிய குழப்பங்களை வார்த்தைப்படுத்த சொற்களை தந்துதவிய நாவல் இது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அகிலன், நாபா, சாண்டில்யன் வாசகனாக இருந்த என்னை, வெகு தூரம் நிர்வாணப்படுத்திய நாவல் “காகித மலர்களு”ம் “ என் பெயர் ராமசேஷன்” ஆகும். இந்த நிர்வாணப்படுத்துதல் நான் ஏற்கனவே அந்தரங்கமாய் உணர்ந்திருந்த உண்மைகளுக்கான அங்கீகாரம் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிர்வாணப்படுத்துதலுக்கு நானும் வெகுகாலமாய் காத்திருந்தேன், ஆர்வத்துடன் வரவேற்றேன் என்பதின் வெளிப்பாடுதான் இந்த நாவலை தமிழின் சிறந்த நாவலாக நண்பர்களிடம் பலகாலம் சொல்லிக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் தன்னைத்தானே புரிந்துகொள்ளுதல் என்பது ஒரு நீண்ட பயணம். ஆனால், அப்படி ஒரு பயணம் என்ற ஒன்று செல்லவேண்டி இருப்பதையே உணர்ந்துகொள்ள நேர்வது இன்னொரு பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பயணம் எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளமுடியாத நிலையில், பயணத்தின் நோக்கத்தில் யாருக்கும் நம்பிக்கை ஏற்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கப் போலோ அய்ரோப்பாவிலிருந்து சீனாவைச் சென்று அடைய பல ஆண்டுகள் கடல்மார்க்கமாக பயணித்தான். சென்று சேர்வோம் என்ற நம்பிக்கையில் அவன் ஆரம்பித்திருந்தாலும், அந்த நம்பிக்கை அந்த பயண காலம் முழுக்க ஒரே புரிதல் தளத்தில் நீடித்திருந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு கடுமையான சோதனைக்குப் பிறகும் அவனுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு புதிய வெளிச்சத்தில் அவனது நோக்கம் ஒரு புது பரிமாணம் கொண்டிருக்கும். ஆனால், பல நேரங்களில், கடலில் வேறு ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் அவன் வேறுவழியின்றி, கடலில் வெறுமனே மிதந்து கொண்டிருந்திருப்பான்.&lt;br /&gt;(இது மார்க்கபோலோவைப் போல பயணம் செல்ல உத்வேகம் கொண்டிருப்பவர்களுக்கு உவப்பான செய்தியல்ல.)&lt;br /&gt;&lt;br /&gt;போவதற்கு வேறு வழியில்லை, இது மட்டுமே தான் செய்வதற்கு இருக்கிறது, இதுதான் என்முகம், இதுதான் நான் என்கிற விசை தான்(பழக்க தோஷத்தினால் பழிகிடப்பதாயும் இருக்கலாம்) “நான் யார்” என்கிற தேடலில் காலங்காலமாக பயணம் செய்பவர்களை உந்திச் சென்றுகொண்டிருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பலர் பாதையில்லா நடைக்கு தயாராய் இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலில் பலருக்கு பல ஆசைகள் இருக்கின்றன. ஆனால், அவரவர் ஆற்றலும் பின்னணியும் சார்ந்து, அந்த ஆசைகளை எய்தமுடியாமல் இருக்கிறது. நிறைவேற்றத்திற்கான தீவிர முயற்சியில், தங்களின் இயல்புகளை துறக்கவேண்டியிருக்கிறது. நேர்மையை ஈடு வைத்து விலைபோக வேண்டியிருக்கிறது. மற்றவர்களை சலனமின்றி காவுகொடுத்துவிட்டு முன்னேற வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈடேறாத ஆசைகளுக்கு, அடிவாங்கிய ‘ஈகோ’விற்காக பழிவாங்க வேண்டியிருக்கிறது. தாரா செல்லப்பாவைச் சேரும்போது, பத்ரியையும் கணேசனையும் பழிவாங்கிவிட்டதாக நினைக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவனிடம் வாங்கிய அடிக்கு இன்னொருவனை உதைக்க வேண்டியிருக்கிறது. மாணவர்களிடம் வாங்கிய அடிக்கு, ராம் பிரசாத் செல்லப்பாவை மிரட்டி மகிழ்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாலிபக் கனவுகளை தொண்டைச் சிரமம் ஏதுமின்றி எச்சில்கூட்டி விழுங்கிவிட்டு, கால்கட்டு போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. (ரமணி-செல்லப்பா கல்யாண முடிவுகள்) லட்சியங்கள் கைவிட்டு போவதை தனக்குத்தானே எந்த பெரிய ஏமாற்றமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளமுடிவதை கசப்புடன் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. யார் யாரையோ கனவுகண்டு இறுதியில் கைமாட்டில் இருந்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். இருவரது திருமணமும் இடைவெளிவரைக்குமான ஒரு திரைப்படத்தின் முடிவுபோலத்தான். இரண்டாவது பாதியில் ஏமாற்றங்கள் தொடர்வதற்கான தடயங்கள் முதல் பாதியிலேயே இருக்கின்றன (“கிராமத்து அடக்கவொடுக்கமான பெண்” என்கிற ரமணியின் ஆசுவாசமும் “எனக்கு தாராதான் சரி” என்கிற செல்லப்பாவின் கண்டுபிடிப்பும் மனபிம்பங்கள்தான்)&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் மீதான தனது உணர்வும் சரி, அவள் பிறரை தன்னிடம் அனுமதிக்கும் அளவும் சரி - இரண்டையுமே பிரக்ஞையின் பின்கட்டுக்கு தள்ளிவிட்டு போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் அதனை பச்சையாக சொல்லி, பிரக்ஞையின் முன்கட்டுக்கு கொண்டுவருவது சகிக்கமுடியாததாகிவிடுகிறது. (செல்லப்பா-மிஸஸ் பசுபதி-ரமணி)&lt;br /&gt;&lt;br /&gt;நிஜவாழ்க்கையில் மிஸஸ் பசுபதியின் வேடங்களுக்கு( வங்காளி நாடக ரசிகை, பஜனை மாமி, மாடர்ன் மாமியார்) கிடைக்காத கரகோஷத்திற்கு ஏங்கித்தான் அவள் மேடையேறி நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிகையாக வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உடலுறவின் திருப்தி / திருப்தியின்மையை பற்றி பேசும் திஜாவின் கதாபாத்திரங்கள் விநோதமானவர்களாக தோன்றுவதுண்டு. ஆனால், ஆதவன் அவர்களை இயல்பானவர்களாக காட்டியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணைப்பற்றிய ‘பூச்சிப்பார்வை’ அல்லது ‘லட்சியப்பார்வை’ இந்த நாவலில் அகல்கிறது; பெண்கள் பற்றிய அந்தரங்கங்களை ஆண்கள் பகிர்ந்து கொள்வதைவிடவும், ஆண்கள் பற்றிய அந்தரங்கங்களை பெண்கள் எப்போதும் பகிர்ந்து வந்திருக்கிறார்கள் என்பது இந்த பார்வைகளுக்கு கிடைக்கும் சம்மட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;அட வேறொன்றும் இல்லாவிட்டாலும், “நீ நார்மலாக இருக்கிறாய், செய்வதையெல்லாம் நன்றாகத்தான் செய்கிறாய்” என்று சமாதானம் சொல்லவாவது ஒரு ஆத்மா தேவைப்படுகிறது. அது ஒரு கைத்தட்டலாக, கழுத்துக்கு மாலையாக, பத்திரிக்கையில் பெயர் வருவதாக இருக்கலாம். (தாரா, செல்லப்பா, மிஸஸ் பசுபதி)&lt;br /&gt;&lt;br /&gt;நாவலில் எல்லோரும் முடுக்கிவிடப்பட்ட குதிரைகளாக, பசுபதியின் பதவியும் வாழ்க்கைத்தரமும் பிரதிநுவப்படுத்தும் வெற்றி ஒன்றை அடைய துடிக்கிறார்கள். ஆனால், அதற்கு, ஆற்றலோ பொறுமையோ இன்றி அதனை எப்படியாவது அடைய நினைக்கிறார்கள். தங்களது நோக்கத்தை தங்களது குறைவான ஆற்றலை முன்னிட்டு மறுபரிசீலனை செய்யவும் தயாராயில்லை. இங்கிருந்து பிரச்னை தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பசுபதி போன்றவர்களுக்கு இன்னும் மேலே மேலே என்கிற பதட்டம் (தற்போதைய வெற்றியை தக்க வைத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி) இருக்கிறது. மகன், மருமகள் என்கிற இளைஞர்களுக்கு முன்னால், இளைஞர்களின் அலைவரிசையில் செயல்படும் அனுபவசாலி என்கிற அடையாளத்தைப் பெறவும் துடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் போலித்தனமே இல்லாது இருப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. (இந்த வரி எழுதப்பட எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்கிறது !)&lt;br /&gt;&lt;br /&gt;தன்மீது சதா கவியும் பொய்மை, தன்னில் சதா ஊறும் பொய்மை பற்றிய விழிப்புணர்வே மனிதனின் கைவிளக்கு. இந்த கைவிளக்கைக் கொண்டு, மனிதன் வாழ்க்கையின் நோக்கம் என்றோ, வாழ்க்கையின் வெற்றி என்றோ அவன் நிர்ணயித்துக்கொள்ளும் ஒன்றை நோக்கி பயணிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலின் உருவம்&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நம் கண்களால் உலகைப் பார்க்கிறோம். என் உலகில் நான் கதாநாயகன்; அடுத்தவன் உலகில் நான் துணை பாத்திரம்; ஒரே நிகழ்வை இரண்டு தடவைகள் ஆதவன் சொல்லி இதனை செய்து காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பௌதிக நிகழ்வுகளைவிடவும் மன உலகின் தோற்றப்பாடுகள் அமைவது, களைவது, ஆராயப்படுவது, ஏற்றுக்கொள்ளமுடியாமல் தத்தளிப்பது, தற்காலிகமாவாவது சமாதானம் அடைவது என்று கதை நகர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவனின் கலை&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இளைஞனுக்கான எழுத்தாளர் ஆதவன். தமிழ் இளைஞிக்கு அம்பை. ஆதவனது கதைகளில் வரும் மனிதர்களின் பேச்சுமொழியும் உடல்மொழியும் மனமொழியும் ஒரே நேரத்தில் சதா பதிவாகியவண்ணம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இளைஞர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய சொல்முறை; ஆனால், இது நாவல் வடிவத்தின் வீச்சை பெருமளவு குறைத்துவிடும் காரியமும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களில் இந்த மனமொழி அளவுக்கதிகமாய் ஆராய்வதாய் இருக்கிறது : எ-கா- விஸ்வத்தின் மௌனத்தை நடராஜர் நடனத்திலிருந்து ஒதுங்கி இருப்பதாய் சொல்வது; தாயின் உடலைப் பார்த்து செல்லப்பாவின் உடல் தீப்பற்றிக்கொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்ந்த வாசகர்கள் பலர் கடந்துவந்த நிழல் விழுந்த பாதை ஆதவன்; மனவிகாசத்தின் கரடுபாதைகளை நினைவில் எழுப்பும் ஒரு பழுப்புநிற புகைப்படமாய் அவரது கதைகள் என்றும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-3803789371848042363?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/3803789371848042363/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=3803789371848042363' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/3803789371848042363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/3803789371848042363'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/03/blog-post.html' title='ஆதவனின் &apos;காகிதமலர்கள்&apos;-ரே. பாண்டியன்.'/><author><name>மானஸாஜென்</name><uri>http://www.blogger.com/profile/13032688617271305971</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_xMVCjgn17LE/SQaQNxjtcCI/AAAAAAAAAC0/qbjFW26RHUQ/S220/sanchan1_0.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-3570359895955649276</id><published>2007-03-06T21:56:00.000+08:00</published><updated>2007-03-06T22:01:51.371+08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;இலட்சிய வாதமும் நம்பகத்தன்மையும்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;     இராம கண்ணபிரான் 12-11-06&lt;br /&gt;    &lt;br /&gt;(1)&lt;br /&gt; பிரிட்டிஷ் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர முயன்ற அரசியல் தீரர்கள் பலர். அவர்களுள் வெற்றிக்கனியைக் கொய்தவர் சத்தியாகிரகர் காந்தியடிகள். அவர் வாழ்ந்த யுகத்தில், பிரம்மச்சரியம் பூண்டு நாதுச் விடுதலை வேள்விக்குத் தங்கள் இளம் வாழ்வை அர்ப்பணித்த பாரத தேசத்து யுவதிகளும், வாலிபர்களும்எண்ணிக்கையில் பலராவர். தேசத்துக்கு உழைத்த இவர்களின் தியாக உள்ளங்கள் இந்திய படைப்பாக்கங்களில் பதிவாகியுள்ளன. இப்படைப்புகளில் இர்லட்சியவாத விழுமங்களே மேலோங்கியுள்ளன.&lt;br /&gt; இன்னொரு நிலையில், அடிமை இந்தியாவைப் பிரிட்டஷரிடமிருந்து மீட்க இராணுவப் பலத்தை நம்பியவர் சுபாஷ் சந்திர போஸ். ஜப்பானியர் சிங்கப்பூரை ஆண்ட போது அவர்களின் உதவியோடு இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையில், இப்பகுதியில் இந்திய தேசிய இராணுவத்தை அவர் நிறுவினார். அவ்வேளையில் ‘சுதந்திர இந்தியா’ ‘யுவ பாரதம்’ போன்ற தினசரி, வார பத்திரிகைகள் சிங்கப்பூரில் தோன்றி, சுதத்திரத்தை கருப் பொருளாகக் கொண்டு இலட்சிய தாகத்துடன் கதை, கட்டுரை, கவிதை முதலியவற்றை வெளியிட்டன. இந்த ஆக்கங்களில் இலட்சியவாத கோஷங்கள் மிகுந்து காணப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt; கடந்த நூற்றாண்டின் அறுபதுகளின் முற்பகுதியில் போர்னியோவின் ஒரு பகுதியை இள்ளடக்கி மலேசியா உருவான போது, இந்தோனேசியாவின் அன்றைய அதிபர் சுகர்னோ அத்திட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க மலேசியாவில் அப்போது இணையவிருந்த சிங்கப்பூரின் சில இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழச் செய்தார். மலேசியா தேசயத்திற்கு ஆதரவு தரும் வகையில் , இலட்சிய நோக்கில் ‘அழகோவியம்’ என்னும் ஒரு குறுங்காவியத்தை இயற்றி அதை ஒரு நூலாக வெளியிட்டார் சிங்கப்பூர் கவிஞர் முருகடியான். கருவுற்றிருக்கும் தம் இளம் மனைவி வெண்ணிலவைச் சிங்கையில் விட்டுவிட்டு, அவள் கணவன்வேலவன் மலேசிய-இந்தோனிசிய எல்லைப் போரில் ஈடுபட்டு சில காலம் கழித்ஹ்து வெற்றியுடன் நாடு திரும்புவதாக அவர் கூறுகிறார். இக்காவியத்தில் இலட்சியவாதப் போர்ப் பரணி பாடப்ப்டுகிறது.&lt;br /&gt; இப்படியாக சென்ற நூற்றாண்டின் இலட்சியவாதப் படைப்புகளில் உயரிய விழுமங்களும், பிரசாரக கோஷங்களும், காவியப் பண்பு கொண்ட பரணி வாசகங்களும் மிகுந்து இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால், இந்நூற்றாண்டின் படைப்புகளோ நவீன இலக்கியத் தளத்தில் இயங்குவனவாக மாறுதல் பெற்றுள்ளன. எனவே இலட்சியவாத ஆக்கங்கள் முன் போல் உணர்வுமிக்க கனவுகளுடன் பூமிக்கு மேலே பாவாமல், நடைமுறை வாழ்க்கையைச் சித்தரித்துத் தரையில் நடக்க வேண்டியிருக்கிறது. தரிசிக்கப்படும் வாழ்க்கையை ஓரளவிற்கு உள்ளது உள்ளபடியே  சொல்லி, நம்பகத்தன்மையுடன் எழுதுவது தற்போதைய இலட்சியவாதப் படைப்புகளின் போக்காக மாறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; ஆகவேதான், நவீன இலக்கியப் புனைவில், இலட்சிய வாதக் கதையாக்க்கம், உள்ளது புனைதல் என்ற யதார்த்தத்தில் கட்டமைக்கப்பட்டு,இலட்சியவாத யதார்த்தம் என்றொரு புதுவகை எழுத்தாக இன்று பரிணாமம் கண்டுள்ளது.&lt;br /&gt;  &lt;br /&gt;  (2)&lt;br /&gt; ஒரு நிலப் பகுதியில் அரசியல் நிமித்தம் தேசியம் உருவாக்கப்படும் போது அப்பகுதி மக்கள் ஒரே திரளாய் அணிவகுத்து தம் இலட்சியத்தை அடையச் செயல்படுவது இலட்சியவாதஈயக்கம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt; இதே மனிதக் குழுவைக் கொள்ளை நோய் போன்ற பொது இடர்கள் கௌவும் போது அதக் களைய இவர்கள் ஒருமித்துக் காரியம் ஆற்றும் போது இலட்சியவாத தியாக உணர்வே இவர்களிடம் தூக்கலாக காணப்படுகிறது.&lt;br /&gt; சில ஆண்டுகளுக்கு முன்னர் சார்ஸ் எனப்படும் உயிர்க்கொல்லி நோய் சிங்கப்பூரில் பரவிய சமயம், இங்குள்ள ஜனக்களில் பெரும்பாலோர், இனம், மதம், மொழி, பால் பேதங்களைக் கடந்து, ஒன்றுப் பட்டுப்பொதுத் துயரை துடைக்க தங்கள் உயிர்களையே பணயம் வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தப் பேரிடரை மையப்படுத்திப் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற சிறுகதையை மாதங்கி புனைதுள்ளார். இவர் தம் கதையில் இலட்சியவாதத்தையும், யதார்த்தவாதத்தையும் எவ்வாறு நம்பகத்தன்ன்மையுடன் இணைத்து தம் படைப்பை ஒரு வெற்றி படைப்பாகத் தந்துள்ளார் என்பதை இனிப் பார்ப்போம். அதற்கு முன், அவர் எழுதிய கதையின் சுருக்கத்தை பார்ப்போம்.    கதை ஏற்கனவே இந்த வலைப்பூவில் பிரசுரமாகிவிட்டதால் இதற்கு அவசியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;     (3)&lt;br /&gt; கதைத் தலைப்பு, கதைப் பொருள் முதலியவற்றுக்கு அழுத்தமும் நம்பகத்தன்மையும் தருவதற்கு பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் பாட்டு வரிகளை மாதங்கி தம் சிறுகதையில் எடுத்தாள்கிறார்.&lt;br /&gt;   “Best of the best” என்ற அர்த்தத்தில் தொனிக்கும் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற கோரிக்கைத் தலைப்பு வாக்கியம் மகாகவி பாரது எழுதிய புதிய ஆத்திச்சூடியில் இடம் பெற்றுள்ள ஒரு செய்யுள் வாக்கியம் ஆகும். டாக்டர் அரவிந்தன் நர்ஸ் யுகனேஸ்வரியை மனிதத் தொண்டு புரிய அழைக்கும் போது பெரிதினும் பெரிதான இந்தக் கோரிக்கையைத்தான் அவன் அவள் முன் வைக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt; பெரிதுப் பற்றிப் பேசும் போது ஔவையாருக்கும் முருகப் பெருமானுக்கும்இடையே வினா-விடை பாணியில் நடைபெற்ற ஓர் உரையாடலையும் நாம் பொருத்திப்,பார்க்கலாம். இந்த வார்த்தையாடல் ஔவையாரின் தனிப் பாடல் பகுதியில் தொகுக்கப்ப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; வேல் முருகன் ஔவைப்பிராட்டியிடம் ‘பெரியது எது?” என்று கேட்கிறான். அதற்கு அவள்,”பெரியது கேட்கின் எரிதழக் வேலோய், பெரிது பெரிது புவனம் பெரிது ஆனால் புவனத்தை நான்முகன் படைத்தான். நான்முகக பிரம்மனோ விஷ்னுவின் மைந்தன். விஷ்ணுக் கடவுளோ தொண்டர் உள்ளத்து உடுக்கம். அதனால், தொண்டர் தம் பெருமைச் சொல்லவும் பெரிதோ!”, எண்ட்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt; இறைவனுக்கும் தொண்டருக்கும் உள்ள இந்த நெருங்கிய தொடர்பைமனத்தை உருக வைக்கும் ஒரு தியாகக் காட்சி மூலம் கதை விவரிக்கிறது.&lt;br /&gt; சார்ஸ் நோயினால் தீவிர பாதிப்படைந்த ஓர் அம்மையார் டான் டாக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுவரப் படுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவருடைய தொண்டை சளியை ஓர் இறிஞ்சுக் குழாயின் மூலம், அதை பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பவேண்டும். அன்றக்கு முன் தனம் தான் மற்ற சார்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த ஒரு டாக்டரும்,இரு நர்ஸ¤களும் நோய்த் தொற்று ஏற்பட்டு உயிர் துறந்திருந்தனர்.“இப்போது புதிதாக அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த அம்மையாரின் தொண்டையிலிருந்து சளியை யார் உறிஞ்சுக் குழாய் மூலம் எடுக்க முன் வர்கிறீர்கள்?”, என்று தலைமை மருத்துவர் ஜான் லாம் கேட்கும் போது, அந்த வார்டில் இருக்கும் நர்ஸ¤கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்துகிறார்கள்.அந்த நர்ஸ¤களுள் பலருக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் இருப்பதை அறிந்த டாக்டர் ஜான் லாம் உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; அந்த அம்மையாருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் அங்குள்ளவர்களிடம்” நீங்கள் எல்லாரும் மனிதர்களே அல்லர்; கடவுளின் பரதிநிதிகள்”, என்று கண்ணீர் மல்க, மனம் நெகிழ்ந்து கூறுகிறார்.&lt;br /&gt; சில நாட்களில் அம்மையாரின் உயிர், அவர் உடலை விட்டுப் பிரிகிறது.    ************&lt;br /&gt; தன்னலம் பேணும் மனத்தையும், பொதுனலம் பேணும் மனத்தையும் வேறுபடுத்திக் காட்ட பாரதிதாசனின் ஒரு கவிதை கதையில் பயன்படுத்தப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; அரவிந்தன் யுகனேஷ்வரியிடம் தொண்டூழியம் குறித்துப் பேசும் போது “ இந்தக் கவிதையைப் பார், யுகனேஷ்வரி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதியது”,. என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; ‘தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சோறு, தன் வீடு, தன் சம்பாத்தியம், இவையுண்டு, தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன். ஊரார் நலன்கள் எல்லாம் எனக்கு இனிக்கும் கற்கண்டே என்போன் உள்ளம் கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்’, என்று தீட்டப்படும் பாரதிதாசன் பாடல் வரிகள், அவருடைய  முழுக்கவிதைகள் அடங்கிய நூலில், புதிய உலகம் என்று பகுதியில், உலக ஒற்றுமை என்ற தலைப்பில் இடம் பெற்றஒரு எண்ணீர் விருத்தம் ஆகும்.     ******&lt;br /&gt; குணப் பண்புகளைக் காட்டும் வகையில், கதையின் முக்கிய பாத்திரங்களுக்குத் தகுந்த பெயர்கள் சூட்டப்படுள்ளன.&lt;br /&gt; கிஷ்கிந்தைப் பிரதேசம் மனிதக் குரங்குகள் வசித்த ஒரு புராதனக் காலத்து இடம் ஆகும். கரிசனமும் பாசமும் அற்ற, ரௌத்திரமும் ஆதிக்கமும் நிறைந்த, தன் சகோதரியின் வெளியேற்றத்தில் கூட, ஊடான் புட்டின் மீதே தன் பசித்த கண்களைப் பதிய விட்டிருக்கும் ஒருவனுக்குக் கிஷ்கிந்தன் என்ற நாமகரணம் பொருத்தமாகவே சூட்டப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; யுகன் என்ற யுகத்திற்கு ஈஸ்வரியாக இருப்பவள் யுகனேஷ்வரி. உலகத்தினருக்குக் கருணை காட்டுபவளாக, தியாகம் தேவைப்படும் ஒரு கால அளவு கொண்ட யுகத்திற்கு உரியவளாக அவள் இருப்பதால், கதாநாயகிக்குயுகனேஷ்வரி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt; அமரர் நா.பார்த்தசாரதி படைத்த ஓர் இலட்சியவாத நாவல் ‘குறிஞ்சி மலர்’. அதில் உலவும் அரவிந்தன் ஓர் இலட்சியப் பாத்திரம். அவன் பண்பை நினைவு கூர்வது போன்று, மனிதச்சேவையை நாடும் கதாநாயக டாக்டருக்கும், அரவிந்தன் என்று பெயர் இடப்பட்டிருக்கிறது.     **********  யுகனேஷ்வரி,கிஷ்கிந்தன், அவர்களின் அம்மா ஆகியோர் இந்தியத் தமிழர்கள். யுகனேஷ்வரியின் அறைத் தோழி அலின் வாங், அவளுடைய தந்தை திரு.டேவிட் வாங், யுகனேஷ்வரியின் தலைமை டாக்டர் ஜான் லாம், அவளோடு பணி புரியும் மோளி, அவள் பயணம் செய்யும் வாடகைக்கார் ஓட்டும் மகம்மது நசீம் ஹீசைன் முதலியோர் சிங்கப்பூர் ம்க்களைப் பிரதினிதிக்கும் தமிழர்கள் அல்லாத மற்ற இனத்தவர்கள்; மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள்.     **********வாடகைக் காரோட்டியின் பேச்சு எந்தப் பாஷையில் நடைபெற்றதுஎன்று சொல்லப்படவில்லையென்றாலும் திரு. டேவிட் வாங்,” ஹவ் ஆர்யூ மை சைல்ட்?”, என்று யுகனேஷ்வரியிடம் அன்புடன் தொலைபேசியில் விசாரிப்பது, ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. ஆங்கில மொழி இங்கு மற்ற இனத்தாரோடு பேசுகின்ற ஒரு தொடர்பு மொழியாகப் பயன்படுவதைக் கதை சுட்டுகிறது.     ***********&lt;br /&gt; மூன்று மாதங்கள் சார்ஸ் நோய் சிங்க்கப்பூரை அச்சுறுத்திய போது, பெரும்பாலான மக்களிடத்தில் ஓங்கியிருந்த தியாக உணர்வு, பலவகைகளில் கதை நெடுகப்  பெருமிதத்துடன் கொண்டாடப்படுகிறது.  வாடகைக்காடியில் யுகனேஷ்வரி பயணிக்கும் போது, அவள் சார்ஸ் நோயாளிகலைக் கவனிக்கும் ஒரு தாதி என்பதை அறிந்து டாக்ஸி ஓட்டுனர் அவளிடம் பயணக்கட்டணம் வாங்க மறுத்து விடுகின்றார். அவரைப் போற்றும் வகையில், அவர் பெயர், அவருடைய காரின் எண் முதலியவற்றைக் குறிப்பிட்டு, ஆங்கில நாளிதழ் “தி ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ¤க்குச் செய்தி அனுப்புகிறாள் யுகனேஷ்வரி.&lt;br /&gt; நன்றி கூறும் செயல்கள் மேலும் தொடர்கின்றன. எம்.ஆர்.டி இரயில் நிலையங்களுக்கு வெளியே உள்ள பலககைகளில் சார்ஸ் நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவ அன்பர்களுக்கு நன்றி வார்த்தைகள் எழுதி, பொதுமக்கல் தங்கள் கையெழுத்துக்களை இடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; மருத்துவமனைகளில் வாழ்த்துகளும், மலர்க்கொத்துகளும் வந்து குவிகின்றன. ஆறுவ்யதுச் சிறுமி ஒருத்தி தானே தயாரித்த ஒரு வண்ண அட்டிஅயில், தாதியர் படங்கள், மருத்துவ உபகரணப் படங்கள் முதலியவற்றை வரைந்து அனுப்புகிறாள். அது ஒரு மருத்துவ அறிவிப்புப் பலகையில் ஒட்டப்ப்ட்டு, அங்கு நீண்ட கலம் வாசம் புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; சார்ஸ் நோய் சிங்கப்பூரை உலுக்கிய அந்த மூன்று மாதங்களில் வெளிநாடுகளில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளை, ஏராக் போர், இந்தோனேசியத் தீமோர் பிரிவினைக் கலவரங்கள், இயற்கையின் சீற்றங்கள் வெள்ளம், பூகம்மபம், என்று கதாசிரியர் குறிப்பிடுவதும், சார்ஸ் நோய் தணிந்து சிங்கப்பூர் சீரடந்து வருவதை அங்கங்கே  ‘கூல் சிங்கப்பூர்’ ‘சிங்கப்பூர் இஸ்  ஓகே” என்ற வரிகள் முழங்குகின்றன. என்று கூறுவதும், கதையின் பிண்ணனி யதார்த்ததுக்கு வலு சேர்க்கின்றன,     ***********&lt;br /&gt; கதை முழுவதும் நம்பகத்தன்னமையுடன் அமந்துள்ளது. அண்ணன் கிஷ்கிந்தனோடு யுகனேஷ்வரி தங்கியிருந்தாலும், அவளுக்குத் திருமணம் இராண்டு கழித்தே நடைபெறும். டாக்டர் அரவிந்தனோடு வாலண்டரி தொண்டூழியும் செய்ய மூன்றாம் உலக நாடுகளுக்கு அவள் செல்லப் போவதும் ஈராண்டு விடுப்பில் தான். அரவிந்தனின் உள்ளத்தை நன்கு உணர்ந்திருந்தஅவளே விண்ணப்பத் தாளைப் பெற்று, முன் கூட்டியே அதில் கையெழுத்திட்டு அவனை அவள் சந்திக்க வருகிறாள். எனினும் அவளிடம் தன் திருமணம் குறித்து ஒரு துளி எதிர்பார்ப்பு இருந்திருக்க வேண்டும். ‘அரவிந்தன் பேசிக் கொண்டே போனான். அவள் இரண்டு கண்களிலிருந்தும் தாரையாக தாரையாகக் கண்ணீர்”, என்றும் அன்று அவள் தன்னை எளிமையாக, ஆனால் அழகாக அலங்கரித்துக் கொண்டு வந்தாள்’, என்றும் கதையில் குறிப்பிடப்படும் வரிகள், சார்ஸ் காலத்திற்குப் பின்னர், அரவிந்தன் தன்னைத் திருமணம் செய்து கொள்வான் என்று யுகனேஷ்வரி எண்னியிருக்கக் கூடும் என்ற இலட்சியம் மீறிய யதார்த்த அம்சத்தைக் கோடிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; டாக்டர் அரவிந்தன் விய்ட்னாம் போன்ற நாட்டிற்கு மருத்துவத் தொண்டூழியம் புரிய புறப்படுவது, கதையில் இலட்சியவாதத்தை நிறுவினாலும் அவன் செய்கை நடை முறையில் சாத்தியப்பாடு உடைய ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt; சிங்கப்பூர் பொது மருத்துவமனையைச் சேர்ந்த பிளாஸ்ட்டிக் அறுவை நிபுணர் டாக்டர் லீ செங் டெய்க் என்பவர், லாவோஸ், மியன்மார் போன்ற தேசங்களுக்கு  தம் மருத்துவக் குழுவினரோடுச்  சென்றுசங்குள்ள ஐந்நூறுக்கும்மேலான ஏழை எளியவர்களின் பிளவுப்பட்ட உதடுகளையும், உள்வாயின் மேலண்ணக் குறைபாடுகளையும் தம் பிளாஸ்ட்டிக் சர்ஜரி மூலம் குணப்படுத்தியிருப்பதை அறிந்து அவரி சிங்கப்பூர் சர்வதேச அறக்கட்டளையினர் சமீபத்தில் அதிபர் எஸ் ஆர் நாதன் வாயிலாகக் கௌரவித்துள்ளனர்.டாக்டர் லீ செங் டெய்க்கின் வாலிண்டியர் சேவை கதைத் தலைவன் டாக்டர் அரவிந்தன் செய்யவிருக்கும் தொண்டுச் செயலும் யதார்த்தமான ஒன்றுதான் என்பதை மெய்ப்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; தன்னலமற்ற பொதுநலப் பின்புலத்தில் பெரும்பாலான இலட்சியப் பாத்திரங்கள் இயங்கப்பெற்று, நம்பகத்தன்மை வாய்ந்த பல கூடுகளைப்’ பெரிதினும் பெரிது கேள்’ என்ற சிறுகதை தன்னகத்தே பொதிந்திருப்பதால், இந்தப் புனைவு ‘இலட்சிய யதார்த்தம்’ என்னும் எழுத்து வகைக்கு ஒரு நல்ல மாதிரியாக விளங்குகிறது என்று கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;( இந்த நூல் விமர்சனம் பெரிதினும் பெரிது கேள் என்ற சிறுகதைக்குதிரு. ராம கண்ணபிரான் எழுதி அங் மோ கியோ நூல் நிலையத்தில் நவம்பர் பன்னிரெண்டாம் தேதி 2006 அன்று வாசிக்கப்பட்டது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19925613-3570359895955649276?l=vasagarvattam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasagarvattam.blogspot.com/feeds/3570359895955649276/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19925613&amp;postID=3570359895955649276' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/3570359895955649276'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19925613/posts/default/3570359895955649276'/><link rel='alternate' type='text/html' href='http://vasagarvattam.blogspot.com/2007/03/12-11-06-1.html' title=''/><author><name>Chitra</name><uri>http://www.blogger.com/profile/10583685050236495288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19925613.post-116710148676881044</id><published>2006-12-26T10:46:00.000+08:00</published><updated>2006-12-26T10:51:26.780+08:00</updated><title type='text'>பெரிதினும் பெரிது கேள் - ஒரு பார்வை</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#33ff33;"&gt;மாதங்கியின் பெரிதினும் பெரிது கேள்- ஒரு பார்வை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#33ff33;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff9966;"&gt;யெம். கே. குமார்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      பாரதிதாசனின் "தன் பெண்டு தன் பிள்ளை" எனத்தொடங்கும் கவிதையை மனதில் கொண்டு உதித்த இக்கதைக்கு சிங்கப்பூரையும் சார்ஸையும் தொண்டூழியத்தையும் கொண்டு வ
